என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழக சட்டசபைக் கூட்டம் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது.
- பிப்ரவரி 19-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
சென்னை:
தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழக சட்டசபைக் கூட்டம் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது.
பிப்ரவரி 19-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
பிப்ரவரி 20-ம் தேதி மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
நடப்பு ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் காலை 10 மணிக்கு பேரவை கூடுகிறது.
சட்டப் பேரவையில் யாரை, எங்கு அமரவைக்க வேண்டும் என முடிவெடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு உண்டு.
சட்டசபை நிகழ்வுகளை நேரலையாக காண்பிக்க வேண்டும் என்பதே அரசின் திட்டம்.
வேறு எந்த மாநிலத்திலும் தமிழகத்தைப் போல நேரலையில் காட்டப்படுவதில்லை. அரசிடம் எந்த ஒளிவு மறைவும் இல்லை என தெரிவித்தார்.
- மென்பொருள் ஏற்றுமதியில் சென்னை முக்கிய இடத்தை பிடித்துள்ள நிலையில் புதிய தகவல் தொழில் நுட்ப பூங்காக்களும் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது.
- ஒரு ஏக்கருக்கு 3 கோடி ரூபாய் என விலை நிர்ணயம் செய்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் முதன் முறையாக 2000-ம் ஆண்டில் டைடல் பார்க் உருவானதில் இருந்து தகவல் தொழில்நுட்ப பூங்காக்களின் வளர்ச்சி அபரி மிதமானது.
பழைய மகாபலிபுரம் சாலை, ரேடியல் சாலை, கிண்டி, பெருங்குடி, போரூர், வண்டலூர், அம்பத்தூர், சிறுசேரி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ஐ.டி. நிறுவனங்களின் எண்ணிக்கை பல மடங்காகிவிட்டது.
மென்பொருள் ஏற்றுமதியில் சென்னை முக்கிய இடத்தை பிடித்துள்ள நிலையில் புதிய தகவல் தொழில் நுட்ப பூங்காக்களும் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஆவடியை அடுத்த பட்டாபிராமில் தகவல் தொழில்நுட்ப பூங்கா மிகப்பெரிய அளவில் அமைக்கப்பட்டு வருகிறது. இதுதவிர இப்போது சென்னையின் வெளிவட்ட சாலையின் கிழக்கு பகுதியான மண்ணிவாக்கம், மலையம்பாக்கம் வண்ட லூர் பகுதியிலும் புதிதாக தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.
டைடல் பார்க் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் இதற்கு முதற்கட்ட அனுமதியை வழங்கி உள்ளது.
இதற்கான நிலப்பரப்பு தேர்வு செய்யப்பட்டு அதை சரிப்படுத்தும் பணிகளும் நடந்து வருகிறது.
இதில் மலையம்பாக்கம் பகுதியில் அமையும் தொழில்நுட்ப பூங்காவுக்கு 5.33 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு 3 கோடி ரூபாய் என விலை நிர்ணயம் செய்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2-வது ஐ.டி. பூங்கா மண்ணிவாக்கத்தில் 5.04 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இதற்கு ஏக்கருக்கு ரூ.5 கோடி என நிலமதிப்பு வழங்கப்பட்டுள்ளது.
3-வது தொழில்நுட்ப பூங்கா வண்டலூரில் 0.5 ஏக்கர் பரப்பளவில் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இங்கு நில மதிப்பு ஏக்கருக்கு ரூ.8.05 கோடி மதிப்பாக உள்ளது.
இந்த 3 புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காவை 1½ வருடத்தில் கட்டி முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் மென்பொருள் ஏற்றுமதியில் மேலும் வளர்ச்சி அடைய இது உதவும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர்.
- இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஜாமின் மனு ஐகோர்ட் மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.
மதுரை:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு கடந்த 2020-ம் ஆண்டு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 போலீசாரை சி.பி.ஐ. கைது செய்து மதுரை சிறையில் அடைத்தது. இந்த வழக்கின் விசாரணை மதுரை கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஜாமின் மனு ஐகோர்ட் மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.
