என் மலர்
கேரளா
- மகளின் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முடிவெடுத்தனர்.
- சிறுநீரகங்கள், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் உள்ள மற்றொரு குழந்தைக்கு வழங்கப்பட்டது.
சாலை விபத்தில் உயிரிழந்த 10 மாதக் குழந்தை தனது உறுப்புகள் மூலம் 5 பேரை காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 10 மாத பெண் குழந்தை அலின் ஷெரின் ஆபிரகாம் விபத்து ஒன்றில் மூளைச் சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
ஆழ்ந்த துயரத்தில் இருந்தபோதிலும், குழந்தையின் பெற்றோர்களான தங்கள் மகளின் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்தனர்.
மருத்துவர்கள் குழந்தையிடமிருந்து கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இதய வால்வு மற்றும் இரண்டு கண்கள் ஆகியவற்றைச் சேகரித்தனர். கல்லீரல், திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனையில் உள்ள 6 மாதக் குழந்தைக்குப் பொருத்தப்பட உள்ளது.
சிறுநீரகங்கள், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் உள்ள மற்றொரு குழந்தைக்கு வழங்கப்பட்டது. இதய வால்வு மற்றும் கண்கள், ஸ்ரீ சித்ரா இன்ஸ்டிடியூட் மற்றும் அமிர்தா மருத்துவமனைக்குத் தானமாக வழங்கப்பட்டன.
இதன் மூலம் கேரளாவிலேயே மிகக் குறைந்த வயதில் உடல் உறுப்பு தானம் செய்த பெருமை மறைந்த 10 மாதக் குழந்தை அலின் ஷெரின் ஆபிரகாம்க்கு கிடைத்துள்ளது.
இந்நிலையில், உடல் உறுப்புகளை தானம் செய்த 10 மாதக் குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாமின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
- 25 வயதே ஆன இவர் பீகாரின் இளம் எம்எல்ஏவாக உருவெடுத்தார்.
- ரியாலிட்டி ஷோ மூலம் சிறு வயதிலேயே மக்கள் மத்தியில் பரிச்சயமாகி ஊடக வெளிச்சத்திலேயே இருந்து வந்தார்.
பீகாரில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலிநகர் தொகுதியில் போட்டியிட்ட பிரபல போஜ்புரி நாட்டுப்புற பாடகர் மைதிலி தாக்கூர் வெற்றி பெற்றார்.
இதன் மூலம் 25 வயதே ஆன இவர் பீகாரின் இளம் எம்எல்ஏவாக உருவெடுத்தார்.
மைதிலி தாக்கூர், சிறுவர்களுக்கான பாட்டும் பாடும் ரியாலிட்டி ஷோ மூலம் சிறு வயதிலேயே மக்கள் மத்தியில் பரிச்சயமாகி ஊடக வெளிச்சத்திலேயே இருந்து வந்தார்.
குறிப்பாக, மைதிலி தாகூர் தமிழின் மீது கொண்டுள்ள ஆர்வம் உண்மையிலேயே வியக்கத்தக்கது. "முத்தையருள் பத்தித் திருநகை..." என்ற அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலானது.
இந்நிலையில், கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பீகார் இளம் எம்.எல்.ஏ மைதிலி தாக்கூர் முருகன் பாடலை தமிழில் பாடி அசத்தியுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், தமிழின் கடினமான சந்தப் பாடல்களை இவ்வளவு துல்லியமான உச்சரிப்புடன் பாடுவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
- கேரளாவில் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ் உள்ளது.
- மணிசங்கர் அய்யர் பேச்சு காங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சி அளித்தது.
திருவனந்தபுரம்:
தமிழகத்தைப் போல் கேரளாவிலும் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 10 ஆண்டு கால கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியால் மக்களிடம் உள்ள அதிருப்தியை பயன்படுத்தி காங்கிரஸ் வெல்ல நினைக்கிறது.
