என் மலர்
உள்ளூர் செய்திகள்
- விடுதலை சிறுத்தைகள் கட்சி மூன்று தொகுதிகளில் உறுதியாக உள்ளது.
- மதிமுக ஒரு மக்களவை இடமும், ஒரு மாநிலங்களவை இடமும் கேட்கிறது.
திமுக கூட்டணியில் கம்யூனிஸ்டு கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மதிமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.
மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் நான்கு கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. காங்கிரஸ், மதிமுக, விசிக கட்சிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
விடுதலை சிறுத்தைகளை கட்சி கடந்த முறை திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகளில் நின்றன. தற்போது மூன்று தொகுதிகள் கேட்கிறது. இரண்டு தனித்தொகுதி மற்றும் ஒரு பொதுத்தொகுதி கேட்கிறது. ஆனால் திமுக சார்பில் இரண்டு தனித்தொகுதியை வழங்க தயாராக இருக்கிறது.
ஆனால் மூன்று தொகுதிகளை பெறுவதில் உறுதியாக உள்ளது விசிக. இதனால் இன்னும் உடன்பாடு எட்டப்படாமல் இருக்கிறது. பொதுத்தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் கூட போட்டியிட தயார் என விசிக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதிமுக ஒரு தொகுதியுடன் ஒரு மாநிலங்களவை இடங்களையும் சேர்த்து கேட்கிறது. மேலும் பம்பரம் சின்னத்தில்தான் போட்டியிட இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையாமல் உள்ளது. பம்பரம் சின்னம் தொடர்பாக மதிமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
திமுக விருப்ப மனு பெற்று வருகிற 10-ந்தேதியில் இருந்து நேர்காணல் நடத்த இருக்கிறது. ஆனால் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு இன்னும் முடிவடையாததால் நேற்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமைக்கப்பட்டுள்ள திமுக குழு நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஏற்கனவே முன்னதாக ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த நிலையில் இன்று மதிமுக மற்றும் விசக உடன் தொகுதி பங்கீடு உடன்பாடு எட்டப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சி உடனும் இன்னும் ஒரிரு நாட்களில் தொகுதி பங்கீடு உடன்பாடு எட்டப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
- தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டறிய உள்ளார்.
- பரிந்துரையாளர்கள், ஆதரவாளர்களுக்கு அனுமதி இல்லை எனவும் அறிவிப்பு.
திமுக வேட்பாளர்கள் நேர்காணல் வரும் மார்ச் 10ம் தேதி முதல் தொடங்குவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனு அளித்துள்ளவர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் செய்ய உள்ளா்.
அதன்படி, மார்ச் 10ம் தேதி காலை 9 மணி முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெறும் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மேலும், நேர்காணலின்போது, தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டறிய உள்ளார்.
நேர்காணலில், அந்தந்த நாடாளுமன்ற தொகுதி மாவட்ட செயலாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும், பரிந்துரையாளர்கள், ஆதரவாளர்களுக்கு அனுமதி இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
- தூத்துக்குடியில் போட்டியிட தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. விருப்ப மனு தாக்கல் செய்தார்.
- விருப்ப மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் அண்ணா அறிவாலயத்தில் கூட்டம் அலை மோதியது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து அண்ணா அறிவாலயத்தில் கடந்த 1-ம் தேதியில் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வந்தன.
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க. தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா மற்றும் ஆஸ்டின் உள்ளிட்டோர் விருப்ப மனுக்களைப் பெற்று வந்தனர்.
இதில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. விருப்ப மனு தாக்கல் செய்தார். அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதிக்கும், அமைச்சர் கே.என்.நேரு மகன் அருண் கரூர் தொகுதிக்கும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு டி.ஆர்.பாலுவும், தென்சென்னை தொகுதிக்கு கழக வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், நெல்லை தொகுதிக்கு பாரத் ஸ்கேன்ஸ் நிறுவனர் டாக்டர் இம்மானுவேல், சபாநாயகர் அப்பாவு மகன் அலெக்ஸ் உள்பட பலர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், இன்று விருப்ப மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் அண்ணா அறிவாலயத்தில் கூட்டம் அலை மோதியது. ஏராளமான கட்சி பிரமுகர்கள் ஆதரவாளர்களுடன் வந்தி ருந்து விருப்ப மனு தாக்கல் செய்தனர்.