சிபிஐ தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், தந்தை, மகன் கொலை வழக்கில் ஒரு சாட்சியிடம் 28 நாட்களுக்கு மேலாக குறுக்கு விசாரணை நடத்தப்பட்டதால், வழக்கு விசாரணை தாமதம் என்று கூறினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் குறுக்கு விசாரணை என்ற பெயரில் 28 நாள் விசாரணை நடைபெற்றால், அவர் தன்னுடைய பணிகளை செய்வாரா இல்லை தினந்தோறும் நீதிமன்றத்திற்கு வந்து சாட்சியம் அளிப்பாரா? என்று கேள்வி எழுப்பினார்.
இதைத்தொடர்ந்து ஜாமின் கோரிய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
- விமானத்துக்கான டிக்கெட் முன்பதிவை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஏற்கெனவே தொடங்கியது.
- அயோத்திக்கு விமானத்தில் செல்லலாம் என்று முடிவு செய்திருந்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை:
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த மாதம் 22-ந்தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு 23-ந்தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் தரிசனம் செய்து வருகிறார்கள்.
அயோத்தி ராமர் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து இன்று முதல் விமான சேவை தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி அயோத்திக்கு இன்று முதல் விமான சேவை தொடங்கப்பட்டது.
சென்னையில் இருந்தும் இன்று முதல் அயோத்திக்கு தினசரி விமான சேவை தொடங்கப்பட்டது. சென்னையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 3.15 மணிக்கு அயோத்தி சென்றடையும். அதேபோல மறு மார்க்கமாக அயோத்தியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6.20 மணிக்கு சென்னை வந்து சேரும்.
இந்த விமானத்தில் பயணிப்பதற்கான கட்டணம் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விமானத்துக்கான டிக்கெட் முன்பதிவை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஏற்கெனவே தொடங்கியது.
முன்பதிவு தொடங்கியபோது நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்பட்டாலும், நேரம் செல்லச்செல்ல முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் சில மணி நேரங்களில் விமான கட்டணம் பல மடங்கு எகிறியது.
அதன்படி இன்று அயோத்திக்கு சென்று வர நபர் ஒருவருக்கு ரூ.52,134 வரை கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இதனால் அயோத்திக்கு விமானத்தில் செல்லலாம் என்று முடிவு செய்திருந்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறைந்த கட்டணத்தில் பக்தர்களை அயோத்திக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- 2021ல் திமுக மற்றும் அதிமுக, முறையே 37 மற்றும் 33 சதவீத வாக்குகள் பெற்றன
- பெரிய கட்சிகளின் நிதி மற்றும் தொண்டர்களின் உதவி சிறு தலைவர்களை கவர்கிறது
தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளாக அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் உள்ளன.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், பதிவான வாக்குகளில், தி.மு.க. சுமார் 37 சதவீதமும் அ.தி.மு.க. சுமார் 33 சதவீதமும் பெற்றன.

இரு கட்சிகளை தவிர தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகியவை முறையே 4.26 சதவீதம் மற்றும் 2.61 சதவீதம் என வாக்குகளை சேகரித்தன.
இவை தவிர, சி.பி.ஐ., சி.பி.ஐ.(எம்), ம.தி.மு.க., பா.ம.க., வி.சி.க., தே.மு.தி.க. ஆகியவை குறைந்த அளவே வாக்கு சதவீதத்தை சேகரித்தன.
வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணிகள் தற்போது வரை உறுதியாகவில்லை. இந்நிலையில், சிறு கட்சிகளின் நிலைப்பாடு விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
வன்னிய சமுதாய மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி, தலித் மக்களின் முன்னேற்றத்திற்காக உருவான விடுதலை சிறுத்தைகள் கட்சி, தொழிலாளர்களின் நலனுக்கான கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் தி.மு.க. அல்லது அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி சேர்வதையே விரும்புகின்றன.

(நாம் தமிழர் கட்சி, அனைத்து மத்திய, மாநில மற்றும் ஊராட்சி தேர்தல்களிலும் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது).
தங்கள் சுயபலத்தை அக்கட்சிகளும், பொதுமக்களும் உணர்ந்து கொள்ளும் வகையில் தனித்து போட்டியிட்டால்தான் அவர்களுக்கான வாக்கு வங்கியின் உண்மையான சதவீதம் வெளிச்சத்திற்கு வரும்.

சாதிவாரி கணக்கெடுப்பிற்கு வலியுறுத்தி தங்கள் சாதி வாக்கு வங்கியின் பலத்தை காட்டிக்கொள்ள முயலும் கட்சிகள் கூட தனித்து போட்டியிட்டு பலத்தை காட்ட முன்வர மறுக்கின்றன.

