என் மலர்
பீகார்
- பீகார் பாட்னாவின் புதிதாக மரைன் டிரைவ் திறக்கப்பட்டது.
- ஒரு 'பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவரால்' மட்டுமே முடியும்.
பீகார் பாட்னாவின் புதிதாக திறக்கப்பட்ட மரைன் டிரைவ் சாலையில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) தலைவர் தேஜஸ்வி யாதவ், சில இளைஞர்களுடன் சேர்ந்து நடனமாடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
16 நாள் நடைபெற்ற 'வாக்காளர் அதிகார யாத்திரை' முடிந்த பிறகு, நள்ளிரவில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், தேஜஸ்வி யாதவ் பாலிவுட் பாடல்களுக்கு நடனமாடி இளைஞர்களுடன் ரீல்ஸ் எடுப்பதை காணலாம்.
இந்த வீடியோவுக்கு பாஜக கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் அஜய் அலோக் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நள்ளிரவில் சாலையில் நடனமாடி ரீல்கள் உருவாக்குவது ஒரு 'பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவரால்' மட்டுமே முடியும் என்று கிண்டலாக தெரிவித்துள்ளார்.
மேலும், " ரீல்கள் உருவாக்கும்போது சாலை விபத்துகளில் எத்தனை உயிர்கள் பலியாகியுள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? இது அராஜகத்தை ஊக்குவிக்கும் செயல். ஜே.பி.பாதை ஒரு சுற்றுலாத் தலம் அல்ல. பீகார் காவல்துறை இதைக் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் மாநிலம் முழுவதும் சாலைகள் ரீல்களால் நிரம்பிவிடும்" எச்சரித்துள்ளார்.
- அவற்றில் சுபம் என்பவருக்கு சொந்தமான பல்சர் 220 பைக்கும் இருந்தது.
- இந்த விஷயம் காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவின் கவனத்திற்கு வந்தது.
பீகாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை வலியுறுத்தி, வாக்கு திருட்டை கண்டித்து, பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆகஸ்ட் 17- ந் தேதி முதல் செப்டம்பர் 1 வரை 16 நாள் 'வாக்காளர் அதிகார யாத்திரை' மேற்கொண்டார்.
இடையில் 27 ஆம் தேதி பீகாரின் தர்பங்காவில் ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் ஆகியோர் தொண்டர்கள் புடை சூழ புல்லட் பைக் பேரணி நடத்தினர்.
பாதுகாப்பு ஊழியர்கள் உள்ளூரில் கிடைக்கும் சில பைக்குகளை பேரணிக்காக எடுத்துச் சென்றிருந்தனர். அவற்றில் சுபம் என்ற இளைஞருக்கு சொந்தமான பல்சர் 220 பைக்கும் இருந்தது.
பேரணிக்கு பின் பிறகு பைக் திருப்பித் தரப்படும் என்று பாதுகாப்பு ஊழியர்கள் உறுதியளித்ததாக சுபம் கூறினார்.
இருப்பினும், பேரணி முடிந்ததும், தனது பைக்கை எடுத்துச் சென்ற பாதுகாப்பு ஊழியர்களை காணவில்லை
பேரணிக்கு சென்ற மற்ற பைக்குகள் திரும்பியபோதிலும், அவரது வாகனம் மட்டும் கிடைக்காததால் அவர் கவலையில் ஆழ்ந்தார்.
இந்த விஷயம் உள்ளூர் காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவின் கவனத்திற்கு வந்தது. இதைத்தொடர்ந்து சுபம் பாட்னாவிற்கு அழைக்கப்பட்டார்.
அங்கு, 'வாக்காளர் அதிகார யாத்திரை'யின் நிறைவு விழாவில், ராகுல் காந்தி புதிய பைக் ஒன்றை சுபம்க்கு பரிசளித்தார்.
சாவியை ராகுலிடம் இருந்து பெற்றுக்கொண்ட சுபம் அதே பழைய பைக் மாடலை பரிசாக பெற்றதில் மகிழ்ச்சி தெரிவித்தார்.
- பீகாரில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்றார்.
- அப்போது தனது தாயின் நினைவுகள் குறித்து பிரதமர் மோடி உணர்ச்சிகரமாகப் பேசினார்.
