என் மலர்
மகாராஷ்டிரா
- சொந்த ஊரான சத்தாரா மாவட்டம் பால்டான் செல்ல பஸ்சுக்காக இளம்பெண் காத்திருந்தார்.
- தனியாக நின்ற இளம்பெண்ணை நோட்டமிட்ட ஆசாமி ஒருவன் அவரிடம் நெருங்கி வந்தான்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் புனே ஸ்வர்கேட்டில் உள்ள பஸ்நிலையத்துக்கு அதிகாலை வேளையில் 26 வயது இளம்பெண் ஒருவர் வந்தார். அவர் தனது சொந்த ஊரான சத்தாரா மாவட்டம் பால்டானுக்குச் செல்ல பஸ்சுக்காக நடைமேடை ஒன்றில் காத்திருந்தார்.
தனியாக நின்ற இளம்பெண்ணை நோட்டமிட்ட ஆசாமி ஒருவன் அவரிடம் நெருங்கிவந்தான். அந்த ஆசாமி, இளம்பெண்ணிடம் பார்த்து நைசாக பேச்சு கொடுத்தான். நீங்கள் செல்ல வேண்டிய ஊருக்கு பஸ் இங்கு வராது என் கூறிய அவன், பஸ் நிற்கும் பகுதிக்கு அழைத்துச் செல்வதாக கூறி இளம்பெண்ணை அழைத்துச் சென்றான்.
பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் நின்ற மாநில அரசு போக்குவரத்து கழகத்துக்குச் சொந்தமான சிவ்சாகி என்ற சொகுசு பஸ்சை காட்டி, இதுதான் நீங்கள் போகவேண்டிய ஊருக்குச் செல்லும் பஸ் என கூறியுள்ளான். அந்த பஸ்சில் இளம்பெண் ஏறியபோது, விளக்கு எல்லாம் அணைந்து கிடந்தது. டிரைவர், நடத்துனர் வந்த உடன் பஸ் கிளம்பி விடும் என்றான். இளம்பெண், பஸ்சுக்குள்ஏறிச் சென்றார். அந்த ஆசாமியும் பின்தொடர்ந்து பஸ்சில் ஏறினான். திடீரென பஸ்சின் கதவைப் பூட்டினான். அது ஏ.சி. பஸ் என்பதால் ஜன்னல் கண்ணாடி அனைத்தும் அடைத்து வைக்கப்பட்டு இருந்தன. அந்த ஆசாமி பெண்ணை பஸ்சுக்குள் பலாத்காரம் செய்துவிட்டு ஓடிவிட்டான்.
இந்தக் கொடூர சம்பவம் குறித்து தோழிக்கு போன் செய்து நடந்த சம்பவத்தைச் கூறி கதறி அழுதார். இதுதொடர்பாக அவர் போலீசிலும் புகார் அளித்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பஸ் நிலைய கண்காணிப்பு கேமரா காட்சியை ஆய்வு செய்தபோது, பலாத்கார ஆசாமியின் அடையாளம் தெரியவந்தது. அவன் புனே மாவட்டம் சிக்ராப்பூரை சேர்ந்த தத்தாத்ரேய காடே (36), என தெரிய வந்தது. அவனை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இதற்கிடையே, குற்றவாளி குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும். தகவல் அளிப்பவரின் பெயர் ரகசியமாக வைக்கப்படும் என புனே காவல் ஆணையர் அமிதேஷ் குமார் தெரிவித்தார்.
இந்நிலையில், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த தத்தாத்ரேய காடே புனேவின் ஷிரூரில் கைது செய்யப்பட்டார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
- பூர்விக நிலத்தை தனக்கு மாற்றி தரும்படி தாயிடம் கேட்டுள்ளார்.
