என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தங்களது பதவிக்காலம் முழுவதும், தன்னடக்கம் அறிவாற்றல் உயர் அரசியல் பண்பு ஆகியவற்றை வெளிப்படுத்தி, கட்சி வேறுபாடின்றி அனைவரது நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றுள்ளீர்கள்.
- உங்களது தலைமைத்துவம், குறிப்பாகக் கடினமான காலங்களில் நீங்கள் அதை வெளிப்படுத்திய விதம், என்னை உட்படப் பலருக்கும் ஊக்கமாக இருந்துள்ளது.
சென்னை:
தி.மு.க. தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,
மாநிலங்களவையில் 33 ஆண்டுகள் உறுப்பினராக இருந்து தாங்கள் நாட்டுக்கு ஆற்றிய அளப்பரிய சேவைக்காகத் தி.மு.க.வின் சார்பாகவும், தனிப்பட்ட முறையிலும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களது பதவிக்காலம் முழுவதும், தன்னடக்கம் அறிவாற்றல் உயர் அரசியல் பண்பு ஆகியவற்றை வெளிப்படுத்தி, கட்சி வேறுபாடின்றி அனைவரது நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றுள்ளீர்கள். உங்களது தலைமைத்துவம், குறிப்பாகக் கடினமான காலங்களில் நீங்கள் அதை வெளிப்படுத்திய விதம், என்னை உட்படப் பலருக்கும் ஊக்கமாக இருந்துள்ளது.
வாழ்வில் புதிய கட்டத்தை நோக்கித் தாங்கள் அடியெடுத்து வைக்கும் இவ்வேளையில், இந்திய ஒன்றியத்துக்கும் இந்திய மக்களுக்கும் நீங்கள் ஆற்றிய பெருந்தொண்டினை எண்ணிப் பெருமை கொள்வீர்கள் என நம்புகிறேன்.
தி.மு.கழகம் சார்பாகவும், தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும் தாங்கள் நல்ல உடல்நலத்தோடும், மகிழ்ச்சியோடும் திகழவும், அடுத்து தாங்கள் மேற்கொள்ளும் பணிகளில் மனநிறைவெய்தவும் விழைகிறேன். தங்களது அறிவாற்றலாலும், தொலைநோக்குப் பார்வையாலும் தொடர்ந்து எங்களுக்கு ஊக்கமளிப்பீராக.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
- திமுகவினருக்கு என்மீது எவ்வளவு பயம் இருந்தால் ஆட்டுக்குட்டி போன்ற விமர்சனங்களை செய்வார்கள் - அண்ணாமலை
- தேர்தல் முடிந்த பிறகு பிரியாணி போட திட்டமிட்டிருந்ததாகவும் தற்போதுதான் தெரிந்தது கோவையில் மட்டன் பிரியாணியாம் - டி.ஆர்.பி.ராஜா
கோவை தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, "திமுகவினருக்கு என்மீது எவ்வளவு பயம் இருந்தால் ஆட்டுக்குட்டி போன்ற விமர்சனங்களை செய்வார்கள். அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா போன்றவர்களால் என்னைப் போல வியர்வை சிந்தி உழைக்க முடியுமா? ஆட்டைக் கொடுமைப்படுத்தாமல் பிரியாணி செய்யுங்கள் இதுதான் என அன்பான வேண்டுகோள் என்று தெரிவித்தார்.
மேலும், தினம் ஒரு வார்த்தை, தினம் ஒரு தத்துவம் என்ற பாணியில் சீமான் அரசியல் நடத்துகிறார். சின்னம் கிடைக்காததால், தொண்டர்கள் அவர் மீது கோபத்தில் உள்ளனர். தன்னுடைய தவறை மறைப்பதற்காக தினமும் என்னையும், பாஜகவையும் சீமான் விமர்சிக்கிறார். அவர் செய்த தவறுக்காக தினமும் எங்கள் மீது பழிபோட்டால் எப்படி எனக் கேள்வி எழுப்பினார். மேலும் சீமான் சின்னத்திற்காக முறையாக விண்ணப்பிக்கவில்லை.
