என் மலர்
பீகார்
- இந்தியா கூட்டணியில் இடம் பெற AIMIM விரும்பியது.
- ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் பதில் ஏதும் அளிக்காத நிலையில், 3ஆவது கூட்டணிக்கு முயற்சி.
பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி- இந்தியா கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
ஐதராபாத் மக்களவை எம்.பி. அசாதுதீன் ஒவைசி-யின் ஏஐஎம்ஐஎம் (AIMIM) கட்சிக்கு இந்தியா கூட்டணியில் இடம் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.
இந்த நிலையில் இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக AIMIM களம் இறங்கப்போகிறது. நாங்கள் 100 இடங்களில் போட்டியிடுவோம் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அக்தருல் இமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அக்தருல் இமான் கூறுகையில் "100 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது எங்களது திட்டம். இரண்டு கூட்டணிகளும் தங்களது இருப்பை உணர வேண்டிய நிலையில் உள்ளன.
2020 தேர்தலின்போது, நாங்கள் வாக்குகளை பிரித்ததாக மகா கூட்டணி குற்றம்சாட்டியது. அவர்களுடன் நாங்கள் கூட்டணி வைக்க விருப்பம் இருப்பதாக நான் லாலு மற்றும் தேஜஸ்வி யாதவுக்கு கடிதம் எழுதியது அனைவரும் அறிந்ததே. ஆனால், அங்கிருந்து பதில் வரவில்லை.
தற்போது நாங்கள் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வேண்டியுள்ளது. 3ஆவது கூட்டணி என்ற ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் பேசி வருகிறோம். இன்னும் சில நாட்களில் அது தெளிவாகிவிடும்" என்றார்.
கடந்த சட்டசபை தேர்தலின்போது, அசாதுதீன் ஒவைசி கட்சி, தனியாக போட்டியிட்டு மைனாரிட்டி வாக்குகளை பிரித்து, பாஜக கூட்டணி வெற்றிக்கு வழிவகுப்பதாக இந்தியா கூட்டணி குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.
- பீகாரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
- என்டிஏ கூட்டணியில் பாஜக, நிதிஷ் குமார் கட்சி பிரதான கட்சிகளாக உள்ளன.
பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் நேரடி போட்டி நிலவுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, ராஷ்டிரிய ஜனதா தளம் (நிதிஷ் குமார் கட்சி) முக்கிய கட்சிகளாகும். இந்தியா கூட்டணியில் ராஷ்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் பிரதான கட்சிகள் ஆகும்.
இந்த முறை தேர்தல் மிகக்கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
இந்த நிலையில் பீகார் மாநில பாஜக தலைவர், திலிப் ஜெய்ஸ்வால், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அரை டஜன் எம்.எல்.ஏ.-க்கள் பாஜகவில் இணைவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திலிப் ஜெய்ஸ்வால் கூறியதாவது:-
இன்னும் அடுத்த சில நாட்களில் அரை டஜன் எதிர்க்கட்சி எம்.எம்.ஏ.-க்கள் பாஜகவில் இணைவார்கள். இது பிரதமர் மோடி மற்றும் முதல்வர் நிதிஷ் குமார் தலைமைத்துவம் மீது வளர்ந்து வரும் நம்பிக்கையின் தெளிவான அறிகுறியாகும்.
இவ்வாறு திலிப் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
ஆனால் கட்சி தாவும் எம்.எல்.ஏ.-க்கள் யார் யார் என்பதை வெளியிடவில்லை. முன்னதாக இரணடு முறை எம்.பி.யாகவும், கடந்த முறை காங்கிரஸ் சார்பில் முசாபர்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அஜய் நிஷாத் மீண்டும் பாஜக கட்சிக்கு திரும்பினார். அவரை வரவேற்றார். அவரது வருகறை திர்கட் பிராந்தியத்தில் கூடுதல் வலிமையைக் கொடுக்கும் என்றார்.
- ஜன் சுராஜ் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் 13 சதவீதம் முஸ்லிம் வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
- 17 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
பீகார் சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முடிவுகள் நவம்பர் 18 ஆம் தேதி அறிவிக்கப்படும்.
ஆளும் ஐக்கிய ஜனதா தளம் அங்கம் வகிக்கும் என்டிஏ கூட்டணிக்கும், ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இந்தியா கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையே கடந்த வருடம் காந்தி ஜெயந்தி தினத்தில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், ஜன் சுராஜ் என்ற கட்சியை தொடங்கி இருந்தார்.
ஜன் சுராஜ் கட்சியும் வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் தனித்து களம் காண உள்ளது.
இந்நிலையில் பீகார் தேர்தலுக்கான 51 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை ஜன் சுராஜ் கட்சி வெளியிட்டுள்ளது.
பிரசாந்த் கிஷோர் வெளியிட்ட இந்த பட்டியலில் கணிதவியலாளர், மருத்துவர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இடமம்பெற்றுள்ளது கவனம் ஈர்த்து வருகிறது.
