என் மலர்
மகாராஷ்டிரா
- நாட்டுப்புற கலைஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என 700 காசிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்
- ஆத்திரமடைந்த வடமாநில பயணிகள் ரெயில் கதவு கண்ணாடியை உடைத்து அதன் வழியாக கதவை திறந்து உள்ளே வர முயன்றனர்
தமிழ்நாடு - காசி இடையேயான உறவை பலப்படுத்தும் வகையில், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மூன்றாவது வருடமாக தமிழ்நாட்டில் இருந்து நாட்டுப்புற கலைஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என 700 காசிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதற்காக சென்னையில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் பனாரசுக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டது.
இந்த ரெயில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் அருகே வந்த போது, முன்பதிவில்லாத டிக்கெட் வைத்திருந்த வடமாநில பயணிகள் சிலர் ரெயிலில் ஏற முயன்றனர். சிறப்பு ரெயில் என்பதால் தமிழக பயணிகள் பெட்டிகளின் கதவுகளை பூட்டி வைத்திருந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த வடமாநில பயணிகள் ரெயில் கதவு கண்ணாடியை உடைத்து அதன் வழியாக கதவை திறந்து உள்ளே வர முயன்றனர். இதனால் வெளியில் இருந்த பயணிகளுக்கும், உள்ளே இருந்த தமிழக பயணிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
எனவே அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- ராகிளைடிங் சாகச விளையாட்டு குழுவினர் மாணவரை சரியான நேரத்துக்கு கல்லூரி செல்ல உதவுதாக கூறினர்.
- வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
பொதுவாக மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கு பஸ், ஆட்டோ, சைக்கிள், மோட்டார் சைக்கிளில் செல்வார்கள். சாலை போக்குவரத்து வசதி இல்லாத பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் படகுகளில் ஆறு, குளம், ஏரியை கடந்து கல்வி நிலையங்களுக்கு சென்று வருவதை பார்க்கிறோம். ஆனால் மகாராஷ்டிரா மாநிலம் சத்தாராவில் மாணவர் ஒருவர் பாராகிளைடிங்கில் பறந்து கல்லூரிக்கு சென்ற வினோத சம்பவம் நடந்து உள்ளது.
அங்குள்ள சத்தாரா மாவட்டம் வைய் தாலுகா பசராணி கிராமத்தை சேர்ந்தவர் சமர்த் மகான்காடே (வயது19). இவர் சம்பவத்தன்று சத்தாராவில் உள்ள பஞ்சகனி மலை பகுதிக்கு சென்றிருந்தார். திட்டமிட்ட நேரத்துக்குள் அவரால் அங்கு இருந்து புறப்பட முடியவில்லை. எனவே அவர் கல்லூரிக்கு குறித்த நேரத்துக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பரீட்சை என்பதால் அவர் கல்லூரிக்கு சரியான நேரத்தில் செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
எனினும் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. எனவே வாகனத்தில் சென்றால் கண்டிப்பாக கல்லூரிக்கு நேரமாகிவிடும் என்பதால் எப்படி செல்வது என யோசித்து கொண்டு இருந்தார்.
அப்போது மலைப்பகுதியில் உள்ள பாராகிளைடிங் சாகச விளையாட்டு குழுவினர் மாணவரை சரியான நேரத்துக்கு கல்லூரி செல்ல உதவுதாக கூறினர். அவர்கள் பாராகிளைடிங் மூலம் மலைக்கு கீழே உள்ள பகுதியில் இறக்கிவிடுவதாக உறுதி அளித்தனர். மாணவரும் தைரியமாக அதற்கு ஒப்புக்கொண்டார். இதையடுத்து பாராகிளைடிங் குழுவை சேர்ந்த ஒருவர், உரிய பாதுகாப்பு முன்எச்சரிக்கையுடன் மாணவரை பாராகிளைடிங் மூலம் பறக்க செய்து மலைப்பகுதிக்கு கீழே இறக்கிவிட்டார். இதனால் மாணவரும் சரியான நேரத்தில் கல்லூரிக்கு சென்றதாக கூறப்படுகிறது.