பிரதமர் ரோடு ஷோ நடத்தி உள்ளார். அமித்ஷா நாளை தேனியில் ரோடு ஷோ நடத்துகிறார். முக்கிய நகரில் பிரதமர் மீண்டும் ரோடு ஷோ நடத்த உள்ளார். அதனை ஏன் முதல்வர் செய்யவில்லை. ‛ ரோடு ஷோ' வை முதல்வர் ஸ்டாலின் நடத்தட்டும். தமிழகத்தில் எந்த நகரையாவது முதல்வர் தேர்வு செய்து 10 கி.மீ., தூரம் ரோடு ஷோ நடத்தட்டும். எத்தனை பேர் வருகிறார்கள் என்பதை பார்ப்போம். நான் சவால் விடுக்கிறேன். ரோடு ஷோ நடத்த முதல்வருக்கு ஏன் பயம்?
29 பைசா மோடி என உதயநிதி பேசினால், அவரை பீர், சாராயம், டாஸ்மாக், ட்ரக் உதயநிதி என்று அழைப்போம். நாங்கள் மரியாதைக்காக அமைதியாக இருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக கோவையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் டி.ஆர்.பி ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "தேர்தல் முடிந்த பிறகு பிரியாணி போட திட்டமிட்டிருந்ததாகவும் தற்போதுதான் தெரிந்தது கோவையில் மட்டன் பிரியாணியாம்.. சுவையான ஆட்டு பிரியாணி காத்திருக்கிறது என அண்ணாமலை மறைமுகமாக சீண்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மதுரைக்கு ரூ.7,000 கோடி அளவில் செய்யப்பட்ட திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார்.
- வழியெங்கும் திரண்ட மக்கள் மேளதாளம் முழங்க பூக்களை தூவி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு வரவேற்பு அளித்தனர்.
மதுரை:
மதுரை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. பேட்பாளர் மக்களின் மருத்துவார் டாக்டர் பா.சரவணன் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுடன் தொகுதிக்கு உட்பட்ட பல்பேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறொர். அதன் ஒரு பகுதியாக மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சோலை அழகுபுரம், ஜெய்ஹிந்த்புரம், ஜீவாநகர், கோவலன் நகர், முத்துப்பட்டி, பழங்காநத்தம், திருவள்ளவர் நகர், மாடக்குளம் ஆகிய பகுதிகளில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர்.
வழியெங்கும் திரண்ட மக்கள் மேளதாளம் முழங்க பூக்களை தூவி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு வரவேற்பு அளித்தனர். மேலும் செல்லும் இடமெல்லாம் உற்சாக வரவேற்பு அளித்து ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு சரவணனை அவர்கள் வாழ்த்தினார்கள். அப்போது அவர் 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த போது மதுரைக்கு ரூ.7,000 கோடி அளவில் செய்யப்பட்ட திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார்.
மதுரையில் நடைபெறுகிற மக்களவைத் தேர்தல் உண்மைக்கும் பொய்க்கும் நடைபெறும் தேர்தல் எனவும், சி.பி.எம். பாராளுமன்ற உறுப்பி்னுர் சு.வெங்கடேசன் கொண்டு வந்த திட்டங்கள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவில்லை எனவும் பேசினார்.
பிரசாரத்தில் நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ். பாண்டியன், ஜெயவேல், பரவை ராஜா, கருப்பசாமி, முத்துவேல், எஸ்.எம்.டி.ரவி, செல்வக்குமார், மைதிலி, இஷிகா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தேமுதிக மாவட்ட செயலாளர் (தெற்கு) மணிகண்டன், அகில இந்திய பார்வர்டு பிளாக் சிவபாண்டி, பசும்பொன், எஸ்.டி.பி.ஐ. பிலால் மைதீன் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
- சாலையோர பூ வியாபாரிகள், மற்றும் காய்கறி, பழக்கடை வியாபாரிகள் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளித்தனர்.
- அனைவரையும் பார்த்து சிரித்த முகத்துடன் எடப்பாடி பழனிசாமி வணக்கம் தெரிவித்தார்.
சேலம்:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.
முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் பெரியசோரகை சென்றாய பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்து தனது பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து திருச்சியில் தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி நேற்று கிருஷ்ணகிரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டிற்கு வந்து தங்கினார்
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 7 மணியளவில் சேலம் சின்னக்கடை வீதி பகுதியில் தனது பிரசாரத்தை தொடங்கினார். அப்போது சாலையோர பூ வியாபாரிகள் மற்றும் காய்கறி, பழக்கடை வியாபாரிகள் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து சாலையில் நடந்து சென்ற எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு வியாபாரிகளிடமும் துண்டு பிரசுரங்களை வழங்கி அ.தி.மு.க. வேட்பாளர் விக்னேசுக்கு ஆதரவு திரட்டினார். அப்போது எடப்பாடி பழனிசாமியை பார்த்த பெண்கள், பொதுமக்கள் உற்சாகம் அடைந்தனர். மகிழ்ச்சி அடைந்த சாலையோர பெண் வியாபாரிகள் எடப்பாடி பழனிசாமிக்கு மாலை அணிவித்தனர். பின்னர் அவருக்கு காய்கறிகள் மற்றும் ஆப்பிள், திராட்சை, எலுமிச்சை பழங்களை வழங்கினர். அவற்றை எடப்பாடி பழனிசாமி அன்புடன் பெற்றுக் கொண்டார். பின்னர் பெண் வியாபாரிகள் எடப்பாடி பழனிசாமி கன்னத்தை வாஞ்சையுடன் பிடித்து கொஞ்சினர். தொடர்ந்து அவருடன் போட்டோவும் எடுத்து கொண்டனர். அப்போது சில வியாபாரிகள் தங்களது பிரச்சனைகளை எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்தனர். அதற்கு அவர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
காலை நேரத்திலேயே எடப்பாடி பழனிசாமி கடைவீதியில் நடந்து வரும் தகவல் தெரிந்து ஏராளமான பொதுமக்கள் கூட்டமும் அவரை பார்க்க திரண்டனர். அனைவரையும் பார்த்து சிரித்த முகத்துடன் எடப்பாடி பழனிசாமி வணக்கம் தெரிவித்தார். சுமார் 30 நிமிடம் கடைவீதியில் நடந்து சென்று வாக்கு சேகரித்த எடப்பாடி பழனிசாமி பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு தனது வீட்டிற்கு சென்றார். எடப்பாடி பழனிசாமியுடன் மாவட்ட செயலாளர் வெங்கடா ஜலம், பாலசுப்பிரமணியன் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் எம்.கே. செல்வராஜ், ரவிச்சந்திரன், சக்திவேல், முன்னாள் எம்.பி. பன்னீர்செல்வம், பொருளாளர் பங்க் வெங்கடாசலம், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், செல்வகுமார், அம்பேத்கார் மக்கள் கட்சி தலைவர் அண்ணாதுரை மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரப்பம் பாளையம் பகுதியில் இன்று அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். பின்னர் மாலையில் நாமக்கல்லில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ் மணிக்கு ஆதரவு திரட்டுகிறார்.
- தமிழ்நாட்டில் செயல்படுத்தும் திட்டங்களை இந்தியா முழுவதும் செயல்படுத்தினால் உலகம் இந்தியாவை திரும்பி பார்க்கும்.
- எதிர்த்து குரல் கொடுப்பவர்களை இல்லாமல் செய்வது ஒருவித அரசியல்.
திருச்சி:
திருச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது கமல்ஹாசன் பேசியதாவது:-
நாம் மதிக்கும் மிக முக்கியமான புத்தகம், நம் அரசியல் அமைப்பு சட்டம். அந்த புத்தகம் பாதுகாக்கப்பட்டால் தான் நீங்கள் வணங்கும் மற்ற புத்தகங்கள் பாதுகாக்கப்படும். நான் இங்கு சீட்டுக்காக வரவில்லை. நாட்டுக்காக வந்து இருக்கிறேன்.
தமிழக மக்களுக்கும், இந்தியாவுக்கும் எனக்குள்ள காதல் சாதாரணமானது அல்ல. அதையும் தாண்டி புனிதமானது. என் காதல் உங்கள் அனைவரின்பால் உண்டு. அதனால் தான் நான் அரசியலுக்கே வந்தேன்.
தமிழ்நாட்டில் செயல்படுத்தும் திட்டங்களை இந்தியா முழுவதும் செயல்படுத்தினால் உலகம் இந்தியாவை திரும்பி பார்க்கும். இல்லத்தரசிகளுக்கு உதவித்தொகை என்பதை முதன்முதலில் மக்கள் நீதி மய்யத்தில் அறிவித்தோம். அப்போது என்னென்னமோ கிண்டல் செய்தார்கள்.