- தாய் மறுப்பு தெரிவிக்க தீர்த்துக்கட்ட முடிவு செய்து கொலை செய்துள்ளார் மகன்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பெற்ற தாயை பூர்விக நிலத்தை எழுதி கொடுக்க மறுத்ததால் கோடரியால் தாக்கி உடலை தண்ணீர் தொட்டியில் வீசிய கொடூர மகன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் லதூர் மாவட்டத்தில் வனிதா பிரகாஷ் சாம் (55) என்ற பெண் வசித்து வந்தார். இவரது மகன் விக்ரம் பிரகாஷ் சாம். வனிதா பிரகாஷ் சாமிற்கு பூர்விக விவசாய நிலம் இருந்துள்ளது. இந்த நிலத்தை தனது பெயருக்கு மாற்றும்படி விக்ரம் பிரகாஷ் கேட்டுள்ளார். அதற்கு நிலத்தை மாற்றி தர முடியாது என வனிதா தெரிவித்துள்ளார்.
இதனால் கடுங்கோபம் அடைந்த மகன் விக்ரம், தாயை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை தூங்கிக் கொண்டிருந்த தனது தாயை கோடரியால் தாக்கியுள்ளார். இதனால் வனிதா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கொலையை மறைப்பதற்காக தாயின் உடலை அருகில் உள்ள தண்ணீர் தொட்டில் வீசியுள்ளார். போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது விக்ரம் மீது சந்தேகம் ஏற்பட, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளார். அப்போது தனது தாயை கொலை செய்ததை விக்ரம் ஒப்புக் கொண்டுள்ளார்.
நிலத்திற்காக பெற்ற மகன் தாயை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பஸ் நிலையத்தில் 100 மீட்டர் தொலைவில் இருந்த போலீஸ் சோதனைச்சாவடிக்கு அருகே நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
- அவர் பெண்ணை ஏமாற்றி அழைத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள பரபரப்பான ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் நேற்று முன் தினம் அதிகாலையில் தனது சொந்த ஊருக்கு பஸ் ஏற 26 பெண் காத்திருந்தார்.
அப்போது அவரிடம் பேச்சு கொடுத்த ஒருவர், வேறு இடத்தில பஸ் நிற்பதாக கூறி ஆளில்லாத பஸ்ஸில் ஏறச் செய்து பாலியல் வன்கொடுமை செய்து ஓடிவிட்டார். அவர் பெண்ணை ஏமாற்றி அழைத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளது.
பஸ் நிலையத்தில் 100 மீட்டர் தொலைவில் இருந்த போலீஸ் சோதனைச்சாவடிக்கு அருகே நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநில ஆளும் பாஜக கூட்டணி அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. மேலும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
குற்றவாளியின் பெயர் தத்தாத்ரேய ராமதாஸ் காடே (36 வயது) என்பதும் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய அவர் கடந்த 2019 இல் சிறையில் இருந்து பெயிலில் வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே வன்கொஉடமை சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக கூறி பஸ் நிலையத்தை அவர்கள் சூறையாடினார்கள்.
இந்த நிலையில் அரசு பஸ்சுக்குள் இளம் பெண் வன்கொடுமை தொடர்பாக குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகாராஷ்டிர மாநில மகளிர் ஆணைய தலைவி ரூபாலி ஷாகன்கர் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்த சம்பவம் துரதிருஷ்ட வசமானது. பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். குற்றவாளி 2 அல்லது 3 நாளில் பிடிபடுவார். குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்கள் கண்டிப்பாக தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்ள வேண்டும். இது குறித்து மகளிர் ஆணையம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே குற்றவாளி ராமதாஸ் காடே புகைப்படத்தை வெளியிட்டு அவரைப் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று போலீசாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்த அவசரக்கூட்டம் ஏற்பாடு செய்துள்ள அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் பிரதாப் சார்னிக், விரைந்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
- அவர்களுக்கு இடைஞ்சல் இருக்கக் கூடாது என்பதற்காகவே விளக்குகள் அணைக்கப்பட்டுள்ளது என்று கூறி ஏறச்செய்துள்ளார்.