கேரளாவில் சமீபத்திய நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிகள், பா.ஜ.க.வை விட அதிக இடங்களில் காங்கிரஸ் கட்சி வென்று அசத்தியது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மணிசங்கர் அய்யர் கேரளாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், சிபிஐ(எம்) தலைமையிலான அரசு நடத்தும் பஞ்சாயத்து ராஜ் முறையை இந்தியாவிலேயே மிகவும் வலுவானது. இது மிகவும் ஆச்சரியமான விஷயம். ஏனெனில் 1931-ல் காந்திஜி விரும்பிய கிராம அளவிலான ஜனநாயகத்தை காங்கிரஸ் அரசுகளை விட சிறப்பாக நிறைவேற்றி உள்ளது. 2026 சட்டசபை தேர்தலில் பினராயி விஜயன் மீண்டும் முதலமைச்சராகத் தேர்வு செய்யப்படுவார். கேரளாவின் உள்ளாட்சி சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
அந்த நிகழ்ச்சியில் முதல் மந்திரி பினராயி விஜயனும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ் உள்ள நிலையில், மணிசங்கர் அய்யர் பினராயி விஜயன் மீண்டும் முதல் மந்திரி ஆவார் எனக்கூறியது அக்கட்சியினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
- அத்தையின் கணவர், அவரது மகன் மற்றும் தனது தந்தையால் சிறுமி இந்த நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.
- சிறுமி 8 வயதாக இருக்கும் போது அவரது தாய்மாமன் பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
கேரளாவை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த 4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவளது தந்தை மற்றும் உறவினர்களே இந்த கொடூர செயலில் ஈடுபட்டு இருப்பது தெரியவர போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு:-
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள புன்னப்பிரா பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, தனது தோழியை சந்தித்த போது கடந்த 4 ஆண்டுகளாக தந்தை மற்றும் உறவினர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருவதாக கூறி கண்ணீர் விட்டுள்ளார். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.
விசாரணையில் சிறுமியின் தாய், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து சென்று விட்டார். இதனால் தந்தையின் சகோதரி வீட்டில், சிறுமி தங்கினார். அங்கு தான் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
அத்தையின் கணவர், அவரது மகன் மற்றும் தனது தந்தையால் சிறுமி இந்த நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக பலமுறை அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானது தெரிய வந்ததை தொடர்ந்து தந்தை உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் சிறுமி 8 வயதாக இருக்கும் போது அவரது தாய்மாமன் பாலியல் தொந்தரவு கொடுத்தார். இது தொடர்பான புகாரில் போக்சோ வழக்கில் கைதாகி ஜாமினில் வந்த அவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவலும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
- கோவிலின் மத பழக்க வழக்கங்களை எடுத்துக்காட்டும் மனுக்களும் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
- கேரள அரசும் இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க உள்ளது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் கடந்த 2018-ம் ஆண்டு அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உத்தரவிட்டது. மேலும் ஆலயத் தடை பாலின பாகுபாட்டிற்குச் சமம் என்றும் கூறியது.
இதனை கேரளாவில் ஆளும் இடது சாரி அரசு அமல்படுத்த நடவடிக்கை எடுத்த போது, மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டது. பக்தர்களும், அரசியல் கட்சிகளும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. இதற்கிடையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நாளை (16-ந்தேதி) பரிசீலிக்க உள்ளது. இதே போல் கோவிலின் மத பழக்க வழக்கங்களை எடுத்துக்காட்டும் மனுக்களும் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. தலைமை நீதிபதி தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு இந்த மனுக்களை விசாரிக்கிறது. அப்போது கேரள அரசும் இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க உள்ளது.
இந்த விவகாரம் வருகிற சட்டமன்றத் தேர்தலில் இடது சாரி கட்சிகளின் வெற்றி வாய்ப்புகளை உருவாக்க முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தனிடம் கேட்டபோது, கட்சியின் தலைமையால் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை முன்கூட்டியே அறிவிக்க முடியாது. அதே நேரத்தில், பக்தர்களின் நலன்களைப் பாதுகாக்கும். ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்தும் நிலைப்பாட்டை அரசாங்கம் எடுக்கும் என்று நம்புவதாக கூறினார். மேலும் "இது ஒரு சிக்கலான வழக்கு. தேவைப்படும்போது இந்த விஷயத்தில் சி.பி.எம். தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் 2018-ம் ஆண்டு தீர்ப்பு அறிவிக்கப்பட்டதில் இருந்து மொத்தம் 51 பெண்கள் சபரிமலைக்குள் நுழைந்ததாக 2020 ஆம் ஆண்டில் இடதுசாரி அரசாங்கம் உச்சநீதிமன்றத்திற்குத் தெரிவித்தது. அரசாங்கம் 51 பெண்களின் பெயர்களையும், ஆதார் அட்டை மற்றும் முகவரிகள் உள்ளிட்ட பிற விவரங்களையும் பட்டியலிட்டுள்ளது. பெரும்பாலான பெண்கள் ஆந்திரா, தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் கோவாவைச் சேர்ந்தவர்கள். பெயர்களில் எதுவும் கேரளாவைச் சேர்ந்தவை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
- மகளின் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்தனர்.
- கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இதய வால்வு மற்றும் இரண்டு கண்கள் ஆகியவற்றைச் சேகரித்தனர்.
கேரளாவில் சாலை விபத்தில் உயிரிழந்த 10 மாதக் குழந்தை தனது உறுப்புகள் மூலம் 5 பேரை காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 10 மாத பெண் குழந்தை அலின் ஷெரின் ஆபிரகாம்.
கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி குழந்தை அலின் உடன் தாய், தாத்தா, பாட்டி ஆகியோர் கோட்டயத்திலிருந்து திருவல்லாவுக்கு காரில் செல்லும் வழியில் எதிர் திசையில் இருந்து வந்த மற்றொரு கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
காரில் இருந்த ஷெரினின் தாய், தாத்தா மற்றும் பாட்டி காயமடைந்தனர். படுகாயமடைந்த குழந்தை ஷெரின் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பிப்ரவரி 13 ஆம் தேதி குழந்தை மூளைச் சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
ஆழ்ந்த துயரத்தில் இருந்தபோதிலும், குழந்தையின் பெற்றோர்களான தங்கள் மகளின் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்தனர்.
மருத்துவர்கள் குழந்தையிடமிருந்து கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இதய வால்வு மற்றும் இரண்டு கண்கள் ஆகியவற்றைச் சேகரித்தனர்.
கல்லீரல், திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனையில் உள்ள 6 மாதக் குழந்தைக்குப் பொருத்தப்பட உள்ளது.
சிறுநீரகங்கள், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் உள்ள மற்றொரு குழந்தைக்கு வழங்கப்பட்டது. இதய வால்வு மற்றும் கண்கள், ஸ்ரீ சித்ரா இன்ஸ்டிடியூட் மற்றும் அமிர்தா மருத்துவமனைக்குத் தானமாக வழங்கப்பட்டன.
இதன் மூலம் கேரளாவிலேயே மிகக் குறைந்த வயதில் உடல் உறுப்பு தானம் செய்த பெருமை மறைந்த 10 மாதக் குழந்தை அலின் ஷெரின் ஆபிரகாம்க்கு கிடைத்துள்ளது.
- கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்தனர்.
- இனிமா கொடுத்துப் பார்த்தும் நகை வெளியே வரவில்லை
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மம்பத் புலிக்காலோடி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், உடல் நலம் பாதித்த தனது 2 வயது பெண் குழந்தையை மருத்துவரிடம் காண்பிக்க, நீலம்பூர் பகுதியில் உள்ள தனியார் கிளினிக்கிற்கு சென்றிருந்தார். அப்போது குழந்தை மருத்துவமனையின் வராண்டாவில் விளையாடிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் குழந்தை கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை கிராம் எடையுள்ள தங்க நகையை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய், அந்த பகுதியில் தேடிப்பார்த்தார்.
ஆனால் குழந்தையின் நகை கிடைக்கவில்லை. காணாமல் போன தனது குழந்தையின் நகை குறித்து அங்கிருந்தவர்களிடம் விசாரித்தபோது, இளம்பெண் ஒருவர் குழந்தையை கொஞ்சிக் கொண்டிருந்ததாக கூறினர். இதையடுத்து அந்த பெண்ணிடம் சென்று குழந்தையின் தாய் கேட்டார்.