பாட்னா:
பீகாரில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாக்காளர் உரிமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். தர்பங்காவில் யாத்திரையின்போது சில காங்கிரஸ் தொண்டர்கள் பிரதமர் மோடி மற்றும் அவரது தாயாருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தினர். இச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதற்கிடையே, பீகாரில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
அம்மா தான் உலகம். அம்மா தான் எங்கள் சுயமரியாதை. பாரம்பரியம் நிறைந்த இந்த பீகாரில் சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்வை நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. எனது தாயை அவமதித்துவிட்டனர். ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சியினர் என் தாயை மட்டுமல்ல, இந்த நாட்டின் தாய்மார்களையும், சகோதரிகளையும் அவமதித்து விட்டனர்.
என் இதயத்தில் எவ்வளவு வலி இருக்கிறதோ அந்த வலி பீகார் மக்களிடமும் உள்ளது. அரசியலில் எந்தத் தொடர்பும் இல்லாத எனது தாயாரை ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சியினர் ஏன் விமர்சனம் செய்தனர்? உங்களை போன்ற கோடிக்கணக்கான தாய்மார்களுக்கு சேவை செய்ய என்னை விட்டுப் பிரிந்து இருந்தார்.

இப்போது என் அம்மா உயிருடன் இல்லை என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். சில காலத்திற்கு முன்பு 100 வயதை நிறைவு செய்த பிறகு அவர் நம் அனைவரையும் விட்டுச் சென்றார். அரசியலில் எந்த தொடர்பும் இல்லாத என் அம்மாவை ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சியினர் அவமதித்து உள்ளனர். சில தாய்மார்களின் கண்களில் கண்ணீரை என்னால் பார்க்க முடிகிறது. இது மிகவும் வேதனையானது. என் அம்மா மிகவும் வறுமையில் என்னை வளர்த்தார். அவர் தனக்கென ஒரு புதிய சேலையை கூட வாங்க மாட்டார். எங்கள் குடும்பத்திற்காக ஒவ்வொரு பைசாவையும் சேமிப்பார் என தெரிவித்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி உணர்ச்சி பொங்க பேசியதைக் கேட்ட மாநில தலைவர் கண்ணீர் சிந்தினார். பின்னால் அமர்ந்திருந்த பெண்கள் சிலரும் கண்ணீர் சிந்தினர்.
- இளைஞர் ஒருவர் மின் கம்பத்தில் ஏறி மின் வயர்களை ஒவ்வொன்றாக கட் செய்கிறார்.
- இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் நீண்ட நேரமாக அழைத்தும் காதலியின் செல்போன் பிஸியாகவே இருந்ததால் இளைஞர் ஒருவர் கோபத்தில், காதலியின் கிராமத்திற்கு செல்லும் மின்சார ஒயர்களை ஒட்டுமொத்தமாக துண்டித்த சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இளைஞர் ஒருவர் கையில் மின் வயரை கட் செய்யும் கருவியுடன் மின் கம்பத்தில் ஏறி மின் வயர்களை ஒவ்வொன்றாக கட் செய்கிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
2022 ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தில் எலக்ட்ரீசியன் ஒருவர் தனது காதலியை அடிக்கடி சந்திக்க ஒட்டுமொத்த கிராமத்தின் மின்சாரத்தை துண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை கண்டுபிடித்த கிராம மக்கள் அந்த ஜோடிக்கு திருமணம் செய்து வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- வாக்கு திருட்டு முழக்கம் எல்லா இடத்திலும் எதிரொலிக்கிறது.
- பாஜகவினரே, ஹைட்ரஜன் குண்டு வந்து கொண்டிருக்கிறது. தயாராக இருங்கள்.
பீகார் மாநிலத்தில் 65 வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்தி பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
பீகார் மக்களின் வாக்கு அதிகாரம் என்ற பெயரில் மக்களிடம் இந்த விவகாரத்தை எடுத்துச் செல்வதற்கான ராகுல் காந்தி கடந்த இரண்டு வாரமாக பேரணி மேற்கொண்டு வருகிறார்.