- காவல் துறை சோதனைச்சாவடிக்கு அருகிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது
மகாராஷ்டிராவில் புனே நகர பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்தில் வைத்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள பரபரப்பான ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் நேற்று முன் தினம் அதிகாலையில் தனது சொந்த ஊருக்கு செல்ல அந்த 26 பெண் காத்திருந்தபோது இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
போலீசார் கூற்றுப்படி, செவ்வாய்க்கிழமை அதிகாலை 5:45 மணியளவில், சதாரா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான பால்டானுக்குச் செல்லும் பேருந்துக்காக அவர் காத்திருந்தார். அப்போது நபர் ஒருவர் பெண்ணிடம் வந்து பேச்சுக்கொடுத்துள்ளார். சதாராவுக்கான பேருந்து வேறொரு நிறுத்தத்தில் வந்துவிட்டதாக கூறியுள்ளார்.
பின்னர் அவர் பேருந்து நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காலியான ஏசி பேருந்திற்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்றார். பேருந்தின் உள்ளே விளக்குகள் எரியாததால் பேருந்தில் ஏற அந்த பெண் முதலில் தயங்கி உள்ளார். பேருந்தில் விளக்கு இல்லையே என அந்த பெண் கூற, அதற்கு அந்த நபர், மற்ற பயணிகள் தூங்கிக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு இடைஞ்சல் இருக்கக் கூடாது என்பதற்காகவே விளக்குகள் அணைக்கப்பட்டுள்ளது என்று கூறி ஏறச்செய்துள்ளார்.
அப்பெண் உள்ளே செல்ல, பின்தொடர்ந்த அந்த நபர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். பேருந்து வளாகத்தில் பொறுத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்ததில் அந்த நபரின் பெயர் தத்தாத்ரேய ராமதாஸ் (36 வயது) என்பதும் அவர் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் அவர் சிறையில் இருந்து பெயிலில் வெளியே வந்தவர் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து துணை காவல் ஆணையர்(டி.சி.பி.) ஸ்மார்த்தா பாட்டீல் செய்தியாளர்களிடம் கூறுகையில், சிசிடிவி காட்சிகளில் குற்றம் சாட்டப்பட்டவருடன் அந்தப் பெண் பேருந்தை நோக்கி நடந்து செல்வது பதிவாகியுள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில் பேருந்து நிலைய வளாகத்தில் ஏராளமான மக்களும், ஏராளமான பேருந்துகளும் இருந்ததாக தெரிவித்தார்.
சம்பவம் நடந்த உடனேயே அந்தப் பெண் காவல்துறையை அணுகவில்லை, பால்டானுக்கு ஒரு பேருந்தில் ஏறி, பயணத்தின் போது தொலைபேசியில் தனது தோழியிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தார். தனது தோழியின் அறிவுரையின் பேரில், காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார்.
அந்தப் பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர். தப்பியோடிய குற்றவாளியை பிடிக்க 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக டி.சி.பி.ஸ்மார்த்தா பாட்டீல் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் அம்மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. காவல் துறை சோதனைச்சாவடிக்கு அருகிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக அரசுக்கு எதிராக சம்பவம் நடந்த பேருந்து நிலையத்தில் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியினர் காங்கிரஸ் கட்சியினருடன் இணைந்து போராட்டம் நடத்தினர். அங்குள்ள அலுவலகத்தை அவர்கள் அடித்து நொருக்கிறனர்.
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் சகோதரி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது, துயரமானது, கோபத்தை ஏற்படுத்துகிறது.
அனைவரையும் வெட்கித் தலைகுனிய வைக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர் செய்த குற்றம் மன்னிக்க முடியாதது. தூக்கிலிடப்படுவதைத் தவிர வேறு எந்த தண்டனையும் இதற்கு ஏற்புடையதாக இருக்காது. குற்றம் சாட்டப்பட்டவரை உடனடியாக கைது செய்ய புனே காவல் ஆணையரை தனிப்பட்ட முறையில் அறிவுறுத்தியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
- டாஸ் வென்ற கேரளா அணி பவுலிங் தேர்வு செய்தது.
- முதல் நாள் முடிவில் விதர்பா அணி 254 ரன்கள் எடுத்துள்ளது.
நாக்பூர்:
ரஞ்சி கிரிக்கெட்டில் விதர்பா, கேரளா அணிகள் மோதும் இறுதிப்போட்டி நாக்பூரில் நேற்று தொடங்கியது.