ஆனால் அவர் சரியாக பதில் கூறவில்லை. ஆனால் அந்த பெண்தான், குழந்தையின் நகையை திருடியிருக்க வேண்டும் என்று அனைவரும் கருதினர். ஆகவே அது குறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, குழந்தையின் தாய் உள்ளிட்டோரால் குற்றம் சாட்டப்பட்ட இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதையடுத்து, போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். அப்போதும் அவர் தனக்கு தெரியாது என்றே கூறினார். இருந்தபோதிலும் அவரின் மீதான சந்தேகம், போலீசாருக்கு விலகவில்லை. ஆகவே அவரை கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்தனர்.
அப்போது காணாமல் போன குழந்தையின் தங்க நகை, இளம்பெண்ணின் வயிற்றுக்குள் இருந்தது தெரிந்தது. அந்த பெண் நீலம்பூர் பகுதியை சேர்ந்த சமீனா (வயது35) என்பது கண்டறியப்பட்டது. கிளினிக்கில் குழந்தையை கொஞ்சுவது போல் நடித்து, குழந்தை கழுத்தில் அணிந்திருந்த நகையை திருடியது தெரியவந்தது.
பின்பு மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக, திருடிய நகையை தனது வாய்க்குள் போட்டு விழுங்கியிருக்கிறார். அது அவரது வயிற்றுக்குள் இருந்தது எக்ஸ்ரேயில் தெரிந்துவிட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். சமீனா வயிற்றுக்குள் இருக்கும் தங்க நகையை வெளியே எடுப்பதற்காக கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்து இனிமா கொடுத்தனர். ஆனால் பல முறை முயற்சி செய்தும், இளம்பெண்ணின் வயிற்றுக்குள் இருந்து தங்க நகை மட்டும் வெளியே வரவில்லை.
இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் போலீசார் தவித்து வருகின்றனர். அதுகுறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்திவருகின்றனர். இனிமா கொடுத்து எடுப்பது எளிமையான விஷயம் என்பதால், அந்த முறையே தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.
- தீபக் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக ஷிம்ஜிதா என்பவர் வீடியோ வெளியிட்டிருந்தார்
- தற்கொலைக்கு தூண்டியதாக வீடியோ பதிவிட்ட ஷிம்ஜிதாவை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த 42 வயதான தீபக் என்பவர், பேருந்தில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, அந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த 16ம் தேதி அன்று, ஒரு பெண் பயணி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியேவில் அரசுப் பேருந்தில் பயணம் செய்தபோது 42 வயது (தீபக்) மதிக்கத்தக்க நபர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.
சுமார் 18 நொடிகள் ஓடும் அந்த வீடியோவில், நெரிசலான பேருந்தில் தீபக்கின் கை அந்தப் பெண்ணின் மீது உரசுவது போலக் காட்சிகள் இருந்தன. இது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி, பல மில்லியன் பார்வைகளைப் பெற்றது.
இந்த வீடியோ வைரலானதால் தீபக் கடும் மன உளைச்சலுக்கு ஆளான தீபக் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து தீபக்கின் குடும்பத்தினர் அந்தப் பெண்ணுக்கு எதிராகப் புகார் அளித்துள்ளதை தொடர்ந்து, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி காவல்துறையினர் அப்பெண் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இதனையடுத்து, உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த ஷிம்ஜிதாவை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் ஷிம்ஜிதாவுக்கு கோழிக்கோடு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. 21 நாட்கள் சிறையில் இருந்ததை கணக்கில் கொண்டு நிபந்தனைகளுடன் கோழிக்கோடு நீதிமன்றம் ஜாமின் அளித்தது.
- ஆன்லைன் டாக்சிகள் மற்றும் தனியார் வாகனங்களை மட்டுமே சாலைகளில் காண முடிந்தது.
- போராட்டம் காரணமாக இன்று நடக்க இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு.
தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தது.
அதன்படி தொழிற் சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று நடந்தது. கேரள மாநிலத்தில் தொழிற்சங்கங்களின் 24 மணி நேர வேலை நிறுத்தம் நள்ளிரவில் தொடங்கியது. ஐக்கிய விவசாயிகள் முன்னணி, விவசாய தொழிலாளர் அமைப்புகள், சி.பி.எம். மற்றும் சி.பி.ஐ. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
கேரள அரசு போக்குவரத்து கழகத்தில் இடதுசாரி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் அரசு பஸ்கள் ஓடவில்லை. அது மட்டுமின்றி தனியார் பஸ்களும் இயங்கவில்லை.
ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் ஆட்டோ, வாடகை கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் இயக்கப்படவில்லை. மேலும் பெரும்பாலான கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன. இதனால் மாநிலம் முழுவதும் பொதுமக்களின் இயல்பு கடுமையாக பாதிக்கப்பட்டது.
கொச்சியை பொருத்த வரை அரசு மற்றும் தனியார் பஸ்கள் எதுவும் ஓடவில்லை. வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் பல இடங்களில் பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஒருசில ஓட்டல்கள் மட்டும் திறந்திருந்தன. ஆன்லைன் டாக்சிகள் மற்றும் தனியார் வாகனங்களை மட்டுமே சாலைகளில் காண முடிந்தது.
திருவனந்தபுரம் தம்பானூர் பஸ் நிலையத்தில் இருந்தும் எந்த பஸ்களும் இயக்கப்படவில்லை. அங்கு ஏராளமான அரசு பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. வேலைநிறுத்த போராட்டம் தொடங்குவதற்கு முன்பு புறப்பட்ட சில பஸ்கள் மட்டும் இன்று அதிகாலை பஸ் நிலையத்திற்கு வந்தன. அதன்பிறகு அந்த பஸ்கள் அங்கேயே நிறுத்தப்பட்டன.
திருவனந்தபுரம், கொச்சியை போன்று கோழிக்கோடு உள்ளிட்ட மாநிலத்தின் பல இடங்களிலும் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது. மருத்துவ சிகிச்சைக்காக வெளி யூர்களில் இருந்து ரெயில்களில் திருவனந்தபுரத்திற்கு வந்த நோயாளிகள் பலர், மருத்துவமனைகளுக்கு செல்ல வாகனம் கிடைக்கா மல் தவித்தனர்.
ரெயில் நிலையத்தின் முன் தவித்தபடி நின்ற பல நோயாளிகளை, மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்சு வாகனத்தை போலீசார் ஏற்பாடு செய்து கொடுத்தனர். வேலை நிறுத்த போராட்டம் காரணமாக இன்று நடக்க இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மாணவ-மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் பஸ் நிலையங்களில் தவித்த படி நின்றனர்.
- தேங்காய் எண்ணெயை பயன்படுத்தினார். ஆனால் அது பலனளிக்கவில்லை.
- பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு செல்போன் ஸ்கிரீன் கார்டில் இருந்து குட்டி பாம்பு மீட்கப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தளிப்பரம்பா மார்க்கெட் சாலையில் ஒரு செல்போன் கடை செயல்பட்டு வருகிறது. அந்த கடையில் செல்போன்களுக்கு தேவையான ஸ்கிரீன் கார்டு உள்ளிட்ட பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்தநிலையில் அந்த கடைக்கு வாடிக்கையாளர் ஒருவர், தனது செல்போனுக்கு ஸ்கிரீன் கார்டு ஒட்டுவதற்கு சென்றார். அப்போது கடை ஊழியர் ஸ்கிரீன் கார்டுகள் வைக்கப்பட்டிருந்த மேசை டிராயரை திறந்தார். அப்போது உள்ளே ஒரு குட்டி விரியன் பாம்பு உயிருடன் கிடந்தது.
அந்த பாம்பு அங்கிருந்த ஸ்கிரீன் கார்டில் இருந்த பசையில் சிக்கி அசைய முடியாமல் கிடந்தது. இதனை பார்த்த கடை ஊழியர்கள் மற்றும் கடைக்கு வந்திருந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். அது குறித்து தளிப்பரம்பாவில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் பாம்பு இருந்த செல்பேன் கடைக்கு வனத்துறையினர் வந்தனர். அவர்களுடன் பாம்பு பிடிப்பவர் ஒருவரும் வந்தார். அவர் செல்போன் ஸ்கிரீன் கார்டில் சிக்கியிருந்த குட்டி பாம்பை காயமடைந்து விடாமல் மீட்க நடவடிக்கை எடுத்தார்.
