என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் அவதூறுகளை கூறி உள்ளார் அமித் ஷா.
- இந்துக்களின் உரிமை பறிக்கப்படுவதாக துளியும் உண்மை இல்லாமல் குற்றம்சாட்டுகிறார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் ரூ.20,387 கோடியில் நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அர்ப்பணித்துள்ளார். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் அவதூறுகளை கூறி உள்ளார் அமித் ஷா.
* அமித்ஷாவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
* தமிழ்நாட்டில் இல்லாத பிரச்சனைகளை உருவாக்கி அவதூறுகளை பரப்புகிறார்கள்.
* அமித் ஷாவா இல்லை அவதூறு ஷாவா என நினைக்கும் அளவிற்கு உண்மைக்கு புறம்பான செய்திகளை கூறி உள்ளார்.
* இந்துக்களின் உரிமை பறிக்கப்படுவதாக துளியும் உண்மை இல்லாமல் குற்றம்சாட்டுகிறார்.
* உள்துறை அமைச்சர் அமித் ஷா உண்மைக்கு புறம்பாக குற்றம்சாட்டுவது அவரது பதவிக்கு அழகல்ல.
* தமிழகத்தில் கலவரம் செய்துவிடலாம் என்ற எண்ணம் நான் இருக்கும் வரை நடக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரசு ஊழியர்களின் 22 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி உள்ளோம்.
- சென்னையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை நாளை தொடங்கி வைக்க உள்ளேன்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் ரூ.20,387 கோடியில் நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அர்ப்பணித்துள்ளார். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* அரசு ஊழியர்களின் 22 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி உள்ளோம்.
* ஓய்வு கால வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாக முதலமைச்சர் மாற்றி உள்ளார் என கூறி உள்ளனர்.
* 2.22 கோடி அரிசி அட்டைதாரர்கள் பொங்கலை கொண்டாட ரூ.3000 தருவதாக அறிவித்துள்ளோம்.
* சென்னையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை நாளை தொடங்கி வைக்க உள்ளேன்.
* முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தரக்கூடிய மகிழ்ச்சி பொங்கல் இது.
* 2019ம் ஆண்டு இ.பி.எஸ். முதலமைச்சராக இருந்தபோது லேப் டாப் திட்டத்தை நிறுத்தி வைத்தார்.
* அ.தி.மு.க. ஆட்சியில் 55,000 லேப்டாப்களை வீணடித்து விட்டதாக சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது.
* டெல், ஏசெர், எச்.பி. போன்ற உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களின் மடிக்கணினிகளை வழங்கி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மேலும் சில கட்சிகள் கூட்டணியில் இணைவார்கள் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
- கூட்டணிக் கட்சி தலைவர்களை ஒரே மேடையில் ஏற்றி உரையாற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை:
தமிழக சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, இன்று காலை அ.தி.மு.க- பா.ம.க. இடையே கூட்டணி உறுதியாகி உள்ளது. மேலும் பா.ம.க. ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் மேலும் சில கட்சிகள் கூட்டணியில் இணைவார்கள் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி வருகிற 28-ந்தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கன்னியாகுமரியில் நடைபெற உள்ள தாமரை மகளிர் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க உள்ளதாகவும், கூட்டணிக் கட்சி தலைவர்களை ஒரே மேடையில் ஏற்றி உரையாற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து கூட்டணியை உறுதி செய்யும் பணிதீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் வருகைக்குள் கூட்டணி பேச்சுவார்த்தையை முடிக்க பா.ஜ.க. தீவிர பணியாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டசபை தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இன்று அதிமுக- பாமக கூட்டணி உறுதியாகி உள்ளதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.
- இனிப்பான சர்க்கரை பொங்கலை போல் அறிவிப்பை கொடுத்து விட்டு இங்கே வந்திருக்கிறேன்.
- கலைஞர் கனவு இல்லம் திட்டம் மூலம், திண்டுக்கல் மாவட்டத்தில் 10,000 வீடுகள் கட்டப்படுகிறது.
திண்டுக்கல்:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.1,595 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை தொடங்கி வைத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திண்டுக்கல் சென்றார். மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் காலை 10 மணிக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அங்கு நடைபெற்ற விழாவில் புதிய பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து மாற்று திறனாளி பயனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார் சைக்கிள், வேளாண் கருவிகள், மகளிர் திட்டத்தின் மூலமாக 4 சக்கர வாகனங்கள், தாட்கோ மூலமாக 4 சக்கர வாகனங்கள் ஆகியவற்றை வழங்கினார்.
மாவட்டத்தில் ரூ.1595 கோடியில் 111 முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்தும், 212 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.13 ஆயிரத்து 342 கோடியில் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் கீழ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் ரூ.20,387 கோடியில் நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை மக்களுக்கு முதலமைச்சர் அர்ப்பணித்துள்ளார். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* திண்டுக்கல் என்பது புரட்சி, எழுச்சி, வீரத்தின் பெயர்.
* ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் நடமாடிய இடம் திண்டுக்கல்.
* தீரர்கள் வாழ்ந்த திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்களை சந்திப்பதில் பெருமை.
* இனிப்பான சர்க்கரை பொங்கலை போல் அறிவிப்பை கொடுத்து விட்டு இங்கே வந்திருக்கிறேன்.
* 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் 1.79 கோடி மெட்ரிக் டன் நெல்கொள்முதல் செய்யப்பட்டது.
* தி.மு.க. ஆட்சியில் கடந்த 4.5 ஆண்டுகளில் 1.99 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளது.
* இந்த விழா அரசு விழாவா? அல்லது மாநாடா? என்று வியப்பாக இருக்கிறது.
* கலைஞர் கனவு இல்லம் திட்டம் மூலம், திண்டுக்கல் மாவட்டத்தில் 10,000 வீடுகள் கட்டப்படுகிறது.
* திண்டுக்கல் மாவட்டத்தில் 4 லட்சம் பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாறிமாறி ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுவது வழக்கமான வேடிக்கை தான்.
- அதிமுக- பாமக கூட்டணி என்பது எதிர்பார்த்த ஒன்றுதான்.
ஈரோடு:
கடந்த ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நடத்தை விதிகளை மீறியதாக சீமான் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கின் விசாரணைக்காக சீமான் இன்று ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு இவ்வழக்கு தொடர்பாக மார்ச் மாதம் 9-ந்தேதி சீமான் மீண்டும் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்பின், நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த சீமான், அதிமுக- பாமக கூட்டணி என்பது எதிர்பார்த்த ஒன்றுதான் என்று கூறினார். செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் மேலும் கூறியதாவது:-
* திமுக- அதிமுக மாறிமாறி ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்து கொடுந்துயரம்.
* மாறிமாறி ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுவது வழக்கமான வேடிக்கை தான்.
* அதிமுக- பாமக கூட்டணி என்பது எதிர்பார்த்த ஒன்றுதான்.
* கடந்த முறை பொங்கல் கொண்டாடிய போது ஏன் ரூ.3000 கொடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
- அரசு வழிகாட்டுதல்படி மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் சீறும் சிறப்புமாக நடைபெற உள்ளது.
- ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பு பரிசாக கார், பைக் மற்றும் டிராக்டர் வழங்கப்பட உள்ளது.
அலங்காநல்லூர்:
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நடைபெறும். குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு பிரசித்தி பெற்றது.
இந்த ஆண்டு அவனியாபுரத்தில் வருகிற 15-ந்தேதியும், பாலமேட்டில் 16-ந்தேதியும், அலங்காநல்லூரில் 17-ந் தேதியும் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.
கடந்த 5-ந்தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கான அடிக்கல் நடப்பட்டது. இன்று பாலமேடு, அலங்காநல்லூரில் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோவில் முன்பாக முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, வெங்கடேசன் எம்.எல்.ஏ. மற்றும் அரசு அலுவலர்கள், விழாக் குழுவினர், கிராம பொதுமக்கள் முன்னிலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து முகூர்த்தக்கால் நடப்பட்டது.
இதேபோன்று பாலமேடு மஞ்சமலை ஆற்றுத்திடல் வாடிவாசலில் முகூர்த்தக் கால் விழா அமைச்சர் பி. மூர்த்தி தலைமையில் நடை பெற்றது.
விழாவின்போது அமைச்சர் பி.மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு வழிகாட்டுதல்படி மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் சீறும் சிறப்புமாக நடைபெற உள்ளது. சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று தொடங்கி வைக்க உள்ளார். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
அரசின் வழிகாட்டுதல் படி அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு உட்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனைப்படி ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட தகுதியான ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பார்கள். ஜல்லிக்கட்டில் சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து பங்கேற்கலாம்.
காளைகளுக்கும் தற்போது மருத்துவ பரிசோதனை தொடங்கி நடைபெற்று வருகிறது. தகுதி பெறும் காளைகள் இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்கலாம். ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பு பரிசாக கார், பைக் மற்றும் டிராக்டர் வழங்கப்பட உள்ளது. பரிசு பொருட்கள் அனைத்தும் விளம்பரதாரர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் பெறப்பட்டு வழக்கம் போலவே சிறப்பான பரிசுகள் வழங்கப்பட உள்ளது என்றார்.
- அதிகாரத்தில் பங்கு வேண்டும் என சொல்வது நியாயமானது தான்.
- எங்களை பொறுத்தவரை தி.மு.க. எங்களுக்கு சிறந்த தோழமை கட்சி.
