மகாராஷ்டிராவில் பஸ் மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி- 20 பேர் படுகாயம்

தனியார் பயணிகள் பஸ் ஏற்கனவே விபத்துக்குள்ளான வாகனங்கள் மீது மோதியது.விபத்தில் சிக்கிய 3 வாகனங்களும் கடுமையாக சேதம் அடைந்துள்ளன.
மகாராஷ்டிராவில் பஸ் மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி- 20 பேர் படுகாயம்
Published on

புல்தானா:

மராட்டிய மாநிலம் புல்தானா மாவட்டத்தில், காம்கான்-ஷேகான் நெடுஞ்சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த கார் முன்னால் சென்ற பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. தொடர்ந்து, பின்னால் இருந்து வந்த தனியார் பயணிகள் பஸ் ஏற்கனவே விபத்துக்குள்ளான வாகனங்கள் மீது மோதியது.

3 வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்று மோதிய இந்த பயங்கர விபத்தில், 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு பலத்த காயமடைந்து உயிருக்கு போராடியவர்களை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.

விபத்தில் சிக்கிய 3 வாகனங்களும் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. இந்த விபத்தால் நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்தை சரிசெய்யும் பணிகளில் போலீசார் ஈடுபட்டனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com