ஆனால் அதை உற்றுநோக்கி நடைமுறைப்படுத்திய ஒரு காரணத்துக்காக நான் இங்கு வந்தேன் என்று வைத்து கொள்ளலாம். பெண்களுக்கு பஸ்சில் கட்டணமில்லா பயணம் என்ற திட்டம் ஏன் தமிழ்நாட்டோடு முடியணும்? இந்தியா முழுவதும் ஏன்? வரக்கூடாது. அது தான் நல்ல அரசியல், அதை செய்யுங்கள்.
எதிர்த்து குரல் கொடுப்பவர்களை இல்லாமல் செய்வது ஒருவித அரசியல். எதிர்த்து குரல் கொடுத்தாலும் என்ன சொல்கிறார்கள் என்று கேட்பது நமது அரசியல். அண்ணன், தம்பிகளை மோதவிட்டு பார்ப்பது ஒரு அரசியல் தந்திரம். அது இன்று நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- கோவையில் பிரசாரம் செய்து தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
- கேரள மாநிலம் வயநாட்டில் அவர் போட்டியிடும் பகுதியில் பிரசாரம் செய்ய செல்கிறார்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வருகிற 19-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.
இதனால் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது. கூட்டணி கட்சியினருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வடமாநில தலைவர்களும் வருகிறார்கள்.
காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருகிற 12-ந்தேதி தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வர வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்பட்டன.
அன்று ஒரே நாளில் 2 இடங்களில் பிரசாரம் செய்யும் வகையில் பயணத்திட்டம் தயாராகிறது.
திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளர், தூத்துக்குடி, தென்காசி தி.மு.க. வேட்பாளர்கள், விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் ஆகியோரை ஆதரித்து நெல்லையில் பிரசார பொதுக்கூட்டத்தில் ஆதரவு திரட்டுகிறார்.
அதைத் தொடர்ந்து கோவையில் பிரசாரம் செய்து தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
பின்னர் அங்கிருந்து கேரள மாநிலம் வயநாட்டில் அவர் போட்டியிடும் பகுதியில் பிரசாரம் செய்ய செல்கிறார்.
- கல்யாணத்தில் மாப்பிள்ளை யார் என்பது தான் முக்கியமான விஷயம்.
- தினகரன் எப்போதில் இருந்து ஜோசியர் ஆனார் என தெரியவில்லை என்றார்.
மதுரை:
மதுரையில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு கேட்டு கத்தோலிக்க பேராயர் அந்தோணி பாப்புசாமியை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்குமாறு பேராயரை சந்தித்தேன். அப்போது அவர் மத்திய பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியது சரியான முடிவு என தெரிவித்தார். மேலும் இனிவரும் காலங்களிலும் அ.தி.மு.க. இதே நிலையை கடைபிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
தமிழகத்தில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் அடிக்கடி பிரசாரத்திற்கு தமிழகம் வருகிறார்கள். தேர்தல் என்றால் அரசியல் தலைவர்கள் வரத்தான் செய்வார்கள். கல்யாணத்திற்கு உறவினர்கள், நண்பர்கள் வருவதுபோல் தேர்தலுக்கு தலைவர்கள் வருகிறார்கள்.
ஆனால் கல்யாணத்தில் மாப்பிள்ளை யார் என்பது தான் முக்கியமான விஷயம். அந்த வகையில் இந்த தேர்தலில் அ.தி.மு.க. தான் மாப்பிள்ளை என நகைச்சுவையாக கூறினார்.
இதையடுத்து நிருபர்கள் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் படுதோல்வி அடைந்துள்ளது. இந்த தேர்தலிலும் தோல்வி அடையும் என தினகரன் கூறியுள்ளாரே? என கேட்டனர். அதற்கு பதில் அளித்த செல்லூர் ராஜூ, தினகரன் எப்போதில் இருந்து ஜோசியர் ஆனார் என தெரியவில்லை என்றார்.
- மக்களை வாட்டி வதைத்து அதிகாரத்தை பயன்படுத்தி தி.மு.க.வினர் சின்னம் வரைகின்றனர்.
- குடும்ப தலைவிகளை மிரட்டி வாக்குகள் கேட்டால் எங்களிடம் சொல்லுங்கள். நாங்கள் அதிகாரிகளிடம் சொல்லி நடவடிக்கை எடுக்கப்படும்.
