என் மலர்tooltip icon

    இந்தியா

    குடிக்க கொஞ்சம் தண்ணி கொடுங்க.. வீட்டுக் கதவைத் தட்டிய இளைஞன்- மூதாட்டிக்கு நேர்ந்த கோர முடிவு
    X

    குடிக்க கொஞ்சம் தண்ணி கொடுங்க.. வீட்டுக் கதவைத் தட்டிய இளைஞன்- மூதாட்டிக்கு நேர்ந்த கோர முடிவு

    • ரஞ்சனா தண்ணீர் எடுக்க உள்ளே சென்றுள்ளார்.
    • மோமோஸ் விற்கும் தெருக் கடையைத் தொடங்க விரும்பினார் .

    மகாராஷ்டிராவில் தானே மாவட்டத்தில் கல்யாண் நகரின் அம்பிவாலி பகுதியில் வசித்து வந்தவர் ரஞ்சனா பதேகர் (வயது 60). கடந்த மார்ச் மார்ச் 20 அன்று, ரஞ்சனா வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். விசாரணையில் அக்பர் முகமது ஷேக் சந்த் (30) என்பவரால் அவர் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    சம்பவத்தன்று, அக்பர், ரஞ்சனாவின் வீட்டுக் கதவைத் தட்டி குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். ரஞ்சனா தண்ணீர் எடுக்க உள்ளே சென்றுள்ளார்.அவர் தனியாக இருப்பதை அறிந்த அக்பர் வீட்டுக்குள் நுழைந்து தொலைக்காட்சி வால்யூமை சத்தமாக வைத்துவிட்டு, ரஞ்சனாவின் கழுத்தை நெரித்து அக்பர் கொலை செய்துள்ளார். மேலும் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள தங்க காதணிகளுடன் அவர் தப்பிச் சென்றார்

    அக்பர் ஏற்கனவே ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு தர்வாடி சிறையில் இருந்து 8 மாதங்களுக்கு முன் விடுவிக்கப்பட்டவர். அன்றிலிருந்து அவர் வேலையில்லாமல் இருந்தார்.

    மோமோஸ் விற்கும் தெருக் கடையைத் தொடங்க விரும்பினார் விரும்பிய அவர் இந்த ரஞ்சனாவை கொலை செய்து நகைகளுடன் தப்பியது தெரியவந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அட்டாலி பகுதியில் அக்பர் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடமிருந்து திருடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டதாகவும் கடக்பாடா காவல் நிலைய மூத்த ஆய்வாளர் அமர்நாத் வாக்மோட் தெரிவித்தார்.

    Next Story
    ×