என் மலர்
பீகார்
- SIRஇல் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், எனவே அதை மீண்டும் நடத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
- எங்களிடம் அவர்களின் ரசீதுகளும் உள்ளன. இப்போது இந்த உண்மையை மறுக்க முடியாது.
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மூலம் 65 லட்சம் பேரை நீக்கி கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டது தேர்தல் ஆணையம்.
தேர்தலுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை பாஜகவுக்கு சாதமான தேர்தல் ஆணையத்தின் நகர்வு என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இதுதொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்நிலையில் SIRஇல் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், எனவே அதை மீண்டும் நடத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா பேசுகையில், "எந்தவொரு அரசியல் கட்சியிடமிருந்தும் எந்தப் புகாரும் வரவில்லை என தேர்தல் ஆணையம் தொடர்ந்து கூறி வருகிறது. உண்மை என்னவென்றால், SIR-ல் முறைகேடுகள் தொடர்பாக காங்கிரஸ் 89 லட்சம் புகார்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது.
எங்கள் வாக்குச்சாவடி முகவர்கள் புகார் அளிக்கச் சென்றபோது, தேர்தல் ஆணையம் அவர்களின் புகார்களை நிராகரித்தது. அரசியல் கட்சிகளால் அல்ல, தனிநபர்களால் மட்டுமே புகார்களை ஏற்க முடியும் என்று தேர்தல் ஆணையம் எங்கள் வாக்குச்சாவடி முகவர்களிடம் கூறியது.
பீகாரில் உள்ள 90,540 வாக்குச்சாவடிகளில் இருந்து 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்வு காரணமாக 25 லட்சம் வாக்காளர்களும், உயிருடன் இல்லாததால் 22 லட்சம் பேரின் பெயர்களும் நீக்கப்பட்டன. கொடுக்கப்பட்ட முகவரிகளில் 9,70,000 வாக்காளர்களின் இல்லாததால் போனதால் நீக்கப்பட்டதாக ஆணையம் கூறுகிறது.
100க்கும் மேற்பட்ட பெயர்கள் நீக்கப்பட்ட மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 20,368 ஆகும். மேலும் 200க்கும் மேற்பட்ட பெயர்கள் நீக்கப்பட்ட வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1,988 ஆகும். 7,613 வாக்குச்சாவடிகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமான பெண்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
635 வாக்குச்சாவடிகளில் இடம்பெயர்ந்தோர் பிரிவில் நீக்கப்பட்ட பெயர்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் என்று அவர் கூறினார். இந்த புள்ளிவிவரங்களை சரிபார்ப்பது மிகவும் முக்கியம். ஒரே வாக்காளருக்கு இரண்டு EPIC எண்கள் வழங்கப்பட்ட பல வழக்குகள் இருக்கின்றன.
எங்களிடம் அவர்களின் ரசீதுகளும் உள்ளன. இப்போது இந்த உண்மையை மறுக்க முடியாது. நாங்கள் வழங்கிய தரவுகள் தேர்தல் ஆணையத்தால் உறுதிப்படுத்தப்பட்டு சரிபார்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த தவறுகளை சரிசெய்ய வீடு வீடாகச் சென்று மீண்டும் சரிபார்க்க வேண்டிய அவசியம் உள்ளது" என்று தெரிவித்தார்.
- பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த 17-ந் தேதி சாசாராம் பகுதியில் யாத்திரை தொடங்கினார்.
- ராகுல் காந்தியின் 16 நாட்கள் யாத்திரை நாளையுடன் முடிவடைகிறது.
பீகாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை உறுதி செய்யும் வகையில், 'வாக்காளர் உரிமை' என்ற பெயரில் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த 17-ந் தேதி சாசாராம் பகுதியில் யாத்திரை தொடங்கினார்.
ராகுல் காந்தியுடன் ராஷ்டீரிய ஜனதாதள தலைவரும், பீகார் முன்னாள் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் உடன் சென்றார்.
வாகனங்கள், மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்று விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் ராகுல் காந்தி சந்தித்து பேசினார். யாத்திரையின்போது வாக்கு திருட்டு தொடர்பாக மத்திய அரசையும், தேர்தல் ஆணையத்தையும் அவர் கடுமையாக விமர்சனம் செய்தார்.
ராகுல் காந்தியின் பேரணியில் பிரியங்கா, தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக் குமார், உத்தரபிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் இணைந்து இருந்தனர்.
இதற்கிடையே ராகுல் காந்தியின் 16 நாட்கள் யாத்திரை நாளையுடன் முடிவடைகிறது.