இன்று நடைபெற்ற பேரணியில் ராகுல் காந்தி பேசும்போது கூறியதாவது:-
அரசியலமைப்பை அவர்கள் (பாஜக) கொலை செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதனால்தான் நாங்கள் பேரணி மேற்கொண்டோம். எங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. மக்கள் மிகப்பெரிய அளவில் திரண்டு வாக்கு திருட்டு, நாற்காலியில் இருந்து விலகு (ote chor, gaddi chhor) என்ற முழக்கத்தை வெளிப்படுத்தினர்.
வாக்கு திருட்டு முழக்கம் எல்லா இடத்திலும் எதிரொலிக்கிறது. இது தற்போது சீனாவிலும் எதிரொலிக்கிறது (தற்போது பிரதமர் மோடி சீனாவில் உள்ளதால், கிண்டலடிக்கும் வகையில்). நான் பாஜக மக்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் அணுகுண்டை விட பெரியதை பற்றி கேள்வி பட்டுள்ளீர்களா?. அது ஹைட்ரஜன் குண்டு. பாஜகவினரே, ஹைட்ரஜன் குண்டு வந்து கொண்டிருக்கிறது. தயாராக இருங்கள். நான் உத்தரவாதம் அளிக்கிறேன். ஹைட்ரஜன் குண்டுக்குப் பிறகு நரேந்திர மோடி தனது முகத்தைக் காட்ட முடியாது.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் பாஜக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.பி.யுமான ரவி சங்கர் பிரசாத் கூறுகையில் "ராகுல் காந்தியின் பேச்சை நான் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ கேட்கும் போதெல்லாம், அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைப் புரிந்துகொள்ள நேரம் எடுக்கும்.

இன்று அவர், அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு எனப் பேசுகிறார். அணுகுண்டுக்கும் ஹைட்ரஜன் குண்டுக்கும் தேர்தலுக்கும் என்ன தொடர்பு?. ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக தன்னை ஏன் இழிவுபடுத்திக் கொள்கிறார். ராகுல் காந்தி பொறுப்பற்றவர் என்பதை நாடு புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.
பாராளுமன்ற தேர்தில் பலவேறு தொகுதியில் வாக்கு திருடப்பட்டதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், அதை வெளியிடப்போவதாகவும் ராகுல் காந்தி தொடர்ந்து கூறி வருகிறார்.
- வாக்கு திருட்டு மூலம் மோடி பீகார் தேர்தலில் வெற்றிபெற முயற்சி செய்து கொண்டிருக்கிறார்
- இன்னும் சில மாதங்களில் பீகாரில் இரட்டை என்ஜின் அரசு அதிகாரத்தில் இருக்காது.
பீகாரில் நடைபெற்ற வாக்காளர்கள் அதிகாரம் பேரணியில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வாக்கு திருட்டு மூலம் மோடி பீகார் தேர்தலில் வெற்றிபெற முயற்சி செய்து கொண்டிருக்கிறார். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவில்லை என்றால், மோடி மற்றும் அமித் ஷா உங்களை அடக்கி வைத்து விடுவார்கள்.
மோடி வாக்கு திருட்டு, பைசா திருட்டு, வங்கிகளை கொள்கை அடிப்பவர்களை பாதுகாக்கும் திருட்டு போன்ற திருட்டு பழக்கம் கொண்டவர்.
இன்னும் சில மாதங்களில் பீகாரில் இரட்டை என்ஜின் அரசு அதிகாரத்தில் இருக்காது. ஏழை, பெண்கள், தலித்கள், பிற்படுத்தப்பட்டோருக்கான அரசு அமையும்.
இவ்வாறு கார்கே பேசினார்.
- ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடந்து வருகிறது.
- இந்திய அணி 2வது லீக் போட்டியில் ஜப்பானை வெற்றி பெற்றது.
பாட்னா:
8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடந்து வருகிறது. ஏ பிரிவில் இந்தியா, ஜப்பான், சீனா, கஜகஸ்தான் அணிகள் இடம்பிடித்துள்ளன. இந்தியா தனது முதல் போட்டியில் சீனாவை 4-3 என வீழ்த்தியது.
இந்நிலையில், இந்திய அணி 2வது லீக் போட்டியில் ஜப்பான் அணியுடன் இன்று மோதியது.
முதல் பாதியில் இந்திய அணி 2 கோல்களை அடித்து 2-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் ஜப்பான் 2 கோல்கள் அடித்தது. இந்தியா மேலும் ஒரு கோல் அடித்து 3-2 என வெற்றி பெற்றது.
