என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • திராவிட கட்சியான அ.தி.மு.க.விற்கு ஆரியரான ஜெயலலிதா தலைவரானது எப்படி?
    • சுயமரியாதை என்ற சொல்லை உச்சரிக்க தி.மு.க., அ.தி.மு.க.விற்கு தகுதி இருக்கிறதா?

    சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எது சுயமரியாதை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்து உள்ளார். அப்போது அவர் பேசியதாவது:

    * துணை முதலமைச்சர் காலில் அவர் வயதை ஒத்தவர் விழுவது தான் சுயமரியாதையா?

    * சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் பதவி பெற்றது தான் சுயமரியாதையா?

    * திராவிடம் என்றால் ஆரியத்திற்கு எதிரான கோட்பாடு என கூறினார்கள்.

    * திராவிட கட்சியான அ.தி.மு.க.விற்கு ஆரியரான ஜெயலலிதா தலைவரானது எப்படி?

    * ஜெயலலிதா திராவிட கட்சிக்கு தலைமை ஏற்றபோது திராவிடம் என்ன ஆனது?

    * ஜெயலலிதா முன் நிமிர்ந்து நின்று அ.தி.மு.க.வினர் யாராவது பேசியது உண்டா?

    * கார் டயரை விழுந்து கும்பிட்டது என்ன சுயமரியாதை?

    * எனது மாமனார் காளிமுத்து மட்டும் நிமிர்ந்து நின்று பேசுவார்.

    * சுயமரியாதை என்ற சொல்லை உச்சரிக்க தி.மு.க., அ.தி.மு.க.விற்கு தகுதி இருக்கிறதா?

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.
    • 64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 21 கட்சிகள் பங்கேற்கவில்லை.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது.

    சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் தொடங்கியது.

    64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 21 கட்சிகள் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தவெக., அன்புமணி தரப்பு பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.

    விசிக தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மையத் தலைவர் கமலஹாசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.

    • பெங்களூரு-எர்ணாகுளம் இடையே வந்தே பாரத் ரெயில் இயக்க நேரம் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
    • 3 மாநிலங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளதால் பயணிகளிடம் நல்ல வரவேற்பு இருக்கும்.

    கோவை:

    தெற்கு ரெயில்வேயில் தற்போது 11 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மற்ற விரைவு ரெயில்களை காட்டிலும் வேகமாகவும், சொகுசாகவும் இருப்பதால் வந்தே பாரத் ரெயிலுக்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    இந்தநிலையில் தென்மேற்கு ரெயில்வே சார்பில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து தமிழகம் வழியாக கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு புதிய வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது. வருகிற 7-ந் தேதி முதல் இதன் சேவை தொடங்குகிறது.

    இந்த ரெயிலை சேலம், ஈரோடு, கோவை, திருப்பூரில் நின்று செல்லுமாறு இயக்க வேண்டும் என மத்திய ரெயில்வே மந்திரியிடம் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி இருந்தார். அவரது வேண்டுகோள்படி இந்த 4 ரெயில்களிலும் புதிய வந்தே பாரத் ரெயில் நின்று செல்லும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மேலும் ரெயில்வே நிர்வாகம் சார்பில் பெங்களூரு-எர்ணாகுளம் இடையே வந்தே பாரத் ரெயில் இயக்க நேரம் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி புதன்கிழமை தவிர தினந்தோறும் காலை 5.10 மணிக்கு பெங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் பெங்களூரு-எர்ணாகுளம் வந்தே பாரத் ரெயில் (எண் 26651) 5.20 மணிக்கு கிருஷ்ணராஜபுரம், 8.15 மணிக்கு சேலம், 9 மணிக்கு ஈரோடு, 9.47 மணிக்கு திருப்பூர், 10.35 மணிக்கு கோவை, 11.30 மணிக்கு பாலக்காடு, 12.30 மணிக்கு திருச்சூர், 1.50 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மறுமார்க்கமாக புதன்கிழமை தவிர மற்ற நாட்களில் தினமும் பிற்பகல் 2.20 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் எர்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் (எண் 26652) 3.20 மணிக்கு திருச்சூர், 4.35 மணிக்கு பாலக்காடு, 5.23 மணிக்கு கோவை, 6.05 மணிக்கு திருப்பூர், 6.50 மணிக்கு ஈரோடு, 7.20 மணிக்கு சேலம், 10.25 மணிக்கு கிருஷ்ணராஜபுரம், 11 மணிக்கு பெங்களூரு நிலையம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மூன்று மாநிலங்களை இணைக்கும் வகையில் இந்த வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளதால் பயணிகளிடம் நல்ல வரவேற்பு இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • தமிழகத்தில் குடியேறி உள்ள இந்திகாரர்கள் குறித்த டேட்டா எதுவும் தமிழக அரசிடம் இல்லை.
    • தனது வாக்காளர்களை தமிழகத்தில் பா.ஜ.க. குடியமர்த்துகிறது.

    வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:

    * தமிழகத்தில் குடியேறி உள்ள இந்திகாரர்கள் குறித்த டேட்டா எதுவும் தமிழக அரசிடம் இல்லை.

    * பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் SIR-ஐ தீவிரமாக செயல்படுத்துவார்கள்.

    * தனது வாக்காளர்களை தமிழகத்தில் பா.ஜ.க. குடியமர்த்துகிறது.

    * இந்தியை திணித்தால் எதிர்ப்பாய், இந்தி காரனை திணித்தால் என்ன செய்வாய்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டில் நவம்பர் 4-ந் தேதி முதல் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் பணிகள் தொடங்க உள்ளன.
    • அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க 60 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணிக்கான அட்டவணையை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் வீடு, வீடாக வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் கொடுக்கும் பணி 4-ந் தேதி தொடங்கி டிசம்பர் 4-ந் தேதி வரை நடக்கிறது.

    தமிழ்நாட்டில் நவம்பர் 4-ந் தேதி முதல் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் பணிகள் தொடங்க உள்ளன. இதற்கு தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், அ.தி.மு.க., பா.ஜ.க. உள்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றன.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிரான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க 60 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழகம் பங்கேற்காது என்று தகவல் வெளியாகி உள்ளது.

    வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு த.வெ.க.விற்கு தி.மு.க அழைப்பு விடுத்திருந்தது.

    தி.மு.க. சார்பில் நடத்தப்படும் கூட்டம் என்பதால் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை. தமிழக அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடந்திருந்தால் தமிழக வெற்றிக்கழகம் பங்கேற்று இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    தமிழக அரசு சார்பில் நடந்த தொகுதி மறு சீரமைப்பிற்கு எதிராக அனைத்துக்கட்சி கூட்டத்தில த.வெ.க. பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

    • அனைத்துக்கட்சி கூட்டத்தில் விவாதித்து முதலமைச்சர் உறுதியான முடிவெடுப்பார்.
    • அ.தி.மு.க.வில் நடந்து கொண்டிருப்பது உட்கட்சி விவகாரம்.

    சென்னை தீவுத்திடல் அருகே மாரத்தான் ஓட்டப்போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். துணை முதல்வர் தொடங்கி வைத்த மாரத்தான் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என 5,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    இதையடுத்து துணை முதலமைச்சர் உதயநிதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் பா.ஜ.க.விற்கு பாதகமான வாக்குகளை நீக்க முயற்சி நடக்கிறது.

    * பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக என்ன நடத்தப்பட்டது என்பது தெரியும்.

    * SIR-ஐ பயன்படுத்தி தமிழ்நாட்டில் எப்படியாவது வெல்ல வேண்டும் என பா.ஜ.க. நினைக்கிறது.

    * அனைத்துக்கட்சி கூட்டத்தில் விவாதித்து முதலமைச்சர் உறுதியான முடிவெடுப்பார்.

    * சென்னையில் தற்போது சாலைகள் செப்பனிடும் பணி நடந்து வருகிறது.

    * அ.தி.மு.க.வில் நடந்து கொண்டிருப்பது உட்கட்சி விவகாரம்.

    * அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளராக இ.பி.எஸ். இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்
    • மொழி என்ற பெயரில் மக்களிடையே தடைகளை உருவாக்கியது துரதிர்ஷ்டவசமானது.