மேலும், சமூக நீதி, பொருளாதார ஏற்றத்தாழ்வை நீக்குதல், பாதுகாப்பான வாழ்க்கை, சிறப்பான உள்கட்டமைப்பு உள்ளிட்ட ஒரு சமுதாய வளர்ச்சிக்கு அவசியமான அம்சங்களில் நிலவும் சிக்கல்களை தீர்க்க, தங்கள் பார்வை, சித்தாந்தம், தீர்வுகள் உள்ளிட்டவைகளை மக்களிடையே எடுத்து சொல்லி பிரசாரம் செய்து, ஆளும் கட்சிகளின் குறைகளை ஊடகங்களின் வழியே கேள்வி கேட்டு தங்களை வளர்த்து கொள்ள எந்த ஒரு கட்சியும் முயல வேண்டும்.

ஆனால், கட்சிகளின் தலைவர்கள், கூட்டணி பேரங்களில் கிடைக்கும் குறைந்த இடங்களை "போதும்" என பெற்றுக் கொண்டு, பெரும் கட்சிகளின் நிதி மற்றும் தொண்டர்களின் உதவியுடன் எளிதாக வெல்வதையே குறிக்கோளாக கொண்டுள்ளனர்.

இந்நிலை தொடர விமர்சகர்கள் முன்வைக்கும் காரணங்கள்:
* புது கட்சிகளின் தலைவர்களை பார்க்க மக்கள் கூட்டமாக வந்தாலும், வாக்களிக்கும் போது அவர்களை மறந்து விடுகின்றனர்.
* 40 ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க., தனித்தனியே 30 சதவீதத்திற்கும் மேலாக வாக்குவங்கியை சிதறாமல் வைத்துள்ளன.
* வாக்களிக்க பணம் கொடுக்கும் வழிமுறை தமிழகத்தில் ஆங்காங்கே நிலவுவதால், சிறு கட்சிகளின் சித்தாந்தங்கள் கவர்ந்தாலும், பணம் தரும் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிப்பது என்னவோ தொடர்கிறது.
* பொதுவாக கட்சிகளின் தலைவர்களிடம் மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருவதும் ஒரு காரணம். தலைவர்கள், தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இல்லை என வாக்காளர்கள் கருதுகின்றனர்.
* சட்டசபை மற்றும் மக்களவையில் ஸ்திரமான ஆட்சியை தமிழக மக்கள் விரும்புகின்றனர்.
* பெரிய கட்சிகள் சாதி, செல்வாக்கு மற்றும் நிதி அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்தும் போது தங்கள் தொகுதியில் வெல்வதற்கு வழிமுறைகளை வேட்பாளர்களே கண்டறிகின்றனர். இதை சிறு கட்சிகளால் எதிர்க்க முடிவதில்லை.
சுயபலத்தை காட்டி தங்களால் தனித்து ஜெயிக்க முடியாது என்றால் பெரும் கட்சிகளின் முதுகில் சவாரி செய்வதை விட, கட்சியையே கலைத்து விட்டால், நல்லது என்ற எண்ணமும் மக்கள் மனதில் தோன்றக்கூடும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
- லஞ்சப்பணம் கைமாற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- யார்-யாருக்கு எவ்வளவு பணம் கொடுப்பட்டது என்பது பற்றிய விவரங்களை வருமான வரித்துறை அதிகாரிகளே முதலில் கண்டுபிடித்துள்ளனர்.
சென்னை:
சென்னையில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கட்டுமான நிறுவனங்கள் சார்பில் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை இந்த லஞ்சப்பணம் கைமாற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அப்போது எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் சில அரசு துறை அதிகாரிகளுக்கு இந்த லஞ்சப் பணம் கொடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
சென்னை புளியந்தோப்பு, பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள பின்னி மில் வளாகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை கட்டுவதற்காக 2 கட்டுமான நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டன.
அப்போது அந்த இடத்தின் அருகே ஆக்கிரமிப்பு செய்தவர்களை அகற்றுவதற்காக இந்த லஞ்சப் பணம் கொடுக்கப்பட்டிருப்பது தற்போது அம்பலமாகி உள்ளன.
