என் மலர்
கேரளா
- தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து காஷ்மீரில் பதட்டமாக சூழல் நிலவி வருகிறது.
- காஷ்மீரில் சிக்கியிருக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களில் 4 எம்.எல்.ஏ.க் களும் உள்ளனர்.
திருவனந்தபுரம்:
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகளால் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுற்றுலா பயணிகளை குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து காஷ்மீரில் பதட்டமாக சூழல் நிலவி வருகிறது. அங்கு சுற்றுலா சென்ற தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் பீதியில் உறைந்தனர்.
அவர்கள் தங்களது மாநிலத்துக்கு மீண்டும் திரும்ப முடியாமல் தவித்த படி இருக்கின்றனர். காஷ்மீரில் சிக்கி தவிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்களை பத்திரமாக அழைத்து வரும் நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
கேரள மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் காஷ்மீரில் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது கேரளாவை சேர்ந்த மொத்தம் 258 பேர் அங்கு இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு உதவுவதற்காக உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த உதவி மையத்தின் 26 குழுக்களில் 262 பேர் பதிவு செய்திருந்ததாகவும், அவர்களில் 4 பேர் சொந்த ஊருக்கு திரும்பியிருக்கும் நிலையில், விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதால் மற்ற 258 பேரும் காஷ்மீரில் இருந்து திரும்ப முடியாமல் அங்கேயே தவித்து வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
காஷ்மீரில் சிக்கியிருக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களில் 4 எம்.எல்.ஏ.க் களும் உள்ளனர். சித்திக், முகேஷ், மஜீத், அன்சலன் ஆகியோர் தலைமையிலான கேரள சட்டமன்ற உத்தரவாத குழு ஐம்மு காஷ்மீர், பஞ்சாப், டெல்லி ஆகிய இடங்களுக்கு 9 நாள் சுற்றுப் பயணத்துக்கு புறப்பட்டனர்.
அவர்கள் முதலில் காஷ்மீருக்கு சென்றிருந்த நிலையில், பயங்கரவாதிகள் தாக்குதல் காரணமாக அங்கேயே சிக்கிக் கொண்டனர். அவர்களும் காஷ்மீரில் சிக்கியிருக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களுடன் தங்கியுள்ளனர். பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவத்தால் எம்.எல்.ஏ.க்கள் குழு தனது சுற்றுப்பயண திட்டத்தை மாற்ற உள்ளது.
காஷ்மீரில் சிக்கியிருக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்த அனைவரையும் சொந்த ஊருக்கு அழைத்து வருவதற்காக ஏற்பாடுகளை கேரள மாநில அரசு செய்து வருகிறது.
- கோவிலின் நடைப்பந்தலில் வீடியோ எடுக்க அனுமதி உள்ளது.
- வீடியோ காட்சிகளை தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கிறார்.
கேரள மாநிலம் குருவாயூரில் பிரசித்திபெற்ற கிருஷ்ணர் கோவில் இருக்கிறது. திருமணம் மற்றும் மத சடங்குகளுக்கு மட்டும் கோவிலின் நடைப்பந்தலில் வீடியோ எடுக்க அனுமதி உள்ளது. மற்ற நிகழ்வுகள் மற்றும் சாதாரண நேரங்களில் அங்கு வீடியோ எடுக்க அனுமதி கிடையாது.
இந்தநிலையில் பாரதிய ஜனதா கட்சியின் கேரள மாநில தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், குருவாயூர் கோவிலுக்கு சென்றிருந்தார்.
அப்போது அவர் கோவிலின் நடைப்பந்தல் (பாதை) மற்றும் தீபஸ்தம்பம் (விளக்கு கம்பம்) முன்பு வீடியோ எடுத்திருக்கிறார். அந்த வீடியோ காட்சிகளை தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கிறார்.
இதுகுறித்து கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் ஊடகக்குழு உறுப்பினர் அனூப் என்பவர் குருவாயூர் கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
ஐகோர்ட்டு உத்தரவை மீறி கோவில் வளாகத்தில் வீடியோ எடுக்கப்பட்டிருப்பதாக அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த புகாரின் அடிப்படையில் ராஜீவ் சந்திரசேகர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
- கேரளா சமீபத்தில் கடுமையான வெள்ளம், நிலச்சரி உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை சந்தித்தது.