விதர்பா அணி 3-வது முறையாகவும், கேரளா முதல் முறையாகவும் கோப்பையை கையில் ஏந்த வரிந்து கட்டும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இந்நிலையில், டாஸ் வென்ற கேரளா அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, விதர்பா அணி முதலில் களமிறங்கியது. முதல் ஓவரிலேயே பர்த் ரிகாடே டக் அவுட்டானார். அடுத்து இறங்கிய தர்ஷன் நலகண்டே ஒரு ரன்னில் வெளியேறினார். துருவ் ஷோரே 16 ரன்னில் ஆட்டமிழந்தார். விதர்பா அணி 24 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து தத்தளித்தது.
4வது விக்கெட்டுக்கு டானிஷ் மாலேவர் உடன் கருண் நாயர் இணைந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. கருண் நாயர் அரை சதம் கடந்து 86 ரன்னில் அவுட்டானார். 4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி215 ரன்கள் குவித்தது.
பொறுப்புடன் ஆடிய மாலேவர் சதமடித்து அசத்தினார்.
இறுதியில், முதல் நாள் முடிவில் விதர்பா அணி 86 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்துள்ளது. டானிஷ் மாலேவஎ 138 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், டி.சி.எஸ்., ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி பங்குகள் சரிவு.
- ஐ.டி.சி., கோடக் மகிந்திரா வங்கி, மாருதி சுசுகி, மகிந்திரா அண்டு மகிந்திரா, ஆக்சிஸ் வங்கி பங்குகள் ஏற்றம் கண்டன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று 856.65 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது. இந்திய பங்குச் சந்தையான நிஃப்டி 242.55 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் நேற்று சென்செக்ஸ் 75,311.06 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இன்று காலை வர்த்தகம் சென்செக்ஸ் 567.62 புள்ளிகள் சரிந்து 74,893.45 புள்ளிகளுடன் தொடங்கியது. அதன்பின் சற்று ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. இறுதியாக 856.66 புள்ளிகள் சரிந்து 74,454.41 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
இன்று அதிகபட்சமாக 74,907.04 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 74,387.44 புள்ளிகளிலும் வர்த்தகமானது.
இதேபோல் இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் சரிவுடன் தொடங்கி, சரிவுடன் முடிவடைந்தது.
இந்திய பங்குச் சந்தை நேற்றைய வர்த்தகத்தில் நிஃப்டி 22,795.90 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இன்று காலை 188.4 புள்ளிகள் சரிந்து 22,607.50 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. இன்று அதிகபட்சமாக 226,68.05 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 22518.80 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது. இறுதியாக 243.40 புள்ளிகள் சரிந்து 22,552.50 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், டி.சி.எஸ்., ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், எஸ்.பி.ஐ., இந்துஸ்தான் யுனிலிவர், பஜாஜ் பைனான்ஸ் பங்குகள் சரிவை சந்தித்தன.
ஐ.டி.சி., கோடக் மகிந்திரா வங்கி, மாருதி சுசுகி, மகிந்திரா அண்டு மகிந்திரா, ஆக்சிஸ் வங்கி, நெஸ்லே இந்தியா பங்குகள் ஏற்றம் கண்டன.
- சுயநல நோக்கங்களுக்காக இந்தியை எதிர்ப்பவர்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.
- இந்தி எதிர்ப்பு உள்ள தமிழ்நாட்டில், லட்சக்கணக்கான மக்கள் இந்தியில் சான்றிதழ் படிப்புகளை மேற்கொள்கிறார்கள்
இந்தி படிப்படியாக தேசிய மொழியாக முன்னேற வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். இணை பொதுச்செயலாளர் அருண்குமார் தெரிவித்துள்ளார்.
நேற்று மும்பையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.எஸ். இணை பொதுச்செயலாளர் அருண்குமார்,
"தற்போது நடைபெறும் மொழி தொடர்பான சர்ச்சைகள் துரதிர்ஷ்டவசமானவை. ஒவ்வொரு மாநிலமும் அதன் மொழியை வளர்த்து, அந்த குறிப்பிட்ட மொழியில் அதன் வணிகத்தை நடத்த வேண்டும். இந்தியாவில் எந்த பிராந்திய மொழியும் இல்லை. அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள்.
