என் மலர்
நீங்கள் தேடியது "ஸ்வேதா மேனன்"
- 31 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவராக ஸ்வேதா மேனன் தேர்வாகி உள்ளார்.
- நிதி ஆதாயத்திற்காக ஆபாசத் திரைப்படங்களில் நடித்ததாக ஸ்வேதா மேனன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கேரள நடிகர் சங்கமான 'AMMA' அமைப்புக்கான தேர்தல் இன்று கொச்சியில் வைத்து நடைபெற்றது. இந்த தேர்தலில் நடிகை ஸ்வேதா மேனன் வெற்றி பெற்றார்.
இதன் மூலம் 31 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவராக ஸ்வேதா மேனன் தேர்வாகி உள்ளார்.
சமீபத்தில் நிதி ஆதாயத்திற்காக ஆபாசத் திரைப்படங்களில் நடித்ததாக ஸ்வேதா மேனன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் அதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்து இடைக் காலத் தடை வாங்கியிருந்தார்.
இந்நிலையில் கேரள திரையுலகில் சர்ச்சைக்கு மத்தியில அவர் நடிகர் சங்கத் தலைவர் ஆகியுள்ளார். முன்னதாக நடிகர் மோகன்லால் அந்த பதவியில் இருந்தார்.
கேரள திரையுலகில் நடிகைகளுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை தொடர்பாக ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது 'AMMA' சங்கத்தின் தேர்தல் நடைபெற்றுள்ளது.
நடிகை ஸ்வேதா மேனனுக்கு போனில் சில மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்ததையடுத்து சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் அளித்துள்ளார். #SwethaMenon
பிரபல மலையாள நடிகை ஸ்வேதா மேனன், நான் அவன் இல்லை 2, அரவான், துணை முதல்வர் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
தற்போது ஸ்வேதா மேனன், படப்பிடிப்பு ஒன்றுக்காக மும்பையில் உள்ளார். இவரது செல்போனுக்கு நேற்று சிலர் பேசியுள்ளர். தெரியாத நம்பரில் இருந்து வந்த அந்த அழைப்பில் பேசியவர்கள், மலையாள நடிகர் சங்கத் தேர்தலில் நிர்வாக குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதற்கு வாழ்த்துக்கள் கூறினர்.
தொடர்ந்து சில நிமிடங்களில் மீண்டும் செல்போன் அழைப்புகள் வந்தன. நம்பரும் பெயரும் இல்லாமல் வந்த அந்த அழைப்பை எடுத்து பேசிய ஸ்வேதா மேனனை, எதிர்முனையில் இருந்தவர்கள் ஆபாசமாக திட்டினர். அதோடு அவரை கொன்று விடுவதாகவும் மிரட்டினர். இதனைத் தொடர்ந்து ஸ்வேதா மேனன், போலீசில் புகார் செய்தார்.
மலையாள நடிகர் (அம்மா) சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர் பதவிக்கு ஸ்வேதா மேனன் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அவருக்கு இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இது பற்றி ஸ்வேதா மேனன் கூறும்போது, நான் நடிகர் சங்க உறுப்பினராக இருக்கிறேன். இதற்கு முன்பும் பல நடிகைகள் நிர்வாக குழு உறுப்பினர்களாக இருந்துள்ளனர். ஒவ்வொரு தேர்தலிலும் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். கீது மோகன்தாஸ், காவ்யா மாதவன், ரம்யா உட்பட பலர் இருந்துள்ளனர். இதையடுத்து நானும் போட்டியிடுகிறேன். மிரட்டல் குறித்து கவலையில்லை என்று கூறினார்.