சேலம்:
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்று சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீரப்பம்பாளையத்தில் அ.தி.மு.க. தேர்தல் செயல்வீரர்கள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சேலம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் விக்னேசை ஆதரித்து பேசியதாவது:-
தமிழகத்தில் தி.மு.க.வின் மெத்தன போக்கால் நெசவு தொழில் முழுவதும் முடங்கி தறிகள் பழைய இரும்பு கடைக்கு செல்லும் சூழ்நிலை உருவாகி விட்டது. தமிழகத்தில் விவசாயிகளை வஞ்சிக்கும் நோக்கில் அ.தி.மு.க. காலத்தில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது. அதன் ஒரு பகுதியாக மேட்டூர் அணை உபரி நீர் திட்டத்தை கடந்த 3 ஆண்டுகளாக கிடப்பில் போட்டதால் சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட விவசாயிகள் வெகுவாக பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியின் மேல் மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வின் அலை வீசுகிறது. இதனால் தி.மு.க.வில் போதிய வேட்பாளர்கள் கூட இல்லாமல் அ.தி.மு.க.வில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்களே சேலம், கோவை போன்ற நகரங்களில் தி.மு.க. வேட்பாளர்களாக களம் காண்கிறார்கள். அதேபோல் அ.தி.மு.க.வில் இருந்து சென்ற 8 பேர் அமைச்சர்களாக உள்ளனர். அ.தி.மு.க. தொண்டர்களின் வியர்வையால் அடையாளம் காணப்பட்டு தற்போது சேலம், கோவை, தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். எடப்பாடி அ.தி.மு.க.வின் கோட்டை, இங்கு யாராலும் வெற்றி பெற முடியாது. கடந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராகிய என்னை 94 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற வைத்து தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தது போல் தற்போது அதைவிட கூட கூடுதலான வாக்குகளை சேலம் பாராளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் விக்னேசுக்கு அளிக்க வேண்டும்.
இன்றைய தினம் தமிழ்நாட்டில் வேண்டும் என்று திட்டமிட்டு தவறான செய்தியை பரப்பி விட்டு வருகிறாங்க. 1000 ரூபாய் தி.மு.க. ஆட்சியில் குடும்ப தலைவிக்கு கொடுத்திருக்காங்க. இந்த பணத்தை எப்படி கொடுத்தாங்கணு பார்க்கணும். நான் பல முறை சட்டமன்றத்தில் பேசி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபையில் பேசி அழுத்தம் கொடுத்த காரணத்தினால் தான் 27 மாதங்கள் கழித்து தான் இந்த திட்டத்தை நிறைவேற்றினாங்க. இந்த திட்டம் வருவதற்கு காரணம் அ.தி.மு.க. கட்சி. அ.தி.மு.க. மட்டும் இல்லாவிட்டால் குடும்ப தலைவிக்கு மாதந்தோறும் ரூ.1000 கிடைத்திருக்காது.
இன்றைய தினமும் தி.மு.க.வினர் ஊர் ஊராக சென்று சுவர்களில் விளம்பரம் செய்கிறார்கள். இதை தடுத்தால் அந்த குடும்ப தலைவி பெறுகின்ற 1000 ரூபாய் வழங்குவதை நிறுத்துவதாக மிரட்டுகிறார்கள். குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய் கொடுப்பதை நிறுத்தினால் இதை நான் சட்டமன்றத்தில் விடமாட்டேன். இதற்கு துணை போகும் அதிகாரிகள் சஸ்பெண்டு, பணி நீக்கத்துக்கு ஆளாக நேரிடும்.
இப்படி மக்களை வாட்டி வதைத்து அதிகாரத்தை பயன்படுத்தி தி.மு.க.வினர் சின்னம் வரைகின்றனர். மக்கள் விருப்பப்பட்டால்தால் சுவர்களில் எங்களுடைய சின்னம் வரைவோம். இல்லையென்றால் வரைய மாட்டோம். இதுதான் அ.தி.மு.க.வின் நோக்கம். தி.மு.க. அப்படி அல்ல. அராஜக ஆட்சி. அதிகாரத்தினுடைய பலத்தை காட்டுகின்றார்கள்.