நமக்கு ஒரு நிர்வாக அமைப்பு உள்ளது. நமக்கு ஒரு பொதுவான தேசிய மொழி தேவை. ஒருகட்டத்தில், அது சமஸ்கிருதம், ஆனால் இன்று அது சாத்தியமில்லை. எனவே அது இன்று இந்தியாக மட்டுமே இருக்க முடியும்.
நீங்கள் இந்தியை விரும்பவில்லையென்றால், உங்களுக்கு ஒரு தேசிய மொழி இருக்கவேண்டும். ஆங்கிலம் பொதுவான தேசிய மொழியாக இருக்கமுடியாது. அது ஒரு வெளிநாட்டு மொழியாக இருக்கும்.
ஆங்கிலம் ஒரு பொதுவான தேசிய மொழியாக மாற்றப்பட்டால், மாநில மொழிகளின் இருப்பு ஆபத்தில் இருக்கும் என்று தலைவர் கோல்வால்கர் கூறியுள்ளார்.
இந்தி படிப்படியாக ஒரு பொதுவான தேசிய மொழியாக முன்னேற வேண்டும், அந்த செயல்முறை இயற்கையாக இருக்க வேண்டும். நீங்கள் கட்டாயப்படுத்தினால், எதிர்வினை இருக்கும். சுயநல நோக்கங்களுக்காக இந்தியை எதிர்ப்பவர்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.
இந்தி எதிர்ப்பு உள்ள தமிழ்நாட்டில், லட்சக்கணக்கான மக்கள் இந்தியில் சான்றிதழ் படிப்புகளை மேற்கொள்கிறார்கள். எனவே அந்த விஷயத்தில் கவலைப்படத் தேவையில்லை" என்று தெரிவித்தார். தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுப்பதால் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு கல்வி நிதி மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- விசாரணைக்கு பின் நீதிமன்றத்திற்கு வெளியே மாமியார் மருமகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
- சிறிது நேரத்திலேயே மொத்த குடும்பமும் சண்டையில் ஈடுபட்டது
மகாராஷ்டிராவில் நீதிமன்றத்துக்கு வெளியே மாமியாரும் மருமகளும் சண்டை போடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் குடும்ப பிரச்சனை தொடர்பான வழக்கு விசாரணைக்கு பின் நீதிமன்றத்திற்கு வெளியே மாமியார் மருமகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை மூண்டுள்ளது.
சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வரும் இந்த வீடியோவில், மாமியாரும் மருமகளும் ஒருவரையொருவர் உதைத்தும், குத்தியும் தாக்கிக் கொள்கிறார்கள். தலைமுடியை பிடித்து இழுப்பதும் உடைகளை கிழிப்பதும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
சிறிது நேரத்திலேயே மொத்த குடும்பமும் சண்டையில் ஈடுபட்டது நிலைமையை இன்னும் மோசமாக்கியது.
சம்பவ இடத்தில் இருந்த சில பெண் போலீசும் வழக்கறிஞர்களும் ஆரம்பத்தில் இருந்து வேடிக்கை மட்டுமே பார்த்து நின்றனர். சிறிது நேரத்திற்குப் பிறகு வேறு சிலர் நிலைமை மோசமடைவதை கவனித்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். இதன் பின்னர், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
- அவர்கள் அங்கு இருப்பதை மணல் லாரி ஓட்டுநர் அறிவில்லை
- கொட்டகையின்மீது லாரியில் இருந்த மணலை இறக்கியுள்ளார்
மகாராஷ்டிராவில் கட்டுமானத் தளத்தில் நடந்த விபத்தில் 5 தொழிலாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜல்னா மாவட்டத்தின் ஜாப்ராபாத் தாலுகாவில் உள்ள பசோடி-சந்தோலில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த இடத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கொட்டகையில் தொழிலாளர்கள் இன்று காலை தூங்கிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் அங்கு இருப்பதை அறியாத மணல் லாரி ஓட்டுநர், அவர்களின் கொட்டகையின்மீது லாரியில் இருந்த மணலை இறக்கியுள்ளார். இதில் ஒரு சிறுவன் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
- பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே இடையே கடந்த சில நாட்களாக கருத்து மோதல் நிலவுகிறது.