- இயற்கை பேரிடர்களால் அழிவை சந்தித்த கேரளாவிற்கு மத்திய அரசு எந்தவிதமாக உதவியும் செய்யவில்லை.
மத்திய அரசு கேரளாவிற்கு எதிராக எதிர்மறையான நிலையை எடுத்து வருகிறது. தென்மாநிலமான கேரளாவை அழிக்க விரும்புகிறது என கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.
பினராயி விஜயன் தலைமையிலான எல்.டி.எஃப். அரசு 4ஆம் கொண்டாட்ட விழாவில் பேசும்போது பினராயி விஜயன் கூறியதாவது:-
கேரளா சமீபத்தில் கடுமையான வெள்ளம், நிலச்சரி உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை சந்தித்தது. இயற்கை பேரிடர்களால் அழிவை சந்தித்த கேரளாவிற்கு மத்திய அரசு எந்தவிதமாக உதவியும் செய்யவில்லை.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு கேரளாவிற்கு எதிராக முற்றிலும் எதிர்மறையான நிலையை எடுத்தது. மற்ற இடத்தில் இருந்து தருவதாக சொன்ன உதவிகளைக் கூட அவர்களுடைய அதிகாரத்தால் தடுத்தது நிறுத்த முயற்சித்தனர்.
கேரளா நொறுங்கட்டும், இன்னும் நொறுங்ககட்டும் என நினைத்தனர். அழிவு மனப்பான்மையுடன் மத்திய அரசு வழி நடத்தப்பட்டது.
பல வருடத்திற்கு முன் கேரளா மாநிலம் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இந்த இயற்கை பேரிடரில் இருந்து கேரளா எப்படி மீளப்போகிறது என்று ஒட்டு மொத்த உலகமும் நினைத்தது. இயற்கை சீற்றத்தில் இருந்து மாநிலம் தப்பியது பற்றி நாடும், உலகமும் மகிழ்ச்சி அடைந்தன.
எப்படி நம்மால் தப்பிக்க முடிந்தது?. இதற்கு ஒரேயொரு காரணம்தான் இருக்கிறது. மாநிலத்தின் ஒற்றுமை மற்றும் அதன் மக்ககள். கடினமான நேரங்கள் மற்றும் சவால்களில் இருந்து தப்பிக்க ஒற்றுமை மற்றும் மக்கள் வலிமையாக இருந்தனர். கேரளாவின் அழிவதை மத்திய அரசு விரும்பி, அதற்காக எதிர்மறையான நிலைப்பாட்டை எடுத்திருந்தாலும் கேரளா நொறுங்கி போகவில்லை.
இவ்வாறு பினராயி விஜயன் மத்திய அரசு மீது குற்றம்சாட்டியுள்ளார்.
- மாணவியை பிளஸ்-1 மாணவன் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
- திருமணம் செய்து வைக்குமாறு மாணவியின் தாயையும் மிரட்டி இருக்கின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் வெள்ளரடா பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி, அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். அந்த மாணவியை பிளஸ்-1 படித்து வந்த மாணவன் ஒருவன் காதலித்துள்ளார்.
ஆனால் அவரது காதலை 10-ம் வகுப்பு மாணவி ஏற்றுக் கொள்ளவில்லை என தெரிகிறது. இருந்த போதிலும் மாணவியை பிளஸ்-1 மாணவன் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். மேலும் மாணவியை மிரட்டி தனக்கு அடிபணிய வைத்துவிடலாம் என்று நினைத்துள்ளார்.
அவர் மன்னம்கோட்டை பகுதியை சேர்ந்த ஆனந்து (20), சஜின்(30) ஆகிய இருவரையும் தொடர்பு கொண்டு தனக்கு உதவுமாறு கேட்டுள்ளார். தனக்கு உதவினால் மதுபானம் மற்றும் விரும்பும் உணவு வாங்கித்தருவதாக பிளஸ்-1 மாணவன் கூறியிருக்கிறான்.
இதையடுத்து ஆனந்து, சஜின் ஆகிய இருவரும் 10-ம் வகுப்பு மாணவியின் தாயின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். பிளஸ்-1 மாணவனை காதலிக்குமாறு 10-ம் வகுப்பு மாணவியை மிரட்டியுள்ளனர்.
அது மட்டுமின்றி பிளஸ்-1 மாணவனை மாணவிக்கு திருமணம் செய்து வைக்குமாறு மாணவியின் தாயையும் மிரட்டி இருக்கின்றனர்.