தேர்வுக்காக மாணவர் ஒருவர் பாராகிளைடிங்கில் பறந்து செல்லும் வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இன்ஸ்டாகிராமில் 35 ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் அந்த வீடியோவை பார்த்து உள்ளனர்.
- பிப்ரவரி மாதத்தில் 8 நாட்கள் பங்குச் சந்தை சரிவை எதிர்கொண்டுள்ளது.
- சென்செக்ஸ் 2,644.60 புள்ளிகளும், நிஃப்டி 810 புள்ளிகள் சரிந்துள்ளன.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதில் இருந்து மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி சரிவை சந்தித்து வருகின்றன.
குறிப்பாக இந்த மாதம் (பிப்ரவரி) இதுவரை, பங்குச் சந்தைகள் செயல்பட்ட 11 நாட்களில் 8 நாட்கள் சென்செக்ஸ், நிஃப்டி சரிவை சந்தித்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் வெளிநாட்டு நிதி தொடர்ந்து வெளியேறுவது, கார்ப்பரேட் நிறுவனங்களின் 3-வது காலாண்டு வருமான அறிக்கை முக்கிய காரணம் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 199.76 புள்ளிகள் சரிந்து 75,939.21 புள்ளிகளில் நிறைவடைந்தது. இது 0.26 சதவீதம் சரிவு ஆகும். இன்று காலை வர்த்தகத்தின்போது 699.33 புள்ளிகள் குறைந்து 75,439.64 புள்ளிகளில் வர்த்தகமானது. அதன்பின் சுமார் 500 புள்ளிகள் உயர்ந்து 199.76 புள்ளிகள் சரிவில் வர்த்தகம் முடிவடைந்தது.
அதேபோல் இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 102.15 புள்ளிகள் 22,929.25 புள்ளிகளில் நிறைவடைந்தது.
சென்செக்ஸ் 8 நாட்களில் 2,644.6 புள்ளிகள் சரிந்துள்ளது. இது மொத்த புள்ளிகளில் 3.36 சதவீதம் ஆகும். நிஃப்டி 810 புள்ளிகள் சரிந்துள்ளன. இது 3.41 சதவீதம் ஆகும்.
30 பங்குகளை அடிப்படையாக கொண்ட மும்பை பங்குச் சந்தையில் அதானி போர்ட்ஸ் பங்கு 4 சதவீதத்திற்கு மேல் சரிவை சந்தித்தது. அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ், சன் பார்மா, இந்துஸ்இண்ட் பேங்க், என்டிபிசி, டாடா ஸ்டீல் நிறுவன பங்குகளும் சரிவை சந்தித்தன.
நெஸ்லே, ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஹெ.சி.எல்.டெக் நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன.
இன்றைய ஆசிய பங்குச் சந்தைகளில் டோக்கியோ பங்குச் சந்தை சரிவில் முடிவடைந்தது. சியோல், ஷாங்காய், ஹாங் காங் பங்குச் சந்தைகள் உயர்வை சந்தித்தன.
அந்நிய முதலீட்டாளர்கள் நேற்றைய வர்த்தகத்தில் 2789.91 கோடி ரூபாய் மமதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
- கை, கால்கள் மரத்துப் போதல், நீடித்த வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை அறிகுறிகளாகும்
- மும்பையில் GBS நோயால் 53 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்
மகாராஷ்டிரா மாநிலம் புனே, மும்பை சுற்றுவட்டார பகுதிகளில் குய்லின்-பாரே சிண்ட்ரோம்(GBS) என்ற நரம்பியல் கோளாறு கடந்த மாதம் முதல் பரவி வருகிறது. இந்த நோய் மனிதர்களின் மூளை மற்றும் முதுகெலும்புக்கு வெளியே உள்ள நரம்புகளைத் தாக்கும்.