குடும்ப தலைவிகளை மிரட்டி வாக்குகள் கேட்டால் எங்களிடம் சொல்லுங்கள். நாங்கள் அதிகாரிகளிடம் சொல்லி நடவடிக்கை எடுக்கப்படும்.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தவுடன் எல்லா குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1000 மாதந்தோறும் ஊக்கத் தொகை கொடுக்கப்படும் என சொன்னோம். ஆனால் பல பகுதிகளில் நமக்கு வாக்கு சரியாக விழவில்லை.
ஆனால் தி.முக. கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு ஆட்சிக்கு அமர்ந்த கட்சி தி.மு.க., இதுவரை 10 சதவீதம் திட்டம் கூட நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வந்ததும் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படும் என சொன்னாங்க. அதுவும் இல்லை. விலையில்லா கறவை மாடு, ஆடுகள், கோழிகள் கொடுத்தோம். அதையும் நிறுத்திட்டாங்க. நம்முடைய பள்ளி மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் கொடுத்தோம். அதையும் நிறுத்திட்டாங்க. அம்மா இருசக்கர வாகனம் நிறுத்திவிட்டாங்க. ஆகவே கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. நாங்கள் கொடுத்த திட்டத்தையும் நிறுத்தி விட்டாங்க.
தாலிக்கு தங்கம் ஒருபவுன், 50 ஆயிரம் ரூபாய் மற்றும் ரொக்கம் ரூ.25 ஆயிரம் வழங்கினோம். அதையும் நிறுத்திட்டாங்க.
தி.மு.க. ஆட்சி வந்த பிறகு நிறுத்தப்பட்டதில் தான் சாதனை படைத்திருக்காங்க. இது தான் தி.மு.க. ஆட்சியினுடைய 3 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியினுடைய சாதனை. ஆகவே அ.தி.மு.க. அப்படி அல்ல. ஒரு நல்ல திட்டம் என்று சொன்னால் அதை தொடர்ந்து நாங்கள் செயல்படுத்துவோம். தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் அம்மா மினி கிளினீக் தொடங்கினோம். அதையும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நிறுத்திட்டாங்க. இப்படி பல திட்டங்களை ரத்து செய்த அரசாங்கம் தி.மு.க.
நம்முடைய அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவ செல்வங்கள் டாக்டர்கள் ஆக வேண்டும் என 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கொண்டு வந்து சட்டம் இயற்றி அமுல்படுத்தப்பட்டு இன்றைக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படிக்கிறாங்க. நம்ம தொகுதியில் மட்டும் சுமார் 35 முதல் 40 பேர் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டில் இடம் கிடைத்து எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம் படிக்கிறாங்க.
எனவே பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கச்சத்தீவு இந்தியாவுக்கு தொல்லை என்று நேருவும், ஒரு சிறிய பாறை பகுதிதான் என்று இந்திராவும் கூறியதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
- கச்சத்தீவு விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போட்டு வருவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
சென்னை:
தேர்தல் களத்தை பொறுத்தவரை ஏதாவது ஒரு பிரச்சனை முக்கிய பங்கு வகிக்கும். அதுபற்றி ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என எல்லா கட்சிகளும் பிரசார களத்தில் பிரித்து மேயும்.
அந்த வகையில் இந்த தேர்தல் களத்தில் கச்சத்தீவு பிரச்சனை பெரிதாக அனல் பறக்க வைத்துள்ளது.
தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கச்சத்தீவு பிரச்சனை பற்றி தகவல்களை கேட்டு அறிந்தார். அந்த விவரங்களை அவர் வெளியிட்டதும் பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோரும் விளக்கம் அளித்ததால் பிரச்சனை பூதாகரமானது.
1974-ல் அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு தெரிந்தே கச்சத்தீவு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியால் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது என்று பா.ஜனதா குற்றம் சாட்டியது.
இந்த விவகாரத்தில் 21 முறை தமிழக முதலமைச்சருக்கு விளக்கம் அளித்து இருக்கிறேன் என்றார் ஜெய்சங்கர்.