யார்-யாருக்கு எவ்வளவு பணம் கொடுப்பட்டது என்பது பற்றிய விவரங்களை வருமான வரித்துறை அதிகாரிகளே முதலில் கண்டுபிடித்துள்ளனர். கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த அதிபர் ஒருவரின் வீட்டில் அப்போது சோதனை நடத்தப்பட்டு யார்-யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டு உள்ளது என்பது பற்றிய பட்டியலை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வலியு றுத்தி சென்னை ஐகோர்ட் டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு முதல் கட்ட விசாரணை 4 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவிட்டது.
இதன் பேரிலேயே லஞ்ச ஒழிப்பு போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ள னர். 2 கட்டுமான நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார் இது தொடர்பாக சென்னையில் இன்று 5 இடங்களில் அதிரடி சோதனையிலும் ஈடுபட்டனர்.
குற்றச்சாட்டுக்குள்ளாகி இருக்கும் கட்டுமான அதிபர்களான உதயகுமார், சுனில், கெத்பாலியா, மணீஸ் ஆகிய 3 பேரின் வீடுகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான 2 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
பின்னிமில் நிறுவனத்திடம் இருந்து 14.16 ஏக்கர் நிலத்தை வாங்கிய போது ஆக்கிரப்பாளர்களை காலி செய்வதற்காகவே ரூ.50 கோடி லஞ்சப் பணம் கைமாறி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார் முதல் தகவல் அறிக்கையில் யார்-யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப் பட்டது என்பது பற்றிய பட்டியலையும் இணைத்து உள்ளனர்.
இதன் படி முன்னாள் எம்.பி. ஒருவர் ரூ.23 லட்சம் லஞ்சமாக பெற்றிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இன்னொரு எம்.பி.க்கு ரூ.20 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், கட்சி பிரமுகர் ஒருவருக்கு ரூ.33 லட்சமும் முன்னாள் பெண் கவுன்சிலர் ஒருவருக்கு ரூ.2 லட்சமும், முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவருக்கு ரூ.40 லட்சமும் லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரி என யார்-யாருக்கு எந்தெந்த வழிகளில் லஞ்சப் பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற பட்டியலும் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
50-க்கும் மேற்பட்டவர்களுக்கு இப்படி லஞ்சப் பணம் பிரித்து கொடுக்கப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.
- ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் நேற்று கைது செய்யப்பட்டார்.
- ஹேமந்த் சோரன் கைதுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
சென்னை:
ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் கைதுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய பா.ஜ.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பா.ஜ.க.வின் தந்திரங்களால் எதிர்க்கட்சிகளின் குரல்களை அடக்கமுடியாது. புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தி ஒரு பழங்குடித் தலைவரை துன்புறுத்துவது கீழ்த்தரமான செயல்.
இந்தச் செயல் பா.ஜ.க.வின் அதிகார துஷ்பிரயோகத்தைத் தூண்டுகிறது. பா.ஜ.கவின் பழிவாங்கும் அரசியலுக்கு ஹேமந்த் சோரன் அடிபணியாமல் உறுதியாக இருக்கிறார். பா.ஜ.கவின் மிரட்டல்களை எதிர்த்துப் போராடும் ஹேமந்த் சோரனின் உறுதிப்பாடு உத்வேகம் தருகிறது என பதிவிட்டிருந்தார்.
ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வருகிற 8-ந் தேதி முதல் இந்த மாத இறுதி வரை 23 சிறப்பு ரெயில்களில் பக்தர்கள் செல்கிறார்கள்.
- மானாமதுரையில் இருந்து 14 மற்றும் 28-ந் தேதிகளில் சிறப்பு ரெயில் செல்கிறது.
சென்னை:
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றதும் சிரமம் இல்லாமல் அயோத்தி செல்ல ஏற்பாடு செய்யும்படி தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பா.ஜனதா தொண்டர்களும், பக்தர்களும் கட்சி தலைமைக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து இதற்கான ஏற்பாடுகளை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை செய்தார்.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 3 பொறுப்பாளர்கள், 6 மாவட்டங்களுக்கு ஒரு பார்வையாளர் வீதம் நியமிக்கப்பட்டு அயோத்தி செல்ல விரும்புபவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. ஏராளமானவர்கள் ஆர்வப்பட்டதால் சிறப்பு ரெயில்கள் பல பகுதிகளில் இருந்து புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வருகிற 8-ந் தேதி முதல் இந்த மாத இறுதி வரை 23 சிறப்பு ரெயில்களில் பக்தர்கள் செல்கிறார்கள்.