இதுகுறித்து வெள்ளரடா போலீஸ் நிலையத்தில் மாணவியின் தாய் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி 10-ம் வகுப்பு மாணவி மற்றும் அவரது தாய்க்கு மிரட்டல் விடுத்த ஆனந்து, சஜின் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
- போலீசார் இரவில் அதிரடியாக சென்று சோதனை நடத்தினர்.
- 3-வது மாடியில் இருந்து தப்பித்து ஓடியதாக கூறப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலை யில் கொச்சியில் உள்ள ஓட்டலில் போதைப்பொருள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை தேடி போலீசார் இரவில் அதிரடியாக சென்று சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது ஒருவர் ஓட்டலின் 3-வது மாடியில் இருந்து தப்பித்து ஓடியதாக கூறப்பட்டது. அவர் யார்? என விசாரணை நடத்திய போது பிரபல நடிகர் ஷைன் டாம் சாக்கோ என தெரியவந்தது. இதனை சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் போலீசார் உறுதிப்படுத்தினர்.

அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி உள்பட பல படங்களில் ஷைன் டாம் சாக்கோ நடித்துள்ளார். இவர் ஏன் போலீசாரை கண்டு தப்பி ஓடினார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அவருக்கு நோட்டீசு அனுப்பி விசாரணைக்கு அழைக்கவும் கொச்சி போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி கூறுகையில், ஓட்டலில் இருந்து வெளியேறியது ஏன்? என்பது குறித்து நடிகர் ஷைன் டாம் சாக்கோவிடம் விசாரிக்க உள்ளோம். விசாரணையின் ஒரு பகுதியாக ஓட்டல் ஊழியர்களிடமும் வாக்கு மூலங்கள் பெறப்படும் என்றார்.
சர்ச்சையில் சிக்கி உள்ள நடிகர் ஷைன் டாம் சாக்கோ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரூ.8 ஆயிரத்து 867 கோடி மதிப்பீட்டில் துறைமுகம் கட்டப்பட்டுள்ளது.
- தெற்காசியாவின் முதல் அரை தானியங்கி துறைமுகம்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் விழிஞ்சத்தில் பொது-தனியார் கூட்டாண்மை மாதிரியின் கீழ் ரூ.8 ஆயிரத்து 867 கோடி மதிப்பீட்டில் துறைமுகம் கட்டப்பட்டுள்ளது. தெற்காசியாவின் முதல் அரை தானியங்கி துறைமுகமான இதனை வருகிற 2-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.
இதனை கேரள மாநில துறைமுகத்துறை அமைச்சர் வாசவன் உறுதிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், விழிஞ்சம் துறைமுகத்தை மே 2-ந் தேதி பகல் 11 மணிக்கு பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இந்த துறைமுகம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படு வதன் மூலம் கேரளா, உலகின் கடல்சார் வர்த்தக துறையில் முன்னணியில் இருக்கும்.
- சிறந்த இயக்குனர்: விருதை பிளஸ்ஸி (ஆடுஜீவிதம்) வென்றார்.
- ஆடுஜீவிதம் திரைப்படம் மொத்தமாக 9 விருதுகளைப் பெற்றது
2024ம் ஆண்டுக்கான கேரள மாநில திரைப்பட விருதுகளை முதலமைச்சர் பினராயி விஜயன் வழங்கினார்.
சிறந்த நடிகருக்கான விருது ஆடு ஜீவிதம் படத்திற்காக பிரித்விராஜுக்கு வழங்கப்பட்டது. சிறந்த இயக்குனர்: விருதை பிளஸ்ஸி (ஆடுஜீவிதம்) வென்றார். ஆடுஜீவிதம் திரைப்படம் மொத்தமாக 9 விருதுகளைப் பெற்றது.
சிறந்த நடிகைக்கான விருது உள்ளொழுக்கு படத்திற்காக ஊர்வசிக்கும் தடவு படத்திற்காக பீனா ஆர் சந்திரனுக்கும் வழங்கப்பட்டது.
சிறந்த படத்திற்கான விருது மம்முட்டியின் 'காதல் - தி கோர்' படத்திற்கு வழங்கப்பட்டது.
- தாயும், மகள்களும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்தனர்.
- தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்திருக்கிறார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளி அருகே உள்ள குலசேகரபுரம் பகுதியை சேர்ந்தவர் கிரிஷ்குமார். இவரது மனைவி தாரா கிருஷ்ணன் (வயது36). இவர்களது மகள்கள் அனாமிகா(6), ஆத்மிகா(1 ).