ஹர்மன்பிரீத் சிங் 2 கோலும், மன்தீப் சிங் ஒரு கோலும் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.
இதன்மூலம் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.
- SIRஇல் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், எனவே அதை மீண்டும் நடத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
- எங்களிடம் அவர்களின் ரசீதுகளும் உள்ளன. இப்போது இந்த உண்மையை மறுக்க முடியாது.
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மூலம் 65 லட்சம் பேரை நீக்கி கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டது தேர்தல் ஆணையம்.
தேர்தலுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை பாஜகவுக்கு சாதமான தேர்தல் ஆணையத்தின் நகர்வு என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இதுதொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்நிலையில் SIRஇல் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், எனவே அதை மீண்டும் நடத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா பேசுகையில், "எந்தவொரு அரசியல் கட்சியிடமிருந்தும் எந்தப் புகாரும் வரவில்லை என தேர்தல் ஆணையம் தொடர்ந்து கூறி வருகிறது. உண்மை என்னவென்றால், SIR-ல் முறைகேடுகள் தொடர்பாக காங்கிரஸ் 89 லட்சம் புகார்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது.
எங்கள் வாக்குச்சாவடி முகவர்கள் புகார் அளிக்கச் சென்றபோது, தேர்தல் ஆணையம் அவர்களின் புகார்களை நிராகரித்தது. அரசியல் கட்சிகளால் அல்ல, தனிநபர்களால் மட்டுமே புகார்களை ஏற்க முடியும் என்று தேர்தல் ஆணையம் எங்கள் வாக்குச்சாவடி முகவர்களிடம் கூறியது.
பீகாரில் உள்ள 90,540 வாக்குச்சாவடிகளில் இருந்து 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்வு காரணமாக 25 லட்சம் வாக்காளர்களும், உயிருடன் இல்லாததால் 22 லட்சம் பேரின் பெயர்களும் நீக்கப்பட்டன. கொடுக்கப்பட்ட முகவரிகளில் 9,70,000 வாக்காளர்களின் இல்லாததால் போனதால் நீக்கப்பட்டதாக ஆணையம் கூறுகிறது.
100க்கும் மேற்பட்ட பெயர்கள் நீக்கப்பட்ட மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 20,368 ஆகும். மேலும் 200க்கும் மேற்பட்ட பெயர்கள் நீக்கப்பட்ட வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1,988 ஆகும். 7,613 வாக்குச்சாவடிகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமான பெண்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
635 வாக்குச்சாவடிகளில் இடம்பெயர்ந்தோர் பிரிவில் நீக்கப்பட்ட பெயர்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் என்று அவர் கூறினார். இந்த புள்ளிவிவரங்களை சரிபார்ப்பது மிகவும் முக்கியம். ஒரே வாக்காளருக்கு இரண்டு EPIC எண்கள் வழங்கப்பட்ட பல வழக்குகள் இருக்கின்றன.
எங்களிடம் அவர்களின் ரசீதுகளும் உள்ளன. இப்போது இந்த உண்மையை மறுக்க முடியாது. நாங்கள் வழங்கிய தரவுகள் தேர்தல் ஆணையத்தால் உறுதிப்படுத்தப்பட்டு சரிபார்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த தவறுகளை சரிசெய்ய வீடு வீடாகச் சென்று மீண்டும் சரிபார்க்க வேண்டிய அவசியம் உள்ளது" என்று தெரிவித்தார்.
- பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த 17-ந் தேதி சாசாராம் பகுதியில் யாத்திரை தொடங்கினார்.
- ராகுல் காந்தியின் 16 நாட்கள் யாத்திரை நாளையுடன் முடிவடைகிறது.
பீகாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை உறுதி செய்யும் வகையில், 'வாக்காளர் உரிமை' என்ற பெயரில் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த 17-ந் தேதி சாசாராம் பகுதியில் யாத்திரை தொடங்கினார்.
ராகுல் காந்தியுடன் ராஷ்டீரிய ஜனதாதள தலைவரும், பீகார் முன்னாள் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் உடன் சென்றார்.
வாகனங்கள், மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்று விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் ராகுல் காந்தி சந்தித்து பேசினார். யாத்திரையின்போது வாக்கு திருட்டு தொடர்பாக மத்திய அரசையும், தேர்தல் ஆணையத்தையும் அவர் கடுமையாக விமர்சனம் செய்தார்.