கை, கால்கள் மரத்துப் போதல், நீடித்த வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை அறிகுறிகளாகும். இந்த நோய் பாதிப்பு பாக்டீரியா, வைரஸ் தாக்கத்தால் ஏற்படுகிறது. அறிகுறிகள் தெரிந்தவுடன் நரம்பியல் டாக்டரை அணுக அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் நோய் பாதிப்பு 205 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் தற்போது மேலும் இரண்டு பேருக்கு GBS நோய் கண்டறியப்ப்டுள்ளது என்றும் சந்தேகிக்கப்படும் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட GBS பாதிப்புகளின் எண்ணிக்கை 205 ஐ எட்டியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், மாநிலத்தில் GBS நோய் காரணமாக இதுவரை 8 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. சமீபத்தில் மும்பையில் GBS நோயால் 53 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். GBS காரணமாக மும்பையில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு இதுவாகும். எனவே மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது.
- பிரான்ஸ் புறப்பட்டு செல்வதற்கு முன்பு பிரதமர் மோடி விமானத்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.
- பிரதமர் மோடி வெளிநாட்டுக்கு பயணம் செல்லும்போது அவரது விமானத்தை பயங்கரவாதிகள் தாக்கலாம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டது.
மும்பை:
பிரதமர் நரேந்திரமோடி பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக அவர் கடந்த 11-ந்தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார்.
இந்த நிலையில் பிரான்ஸ் புறப்பட்டு செல்வதற்கு முன்பு பிரதமர் மோடி விமானத்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இந்த மிரட்டல் அழைப்பு வந்தது. விமானத்தை பயங்கரவாதிகள் தாக்கக்கூடும் என்று அந்த மிரட்டலில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மும்பை போலீசார் விசாரணை நடத்தி செம்பூர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை கைது செய்தனர். இதுகுறித்து மும்பை போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 11-ந்தேதி மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு அழைப்பு வந்தது. பிரதமர் மோடி வெளிநாட்டுக்கு பயணம் செல்லும்போது அவரது விமானத்தை பயங்கரவாதிகள் தாக்கலாம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டது. இதன் தீவிர தன்மையை கருத்தில் கொண்டு போலீசார் மற்ற விசாரணை நிறுவனங்களுக்கு தகவல் அளித்து விசாரணையை நடத்தியது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விசாரணையில் பிடிபட்ட வாலிபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று போலீசார் தெரிவித்தனர்.
- மாநகராட்சி சார்பில் ‘டயர் கில்லர்' வேகத்தடை அமைக்கப்பட்டது.
- வேகத்தடை காரணமாக வாகனங்கள் ஒருவழிப்பாதையில் நுழைவது குறைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
தானே:
தானே ரெயில் நிலையம் அருகில் உள்ள சிவாஜி பாத் சாலையில் சமீபத்தில் போக்குவரத்து போலீசார் மற்றும் மாநகராட்சி சார்பில் 'டயர் கில்லர்' வேகத்தடை அமைக்கப்பட்டது. வாகனங்கள் ஒரு வழிப்பாதையில்(ஒன்வே) விதிகளை மீறி நுழைவதை தடுக்க இந்த ஏற்பாடு சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது. சரியாக வரும் வாகனங்கள் வேகத்தடையை எளிதாக கடந்து செல்ல முடியும். அதே நேரத்தில் விதியை மீறி எதிர்திசையில் இருந்து வாகனங்கள் சாலையில் நுழைய முயன்றால், வேகத்தடையில் உள்ள ராட்சத ஆணி வாகனத்தின் டயரை கிழித்து விடும். இந்த வேகத்தடை காரணமாக சிவாஜி பாத் சாலையில் வாகனங்கள் ஒருவழிப்பாதையில் நுழைவது குறைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களின் டயர்களை கிழிக்க வைக்கப்பட்ட அந்த வேகத்தடை, அந்த வழியாக நடந்து செல்லும் பொது மக்களின் கால்களையும் பதம் பார்த்து வருகிறது. இதுவரை அந்த வேகத்தடை காரணமாக 7 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், "சிவாஜி பாத் சாலை ரெயில் நிலையத்துக்கு மிகவும் அருகில் உள்ளது. எனவே இந்த வழியாக பொதுமக்கள் அதிகளவில் நடந்து செல்கின்றனர். பலருக்கு இந்த வேகத்தடை பற்றி தெரியாது. எனவே அதில் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு காலில் காயம் ஏற்படுகிறது" என்றார்.