கிரிஷ்குமார் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் தனது கணவர் குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, தாரா தனது 2 மகள்களுடன் குலசேகரபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் தனது தந்தையுடன் வசித்துவந்தார். கடந்த ஒன்றரை ஆண்டாக அந்த வீட்டில் தான் வசித்து வந்திருக்கிறார்.
இந்தநிலையில் நேற்று மாலை தாராவின் தந்தை கோபாலகிருஷ்ணன் டீ குடிப்பதற்காக டீக்கடைக்கு சென்றிருந்தார். தாரா தனது குழந்தைகளுடன் வீட்டில் இருந்தார். அப்போது அவர்களது வீட்டின் உள்ளே இருந்து குபுகுபுவென புகை வந்தது.
இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்து வீட்டினர், கதவை உடைத்து தாராவின் வீட்டுக்குள் சென்றனர். அப்போது அங்கு தாரா மற்றும் அவரது 2 மகள்கள் உடல் கருகிய நிலையில் கிடந்தனர். இதுகுறித்து கருநாகப்பள்ளி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து தீணை அணைத்தனர். பின்பு வீட்டுக்குள் உயிருக்கு போராடியபடி கிடந்த தாரா மற்றும் அவரது மகள்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
அதில் தாரா தனது 2 குழந்தைகளின் உடலில் தீவைத்துவிட்டு தானும் தீவைத்துக்கொண்டது தெரியவந்தது. இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த தாரா மற்றும் அவரது 2 மகள்களும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்தனர்.
தாரா தனது 2 குழந்தை களை எரித்துக் கொன்று தற்கொலை செய்தது ஏன்? என்று போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி னர். அதில் பல புதிய தகவல்கள் கிடைத்தன. தாராவுக்கும் அவரது கணவரின் குடும்பத்தின ருக்கும் பிரச்சினை ஏற்பட் டுள்ளது. இதனால் தாரா தனது கணவரின் வீட்டில் வசிக்காமல், தனியாக வந்து தனது தந்தை மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்திருக்கிறார்.
இந்தநிலையில் துபாயில் வேலை பார்த்து வரும் தாராவின் கணவர் கிரிஷ்குமார் விடுமுறையில் ஊருக்கு வர இருந்தார். அவர் துபாயில் இருந்து நேற்று புறப்பட்டு வர இருந்த நிலையில், சில காரணங்களுக்காக அங்கிருந்து புறப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் சொத்து தொடர்பாக தாரா மற்றும் அவரது மாமியாருக்கு இடையே நேற்று பிரச்சினையும் நடந்துள்ளது. அப்போது தாரா தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்திருக்கிறார்.
இந்தநிலையில் தான் தாரா தனது குழந்தைகளை உயிரோடு எரித்துக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்தி ருக்கிறார்.
கணவர் குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர். 2 குழந்தைகளை உயிரோடு எரித்துக்கொன்றுவிட்டு, இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கேரளாவில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
- நடிகர் போதையில் என்னிடமும், மற்றொரு நடிகையிடமும் அத்துமீறினார்.
- போதைப்பொருள் பயன்படுத்தும் நடிகர்களுடன் நடிக்க மாட்டேன்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பொன்னானி பகுதியை சேர்ந்த மலையாள திரைப்பட நடிகை வின்சி அலோசியஸ். "விக்ருதி" என்ற மலையாள திரைப்படத்தின் மூலமாக கடந்த 2019-ம் ஆண்டு திரைத்துறையில் அறிமுகமானார்.
இவர் "கனகம் காமினி கலகம்", "பீமண்டே வாழி", "ஜன கன மன", "சோல மண்டே தேனீச்சல்", "வெள்ளை ஆல்டோ", "சவுதி வெள்ளக்கா", "பத்மினி", "சூர்யவக்யம்" உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடத்திருக்கிறார். "ரேகா" என்ற படத்தில் நடித்ததற்காக இவருக்கு கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார்.