ராகுல் காந்தியின் பேரணியில் பிரியங்கா, தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக் குமார், உத்தரபிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் இணைந்து இருந்தனர்.
இதற்கிடையே ராகுல் காந்தியின் 16 நாட்கள் யாத்திரை நாளையுடன் முடிவடைகிறது.
பீகாரில் உள்ள 20 மாவட்டங்களில் 1,300 கிலோ மீட் டர் தூரம் பயணம் மேற்கொண்ட அவரது யாத்திரை பாட்னாவில் நிறைவடைகிறது. இறுதி நாள் யாத்திரையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
நாளைய பேரணி நிறைவில் மேற்கு வங்காள முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அவரும் அபிஷேக் பானர்ஜியும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கிரிக்கெட் வீரரும், எம்.பி.யுமான யூசுப் பதான், உத்தரபிரதேச தலைவர் லலிதேஷ் திரிபாதி ஆகியோர் பாட்னா நிறைவு பேரணியில் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- பீகாரில் ராகுல் காந்தி வாக்காளர் உரிமை பேரணி மேற்கொண்டுள்ளார்.
- சில நாட்களுக்கு முன்பு ராகுல் காந்தியின் பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
பீகாரில் வாக்கு திருட்டுக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாக்காளர் உரிமை பேரணி மேற்கொண்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு ராகுல் காந்தியின் பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். தர்பங்காவில் திறந்தவெளி ஜீப்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணியாக சென்றார். பேரணியில் தி.மு.க. எம்.பி. கனிமொழி, பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்நிலையில், இன்று ராகுல் காந்தியின் வாக்காளர் உரிமை பேரணியில் உத்தரபிரதேச எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று பங்கேற்றார்.
இந்த பேரணியில் பேசிய அகிலேஷ் யாதவ், "வாக்காளர் உரிமை பேரணியில்சேர நான் இங்கு வந்துள்ளேன். யாத்திரையை ஆதரித்ததற்காக பீகார் மக்களை நான் வாழ்த்த விரும்புகிறேன். பீகாரின் குரல் நாடு முழுவதும் ஒலிக்கிறது. இந்த முறை பாஜக பீகாரிலிருந்து வெளியேறப் போகிறது" என்று தெரிவித்தார்.
- பயங்ரவாதிகளை தேடும் வேட்டையில் பாதுகாப்பு படையினரும், மாநில போலீசாரும் ஈடுபட்டு உள்ளனர்.
- பயங்கரவாதிகளை பிடிக்கும் பணியில் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் முடுக்கிவிடப்பட்டு உள்ளனர்.
பயங்கரவாதிகளை பிடிக்கும் பணியில் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் முடுக்கிவிடப்பட்டு உள்ளனர்.
பீகாரில் 3 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளனர். இவர்கள் பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஜெய்ஸ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் ஆவர். அவர்கள் ராவல்பிண்டியை சேர்ந்த ஹஸ்னைன் அலி, உமர்கோட்டை சேர்ந்த அடில் உசேன் மற்றும் பஹவல்பூரை சேர்ந்த முகமது உஸ்மான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த பயங்கரவாதிகள் 3 பேரும் ஆகஸ்டு 2-வது வாரத்தில் நேபாள தலைநகர் காட்மாண்டுவை அடைந்துள்ளனர். அதன்பிறகு கடந்த வாரம் நேபாள எல்லை வழியாக பீகார் மாநிலத்துக்குள் ஊடுருவியதாக உளவுத்துறை எச்சரித்து உள்ளது.
உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து பீகார் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு பயங்ரவாதிகளை தேடும் வேட்டையில் பாதுகாப்பு படையினரும், மாநில போலீசாரும் ஈடுபட்டு உள்ளனர்.
பீகாரில் உள்ள சோதனை சாவடிகள் அனைத்திலும் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். பயங்கரவாதிகள் நாசவேலையில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
பயங்கரவாதிகளை பிடிக்கும் பணியில் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் முடுக்கிவிடப்பட்டு உள்ளனர்.