கோவையில் இருந்து 8, 13, 18, 23, 28 ஆகிய தேதிகளில் ரெயில் செல்கிறது. கட்டணம் ரூ.2,600.
திருப்பூரில் இருந்து 10, 15, 20 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ரெயில் செல்கிறது. கட்டணம் ரூ.2,600 ஈரோட்டில் இருந்து 11, 16, 21 மற்றும் 26-ந் தேதிகளில் ரெயில் செல்கிறது. கட்டணம் ரூ.2,400.
சேலத்தில் இருந்து 12, 17, 22 மற்றும் 27 ஆகிய தேதிகளில் புறப்படுகிறது. கட்டணம் ரூ.2,300.
மானாமதுரையில் இருந்து 14 மற்றும் 28-ந் தேதிகளில் சிறப்பு ரெயில் செல்கிறது. கட்டணம் ரூ.3,100.
21-ந் தேதி மதுரை, 29-ந் தேதி திருநெல்வேலி, 8-ந் தேதி கன்னியாகுமரி, 15-ந் தேதி நாகர்கோவில் ஆகிய இடங்களில் இருந்து புறப்பட்டு செல்கிறது.
நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இருந்து செல்லும் ரெயில்கள் கேரளா வழியாக செல்லும். நெல்லை, கன்னியாகுமரியில் இருந்து ரூ.3,800-ம், நாகர்கோவிலில் இருந்து ரூ.3,700-ம் கட்டணம்.
- அனைவரும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக பேரணியாக செல்ல திரளாக திரண்டு உள்ளீர்கள்.
- 40 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற நீங்கள் உழைக்க வேண்டும்.
ராயபுரம்:
சென்னை ராயபுரத்தில் 16 மாணவர் இயக்கங்கள் ஒன்றிணைந்த இந்திய மாணவர் ஒன்றியம் என்ற அமைப்பின் சார்பில் பிரமாண்ட மாணவர் பேரணி இன்று காலை நடைபெற்றது.
அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். ராயபுரம் மேற்கு மாதா கோவில் சந்திப்பில் தொடங்கிய இந்த பேரணியை தி.மு.க இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கையில் தேசிய கொடி ஏந்தி தொடங்கி வைத்தார்.
தி.மு.க. மாணவர் அணி மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் அமைப்பினர் அனைவரும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக பேரணியாக செல்ல திரளாக திரண்டு உள்ளீர்கள்.
இந்த பேரணியை தொடங்கி வைப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். பேரணியை தொடங்கி வைத்து உங்களோடு பேரணி முடியு ம் வரை நடந்து வர திட்டமிட்டு இருந்தேன்.
ஆனால் பாராளுமன்ற தேர்தலையொட்டி தினமும் ஒவ்வொரு தொகுதியாக ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் நடந்து வருவதால் அதில் பங்கேற்க செல்ல வேண்டி உள்ளது. எனவே உங்களை வாழ்த்தி இந்த பேரணியை தொடங்கி வைக்கிறேன்.
சேலத்தில் நடைபெற்ற தி.மு.க இளைஞரணி மாநாடு மிகப்பெரிய வெற்றியை பெற்று உள்ளது.
அதனை தூக்கி சாப்பிடும் வகையில் இந்த பேரணியிலும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு உள்ளீர்கள்.
அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு மாநில அரசுகளின் கல்வி உரிமைகளை பறித்து வைத்துள்ளது.

அதனை மீட்கும் வகையிலும், தேசிய கல்வி கொள்கையை எதிர்க்கும் வகையிலும், 5 மற்றும் 8-ம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு, நீட்தேர்வு உள்ளிட்ட தேர்வுகளை எதிர்க்கும் வகையில் மாணவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவை காப்போம் என்ற கோஷமும் இந்த பேரணியில் முன் வைக்கப்பட்டு உள்ளது. பாரதிய ஜனதாவை வீழ்த்தி இந்தியாவை காக்க வேண்டும் என்றால் வருகிற தேர்தலில் இந்தியா கூட்ட ணி வெற்றி பெற வேண்டும்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இந்த முறை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற நீங்கள் உழைக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியை கால் பதிக்க விடக்கூடாது. அதற்கு ஏற்ற வகையில் மாணவர்கள் அனைவரும் உழைக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, மாநில மாணவர் அணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.ஏக்கள் ஐட்ரீம் மூர்த்தி, ஆர்.டி. சேகர், கே.பி. சங்கர், எபிநேசர், தாயகம் கவி, மாவட்ட செயலாளர் இளைய அருணா மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் மனோகரன், புழல் நாராயணன் உள் ளிட்ட தி.மு.க நிர்வாகிகள், மாணவர் அமைப்பினர் கலந்து கொண்டனர்.