40 பாராளுமன்ற தொகுதிக்கும் சுமார் 2400-க்கும் மேற்பட்டவர்கள் அறிவாலயத்தில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்
- மகளிர் முன்னேற்றத்திற்கு திராவிட மாடல் அரசு பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.
- அரசின் திட்டங்களால் தமிழகம், பெண்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.
கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்தார்.
நலத்திட்ட உதவிகள் வழங்கு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-
அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயின்ற 127 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.
அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தி கொளத்தூர் தொகுதியை எடுத்துக்காட்டு தொகுதியாக மாற்றியுள்ளோம்.
யார் என்ன சொன்னாலும் முன்னேற்றத்தை இலக்காக கொண்டு பயணிக்க வேண்டும்.
பெண்கள் சமூதாயத்தில் முன்னேற்றம் அடைய ஊக்கம் அளிக்கும் நாள் மார்ச் 8.
மகளிர் முன்னேற்றத்திற்கு திராவிட மாடல் அரசு பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.
அரசின் திட்டங்களால் தமிழகம், பெண்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டை வஞ்சிக்காத மதிக்கின்ற மத்திய அரசு அமைய வேண்டும்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- முறைகேடுகள் நடை பெறாமல் இருப்பதற்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலரே பதிவேற்ற ஐடியை வைத்துள்ளார் எனக் கூறினர்.
- சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அலுவலகங்களில் ஒரே நாளில் உரிமத்தை புதுப்பித்து விடுகின்றனர்.
சென்னை:
ஓட்டுனர் உரிமம் புதுப்பிப்பதற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் புதிய சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சாப்ட்வேர் மூலம் புதுப்பிப்பவர்களின் ஆதார் கார்டு, லைசென்ஸ், செல்போன் எண், ரத்த வகை ஆகியவை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
அவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்டு அவர்களுக்கு பதிவேற்ற எண் வழங்கப்படும்.
இந்த எளிமையான நடைமுறை வந்த பிறகு காத்திருக்க வேண்டியது இல்லை.
ஆனால் ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிப்பதற்காக அண்ணா நகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு பல முறை வந்து செல்ல வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இது பற்றி அலுவலக வட்டாரங்களில் விசாரித்த போது ஆட்கள் பற்றாக்குறை தான் இதற்கு காரணம்.
முறைகேடுகள் நடை பெறாமல் இருப்பதற்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலரே பதிவேற்ற ஐடியை வைத்துள்ளார் எனக் கூறினர்.
பாதிக்கப்பட்ட பொது மக்கள் கூறுகையில், "லைசென்ஸ் புதுப்பிக்க முடியாமல் 15 நாட்களாக அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றோம்.
எங்கள் உறவினர்கள் செங்குன்றம், அயனாவரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அலுவலகங்களில் ஒரே நாளில் உரிமத்தை புதுப்பித்து விடுகின்றனர்.
ஆனால் அண்ணா நகரில் மட்டும் இந்த அவல நிலை ஏன் ஏற்பட்டுள்ளது? என்று தெரியவில்லை. அரசு உடனே தலையிட்டு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என கூறினர்.
- அரசு தொடக்கப்பள்ளியில் நேற்று Good Touch Bad Touch குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- அப்போது 4 சிறுமிகள், தலைமை ஆசிரியரிடம் சென்று, வீட்டின் அருகே விளையாடும் போது, ஒருவர் Bad Touch செய்ததாக கூறியுள்ளனர்.
தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் காட்டுராஜா என்பவர் தனது வீட்டின் அருகே விளையாடும் 9 வயது சிறுமிகள் 3 பேர் மற்றும் 8 வயது சிறுமி ஆகியோருக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து, அவரது வீட்டின் உள்ளே அழைத்துச் சென்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதை அடுத்து போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
புளியங்குடியில் உள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் நேற்று Good Touch Bad Touch குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதில் தலைமை ஆசிரியர், பள்ளி குழந்தைகளிடம் உங்களது உடலில் உங்களது வீட்டு நபர்களை தவிர யாராவது உங்கள் உடலில் கை வைத்தால் பள்ளியிலோ, அல்லது வீட்டில் உள்ள பெற்றோர்களிடமோ உடனே தகவல் சொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அப்போது 4 சிறுமிகள், தலைமை ஆசிரியரிடம் சென்று, வீட்டின் அருகே விளையாடும் போது, ஒருவர் Bad Touch செய்ததாக கூறியுள்ளனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோரிடம் பள்ளியின் தலைமை ஆசிரியர் தகவல் கூறியுள்ளார். பின்னர் இதுகுறித்து நான்கு குழந்தைகளின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் டாஸ்மாக் ஊழியரான காட்டு ராஜாவை (48) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- அரசியல் இயக்கத்தில் மதம் கலக்க கூடாது. பாஜக ஒரு மதத்தை முன்னோக்கி எடுத்து செல்கிறது
- அதிமுகவுக்கு ஓட்டு போடும் மக்களை ஏமாற்ற பிரதமர் மோடி முயற்சிக்கிறார் என்று செல்லூர் ராஜு தெரிவித்தார்.
மதுரையில் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த பின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அதில், பிரதமர் மோடி நன்றாக நடிக்கிறார். அவர்கள் கட்சி தலைவர்களான வாஜ்பாய், அத்வானிக்கு மாற்றாக அதிமுக தலைவர்களின் புகழை பாடுகிறார். அதிமுகவுக்கு ஓட்டு போடும் மக்களை ஏமாற்ற மோடி முயற்சிக்கிறார். கஜினி முகமது போல பிரதமர் மோடி எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு படையெடுத்தாலும் சரி, மக்கள் ஏற்க மாட்டார்கள்.
அரசியல் இயக்கத்தில் மதம் கலக்க கூடாது. பாஜக ஒரு மதத்தை முன்னோக்கி எடுத்து செல்கிறது. அதை தமிழக மக்கள் எப்போதும் ஏற்க மாட்டார்கள். ராமர் கோயில் கட்டுவதை குறை சொல்லவில்லை. அதை மக்கள் மத்தியில் பிரச்சாரமாக எடுத்து செல்ல கூடாது. பாஜக எவ்வளவு உருண்டாலும் அவர்களை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்.
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் ஒரு அரசியல் நாடகம் தான். தமிழ்நாட்டுக்கு இத்தனை முறை வந்த பிரதமர் ஏன் இந்த கட்டுமானம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவேயில்லை. எப்படியாவது மருத்துவமனையை கட்டி முடித்தால் சரி தான் என் அவர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' யாத்திரை நிறைவு விழா கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை புகழ்ந்து பேசினார்.
இதனை அடுத்து, புதுச்சேரியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்களுடன் பிரதமர் மோடி, அமித்ஷா, முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோரின் படங்களுடன், வாக்களிப்போம் தாமரைக்கே என பாஜகவினர் போஸ்டர் ஒட்டியிருந்தது பரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
- கைதான இருவர் மீது போக்சோ உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.
- சிறுமி கொலை வழக்கு தொடர்பாக சிறப்புக் குழு விசாரணை.
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 9-வயது சிறுமி வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
இச்சம்பவம் தொடர்பாக கைதான இருவர் மீது போக்சோ உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுமி கொலை வழக்கு தொடர்பாக சிறப்புக் குழு விசாரணையை தொடங்கியுள்ளது.

இந்நிலையில், சிறுமி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
பாதுகாப்பு கருதி இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் மருத்துவ பரிசோதனை முடித்து போலீசார் சிறைக்கு அழைத்து சென்றனர்.
மேலும், நீதிபதி இளவரசன் சிறை வளாகத்திற்கு சென்று கைது செய்யப்பட்டவர்களை பார்வையிட்டு சிறை காவலுக்கு உத்தரவிட உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
- ஒரு கல்வி மாவட்டத்துக்கு அதிகபட்சம் 2 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.
- பயிற்சியின் போது மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு, போக்குவரத்து கட்டணம் வழங்கப்படும்.