திருவாரூர்:
திருவாரூரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திருப்பரங்குன்றத்தில் கடந்த 100 ஆண்டுகளாக தீபம் ஏற்றப்படாத ஒரு கல் தூணில், இந்த ஆண்டு தீபம் ஏற்ற வேண்டும் என ஒரு தரப்பினர் கூறுவதை தேர்தலுக்காக சொல்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய தெய்வபக்தியும், மத உணர்வும் அவ்வளவு தான். இந்த விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்யவில்லை. தீபம் ஏற்ற வேண்டும் என்று சொல்பவர்களுக்கு அரசியல் உள்நோக்கம் உள்ளது.
ஒவ்வொரு அரசியல் கட்சியும் வளர வேண்டும். அதிகாரத்தில் பங்கு வேண்டும் என சொல்வது நியாயமானது தான். இதை காங்கிரஸ் கட்சி மட்டும் சொல்லவில்லை. வைகோ, திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்டுகளும் அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
எங்களை பொறுத்தவரை தி.மு.க. எங்களுக்கு சிறந்த தோழமை கட்சி. நாங்கள் அவர்களிடம் பேரம் பேச தேவையில்லை. சிறந்த ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார்.
காங்கிரஸ் தொண்டர்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என விரும்புகிறார்கள். நாங்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். அ.தி.மு.க. விளிம்பு நிலைக்கு சென்று விட்டது. தமிழகத்தின் உரிமையை பற்றி அவர்களால் பேச முடியவில்லை. அமித்ஷா என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமைக்கும் என்கின்றார்.
ஆனால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தலைமையிலான ஆட்சி அமையும் என்கிறார். கூட்டணியை பொறுத்தவரை எங்களை போன்ற தெளிவு அவர்களிடம் இல்லை என்றார்.
- தமிழ்நாடு அரசின் கடன் குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை தெரிவித்ததையே கூறினேன்.
- கூட்டணி தொடர்பான விவகாரங்கள் குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமை தான் முடிவெடுக்கும்.
கோவை விமான நிலையத்தில் ராகுல் காந்தியின் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* உத்தரபிரதேசம் பற்றி ஒப்பிடவில்லை. தமிழ்நாடு அரசின் கடன் குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை தெரிவித்ததையே கூறினேன்.
* தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயை சந்தித்தது உண்மை தான்.
* தனிப்பட்ட முறையில் சந்திப்பதில் எந்த பிரச்சனையுமே இல்லை.
* கூட்டணி தொடர்பான விவகாரங்கள் குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமை தான் முடிவெடுக்கும்.
* விஜயின் பிரசாரத்திற்கு மக்கள் உற்சாகமாக வருகின்றனர். மக்கள் அவரை நடிகராக பார்க்க வரவில்லை. ஒரு அரசியல்வாதியாகத்தான் பார்க்க வருகின்றனர். அதில் இருந்து மக்களின் எண்ணம் தெரிகிறது.
* அது ஒரு சக்திதான். அதை யாராலும் மறுக்கவே முடியாது. த.வெ.க. தலைவர் விஜய் தமிழ்நாட்டில் அரசியல் சக்தியாக உருவாகி விட்டார்.
* அதிக சீட்டுகள், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு இது காங்கிரஸ் தொண்டனின் கோரிக்கை. காங்கிரஸ் கட்சியின் நலனுக்காக, எதிர்காலத்திற்காக கோரிக்கை.
இவ்வாறு அவர் கூறினார்.
- இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 49.54 அடியாக உள்ளது.
- முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 131.55 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு குடிநீர், பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. பருவமழை கைகொடுத்ததால் வைகை அணையின் நீர்மட்டம் கடந்த அக்டோபர் மாதம் 70 அடியை தாண்டி முழு கொள்ளளவை எட்டியது.
இதனால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்ட பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. கூடுதல் தண்ணீர் திறப்பாலும், அதன்பின் மழை குறைந்ததாலும் அணையின் நீர்மட்டம் வேகமாக சரியத் தொடங்கியது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 49.54 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 680 கனஅடியாக உள்ள நிலையில் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டு மதுரை, திருமங்கலம், சேடபட்டி குடிநீர் திட்டங்களுக்காக மட்டும் 69 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1933 மி.கனஅடியாக உள்ளது.
இதேபோல் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 131.55 அடியாக உள்ளது. வரத்து 341 கனஅடி, திறப்பு 1000 கனஅடி, இருப்பு 5060 மி.கனஅடி.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் மீண்டும் முழு கொள்ளளவை எட்டி 126.28 அடியில் உள்ளது. அணைக்கு வரும் 3 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கனஅடியாக உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.90 அடியாகவும், சண்முகாநதி அணை நீர்மட்டம் 34 அடியாகவும் உள்ளது.