இதற்காக தேங்காய் எண்ணெயை பயன்படுத்தினார். ஆனால் அது பலனளிக்கவில்லை. செல்போன் ஸ்கிரீன் கார்டில் இருந்த பசையில் பாம்பின் உடல் நன்கு ஒட்டியிருந்ததால் அதிலிருந்து பாம்பை பிரித்து எடுக்க முடியவில்லை. இதையடுத்து அந்த பாம்பு, அது சிக்கியிருந்த செல்போன் ஸ்கிரீன் கார்டுடன் தளிப்பரம்பா வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு செல்போன் ஸ்கிரீன் கார்டில் இருந்து குட்டி பாம்பு மீட்கப்பட்டது. செல்போன் ஸ்கிரீன் கார்டில் இருந்து மிகவும் கவனமாக பிரிக்கப்பட்டதால், பாம்புக்கு உடலில் எந்த காயமும் ஏற்படவில்லை. இதையடுத்து அந்த பாம்பை வனத்துறையினர், காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.
செல்போன் ஸ்கிரீன் கார்டில் இருந்த பசையில் சிக்கி உயிருக்கு போராடிய குட்டி பாம்பை காப்பாற்ற வனத்துறையினர் எடுத்த நடவடிக்கையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
- கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் மாற்றுத்திறனாளிகள் நீதித்துறை சேவையில் சேர அனுமதி அளித்தது.
- இந்த தீர்ப்பால் ஈர்க்கப்பட்டு, நீதித்துறை சேவைத் தேர்வுக்குத் தயாராக முடிவு செய்தார்.
கேரளாவின் முதல் பார்வை மாற்றுதிறனாளி சிவில் நீதிபதி என்ற பெருமையை 24 வயதான தன்யா நாதன் பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் மாற்றுத்திறனாளிகள் நீதித்துறை சேவையில் சேர அனுமதி அளித்தது. இதையடுத்து கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த பார்வைக் குறைபாடுள்ள சட்டப் பட்டதாரி தன்யா நாதன், இந்த தீர்ப்பால் ஈர்க்கப்பட்டு, நீதித்துறை சேவைத் தேர்வுக்குத் தயாராக முடிவு செய்தார்.
தற்போது, அவர் மாற்றுத்திறனாளிகள் பிரிவின் கீழ் சிவில் நீதிபதி (ஜூனியர் பிரிவு) தேர்வில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இதன்மூலம் கேரளாவின் முதல் பார்வை குறைபாடுள்ள நீதிபதியாக மாற உள்ளார்.
ப்ரெய்லி முறையில் சட்டப் படிப்பை படித்துள்ள இவருக்கு விரைவில் பணி நியமனம் வழங்கப்பட உள்ளது
- தங்கம் திருட்டு விவகாரத்தில் கள்ள பணம் மோசடி நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் அமலாக்கத்துறையினர் விசாரணையில் இறங்கி உள்ளனர்.
- பழைய கொடி மரத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ள துவார பாலகர் சிலையில் பூசப்பட்ட தங்க முலாம்களை சுத்தப்படுத்தி மீண்டும் பொருத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்காக அந்த சிலைகள் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு சுத்தப்படுத்தும் பணி முடிந்து மீண்டும் சபரிமலை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் பணியின்போது துவாரபாலகர் சிலையில் உள்ள தங்கம் திருடப்பட்டதாக புகார் எழுந்தது. கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை (எஸ்.ஐ.டி.) கேரள ஐகோர்ட்டு நியமித்தது.
இந்தக் குழுவினர் தீவிர விசாரணை நடத்தி துவார பாலகர் சிலைகளை முலாம் பூச எடுத்துச் சென்ற உன்னி கிருஷ்ணன் போற்றியை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் கர்நாடகாவை சேர்ந்த நகை வியாபாரி கோவர்த்தன் மற்றும் சபரிமலை கோவில் தேவசம்போர்டு முன்னாள் நிர்வாகிகள் உள்பட பலரை கைது செய்தது. இதற்கிடையில் தங்கமுலாம் பூசப்பட்ட பிறகு துவாரபாலகர் சிலைகள், சென்னையில் உள்ள நடிகர் ஜெயராம் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட தகவல் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு கிடைத்தது. இது தொடர்பான படங்களும் வெளிவந்தன. இதனை தொடர்ந்து நடிகர் ஜெயராமுக்கு தங்கம் கடத்தல் சம்பவத்தில் தொடர்பு இருக்கலாமா? என்ற சந்தேகம் எழுந்தது.