இந்தநிலையில் போதைப் பொருள் பன்படுத்தும் நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என்று நடிகை வின்சி அலோசியஸ் சமீபத்தில் கூறியிருந்தார். எதற்காக அவ்வாறு கூறினார்? என்று அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-
போதைப்பொருள் பயன்படுத்தும் நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என்று சமீபத்தில் நான் கூறியிருந்தேன். இதற்கு சிலர் எனக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே எதற்காக அவ்வாறு கூறினேன்? என்று விளக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தல் ஒரு மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நான் நடித்தி ருந்தேன். அந்த படத்தில் என்னுடன் சேர்ந்து நடித்த முன்னணி நடிகர் ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்துவதை நேரடியாக பார்த்தேன். அந்த நடிகர் போதையில் என்னிடமும், மற்றொரு நடிகையிடமும் அத்துமீறினார்.
இதனால் அந்த படத்தில் இருந்து விலக நான் தீர்மானித்தேன். ஆனால் படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளரும் என்னிடம் மன்னிப்பு கேட்டதாலும், நான் நடிக்காவிட்டால் அந்த படம் வெளியாகாது என்பதாலும் வேறு வழியின்றி நடித்துக் கொடுத்தேன்.
தனிப்பட்ட முறையில் அவர் என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை. ஆனால் படப்பிடிப்பு தளத்திலும், பொது இடத்திலும் போதைப்போருள் பயன்படுத்தி மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் தான் போதைப்பொருள் பயன்படுத்தும் நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என்று கூறினேன்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
- அஞ்சலியை காதலிக்கும் வாலிபர் தனது நண்பர்கள் சிலருடன் அவர் வீட்டுக்கு பெண் கேட்டு வந்தார்.
- . இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சத்தியபாலன் மற்றும் அஞ்சலி இருவரும் ஸ்ரீஜாவை காப்பாற்ற முயன்றனர்.
கேரளா மாநிலம் எருமேலி பகுதியைச் சேர்ந்தவர் சத்யபாலன்(56). இவரது மனைவி ஸ்ரீஜா(48). இந்த தம்பதியினருக்கு அஞ்சலி(27) என்ற மகளும் அகிலேஷ்(24) என்ற மகனும் இருந்தனர்.
சத்தியபாலன் அந்த பகுதியில் ஒலிப்பெருக்கி நிலையம் நடத்தி வந்தார். மகள் அஞ்சலி வெளிநாட்டில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.
இவர் விடுமுறைக்கு அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வார். அஞ்சலி தனது தந்தையின் கடைக்கு அருகில் ஒரு கடையில் வேலை பார்த்து வந்த ஒருவரை காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அஞ்சலி வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் மதியம் அஞ்சலியை காதலிக்கும் வாலிபர் தனது நண்பர்கள் சிலருடன் அஞ்சலி வீட்டுக்கு பெண் கேட்டு வந்தார். இதனால் அஞ்சலியின் பெற்றோர் ஆத்திரடைந்தனர். அவர்களை அனுப்பி வைத்துவிட்டு அஞ்சலியை கண்டித்து பெற்றோர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது ஆத்திரமடைந்த தாய் ஸ்ரீஜா, வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சத்தியபாலன் மற்றும் அஞ்சலி ஆகிய இருவரும் ஸ்ரீஜாவை காப்பாற்ற முயன்றனர்.
அப்போது அவர்களின் மீதும் தீப்பற்றி கொண்டது. இதனால் 3 பேரும் உடல் கருகி பலத்த தீக்காயம் அடைந்தனர். குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த ஸ்ரீஜாவின் மகன் அகிலேசும் பலத்த தீக்காயம் அடைந்தார்.
வீடு தீப்பற்றி எரிவதை கண்டு அக்கம்பத்தினர் தீயணைப்பு துறைக்கும் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அனைத்து காயங்களுடன் கிடந்த 4 போரையும் மீட்டு கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியில் ஸ்ரீஜா பரிதாபமாக உயிரிழந்தார். சத்தியபாலனும், அஞ்சலியும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். படுகாயமடைந்த அகிலேசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு பின் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து எருமேலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2 நீதிபதிகள் அமர்ந்து கொண்டு அரசமைப்பின் விதியை தீர்மானிப்பது ஏற்புடையதல்ல.
- பிரதமர் நரேந்திர மோடி ஆளுநர்களைப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை பின் கதவு வழியாகக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்.
மசோதாக்கள், துணைவேந்தர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் கவர்னருக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணையில் கடந்த 8 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆளுநரின் செயல்கள் சட்டவிரோதம் என்று கண்டித்ததுடன் நிலுவையில் இருந்த தமிழக அரசின் 10 மசோதாக்களுக்கும் சிறப்பு அதிகாரத்தின்மூலம் தாங்களே ஒப்புதல் வழங்குவதாக தெரிவித்தனர்.