மாவட்டத்தில் மழை குறைந்துள்ள நிலையில் கடும் பனிப்பொழிவே நிலவி வருகிறது.
- தி.மு.க. அரசை தூக்கி எறிந்து அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
- டெல்லியில் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க.வின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை சந்திக்கிறார்.
சென்னையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று சந்தித்து பேசினார்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி- அன்புமணி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன்பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து கூட்டணியை உறுதி செய்தனர். அப்போது, இயற்கையாக அமைந்த கூட்டணி அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி. தி.மு.க. அரசை தூக்கி எறிந்து அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். எங்களது கூட்டணி வெற்றிக்கூட்டணி என்று தெரிவித்தனர்.
அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி உறுதியானதை தொடர்ந்து இன்று மாலை எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார்.
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க.வின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை சந்திக்கிறார். தொகுதி பங்கீடு விவகாரங்கள் குறித்து அவர் பேச உள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டுக்கு வந்திருந்தபோது எடப்பாடி பழனிசாமி சந்திக்கவில்லை. திருச்சியில் அமித் ஷாவை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மட்டும் சந்தித்தார்.
- ஆக்கிரமிப்பு குறித்து அப்பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
- வழக்கில் சம்பந்தப்பட்ட இடம் வருவாய் துறைக்கு சொந்தமானது என கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ராக்கியாப்பட்டி பகுதியில் 2.8 ஏக்கர் பரப்பளவில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இதனை ஆக்கிரமித்து குமரன் குன்று என்ற பெயரில் முருகர், விநாயகர், சிவலிங்கம், நந்தி உள்ளிட்ட சன்னதிகள் கொண்ட செல்வமுத்து குமாரசாமி கோவில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள இந்த கோவிலை அவிநாசி தாசில்தார் சந்திரசேகர் , டி.எஸ்.பி., சிவகுமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் இன்று காலை இடித்து அகற்றும் பணி நடைபெற்றது.
இதையறிந்த இந்து முன்னணியினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் பலர் இடிக்க வேண்டாமென கண்ணீர் வடித்தனர். இதனால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாதவாறு இருக்க அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
பின்னர் போலீசார், பொதுமக்களை வளாகத்தை விட்டு அப்புறப்படுத்தினர். அப்போது போலீசார் -பொதுமக்களிடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த ஆக்கிரமிப்பு குறித்து அப்பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இடம் வருவாய் துறைக்கு சொந்தமானது என கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோவிலை அகற்ற வருவாய் துறையினர் நடவடிக்கை மேற்கொண்ட போது, இரு தரப்பினர் இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கோவிலை வருவாய்த்துறையினர்- போலீசார் பாதுகாப்புடன் அகற்றி உள்ளனர்.
- இரவு நேர வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறைந்து காணப்பட்டது.
- அதிகாலை நேரங்களில் கடுங்குளிர் நிலவி வருகிறது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் டிசம்பர்-ஜனவரி மாதங்கள் உறை பனிப்பொழிவு காலம் என்பதால் அங்கு நேற்று முதல் கடும் உறைபனி கொட்டி தீர்த்து வருகிறது.
அதிலும் குறிப்பாக குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உறைபனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
இதன்காரணமாக அங்குள்ள புல்வெளிகள் மற்றும் நீர்நிலை பகுதிகளில் பச்சைக் கம்பளத்தில் முத்துக்கள் கொட்டியது போல உறைபனி படர்ந்து இருந்தது. சாலையோரம் நின்றிருந்த வாகனங்கள் மீதும் உறை பனி படலத்தை பார்க்க முடிந்தது.
மேலும் குன்னூரில் பயிரிடப்பட்டுள்ள கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் மீது வெள்ளைக்கம்பளம் போத்தியது போல் உறைப்பனி படர்ந்து காணப்படுகிறது. பனியின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் அங்குள்ள தேயிலை செடிகள் மற்றும் மேராக்காய் பந்தல்கள் கருகும் அபாயம் ஏற்பட்டு உள்ளதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
இதற்கிடையே குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கொலக்கம்பை, சேலாஸ், கரும்பாலம், சின்ன கரும்பாலம், ஜிம்கானா, குன்னகம்பை உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேர வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறைந்து காணப்பட்டது.
இதனால் அங்குள்ள பகுதிகளில் அதிகாலை நேரங்களில் கடுங்குளிர் நிலவி வருகிறது. எனவே அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் போர்வை, சால்வை உள்ளிட்டவற்றை போர்த்திக் கொண்டு நடமாடி வருகின்றனர்.
மேலும் அதிகாலை நேரங்களில் வேலைக்கு செல்லும் தோட்டத்தொழிலாளர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் ஆகியோர் கடுங்குளிரால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.