இது தொடர்பாக விளக்கம் அளித்த நடிகர் ஜெயராம், உனனிகிருஷ்ணன் போற்றியை எனக்கு தெரியும். கோவில் தங்க நகைகளை வீட்டிற்கு கொண்டு வந்தது உண்மை தான். அதனை வீட்டில் வைத்து பூஜை செய்தால், செழிப்பை தரும் என்று உன்னி கிருஷ்ணன் போற்றி கூறியதால், தனது வீட்டில் வைத்து பூஜை செய்ததாகவும், கோவிலில் நடைபெற்ற பூஜையிலும் தான் பங்கேற்றதாகவும் தெரிவித்தார். மேலும் உன்னியிடம் இருந்து நான் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு நோட்டீசு அனுப்பியிருந்தது. தொடர்ந்து 2 வாரங்களுக்கு முன்பு அந்த குழுவினர், சென்னையில் உள்ள நடிகர் ஜெயராம் வீட்டுக்குச் சென்று அவரிடம் வாக்குமூலம் பெற்றது. அப்போது ஜெயராம், ஏற்கனவே தான் தெரிவித்திருந்ததை அவர்களிடம் தெரிவித்தாராம்.
இந்த நிலையில் தங்கம் திருட்டு விவகாரத்தில் கள்ள பணம் மோசடி நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் அமலாக்கத்துறையினர் விசாரணையில் இறங்கி உள்ளனர். சென்னையில் துவார பாலகர் சிலையை தங்க முலாம் பூச கொண்டு செல்லப்பட்ட நிறுவனம் மற்றும் கைது செய்யப்பட்ட திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் நிர்வாகிகள் வீடுகள் போன்ற பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையிலும் ஈடுபட்டனர். இதனால் தங்கம் திருட்டு வழக்கு விறுவிறுப்பான கட்டத்தை எட்டியது.
இந்த நிலையில் நடிகர் ஜெயராமிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. இதை தொடர்ந்து அவருக்கு நோட்டீசு அனுப்பி உள்ளது. அடுத்த செவ்வாய்க்கிழமை (17-ந் தேதி) அமலாக்கத்துறை முன்பு ஆஜராகும்படி அதில் கூறப்பட்டுள்ளது. தங்கம் திருட்டு வழக்கில் சிறப்பு புலனாய்வு துறையை தொடர்ந்து அமலாக்கத்துறையும் நடிகர் ஜெயராமுக்கு நோட்டீசு அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சூழலில் தங்கம் திருட்டு வழக்கில் தனது விசாரணை அறிக்கையை கேரள ஐகோர்ட்டில் சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்துள்ளது. அதில், மேலும் 3 பேருக்கு வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் சபரிமலையில் தங்கம் திருடப்பட்டது என்பதை விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் உறுதி செய்த போதும், எவ்வளவு தங்கம் திருடப்பட்டது? இப்போது இருப்பது ஒரிஜினல் தங்கம் தானா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் சபரிமலை கோவிலில் மீண்டும் ஆய்வு நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு கேரள ஐகோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில் சபரிமலையில் கடந்த 2017-ம் ஆண்டு புதிய கொடிமரம் அமைக்கப்பட்டதிலும் முறைகேடு நடந்திருப்பதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு விஜிலன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பழைய கொடிமரத்திற்கு சேதம் ஏற்பட்டதாக கூறி புதிய கொடிமரம் அமைக்க முடிவு செய்யபட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பழைய கொடி மரத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான அறிக்கை கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை பரிசீலித்த ஐகோர்ட்டு, புதிய கொடிமரம் அமைக்கப்பட்டது குறித்து விரிவான விசாரணை நடத்த விஜிலன்சு துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இதில் முறைகேடு நடந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் அதுபற்றியும் சிறப்பு புலனாய்வுக் குழு கூடுதல் விசாரணை நடத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.