விளக்கம் அளித்தது இருக்கட்டும். கடந்த 10 ஆண்டுகளில் கச்சத்தீவை மீட்க எடுத்த நடவடிக்கை என்ன? என்று கேள்வி எழுப்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கச்சத்தீவு இந்தியாவுக்கு தொல்லை என்று நேருவும், ஒரு சிறிய பாறை பகுதிதான் என்று இந்திராவும் கூறியதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
கச்சத்தீவு விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போட்டு வருவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 10 ஆண்டுகளாக கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விட்டு தேர்தலுக்காக பிரதமருக்கு மீனவர்கள் மீது திடீர் பாசம் ஏற்பட்டு இருப்பதாக கூறினார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இந்த விவகாரத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜனதா என்ன செய்தது என்று கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும், மீனவர் பிரச்சனையை திசை திருப்பவே கச்சத்தீவு பிரச்சனையை பா.ஜனதா இப்போது கையில் எடுத்து இருப்பதாக குற்றம் சாட்டினார்.
- எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியை முன் மாதிரி தொகுதியாக மாற்றி காட்டுவேன் என்றார்.
- பொதுமக்கள் ரசித்து கை தட்டி ஆரவாரம் செய்தனர்.
திருமங்கலம்:
விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். நேற்று தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் கப்பலூர் தொகுதியில் தனது கணவர் சரத்குமாருடன் திறந்த ஜீப்பில் சென்று பிரசாரம் செய்தார்.
அப்போது ராதிகா பேசுகையில், உங்கள் சகோதரியாக, அக்காவாக, சித்தியாக பாராளுமன்றத்தில் போராடுவேன். இந்த கூட்டணி எது சொன்னாலும் செய்யும் கூட்டணி. ஆனால் எதிர் கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர்? என்று கூட தெரியவில்லை.
எனவே எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியை முன் மாதிரி தொகுதியாக மாற்றி காட்டுவேன் என்றார்.
பிரசாரத்தை நிறைவு செய்த பின்னர் அங்கிருந்த புறப்பட தயாராக இருந்த ராதிகாவிடம் திரளாக கூடியிருந்த பெண்கள் கிழக்கு சீமையிலே படத்தில் நடித்த விருமாயி கதாபாத்திரம் போல் பேசி காட்டுங்கள் என கூறினர்.
உடனே ஜீப்பில் நின்றிருந்த ராதிகா மடியேந்தி கிழக்கு சீமையிலே திரைப்படத்தில் நடித்த விருமாயி கதாபாத்திரமாகவே மாறி தழுவும் குரலில் போல் பேசி வாக்கு சேகரித்தார். அதனை அங்கிருந்த பொதுமக்கள் ரசித்து கை தட்டி ஆரவாரம் செய்தனர். அதேபோல் அவரது கணவரும், நடிகருமான சரத்குமாரும் ரசித்து, நெகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தார்.
- பொதுக்கூட்டம் முடிந்ததும் மதுரை தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்களையும் சந்தித்து அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார்.
- ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் செல்லும் அமித்ஷா ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் ரோடுஷோ நடத்துகிறார்.
மதுரை:
தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு 2 வாரங்களே உள்ளதால் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
4 முனை போட்டி இருந்த போதிலும், பிரதான கட்சிகளின் கூட்டணியே அதிக அளவில் பேசப்படுகிறது. அந்தந்த கட்சியை சேர்ந்த தலைவர்கள் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். வடநாட்டு தலைவர்களும் தமிழ்நாட்டில் முகாமிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களுள் ஒருவான உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார்.
நாளை (4-ந்தேதி) டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் 3.45 மணிக்கு மதுரை வரும் அமித்ஷா அங்கிருந்த ஹெலிகாப்டரில் தேனி செல்கிறார். அங்கு போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளரான டி.டி.வி.தினகரனை ஆதரித்து அமித்ஷா பிரசாரம் செய்கிறார். அப்போது அவர் ரோடுஷோ நடத்தி பொதுமக்களை சந்தித்து வாக்கு கேட்கிறார்.
மாலை 6.45 மணிக்கு மதுரை திரும்பும் அவர் பழங்காநத்தம் பகுதி சந்திப்பில் நடைபெற உள்ள பிரமாண்ட பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு வாக்கு சேகரிக்கிறார். இதையொட்டி அங்கு பிரமாண்ட மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பகுதி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
பொதுக்கூட்டம் முடிந்ததும் மதுரை தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்களையும் சந்தித்து அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார். வெற்றி வியூகம் குறித்து பல்வேறு அறிவுரைகளை அவர் நிர்வாகிகளுக்கு வழங்குகிறார். பின்னர் இரவு பசுமலையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்.