மிதேஷ் ஷா என்பவர் கூறுகையில், "மாநகராட்சியின் நோக்கம் சரியானது தான். ஆனால் அதற்கு முதலில் அவர்கள் பொதுமக்கள் நடந்து செல்ல விசாலமான, ஆக்கிரமிப்பு இல்லாத நடைபாதை வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அப்போது பொதுமக்கள் நடைபாதையில் நடந்து செல்வார்கள். சாலையில் செல்ல மாட்டார்கள்" என்றார்.
இதுபோன்ற 'டயர் கில்லர்' வேகத்தடைகளை வைப்பதற்கு பதில் வாகனங்கள் விதி மீறலில் ஈடுபடும் பகுதியில், போலீஸ்காரர் ஒருவரை பாதுகாப்பு பணியில் நிறுத்தலாம் என ராகுல் பிங்காலே என்பவர் கூறினார்.
- சொமேட்டோ பங்கு 5 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சியை சந்தித்தது.
- பாரதி ஏர்டெல் பங்கு மட்டும் ஏற்றம் கண்டது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்றைய வர்த்தகத்தில் 1,018 புள்ளிகள் சரிந்து கடும் வீழ்ச்சியை சந்தித்தது. கடந்த ஐந்த நாட்களும் சரிவில் முடிவடைந்த நிலையில் மொத்தம் சென்செக்ஸ் 2,290.21 புள்ளிகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
நேற்று மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 77,311 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 77,384.95 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. மதியம் 12 மணிக்குப் பிறகு மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்தது. இறுதியாக சென்செக்ஸ் 1,018.20 புள்ளிகள் சரிவை சந்தித்து 76,293.60
புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று அதிகபட்சமாக சென்செக்ஸ் 77,387.28 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக சென்செக்ஸ் 76,030.59 புள்ளிகளிலும் வர்த்தகமானது.
சொமேட்டோ பங்கு 5 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சியை சந்தித்தது. டாடா ஸ்டீல், பஜாஜ் பின்சர்வ், டாடா மோட்டார்ஸ், பவர் கிரிட், எல்&டி போன்ற பங்குகளும் சரிவை எதிர்கொண்டது. பாரதி ஏர்டெல் பங்கு மட்டும் ஏற்றம் கண்டது.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் போன்று, இந்திய பங்குச் சந்தை நிஃப்டியும் கடும் சரிவை எதிர்கொண்டது. நேற்றைய வர்த்தகம் 23,381.60 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலை நிஃப்டி 23,383.55 புள்ளிகளில் தொடங்கியது. குறைந்தபட்சமாக 22,986.65 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 23,390.05 புள்ளிகளில் வர்த்தகமான நிலையில், இறுதியாக நிஃப்டி 309.80 புள்ளிகள் குறைந்து 23,071.80 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
தொடர்ந்து அந்நிய முதலீடு வெளியேறுதல், அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு போன்றவை இந்திய பங்குச் சந்தை சரிவுக்கு முக்கிய காரணமாகும்.