இந்திய - நேபாள எல்லைப்பகுதியிலும், கீமாஞ்சல் மாவட்டத்திலும் பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு உள்ளனர். மதுபானி, சீதாமர்கி, சுபால், அராரியா, கிழக்கு சம்பாரன் மற்றும் மேற்கு சம்பாரன் ஆகிய மாவட்டங்கள் உள்ளிட்ட எல்லை பகுதிகளில் ரோந்து பணிகள் நடந்து வருகிறது.
பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. எனவே தேர்தலை சீர்குலைக்கும் நோக்கத்தில் அவர்கள் ஊடுருவி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து அவர்களை பிடிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
- அம்பேத்கர் நமக்கு வழங்கிய அரசியலமைப்பு ஒரு புனித நூல்.
- வரும் காலத்தில் பாராளுமன்றம், அரியானா மற்றும் பிற மாநிலங்களிலும் வாக்கு திருட்டுக்கான ஆதாரத்தை வழங்குவோம்.
பாட்னா:
பீகாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை உறுதி செய்யும் வகையில், 'வாக்காளர் உரிமை' என்ற பெயரில் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த 17- ந் தேதி சாசாராம் பகுதியில் யாத்திரை தொடங்கினார்.
சீதாமர்ஹி பகுதியில் இன்று நடைபெற்ற வாக்குரிமை பேரணியில் ராகுல் காந்தி பேசியதாவது:-
வாக்காளர் உரிமைக்கான இந்தப் பயணத்தில் நீங்கள் உங்கள் முழு பலத்தையும் செலுத்தியுள்ளீர்கள். சிறு குழந்தைகள் வருகிறார்கள், அவர்கள் என் காதில் நரேந்திர மோடி வாக்குகளை திருடுகிறார் என்று சொல்கிறார்கள்.
பீகாரில் தேர்தலை திருட முயற்சிக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியும். இங்குள்ள மக்கள் புத்திசாலிகள், எச்சரிக்கையானவர்கள். பீகாரில் ஒரு வாக்கு கூட திருட விட மாட்டார்கள் என்பதை பா.ஜ.க.வும், தேர்தல் ஆணையமும் அறிந்து கொள்ள, வாக்காளர் உரிமை யாத்திரையை இங்கு தொடங்கியுள்ளோம்.
உங்கள் குரலை அடக்க விரும்புவதால் ஏழைகளின் வாக்குகளை திருடுகிறார்கள், இந்த மேடையில் இருந்து நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன், அவர்களால் உங்கள் குரலை ஒருபோதும் அடக்க முடியாது. நாங்கள் உங்களுடன் நிற்கிறோம்.
அம்பேத்கர் நமக்கு வழங்கிய அரசியலமைப்பு ஒரு புனித நூல். அது நமது நாட்டின் சிந்தனை மற்றும் சித்தாந்தத்தை கொண்டது.
அரசியலமைப்பு தலித்துகள் கண்ணியத்துடனும், சுய மரியாதையுடனும் வாழும் உரிமையை வழங்கியுள்ளது. ஆனால் பா.ஜ.க. இந்த உரிமையை உங்களிடம் இருந்து பறிக்க விரும்புகிறது.
பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்குகளில் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், ஏழை மக்களின் பெயர்கள் அடங்கும். பணக்காரர்கள் பெயர்கள் அல்ல.
கர்நாடகாவில், பா.ஜ.க. 'வாக்கு திருட்டு' செய்திருப்பதை நாங்கள் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளோம். அதற்கு முன்பு பா.ஜ.க.வும், தேர்தல் ஆணையமும் வாக்குகளைத் திருடுவதாக நான் ஒருபோதும் சொல்லவில்லை. பா.ஜ.க.வினர் கவனமாகக் கேட்க வேண்டும். நாங்கள் ஒரு சட்டசபைக்கான ஆதாரத்தை மட்டுமே வழங்கியுள்ளோம்.
வரும் காலத்தில் பாராளுமன்றம், அரியானா மற்றும் பிற மாநிலங்களிலும் 'வாக்கு திருட்டு'க்கான ஆதாரத்தை வழங்குவோம். வாக்குகளை திருடுவதன் மூலம் மட்டுமே பா.ஜ.க. -ஆர்.எஸ்.எஸ். தேர்தல்களில் வெற்றி பெறுகின்றன என்பதை நாங்கள் நிரூபிப்போம்.
இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.