பேரணியில் தி.மு.க. மாணவர் அணி, இந்திய மாணவர் பெருமன்றம், சமூக நீதி மாணவர் இயக்கம், திராவிடர் மாணவர் கழகம், உள்ளிட்ட 16 மாணவர் இயக்கங்களை சேர்ந்த மாணவர் அமைப்பினர் கல்லூரி மாணவ-மாணவி கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க மாணவர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர்கள் பங்கேற்றனர்.
பேரணியில் கலந்து கொண்டவர்கள் தி.மு.க கொடியுடன் தேசிய கொடியையும் ஏந்தி சென்றனர். நீட்தேர்வு, தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான பேனர்களை கையில் ஏந்தியபடி சென்றனர். காப்போம், காப்போம், இந்தியாவை காப்போம், பாரதியஜனதா அரசை நீக்குவோம் என்பன உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர்.
இந்த பேரணி ராபின்சன் மைதானத்தில் நிறைவு பெற்றது.
- இரவு அரசு மருத்துவமனை, பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களின் விடுதி உள்ளிட்டவற்றை கலெக்டர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார்.
- தொல்காப்பிய குடி ஊராட்சி பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர் அங்கு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
சீர்காழி:
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுப்படி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் சீர்காழியில் கடந்த 24 மணி நேர ஆய்வு பணி நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று காலை 9 மணிக்கு மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஆய்வு பணியை தொடங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்திற்குட்பட்ட வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி பல்வேறு பகுதிகளில் தொடர்ந்தது. இரவு அரசு மருத்துவமனை, பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களின் விடுதி உள்ளிட்டவற்றை கலெக்டர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இரவு கொள்ளிடத்தில் தங்கினார்.
இந்நிலையில் இன்று (1-ந்தேதி) அதிகாலையில் ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தூய்மை பணியினை ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இதைத் தொடர்ந்து முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் கொள்ளிடம் புத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சமையல் மையத்தில் உணவுப் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு குறைகளை கேட்டறிந்தார். பின்னர் எருக்கூர் நவீன அரிசி ஆலையில் கலெக்டர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து தொல்காப்பிய குடி ஊராட்சி பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர் அங்கு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
இந்த ஆய்வில் கோட்டாட்சியர் அர்ச்சனா, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் கண்மணி, மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் மஞ்சுளா கொள்ளிடம் ஒன்றிய ஆணையர் தியாகராஜன் வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழிஉள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் ஆய்வில் உடன் இருந்தனர்.
- முதலமைச்சர் வெளிநாடு பயணம் முடிந்து தமிழகத்திற்கு வந்த பிறகு எங்களுக்கான பதில் கிடைக்கும் என நம்புகிறோம்.
- தேர்தல் தொடர்பாக எந்த முடிவு எடுக்க வேண்டுமானாலும் பொதுக்குழு மற்றும் முக்கிய நிர்வாகிகளை கலந்தாலோசித்து முடிவுகள் வெளியிடப்படும்.
கடலூர்:
கடலூர் நீதிமன்றத்தில் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இன்று காலை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. நேரில் ஆஜரானார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட பிறகு கூட்டணி கட்சி தலைமையுடன் சேர்ந்து வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபடுவோம். கடலூர் நாடாளுமன்ற தொகுதியை தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
முதலமைச்சர் வெளிநாடு பயணம் முடிந்து தமிழகத்திற்கு வந்த பிறகு எங்களுக்கான பதில் கிடைக்கும் என நம்புகிறோம். மேலும் சட்டமன்றத்தில் எங்கள் கட்சியின் குரலாக எனது குரல் ஒலித்து வரும் நிலையில், பாராளுமன்றத்திலும் எங்கள் கட்சி குரல் ஒளிரட்டும் என்ற அடிப்படையில் வாய்ப்பு கேட்டுள்ளோம். அது கிடைக்கும் என்று நம்புகிறோம்.