சென்னை:
பள்ளிக் கல்வி இயக்குநா் க.அறிவொளி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு மாணவா்களுக்கு நீட், ஜேஇஇ தோ்வுகளுக்கு கடந்த நவம்பா் முதல் பிப்ரவரி வரை பள்ளி அளவில் பயிற்சி வழங்கப்பட்டது. அதன் தொடா்ச்சியாக, பொதுத்தோ்வு முடிந்த பிறகு 12-ம் வகுப்பு மாணவா்களுக்கு கல்விமாவட்ட அளவில் மாா்ச் 25-ந் தேதி முதல் மே 2-ந் தேதி வரை தொடா் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, ஒரு கல்வி மாவட்டத்துக்கு அதிகபட்சம் 2 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட வேண்டும். ஒரு மையத்துக்கு 40 போ் வீதம் மாணவா்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப மையங்கள் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளலாம். இணையதளம் மற்றும் ஸ்மாா்ட் வகுப்பறை வசதி கொண்ட பள்ளிகளை மையங்களாகத் தோ்வுசெய்ய வேண்டும். தமிழ், ஆங்கில வழியில் பயிற்சி நடைபெறும்.
தினந்தோறும் தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல் ஆகிய 4 பாடங்களிலும் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். இதுதவிர பயிற்சி மையங்கள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9.15 முதல் மாலை 4.30 மணி வரை வழங்கப்படும். பயிற்சியின் போது மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு, போக்குவரத்து கட்டணம் வழங்கப்படும்.
வாரந்தோறும் சனிக் கிழமை திருப்புதல் தோ்வுகள் நடத்தப்பட்டு அதுகுறித்த விவாதங்கள் மேற்கொள்ளப்படும். அதற்குரிய கால அட்டவணைகளும் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய வழிமுறைகளை பின்பற்றி பயிற்சி மையங்கள் சிறப்பாக செயல்பட தேவையான நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- புதிய மனு உரிய முறையில் பரிசீலித்து முடிவெடுக்கப்படும்.
- தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்களவை தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன் வந்தது.
அப்போது, மதிமுக கடந்த பிப்ரவரி 28ல் அளித்த புதிய மனு உரிய முறையில் பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.
இந்நிலையில், பம்பரம் சின்னம் ஒதுக்க கோரிய மதிமுகவின் விண்ணப்பம் மீது இரண்டு வாரங்களில் முடிவு எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 1933-ம் ஆண்டு சென்ட்ரலில் இருந்து பேசின்பிரிட்ஜ் நோக்கி செல்லும் ரெயில்வே வழித்தடத்துக்கு மேலே யானைக்கவுனி ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டிருந்தது.
- பேசின்பிரிட்ஜ் மற்றும் வால்டாக்ஸ் ரோடு பகுதியில் இருந்து எழும்பூர், புரசைவாக்கம் பகுதிக்கு செல்பவர்கள் இந்த பாலத்தின் வழியாக சிரமமின்றி விரைவாக சென்று விடலாம்.
சென்னை:
சென்னை யானைக் கவுனியில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ரெயில்வே மேம்பால பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
இந்த மாத இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிவடைந்து புதிய பாலம் திறக்கப்பட உள்ளது. 1933-ம் ஆண்டு சென்ட்ரலில் இருந்து பேசின்பிரிட்ஜ் நோக்கி செல்லும் ரெயில்வே வழித்தடத்துக்கு மேலே யானைக்கவுனி ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டிருந்தது. வலது புறத்தில் பேசின் பிரிட்ஜ் டிப்போவையும் இடது புறத்தில் சால்ட் சரக்கு கூடத்தையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்டிருந்த இந்த மேம்பாலத்தை புதுப்பித்து புதிதாக கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. பழமையான பாலத்தால் ரெயில்கள் பாலத்துக்கு கீழே செல்வதில் பல்வேறு இடையூறுகள் இருந்து வந்தன. தற்போது புதிய பாலப்பணிகள் 90 சத வீதத்துக்கும் மேல் முடிவடைந்து விட்டதால் ரெயில்கள் பாலத்துக்கு கீழே கடந்து செல்லும் போது, இனி சிரமம் இன்றி வேகமாக கடந்து செல்ல முடியும்.