- பட்னாவிஸ் உடனான சந்திப்புகளையும் ஷிண்டே தொடர்ந்து தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது.
மும்பை:
மகாராஷ்டிரா முதல் மந்திரி பட்னாவிசுக்கும், துணை முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கருத்து மோதல் நிலவுவதாக தகவல்கள் வெளியானது. பட்னாவிஸ் உடனான சந்திப்புகளையும் ஷிண்டே தொடர்ந்து தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, ஏக்நாத் ஷிண்டே முதல் மந்திரியாக இருந்தபோது ஜல்னா நகரில் ரூ.900 கோடி ரூபாய்க்கான திட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருந்தார். அந்தத் திட்டத்தை பட்னாவிஸ் அரசு தற்போது நிறுத்திவைத்துள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பையில் துணை முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நான் ஒரு சாதாரண கட்சி தொண்டன். ஆனால் நான் பால் தாக்கரேவின் விசுவாசியும் கூட. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். 2022-ல் என்னை சிலர் இலகுவாக எடுத்துக் கொண்டனர். நான் அந்த அரசாங்கத்தையே கவிழ்த்துவிட்டேன்.
சட்டசபையில் எனது முதல் உரையிலேயே தேவேந்திர பட்னாவிஸ் 200-க்கும் மேற்பட்ட இடங்களைப் பெறுவார் என கூறினேன். ஆனால் எங்களுக்கு 232 இடங்கள் கிடைத்தன. அதனால்தான் என்னை இலகுவாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என கூறுகிறேன் என்றார்.
- மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். வெடிகுண்டு
- மிரட்டல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்னேத் ஷிண்டே காருக்கு வெடிகுண்டு வைத்து வெடிக்க செய்வேன் என மும்பை காவல் நிலையங்களுக்கு மர்ம நபர் தொடர்ச்சியாக மிரட்டல் விடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தொடர்ச்சியாக காவல் நிலையங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்து இருக்கிறார்.
இன்று காலை முதல் கொரிகான், ஜெ.ஜெ. மார்க் காவல் நிலையங்கள் மற்றும் மந்த்ராலயா காவல் கட்டுப்பாட்டு அறை உள்ளிட்டவைகளுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஏக்நாத் ஷிண்டேவின் காரை வெடிகுண்டு மூலம் வெடிக்க செய்வதாக மிரட்டியுள்ளார்.
- 16 வயதுக்குட்பட்ட பெண்கள் மட்டுமே தடுப்பூசியை பெற தகுதியுடையவர்கள்.
- புற்றுநோய்களை எதிர்த்துப் போராட 6 மாதங்களுக்குள் தடுப்பூசி கிடைக்கும்.
மும்பையில் மத்திய மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை இணைமந்திரி பிரதாப் ராவ் ஜாதவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாட்டில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மருத்துவமனைகளில் சோதனைகள் நடத்தப்படுகின்றன. இந்த நோயை முன்கூட்டியே கண்டறிவதற்காக பகல்நேர பராமரிப்பு புற்றுநோய் மையங்களை நாங்கள் அமைத்து வருகிறோம்.
பெண்களை கடுமையாக பாதிக்கும் புற்றுநோய்களை எதிர்த்துப் போராட 6 மாதங்களுக்குள் தடுப்பூசி கிடைக்கும்.
16 வயதுக்குட்பட்ட பெண்கள் மட்டுமே இந்த தடுப்பூசியைப் பெற தகுதியுடையவர்கள். இந்த தடுப்பூசி குறித்த ஆராய்ச்சி முழுமையடையக்கூடும். மருந்து சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வரவிருக்கும் தடுப்பூசி மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்களை கட்டுப்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.