பீகாரில் உள்ள 20 மாவட்டங்களில் 1,300 கிலோ மீட் டர் தூரம் பயணம் மேற்கொண்ட அவரது யாத்திரை பாட்னாவில் நிறைவடைகிறது. இறுதி நாள் யாத்திரையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
நாளைய பேரணி நிறைவில் மேற்கு வங்காள முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அவரும் அபிஷேக் பானர்ஜியும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கிரிக்கெட் வீரரும், எம்.பி.யுமான யூசுப் பதான், உத்தரபிரதேச தலைவர் லலிதேஷ் திரிபாதி ஆகியோர் பாட்னா நிறைவு பேரணியில் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- பீகாரில் ராகுல் காந்தி வாக்காளர் உரிமை பேரணி மேற்கொண்டுள்ளார்.
- சில நாட்களுக்கு முன்பு ராகுல் காந்தியின் பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
பீகாரில் வாக்கு திருட்டுக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாக்காளர் உரிமை பேரணி மேற்கொண்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு ராகுல் காந்தியின் பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். தர்பங்காவில் திறந்தவெளி ஜீப்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணியாக சென்றார். பேரணியில் தி.மு.க. எம்.பி. கனிமொழி, பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்நிலையில், இன்று ராகுல் காந்தியின் வாக்காளர் உரிமை பேரணியில் உத்தரபிரதேச எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று பங்கேற்றார்.
இந்த பேரணியில் பேசிய அகிலேஷ் யாதவ், "வாக்காளர் உரிமை பேரணியில்சேர நான் இங்கு வந்துள்ளேன். யாத்திரையை ஆதரித்ததற்காக பீகார் மக்களை நான் வாழ்த்த விரும்புகிறேன். பீகாரின் குரல் நாடு முழுவதும் ஒலிக்கிறது. இந்த முறை பாஜக பீகாரிலிருந்து வெளியேறப் போகிறது" என்று தெரிவித்தார்.
- பயங்ரவாதிகளை தேடும் வேட்டையில் பாதுகாப்பு படையினரும், மாநில போலீசாரும் ஈடுபட்டு உள்ளனர்.
- பயங்கரவாதிகளை பிடிக்கும் பணியில் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் முடுக்கிவிடப்பட்டு உள்ளனர்.
பயங்கரவாதிகளை பிடிக்கும் பணியில் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் முடுக்கிவிடப்பட்டு உள்ளனர்.
பீகாரில் 3 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளனர். இவர்கள் பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஜெய்ஸ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் ஆவர். அவர்கள் ராவல்பிண்டியை சேர்ந்த ஹஸ்னைன் அலி, உமர்கோட்டை சேர்ந்த அடில் உசேன் மற்றும் பஹவல்பூரை சேர்ந்த முகமது உஸ்மான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த பயங்கரவாதிகள் 3 பேரும் ஆகஸ்டு 2-வது வாரத்தில் நேபாள தலைநகர் காட்மாண்டுவை அடைந்துள்ளனர். அதன்பிறகு கடந்த வாரம் நேபாள எல்லை வழியாக பீகார் மாநிலத்துக்குள் ஊடுருவியதாக உளவுத்துறை எச்சரித்து உள்ளது.
உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து பீகார் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு பயங்ரவாதிகளை தேடும் வேட்டையில் பாதுகாப்பு படையினரும், மாநில போலீசாரும் ஈடுபட்டு உள்ளனர்.
பீகாரில் உள்ள சோதனை சாவடிகள் அனைத்திலும் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். பயங்கரவாதிகள் நாசவேலையில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
பயங்கரவாதிகளை பிடிக்கும் பணியில் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் முடுக்கிவிடப்பட்டு உள்ளனர்.
இந்திய - நேபாள எல்லைப்பகுதியிலும், கீமாஞ்சல் மாவட்டத்திலும் பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு உள்ளனர். மதுபானி, சீதாமர்கி, சுபால், அராரியா, கிழக்கு சம்பாரன் மற்றும் மேற்கு சம்பாரன் ஆகிய மாவட்டங்கள் உள்ளிட்ட எல்லை பகுதிகளில் ரோந்து பணிகள் நடந்து வருகிறது.
பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. எனவே தேர்தலை சீர்குலைக்கும் நோக்கத்தில் அவர்கள் ஊடுருவி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து அவர்களை பிடிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
- அம்பேத்கர் நமக்கு வழங்கிய அரசியலமைப்பு ஒரு புனித நூல்.