மேலும் அரசு அனுப்பும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு காலக்கெடுவும் நிர்ணயித்தனர். அதுமட்டுமின்றி வரலாற்றில் முதல் முறையாக, ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க நாட்டின் ஜனாதிபதிக்கு 3 மாதம் காலக்கெடு விதிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை விமர்சித்து கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லெக்கர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்தும் அவர் கூறியதாவது, "மசோதாக்கள் மீது ஆளுநர் ஒப்புதல் அளிப்பதற்கு அரசியல் சாசனம் எந்த காலக் கெடுவும் விதிக்கவில்லை.
உச்ச நீதிமன்றம் அதற்கான காலத்தை நிர்ணயிப்பது அரசமைப்புச் சட்டத் திருத்தமாக கருதப்படும், இதை நீதிமன்றம் செய்யும் பட்சத்தில், பிறகு சட்டமன்றமும், நாடாளுமன்றமும் எதற்கு?.
அரசமைப்பில் திருத்தங்கள் செய்ய, நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை பெற வேண்டும், ஆனால் 2 நீதிபதிகள் அமர்ந்து கொண்டு அரசமைப்பின் விதியை தீர்மானிப்பது ஏற்புடையதல்ல. இது உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பு மீறல்" என விமர்சித்துள்ளார்.

கேரள ஆளுநர் உச்சநீதிமன்றத்தை விமர்சித்ததற்கு குறித்து சிபிஎம் மற்றும் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து வருகிறது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் தேசிய பொதுச்செயலாளர் பேபி, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனாதிபதி உட்பட அனைவருக்கும் பொருந்தும். பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஜனாதிபதி கூட தாமதப்படுத்துவது இல்லை. அப்படியானால், ஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரம் ஆளுநர்களுக்கு எப்படி இருக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் காங்கிரஸ் தலைவர் வேணுகோபால் இதுகுறித்து பேசுகையில், "பாராளுமன்றத்தின் சட்டங்களை இயற்றும் அதிகாரத்தை ஆளுநர் அர்லேகர் மகிமைப்படுத்துகிறார், ஆனால் சட்டமன்றத்தின் அதிகாரத்தை மதிக்கவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி ஆளுநர்களைப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை பின் கதவு வழியாகக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறார். உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பு சங் பரிவாரங்களுக்கு எதிரான "சில்வர் லைன்" என்று தெரிவித்தார்.
- ராணாவுக்கு உதவியதாக கொச்சியில் ஒருவரை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்து உள்ளனர்.
- ராணாவையும் கொச்சி அழைத்து வந்து விசாரிக்க என்.ஐ.ஏ. திட்டமிட்டு உள்ளது.
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவா் பாகிஸ்தான்- அமெரிக்க பயங்கரவாதி டேவிட் ஹெட்லி. இவனது நெருங்கிய நண்பராக இருந்தவர் தஹாவூா் ராணா. இவனது ஆலோசனை மூலம்தான், மும்பை தாக்குதல் சம்பவம் நடந்தது விசாரணையில் உறுதிபடுத்தப்பட்டது.
அமெரிக்க சிறையில் இருந்த ராணா, நாடு கடத்தப்பட்டதை தொடர்ந்து அவரை இந்தியா அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். அவரிடம் கோர்ட்டு உத்தரவுப்படி என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை தாக்குதலுக்கு முன்பு ஹாபூா், ஆக்ரா, டெல்லி, கொச்சி, அகமதாபாத், மும்பை ஆகிய நகரங்களுக்கு ராணா தன் மனைவி சம்ராஸ் ராணா அக்தருடன் சென்றதாக விசாரணையில் தெரிய வந்தது.
இதன் அடிப்படையில் ராணாவுக்கு உதவியதாக கொச்சியில் ஒருவரை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்து உள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கொச்சியில் ராணா 13 பேருடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. அவர்கள் யார்? எங்கு சந்தித்தனர்? என விசாரணை நடைபெற்று வருகிறது.
இதன் அடிப்படையில் ராணாவையும் கொச்சி அழைத்து வந்து விசாரிக்க என்.ஐ.ஏ. திட்டமிட்டு உள்ளது.