மறுநாள் (5-ந்தேதி) காலையில் மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம் செய்யும் அமித்ஷா, பின்னர் மதுரை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் தென்காசி சென்று கூட்டணி கட்சி வேட்பாளர் ஜான் பாண்டியனுக்கு ஆதரவு திரட்டுகிறார். அங்கும் ரோடு ஷோவில் அமித்ஷா பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையடுத்து ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் செல்லும் அமித்ஷா ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் ரோடுஷோ நடத்துகிறார். அதன்பின் மதுரை திரும்பும் அவர் விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.
பிரதமர் மோடியின் 3 முறை தமிழக வருகையை அடுத்து அமித்ஷாவின் வருகையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
- பாராளுமன்ற தேர்தல் மிக முக்கியமான தேர்தல் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடக்கின்ற ஒரு போர்.
- தமிழ்நாட்டில் இப்படி கஞ்சா புழக்கத்தை பார்த்தது இல்லை.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில், அரக்கோணம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தே.மு.தி.க. பொது செயலாளர் பிரேமலதா பிரசாரம் செய்தார்.
இந்த பாராளுமன்ற தேர்தல் மிக முக்கியமான தேர்தல் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடக்கின்ற ஒரு போர்.
தேர்தலில் ஆட்சி பலம், அதிகார பலம் பண பலம் பெற்று நம்மை எதிர்நோக்கி இருக்கும் மத்திய, மாநில அரசுகளின் வேட்பாளர்களை தர்மத்தின் பக்கம் நியாயத்தின் பக்கம் நிற்கும் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி, புரட்சி கலைஞர் ஆசீர்வாதம் பெற்று எளியவராக நிற்கும் வேட்பாளருக்கு பெருவாரியான வெற்றியை தரவேண்டும்.
2011-ல் இந்த கூட்டணி எப்படி ஒரு மகத்தான வெற்றியை பெற்றதோ அதேபோல 2024-ல் எடப்பாடி பழனிசாமியும், நானும் இணைந்து இந்த மெகா கூட்டணியை அமைத்திருக்கிறோம் .
இது மக்கள் விரும்பும், தொண்டர்கள் விரும்பும், தமிழக மக்கள் ஏற்றுக் கொண்ட ஒரு கூட்டணி என்பதை வருங்கால தேர்தலில் நிருபிப்போம்.
பாராளுமன்ற தேர்தலில் மிக முக்கியமான கட்டத்தில் உள்ளோம் . இந்த தேர்தலில் நாம் பெறும் வெற்றி வருகிற 2026-தேர்தல் வெற்றிக்கு அச்சாரமாக இருக்கும்.

பாலாறு மாசடைய காரணமாக ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் குவிந்துள்ள குரோமிய கழிவுகளை உடனடியாக தமிழக அரசும், மத்திய அரசும் போர்க்கால அடிப்படையில் அகற்றவேண்டும்.
நிலத்தடி நீர் பாதித்து புற்று நோய் உள்பட பல்வேறு நோய்கள் ஏற்படுத்தும் அபாயகரமானதாக உள்ளது. அதை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
1000 ரூபாய் தருவதாக ஏமாற்றிய, கஞ்சா புழக்கத்தை கொண்டு வந்து எங்கு பார்த்தாலும் டாஸ்மாக் கடை திறந்துள்ள தி.மு.க.விற்கு பாடம் புகட்டுவீர்களா, நெசவும், விவசாயமும் அழிந்ததற்குகாரணம் இந்த அரசுஎன்பதை உணறுகிறீர்களா?
வேலை வாய்ப்பு இல்லை, வறுமை, பாலியல் கொடுமை, சட்டம் ஒழுங்குசீர்கேடு உள்ள இந்த ஆட்சிக்கு பாடத்தை கொடுத்தால் தான் மீதமுள்ள ஆட்சி காலத்தில் நல்லது செய்வார்கள்.
மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுஇல்லை. இதுவா மக்கள் ஆட்சி என்பதை சிந்திக்க வேண்டும். இதுவரை தமிழ்நாட்டில் இப்படி கஞ்சா புழக்கத்தை பார்த்தது இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.