- வரும் காலத்தில் பாராளுமன்றம், அரியானா மற்றும் பிற மாநிலங்களிலும் வாக்கு திருட்டுக்கான ஆதாரத்தை வழங்குவோம்.
பாட்னா:
பீகாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை உறுதி செய்யும் வகையில், 'வாக்காளர் உரிமை' என்ற பெயரில் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த 17- ந் தேதி சாசாராம் பகுதியில் யாத்திரை தொடங்கினார்.
சீதாமர்ஹி பகுதியில் இன்று நடைபெற்ற வாக்குரிமை பேரணியில் ராகுல் காந்தி பேசியதாவது:-
வாக்காளர் உரிமைக்கான இந்தப் பயணத்தில் நீங்கள் உங்கள் முழு பலத்தையும் செலுத்தியுள்ளீர்கள். சிறு குழந்தைகள் வருகிறார்கள், அவர்கள் என் காதில் நரேந்திர மோடி வாக்குகளை திருடுகிறார் என்று சொல்கிறார்கள்.
பீகாரில் தேர்தலை திருட முயற்சிக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியும். இங்குள்ள மக்கள் புத்திசாலிகள், எச்சரிக்கையானவர்கள். பீகாரில் ஒரு வாக்கு கூட திருட விட மாட்டார்கள் என்பதை பா.ஜ.க.வும், தேர்தல் ஆணையமும் அறிந்து கொள்ள, வாக்காளர் உரிமை யாத்திரையை இங்கு தொடங்கியுள்ளோம்.
உங்கள் குரலை அடக்க விரும்புவதால் ஏழைகளின் வாக்குகளை திருடுகிறார்கள், இந்த மேடையில் இருந்து நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன், அவர்களால் உங்கள் குரலை ஒருபோதும் அடக்க முடியாது. நாங்கள் உங்களுடன் நிற்கிறோம்.
அம்பேத்கர் நமக்கு வழங்கிய அரசியலமைப்பு ஒரு புனித நூல். அது நமது நாட்டின் சிந்தனை மற்றும் சித்தாந்தத்தை கொண்டது.
அரசியலமைப்பு தலித்துகள் கண்ணியத்துடனும், சுய மரியாதையுடனும் வாழும் உரிமையை வழங்கியுள்ளது. ஆனால் பா.ஜ.க. இந்த உரிமையை உங்களிடம் இருந்து பறிக்க விரும்புகிறது.
பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்குகளில் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், ஏழை மக்களின் பெயர்கள் அடங்கும். பணக்காரர்கள் பெயர்கள் அல்ல.
கர்நாடகாவில், பா.ஜ.க. 'வாக்கு திருட்டு' செய்திருப்பதை நாங்கள் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளோம். அதற்கு முன்பு பா.ஜ.க.வும், தேர்தல் ஆணையமும் வாக்குகளைத் திருடுவதாக நான் ஒருபோதும் சொல்லவில்லை. பா.ஜ.க.வினர் கவனமாகக் கேட்க வேண்டும். நாங்கள் ஒரு சட்டசபைக்கான ஆதாரத்தை மட்டுமே வழங்கியுள்ளோம்.
வரும் காலத்தில் பாராளுமன்றம், அரியானா மற்றும் பிற மாநிலங்களிலும் 'வாக்கு திருட்டு'க்கான ஆதாரத்தை வழங்குவோம். வாக்குகளை திருடுவதன் மூலம் மட்டுமே பா.ஜ.க. -ஆர்.எஸ்.எஸ். தேர்தல்களில் வெற்றி பெறுகின்றன என்பதை நாங்கள் நிரூபிப்போம்.
இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.
- காங்கிரஸ் கட்சி வாக்குத் திருட்டு குற்றச்சாட்டை தீவிரப்படுத்தி வருகிறது.
- இந்தக் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் மறுத்து வருகிறது.
பாட்னா:
மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2017-ல் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய உள்துறை மந்திரி அமித்ஷா, நாம் 5 முதல் 10 ஆண்டுகள் ஆள்வதற்காக ஆட்சிக்கு வரவில்லை. குறைந்தது 50 ஆண்டுகள் ஆட்சி செய்வோம். அடுத்த 40-50 ஆண்டுகளில் அதிகாரத்தின் மூலம் நாட்டில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி 'வாக்குத் திருட்டு' குற்றச்சாட்டை தீவிரப்படுத்தி வருகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் மறுத்து வருகிறது.