திங்கட்கிழமை அமெரிக்க மார்க்கெட் உயர்வை சந்தித்த நிலையில், ஆசிய மார்க்கெட்டுகளான ஷாங்காய், ஹாங்காங் போன்றவை சரிவை சந்தித்தன. சியோல் மார்க்கெட் க்ரீனில் முடிவடைந்தது. ஐரோப்பாவின் பெரும்பாலான மார்க்கெட்டுகளும் சரிவை சந்தித்துள்ளன.
கச்சா எண்ணெய் விலை 1.15 சதவீதம் உயர்ந்து ஒரு பேரல் 76.74 அமெரிக்க டாலருக்கு விற்பனையாகிறது.
பங்குச் சந்தை சரிவால் முதலீட்டாளர்களுக்கு சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
- "பீர்பைசெப்ஸ்" என்று பரவலாக அறியப்படும் பாட்காஸ்டரும் யூடியூபருமான ரன்வீர் அல்லாபாடியா
- மும்பையில் நடந்த India's Got Latent நிகழ்ச்சியின் சமீபத்திய எபிசோடில் தோன்றினார்
"பீர்பைசெப்ஸ்" என்று பரவலாக அறியப்படும் பாட்காஸ்டரும் யூடியூபருமான ரன்வீர் அல்லாபாடியா கருத்து ஒன்றால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
மும்பையில் நடந்த India's Got Latent நிகழ்ச்சியின் சமீபத்திய எபிசோடில் தோன்றிய ரன்வீர், போட்டியாளர் ஒருவரிடம் ஆத்திரமூட்டும் கேள்வி ஒன்றை கேட்டு சர்ச்சை கிளப்பினார்.
போட்டியாளரை பார்த்து, "உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்கள் பெற்றோர் ஒவ்வொரு நாளும் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா? அல்லது அதை பார்ப்பதை நிறுத்த ஒரு முறை அவர்களுடன் அதில் பங்கேற்பீர்களா?" இரண்டில் எதை தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்டுள்ளார்.
ரன்வீர் பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இதுதொடர்பாக ரன்வீர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிர அரசியல் தலைவர்களும் அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே தனது பேச்சுக்கு ரன்வீர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
- கடைசி நேரத்தில் மணப்பெண்ணின் தாய் மாமா, மணமகனின் சிபில் ஸ்கோரை கேட்டுள்ளார்.
- அவரால் மனைவியின் தேவைகளை எப்படி பூர்த்தி செய்ய முடியும்? என்று கேட்டார்.
சிபில் [CIBIL] ஸ்கோர் என்பது நபரின் கடன் பின்னணியைக் குறிக்கும் எண் முறை ஆகும். அவர் கடன் பெறுவதற்குத் தகுதியானவரா என்பதை அவரின் சிபில் ஸ்கோரை வைத்தே வங்கிகள் முடிவு செய்யும்.
இந்நிலையில் சிபில் ஸ்கோர் காரணமாக மகாராஷ்டிராவில் திருமணம் ஒன்று கடைசி நேரத்தில் நின்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மகாராஷ்டிராவின் முர்திசாபூரை சேர்ந்த ஒருவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் மணப்பெண்ணின் தாய் மாமா, மணமகனின் சிபில் ஸ்கோரை கேட்டுள்ளார். இதன்மூலம் மணமகன் பல கடன் வாங்கி உள்ளதும், நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதும் தெரியவந்தது.
ஏற்கனவே நிதி நெருக்கடியில் உள்ள ஒருவருக்கு ஏன் தங்கள் குடும்ப பெண்ணை தர வேண்டும் என்றும் அவரால் மனைவியின் தேவைகளை எப்படி பூர்த்தி செய்ய முடியும்? என்றும் உறவினர் கேள்வி எழுப்பினார்.
இதனை பெண் வீட்டார் அனைவரும் ஏற்றுக்கொண்டு தங்கள் மகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, உடனடியாக திருமணத்தை நிறுத்தினர்.