தற்போது தி.மு.க. சார்பில் கூட்டணி கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த குழுவில் கலந்து பேசுவோம். இந்தியா கூட்டணியில் இருந்து தற்போது நிதீஷ் குமார் வெளியேறி உள்ளார். ஆனால் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு வரும் வரை அரசியலில் எது வேண்டுமானால் நடக்கலாம்.
பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் பன்முகத் தன்மையாக உள்ள சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றுக்கு ஆபத்து ஏற்படும் என தொடர்ந்து வலுவான கருத்து வந்து கொண்டிருக்கிறது.
மேலும் சர்வாதிகாரம் நோக்கி பா.ஜ.க. இந்தியாவை அழைத்து செல்கிறது என குற்றச்சாட்டு உள்ளது. பா.ஜ.க. அரசு பல்வேறு நடவடிக்கையை சர்வாதிகாரம் மூலம் எடுத்து வருகிறது.
பன்முக தன்மை கொண்ட இந்தியாவை ஒரு மதத்தின் அடையாளத்தின் கீழும், ஒற்றை மொழியான இந்தி ஆட்சியின் கீழும் வரவேண்டும் என பா.ஜ.க. அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக வருமானவரித்துறை அதிகாரிக்கு இந்தி தெரியாது என சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட காரணத்தினால் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
மேலும் விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி.க்கு இந்தி தெரியாது என கூறியதால் வட மாநிலத்தினர்கள் விமர்சித்து உள்ளனர். தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகத்தில் தமிழ் அலுவல் மொழி இல்லை. இதையெல்லாம் பார்க்கும்போது ஜனநாயகத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடிய நிலை உள்ளது. வேறு எந்த கட்சியுடன் கூட்டணி பேசவில்லை. தேர்தல் தொடர்பாக எந்த முடிவு எடுக்க வேண்டுமானாலும் பொதுக்குழு மற்றும் முக்கிய நிர்வாகிகளை கலந்தாலோசித்து முடிவுகள் வெளியிடப்படும். ஆனால் தற்போது வரை தி.மு.க.வின் தலைமையின் கீழ் வெற்றி கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளது.
இவ்வாறு கூறினர்.
அப்போது அமைப்புக்குழு கண்ணன், ஆனந்த், மாவட்ட செயலாளர் லெனின், கவுன்சிலர் அருள் பாபு மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவு மூலம் மக்களிடம் தெரிவிக்கும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- மக்களிடம் திட்டங்கள் குறித்து இந்த தொழில்நுட்பத்தில் தெரிவிப்பது கூடுதல் சிறப்பு அம்சமாகும்.
சென்னை:
தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் மக்கள் நலன் சார்ந்த மகத்தான திட்டங்களை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவு மூலம் மக்களிடம் தெரிவிக்கும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்கள், இளைஞர், மாணவர்கள் முன்னேற்றத்தில் அரசின் திட்டங்கள் பெரும்பங்கு வகிக்கிறது,
இந்த திட்டங்களை மக்கள் அறிந்துக் கொண்டு பயன்பெறும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் வழியாக இந்த திட்டங்கள் மக்களிடம் கொண்டு செல்லப்படுகிறது.
இதில் புதிய வியூகமாக, நாளிதழில் வரும் விளம்பரத்துடன் இடம் பெறும் கியூ.ஆர்.கோடை செல்போன் மூலம் ஸ்கேன் செய்து பார்த்தால் அரசின் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் வீடியோ பதிவை பார்க்க முடியும். 'ஆகு மென்டட் ரியாலிட்டி தொழில்நுட்பம்' மூலம் இந்த வீடியோ பதிவு வெளியிடப்படுகிறது.
இன்று தமிழ்நாட்டின் பெண்கள் வாழ்வில் முன்னேற்றத்தை தந்த விடியல் பயணத் திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் வீடியோவை அதில் காணலாம்.
நாட்டிலேயே முதன் முறையாக, ஒரு அரசியல் கட்சி இது போன்று முதலமைச்சரே, மக்களிடம் திட்டங்கள் குறித்து இந்த தொழில்நுட்பத்தில் தெரிவிப்பது கூடுதல் சிறப்பு அம்சமாகும்.