இந்நிலையில், பா.ஜ.க.வின் 50 ஆண்டு கால ஆட்சி ரகசியம் இப்போது வெளியே வந்துள்ளது. அது வாக்குத் திருட்டின் மூலமே நடப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
அமித்ஷாவின் கூற்றை மையமாக வைத்தே மக்களவை எதிர்கட்சி தலைவரான ராகுல் காந்தி தற்போது பா.ஜ.க. மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பாக, பீகாரில் நடந்த 'வாக்காளர் அதிகார யாத்திரை'யில் ராகுல் காந்தி பேசியதாவது:
மத்திய பா.ஜ.க. அரசு 40 முதல் 50 ஆண்டுகள் நீடிக்கும் என்று அமித்ஷா பலமுறை கூறியுள்ளார். எப்படி அவரால் அவ்வளவு உறுதியாகச் சொல்ல முடிகிறது என்று நான் யோசித்தேன்.
அந்த விசித்திரமான கருத்தின் உண்மை இப்போது வெளியே வந்துள்ளது. அவர்கள் 'வாக்குத் திருட்டில்' ஈடுபடுகிறார்கள். குஜராத் தொடங்கி 2014-ல் தேசிய அளவிலும், பின்னர் மற்ற மாநிலங்களிலும் பரவியது. நான் பொய் சொல்வதில்லை; உண்மைகளும் ஆதாரங்களும் உள்ளன என தெரிவித்தார்.
- மு.க.ஸ்டாலின் உடன் எடுத்த புகைப்படத்தை ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
- எனது சகோதரர் மு.க.ஸ்டாலினை பீகாருக்கும், வாக்காளர் அதிகார யாத்திரைக்கும் வரவேற்கிறேன்.
பீகாரில் வாக்காளர் உரிமை யாத்திரயின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி SELIFE எடுத்துக்கொண்டார்.
இந்த புகைப்படத்தை ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவரது எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
எனது சகோதரர் மு.க.ஸ்டாலினை பீகாருக்கும், வாக்காளர் அதிகார யாத்திரைக்கும் வரவேற்கிறேன். உங்களுடைய வருகையும், சோரிக்கு எதிரான எங்கள் வாக்குச் சேகரிப்பு போராட்டத்திலும் பங்கேற்றது வலுப்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ராகுல் காந்தி இந்தியாவின் வழக்கறிஞராக இருக்கிறார்.
- மக்களவை தேர்தலில் 400 இடங்கள் என கனவு கண்டவர்களை 240-ல் அடக்கியது இந்தியா கூட்டணி.
பீகாரில் வாக்கு திருட்டுக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். தர்பங்காவில் திறந்தவெளி ஜீப்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணியாக சென்றார். பேரணியில் தி.மு.க. எம்.பி. கனிமொழி, பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தமிழில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* ராகுலின் கண்களில் ஒருபோதும் அச்சம் இருந்தது இல்லை.
* இந்தியா கூட்டணிக்கான அடித்தளம் பாட்னாவில் தான் இடப்பட்டது.
* பா.ஜ.க.வின் அதிகாரத்தை மக்கள் ஒருநாள் பறிப்பார்கள்.
* தேர்தலுக்கு முன்னதாகவே பீகாரில் உங்களின் வெற்றி உறுதியாகி உள்ளதால் பேரணியை தடுக்க பார்க்கின்றனர்.
* ராகுல் காந்தி இந்தியாவின் வழக்கறிஞராக இருக்கிறார்.
* மக்கள் சக்தியே உயர்ந்தது என காட்டியிருக்கிறார் தேஜஸ்வி யாதவ்.
* ராகுல், தேஜஸ்வியை வெல்ல முடியாததால் கொல்லைப்புறமாக நுழைய பார்க்கிறது பா.ஜ.க.
* மக்களவை தேர்தலில் 400 இடங்கள் என கனவு கண்டவர்களை 240-ல் அடக்கியது இந்தியா கூட்டணி.
* பீகாரில் பெறும் வெற்றி தான் இந்தியா கூட்டணி அடுத்தடுத்து பெறப்போகும் வெற்றிக்கு அடித்தளமாக அமையும்.
* மக்களின் வாக்குகளை பறிப்பவர்களை மக்கள் பறிப்பர் என்பதற்கு அடையாளம் தான் இங்கு கூடிய கூட்டம்.
* மெஜாரிட்டி மெஜாரிட்டி என கூறிக் கொண்டிருந்தவர்களை மைனாரிட்டியாக மாற்றிக்காட்டியது இந்தியா கூட்டணி.