ஜாதக பொருத்தம், மன பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைக்கும் காலம் மாறி சிபில் [CIBIL] ஸ்கோரை பார்த்து பெண் தரும் காலம் வந்துவிட்டதாக நெட்டிசன்கள் நொந்துகொள்கின்றனர்.
- ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரது கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- ஓட்டுநர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். .
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் கார் சக்கரங்களுக்கு அடியில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழந்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் ஹோட்டல் எக்ஸ்பிரஸ் இன்னில் நடந்தது. உயிரிழந்த குழந்தையின் பெயர் துருவ் ராஜ்புத் என தெரியவந்துள்ளது.
துருவ் தனது அப்பாவுடன் ஹோட்டல் பார்க்கில் விளையாடிவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.
விபத்துக்குப் பிறகு, துருவ் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.
இந்த விபத்து தொடர்பாக ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரது கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
- ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்படவிருந்த ஒரு பார்சலில் இருந்து 200 கிராம் கோகோயின் பறிமுதல்.
- வெளிநாட்டில் வசிக்கும் ஒரு குழு இந்த கும்பலை இயக்குகிறது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் 4 பேர் கைதான நிலையில் அவர்களிடம் நடத்திய விசாரணையில் நவி மும்பையில் இருந்து சுமார் ரூ.200 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து என்சிபியின் மும்பை மண்டலப் பிரிவின் அதிகாரி ஒருவர் கூறுகையில், "வெளிநாட்டில் வசிக்கும் ஒரு குழு இந்த கும்பலை இயக்குகிறது. பறிமுதல் செய்யப்பட்ட சில போதைப் பொருட்கள அமெரிக்காவிலிருந்து கொரியர் அல்லது சிறிய சரக்கு சேவைகள் மற்றும் மனிதர்கள் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது" என்று கூறினார்.
மேலும், கடந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்படவிருந்த ஒரு பார்சலில் இருந்து 200 கிராம் கோகோயின் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், நவி மும்பைக்கு போதைப்பொருளின் மூலத்தைக் கண்டுபிடித்து அந்த கும்பலைக் கண்டுபிடித்ததாகவும் அந்த அதிகாரி கூறினார்.
கடந்த வாரம் நவி மும்பையில் இருந்து சுமார் ரூ.200 கோடி மதிப்புள்ள 11.54 கிலோ "மிக உயர்தர" கோகோயின், ஹைட்ரோபோனிக் களை மற்றும் 200 பாக்கெட்டுகள் (5.5 கிலோ) கஞ்சா கம்மிகளை NCB பறிமுதல் செய்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
இந்த கடத்தல் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கும்பலைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்கள் அன்றாட உரையாடல்களில் தங்கள் போதைப்பொருள் பரிவர்த்தனைகளுக்கு புனைப்பெயர்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
மேலும், சம்பந்தப்பட்ட கும்பலின் தொடர்புகளை அடையாளம் காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
- இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஹர்ஷித் ராணா அறிமுகமானார்.
- இந்தப் போட்டியில் ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
நாக்பூர்:
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இப்போட்டிக்கான இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஹர்ஷித் ராணா ஆகியோர் அறிமுகமாகினர்.
முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் மற்றும் பிலிப் சால்ட் ஜோடி அதிரடி தொடக்கத்தைக் கொடுத்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 75 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இறுதியில், இங்கிலாந்து அணி 248 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தப் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஹர்ஷித் ராணா 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
இந்நிலையில், மூன்று வித அறிமுக போட்டியிலும் தலா 3 விக்கெட் சாய்த்த முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் ஹர்ஷித் ராணா.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெர்த் டெஸ்டில் அறிமுகம் ஆன ஹர்ஷித் ராணா, முதல் இன்னிங்சில் 3 விக்கெட் சாய்த்தார்.
சமீபத்தில் புனேவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமான ஹர்ஷித் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதேபோல், நேற்று நடந்த நாக்பூர் ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆன ஹர்ஷித் ராணா, 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.