இந்த பாலப்பணிகளுக்காக யானைக்கவுனி ரெயில்வே மேம்பாலம் 2017-ம் ஆண்டு மூடப்பட்டு 4 சக்கரவாகனங்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டது. 2019-ம் ஆண்டு முதல் இரு சக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களுக்கும் தடை போடப்பட்டது. 2020-ம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் பாலத்தை புதுப்பித்து முழுமையாக கட்டும் பணிகள் தொடங்கின. இந்த புதிய பாலத்தில் பிரமாண்டமான 7 தூண்கள் பொருத்தப்பட்டு பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. பாலத்தின் மேலே நடந்து செல்பவர்களுக்கான பாதையும் உருவாக்கப்பட்டன. ரூ.30.78 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பாலப்பணிகள் 95 சதவீதம் அளவுக்கு முடிந்திருப்பதாக ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து இன்னும் சில நாட்களிலோ அல்லது இந்த மாத இறுதியிலோ பாலத்தின் திறப்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பாலம் திறக்கப்பட்டுவிட்டால் பேசின்பிரிட்ஜ் மற்றும் வால்டாக்ஸ் ரோடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். பேசின்பிரிட்ஜ் மற்றும் வால்டாக்ஸ் ரோடு பகுதியில் இருந்து எழும்பூர், புரசைவாக்கம் பகுதிக்கு செல்பவர்கள் இந்த பாலத்தின் வழியாக சிரமமின்றி விரைவாக சென்று விடலாம். வால்டாக்ஸ் சாலையில் நெரிசல் குறையும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
- சங்கு தீர்த்த குளத்தில் கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி புதிய சங்கு வெளியேவந்தது.
- 12 ஆண்டுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து சங்கு வெளியே வருவது பக்தர்களை ஆச்சரியப்பட வைத்து வருகிறது.
மாமல்லபுரம்:
திருக்கழுகுன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்குள்ள சங்கு தீர்த்த குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு வெளியே வரும்.
இந்த சங்கு குளத்தில் கரை ஒதுங்கியதும், கோவில் நிர்வாகம் சார்பில் அதற்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். இதைத் தொடர்ந்து கார்த்திகை மாதத்தின் கடைசி திங்கட்கிழமையில் மலை மீது வேத கிரீஸ்வரருக்கு நடைபெறும் 1008 சங்காபிஷேகத்தில் குளத்தில் பிறந்த புதிய சங்கு முதன்மை பெறும்.
இதனை கண்டு வழிபட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். சங்கு தீர்த்த குளத்தில் கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி புதிய சங்கு வெளியேவந்தது.
இதனால் சங்கு தீர்த்த குளத்தில் புதிய சங்கின் வருகைக்காக பக்தர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை குளத்தில் புதிய சங்கு கோவில் குளக்கரை யில் கரை ஒதுங்கி இருந்தது. இதனை கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
இதுபற்றி கோவில் நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற் கிடையே சங்கு தீர்த்த குளத்தில் புதிய சங்கு வெளியே வந்தது பற்றி அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் சங்கை பார்த்து பயபக்தியுடன் வழிபட்டனர். இதனால் கோவில் குளக்கரையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

பின்னர் அந்த சங்கிற்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதைத்தொடர்ந்து சங்கு பாதுகாப்பாக கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
மார்கண்டேயர் அனைத்து சிவாலயங்களுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு வந்து உள்ளார்.அப்போது, சிவ பெருமானை வழிபடுவதற்காக தீர்த்தம் எடுக்க பாத்திரம் இல்லாததால், இங்குள்ள குளத்தில் தீர்த்த பாத்திரம் வேண்டி சிவபெருமானை வணங்கியதாவும் அப்போது குளத்தில் இருந்து சங்கு ஒன்று பிறந்து கரை ஒதுங்கியதாகவும் நம்பப்படுகிறது. இந்த சங்கை சுவாமியே வழி பாட்டுக்கு வழங்கி யதாகவும் தல வரலாறு கூறுகிறது. இதனால் இந்த குளத் துக்கு சங்கு தீர்த்த குளம் என பெயர் பெற்று உள்ளது. மேலும் 12 ஆண்டுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து சங்கு வெளியே வருவது பக்தர்களை ஆச்சரியப்பட வைத்து வருகிறது.
நாளை சிவராத்திரி விழா நடைபெற உள்ள நிலையில் இன்று சங்குதீர்த்த குளத்தில் புதிய சங்கு வெளியே வந்ததால் பக்தர்கள் விசேஷமாக கூறி மகிழ்ச்சி அடைந்தனர். இன்றுடன் எடுத்த சங்குடன் மொத்தம் 8 சங்குகள் கோவிலில் இருப்பதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.