    சென்னை ராஜ்பவனில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிறுவன தினக் கொண்டாட்டத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கடந்த பத்து ஆண்டுகளாக இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது. மேலும் வறுமையைக் குறைப்பதில் வெற்றி கண்டுள்ளது.

    பத்து ஆண்டுகளுக்கு முன்பு வறுமை 30 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது சர்வதேச அமைப்புகளின் கூற்றுப்படி, 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். மேலும் தற்போதைய வறுமை நிலை 6 சதவீதத்திற்கும் கீழே குறைந்துள்ளது.

    தேசத்தின் உணர்வை, பாரதத்தின் இதயத்துடிப்பை புரிந்துகொண்ட ஒரு தலைமை நமக்குக் கிடைத்துள்ளது. மகாத்மா காந்திக்குப் பிறகு, இந்த நாட்டை மிக நன்றாகப் புரிந்துகொண்டவர் பிரதமர் நரேந்திர மோடிதான் என்று நான் உறுதியுடன் சொல்கிறேன்.

    அனைவரும் பாரதத்தை ஒரு குடும்பமாகக் கருத வேண்டும். சுதந்திரத்திற்குப் பிறகு, மொழி என்ற பெயரில் மக்களிடையே தடைகளை உருவாக்கியது துரதிர்ஷ்டவசமானது.

    மாநில தினம் கொண்டாடுவது என்பது அந்தந்த மாநிலத்தின் கலாச்சாரத்தைப்கொண்டாடுவதற்கு கிடைத்த ஒரு வாய்ப்பு. இதுவே 'ஏக் பாரத் ஷ்ரேஷ்டா பாரத்' (ஒரே இந்தியா, சிறந்த இந்தியா)" என்று தெரிவித்தார்.     

    • அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.
    • மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு.

    நவம்பர் 5ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என கட்சி தலைமை அறிவித்துள்ளது.

    அதன்படி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நவம்பர் 5ம் தேதி காலை 10.30 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது.

    மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    • திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்டு 12ம் தேதி அன்று தொடங்கி வைத்தார்.
    • ஒவ்வொரு மாதமும் 2-வது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    முதியோர்- மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் தாயுமானவர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்டையார்பேட்டையில் கடந்த ஆகஸ்டு 12ம் தேதி அன்று தொடங்கி வைத்தார்.

    இத்திட்டத்தின் மூலம், தமிழக அரசு வழங்கும் பல்வேறு சேவைகளை பொது மக்களின் வீடு தேடிச் சென்றடைய செய்யும் வகையில் மாநிலத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்களான அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த திட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 34,809 நியாயவிலைக் கடைகளை சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை கொண்ட 15 லட்சத்து 81 ஆயிரத்து 364 ரேசன் கார்ட்டில் உள்ள 20 லட்சத்து 42 ஆயிரத்து 657 பயனாளிகளும், 91 ஆயிரத்து 969 ரேசன் அட்டைகளில் உள்ள ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 797 மாற்றுத்திறனாளிகளும் பயன் அடைகின்றனர்.

    ஒவ்வொரு மாதமும் 2-வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இந்நிலையில், வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்திற்கான வயது வரம்பை 70 வயதில் இருந்து 65 வயதாக தமிழக அரசு தளர்த்தியுள்ளது.

    • கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.
    • தமிழ்நாடு முழுவதும் தற்போது சென்னை கண்ணகி நகரின் புகழ் எதிரொலித்து வருகிறது.

    பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் கபடி பிரிவில் இந்தியா சார்பில் விளையாடிய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் தங்கம் வென்றன.

    இந்த இரு அணியிலும் தமிழகத்தைச் சேர்ந்த அபினேஷ் மற்றும் கார்த்திகா ஆகியோர் விளையாடி தங்கம் பெற பெரும் பங்கை வகித்தனர்.

    தங்கம் வென்ற கையுடன் சென்னை வந்த இருவரையும், அந்த நொடியே நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.

    சென்னை கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகாவின் வெற்றியால் அப்பகுதி மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இந்நிலையில், கண்ணகி நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவில் ரூ.40 லட்சம் மதிப்பில் உள்ளரங்க கபடி மைதானம் அமைக்கும் பணியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கபடி வீராங்கனை கார்த்திகாவின் அபார சாதனையால் தமிழ்நாடு முழுவதும் தற்போது சென்னை கண்ணகி நகரின் புகழ் எதிரொலித்து வருகிறது.