* பீகார் சட்டசபையில் வெற்றி பெற்றதற்கான விழாவில் விரைவில் நான் பங்கேற்பேன்.
* மக்கள் சக்திக்கு முன் எந்த ஒரு சர்வாதிகாரியும் மண்டியிட்டுதான் ஆக வேண்டும் என்பதை மீண்டும் ஒரு முறை பீகார் மக்கள் நிரூபிக்க வேண்டும்.
* அரசியலுக்காக பேசுபவர் அல்ல ராகுல், உண்மையின் குரலாக இருப்பவர், அவர் கண்களில் உண்மையும் தைரியமும் உள்ளது.
* பீகாரில் பா.ஜ.க.வின் துரோக அரசியல் தோற்கடிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 1 மாத காலமாக இந்தியாவே பீகாரை திரும்பி பார்த்து கொண்டிருக்கிறது.
- கீ கொடுத்தால் ஆடும் பொம்மையாக மாறி விட்டது தேர்தல் ஆணையம்.
பீகாரில் வாக்கு திருட்டுக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். தர்பங்காவில் திறந்தவெளி ஜீப்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணியாக சென்றார். பேரணியில் தி.மு.க. எம்.பி. கனிமொழி, பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தமிழில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* உங்களையெல்லாம் பார்ப்பதற்காக 2000 கி.மீ. கடந்து வந்திருக்கிறேன்.
* பீகார் என்றாலே லாலு பிரசாத் யாதவ் தான் நினைவிற்கு வருவார். கலைஞரும் லாலு பிரசாத்தும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள்.
* பா.ஜ.க.வின் அடக்குமுறையை தாண்டி அரசியல் செய்வதால் லாலு பிரசாத் உயர்ந்து நிற்கிறார்.
* எத்தனையோ வழக்கு இருந்த போதிலும் தைரியமாக எதிர்கொண்டதால் உயர்ந்த அரசியல்வாதியாக இருக்கிறார் லாலு பிரசாத்.
* லாலுவின் வழியில் அப்பாவுக்கு தப்பாமல் பிறந்த பிள்ளையாக உழைத்துக்கொண்டிருக்கிறார் தேஜஸ்வி யாதவ்.
* 1 மாத காலமாக இந்தியாவே பீகாரை திரும்பி பார்த்து கொண்டிருக்கிறது.
* தேசத்திற்கு பிரச்சனை வரும் போதெல்லாம் போர்க்குரல் எழுப்பி உள்ளது பீகார் மாநிலம்.
* ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவின் நட்பு அரசியல் நட்பு மட்டுமல்ல, 2 உடன்பிறப்புகளுக்கு இடையேயான நட்பு. இந்த நட்பு வெற்றியை பெற்று தரும்.
* பீகாரில் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றியை பறிக்க நினைக்கின்றனர்.
* மக்களை வாக்களிக்க விடாமல் தடுக்கின்றனர் பா.ஜ.க.வினர்.
* ஜே.பி.நாராயணன் செய்த பணியை தான் ராகுல் காந்தி செய்து வருகிறார்.
* 65 லட்சம் பீகார் மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது ஜனநாயகப் படுகொலை.
* கீ கொடுத்தால் ஆடும் பொம்மையாக மாறி விட்டது தேர்தல் ஆணையம்.
* ராகுல் முன்னெடுத்துள்ள போராட்டத்தை வாழ்த்துவதற்காக பீகார் வந்துள்ளேன்.
* ராகுல் காந்தி வாக்கு திருட்டு மோசடிகளை அம்பலப்படுத்தி கொண்டிருக்கிறார்.
* சொந்த மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குபவர்களை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தனி விமானம் மூலம் பீகாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை புறப்பட்டார்.
- தர்பங்காவில் திறந்தவெளி ஜீப்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணியாக சென்றார்.
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் மூலம் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வுடன் இணைந்து சட்டசபை மற்றும் மக்களவை தேர்தலில் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
'வாக்கு திருட்டு' தொடர்பாக வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வரும் கடந்த 17-ந்தேதி முதல் 15 நாட்களுக்கு பீகாரில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பீகாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை புறப்பட்டார்.
இந்நிலையில் வாக்கு திருட்டுக்கு எதிராக பீகாரில் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். தர்பங்காவில் திறந்தவெளி ஜீப்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணியாக சென்றார்.
இந்த பேரணியில் தி.மு.க. எம்.பி. கனிமொழி, பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் பங்கேற்றனர்.
- வாக்காளர் வாக்குரிமையை உறுதிசெய்ய வலியுறுத்தி ராகுல் காந்தி யாத்திரை நடத்தி வருகிறார்.
- இந்த யாத்திரைக்கு ஆதரவு தெரிவிக்க ஆகஸ்ட் 27-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பீகார் செல்கிறார்.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பீகாரில் வாக்காளர் வாக்குரிமையை உறுதி செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி யாத்திரை நடத்தி வருகிறார்.
ராகுல் காந்தியின் யாத்திரைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆகஸ்ட் 27-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பீகார் செல்கிறார்.
இந்நிலையில், ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனரும், பிரபல தேர்தல் உத்தி வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:
தமிழக முதல்வர் ஒருவேளை பீகார் வருகிறார் என்றால் அதனால் என்ன மாற்றம் இங்கு நிகழ்ந்துவிட போகிறது? அவரின் வருகையால் பீகார் முன்னேறிவிடுமா?
பீகாரின் பிரச்சனைகளுக்கு பீகாரிலேயே தான் தீர்வு காணப்பட வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் இங்கு வருவதாக இருந்தாலும் சரி அல்லது கர்நாடகா முதல்வர் வருவதாக இருந்தாலும் சரி, அது எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
பீகாருக்கு வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்கவேண்டும் என்ற ஒரு யாத்திரை தான் தற்போது வேண்டும். பிரயோஜனம் இல்லாத மற்ற யாத்திரையால் என்ன ஆதாயம் கிடைத்துவிடப் போகிறது?
காங்கிரசை குற்றம் சுமத்துகிறார் பிரதமர் மோடி. காங்கிரஸ் பிரதமர் மோடியை குற்றம் சுமத்துகிறது. ஆனால் பீகார் இளைஞர்கள் கேட்பது எல்லாம், இங்கு வேலைவாய்ப்புகள் எப்போது கிடைக்கும், புலம்பெயர்ந்து செல்வோரை எப்போது தடுப்பீர்கள் என்பதுதான் என தெரிவித்தார்.
- கர்நாடகாவில், 1 லட்சம் வாக்காளர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று கேட்டேன், ஆனால் தேர்தல் ஆணையத்தால் இன்னும் இதற்கு பதிலளிக்க முடியவில்லை.
- அவர்கள் பாரபட்சமற்றவர்களாக இருந்தால், அனுராக் தாக்கூரிடமிருந்து பிரமாணப் பத்திரம் கோரப்பட்டிருக்கும்.
பீகாரில் ராகுல் காந்தி வாக்காளர் உரிமை யாத்திரை நடத்தி வருகிறார். கடந்த 17 ஆம் தேதி தொடங்கிய யாத்திரை வரும் 1 ஆம் தேதி வரை நடக்கிறது. இன்றைய யாத்திரையில் தேஜஸ்வி யாதவ் மற்றும் தொண்டர்களுடன் பைக் பேரணி சென்றார் ராகுல்.
இந்நிலையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல், "தேர்தல் ஆணையம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. இன்றுவரை, எனது கேள்விகளுக்கு எனக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. கர்நாடகாவில், 1 லட்சம் வாக்காளர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று கேட்டேன், ஆனால் தேர்தல் ஆணையத்தால் இன்னும் இதற்கு பதிலளிக்க முடியவில்லை.
நான் பத்திர்கையாளர் சந்திப்பில் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பிரமாணப் பத்திரத்தை அளிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் ஏற்க மாட்டோம் என்றும் தேர்தல் ஆணையம் கூறியது. சில நாட்களுக்குப் பிறகு அனுராக் தாக்கூரும் இதேபோன்ற பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். ஆனால் தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் கேட்கவில்லை.
இந்தத் தேர்தல் ஆணையம் யாருடன் நிற்கிறது என்பது மக்களுக்கும் ஊடகங்களுக்கும் தெரியும். அவர்கள் பாரபட்சமற்றவர்களாக இருந்தால், அனுராக் தாக்கூரிடமிருந்து பிரமாணப் பத்திரம் கோரப்பட்டிருக்கும். எனவே தேர்தல் ஆணையம், தேர்தல் ஆணையர் மற்றும் பாஜக இடையே ஒரு தொடர்பு உள்ளது.
நீங்கள் மகாராஷ்டிராவில், கர்நாடகாவில், அரியானாவில் வாக்குகளை திருடினீர்கள். ஆனால் இங்கே பீகாரில் அதை நடக்க நாங்கள் விடமாட்டோம்" என்று தெரிவித்தார்.