    கண்ணகி நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவில் ரூ.40 லட்சம் மதிப்பில் உள்ளரங்க கபடி மைதானம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை இன்று நேரில் ஆய்வு செய்தோம்.

    மழை, வெயில் குறித்து கவலையின்றி கபடி வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெற இந்த உள்ளரங்க மைதானம் அவர்களுக்கு பேருதவியாக இருக்கும். கார்த்திகா போன்ற இன்னும் பல வீராங்கனைகளை நிச்சயம் உருவாக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

    • கல்விக்கு நிதி ஒதுக்குவதில் தமிழ்நாடு 22-ஆம் இடத்தில் உள்ளது.
    • பள்ளிகளின் கட்டமைப்புகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வௌயிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பள்ளிகளுக்கு ரூ.80 கோடி நன்கொடை வசூலித்துத் தரும்படி கல்வித்துறை அதிகாரிகளை கட்டாயப்படுத்துவதா?

    தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்திற்கு நாளை மறுநாள் நவம்பர் 3-ஆம் தேதிக்குள் ரூ.80 கோடி நன்கொடை வசூலித்துத் தரும்படி ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளும் கட்டாயப்படுத்தப்படுவதாக வெளியாகியிருக்கும் செய்திகள் கவலையளிக்கின்றன. அரசின் தோல்விக்காக புனிதப்பணி செய்யும் ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது.

    ஒரு மாநிலத்தில் கல்வித்துறை செழிக்க வேண்டும் என்றால் அந்த மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 6% ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அதன்படி பார்த்தால் தமிழகத்தில் கல்வித்துறைக்கு ஆண்டுக்கு ரூ.2.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால், தமிழக அரசு மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் வெறும் 1.31%, அதாவது ரூ.46,767 கோடி தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்விக்கு நிதி ஒதுக்குவதில் தமிழ்நாடு 22-ஆம் இடத்தில் உள்ளது.

    இந்த நிதியைக் கொண்டு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த முடியாது என்பது உண்மை தான். இத்தகைய சூழலில் அதற்குத் தேவையான நிதியை கவுரவமான, கண்ணியமான வழிகளில் திரட்ட வகை செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாமல் அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளிடம் தத்துக் கொடுப்பதும், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளை நன்கொடைக்காக கையேந்த வைப்பதும் ஏற்றுக் கொள்ள முடியாதவை.

    ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளை கையேந்த வைக்கும் போக்கை அரசு கைவிட வேண்டும். அரசு பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதன் மூலம் பள்ளிகளின் கட்டமைப்புகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 2024- 25ம் ஆண்டில் நெல் உள்ளிட்ட பொருட்கள் போக்குவரத்து செலவினம் ரூ.863 கோடி செலவானது.
    • அதிமுக ஆட்சியில் 1.20 கோடி டன் நெல் போக்குவரத்துக்கு ரூ.1,947 கோடி செலவானது.

    தமிழகத்தில் நெல் கொள்முதலும் நகர்வும் துரிதமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார்.

    நெல் கொள்முதல், நகர்வில் தொய்வு என ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்ட நிலையில் அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அக்டோபர் 31ம் தேதி வரை 12.01 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    மழை, பண்டிகையால் ஏற்பட்ட தடங்கலையும் மீறி 10.75 லட்சம் டன் நெல் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்வு செய்யப்பட்டுள்ளது.

    இயற்கை சீற்றங்களை மீறி லாரிகள் மற்றும் ரெயில்கள் மூலம் நெல் நகர்வு நடைபெற்று வருகிறது. 2024- 25ம் ஆண்டில் நெல் உள்ளிட்ட பொருட்கள் போக்குவரத்து செலவினம் ரூ.863 கோடி செலவானது.

    அதிமுக ஆட்சியில் 1.20 கோடி டன் நெல் போக்குவரத்துக்கு ரூ.1,947 கோடி செலவானது. நெல் போக்குவரத்து செலவினம் திமுக ஆட்சியில் ரூ.731, அதிமுக ஆட்சியில் ரூ.1,622 செலவாகியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×