ஜன் சுராஜ் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் 13 சதவீதம் முஸ்லிம் வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். 17 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
வேட்பாளர்களில் 16% முஸ்லிம்கள் மற்றும் 17% மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
வேட்பாளர்களில், பாடப் புத்தகங்கள் தயாரிக்கும், பாட்னா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான கணிதவியலாளர் கே.சி. சின்ஹா (குமஹ்ரார் தொகுதி) மற்றும் பாட்னா உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ஒய்.பி. கிரி (மஞ்ஜி தொகுதி) ஆகியோர் அடங்குவர்.
முசாபர்பூர் தொகுதியில், கிராமப்புற சுகாதார விழிப்புணர்வில் பணியாற்றிய மருத்துவர் அமித் குமார் தாஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஆர்கே மிஸ்ரா, போஜ்புரி நடிகர் ரிதேஷ் பாண்டே உள்ளிட்டோரும் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
முதல் பட்டியலில் பிரசாந்த் கிஷோரின் பெயர் இடம்பெறவில்லை. அவரது சொந்தத் தொகுதியான கார்கஹரில் ரித்தேஷ் ரஞ்சன் என்பவர் ஜன் சுராஜ் போட்டியிட உள்ளார்.
எனவே லாலு பிரசாத் உடைய ஆர்ஜேடி கட்சியின் கோட்டையான ராகோபூரில் பிரசாந்த் கிஷோர் போட்டியிடக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- அரசு அமைந்த 20 நாட்களுக்குள் இதற்கான சட்டம் இயற்றப்பட்டு 20 மாதங்களுக்குள் நிறைவேற்றுவோம்.
- பீகார் மக்களுக்கு நாங்கள் சமூக நீதியுடன் பொருளாதார நீதியையும் வழங்க விரும்புகிறோம்.
பீகார் சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.
ஆளும் ஐக்கிய ஜனதா தளம் அங்கம் வகிக்கும் என்டிஏ கூட்டணிக்கும், ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இந்தியா கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
முதல்வர் நிதிஷ் குமார் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை உள்ளிட்ட மக்களை கவரும் திட்டங்களை தொடர்ச்சியாக அறிவித்து வருகிறார்.
இந்நிலையில் இந்தியா கூட்டணியின் முதல்வர் முகமான ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் அனைவரையும் வியக்க வைக்கும் தேர்தல் வாக்குறுதி ஒன்றரை இன்று அறிவித்துள்ளார்.
அதாவது, அரசு வேலையில் உள்ளவர்கள் குடும்பங்களை தவிர்த்து மற்ற அனைத்து குடும்பங்களிலும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
ராஷ்டிரிய ஜனதா தள அரசு அமைந்த 20 நாட்களுக்குள் இதற்கான சட்டம் இயற்றப்பட்டு 20 மாதங்களுக்குள் தனது வாக்குறுதியை நிறைவேற்றுவதாக தேஜஸ்வி யாதவ் உறுதியளித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த 20 ஆண்டுகளாக பீகாரில் என்டிஏ அரசாங்கத்தால் நிச்சயமின்மை நிலவுகிறது. எந்த ஒரு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தப்படவில்லை.
ஆர்ஜேடி ஆட்சி அமைத்து 20 மாதங்களுக்கு பின் பீகாரில் ஒரு குடும்பம் கூட அரசு வேலை இன்றி இருக்காது. இது பீகாரில் நிலவும் வேலையின்மை பிரச்சனையை வேரோடு தகர்த்தெறியும். பீகார் மக்களுக்கு நாங்கள் சமூக நீதியுடன் பொருளாதார நீதியையும் வழங்க விரும்புகிறோம்" என்று தெரிவித்தார்.
- தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ் குமார், சிராக் பஸ்வான் கட்சிகள் இடம் பிடித்துள்ளன.
- நிதிஷ் குமார்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை பாஜக மேலிடம் ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளது.
பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் நிதிஷ் குமார்தான், தொகுதி பங்கீடு விரைவில் முடிவடையும் என பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கிரிராஜ் சிங் கூறியதாவது:-
நிதிஷ் குமார்தான் தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) முதல்வர் வேட்பாளர். என்.டி.ஏ. கூட்டணியில் எல்லாம் நன்றாக உள்ளது. தொகுதி பங்கீடு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இறுதி வடிவம் விரைவில் முடிவாகும்.
மகாபத்பந்தன் என அழைக்கப்படும் இந்தியா கூட்டணி பிளவுப்பட்ட வீடு. ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் இருப்பார் என காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அறிவித்துவிட்டது. காங்கிரஸ் அறிவிப்பால் ஆர்.ஜே.டி. தலைவர் லாலு பிரசாத் யாதவ் கவலையும், பயமும் அடைந்துள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கொள்கை, தலைமை மற்றும் நோக்கம் அனைத்தும் உறுதியாக உள்ளன என்றும், எந்த வெறுப்பும் இல்லை என்றும் என்றால் உறுதியா சொல்ல முடியும்.
இவ்வாறு கிரிராஜ் சிங் தெரிவித்தார்.
பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக மற்றும் நிதி்ஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பிரதான கட்சிகள். இந்த இரண்டு கட்சிகளுடன் சிராக் பஸ்வான் கட்சியும் முக்கியமான 3ஆவது பெரிய கட்சியாக உள்ளது. சிராக் பஸ்வான் கட்சிக்கு என்டிஏ 25 இடங்களை ஒதுக்க முன்வந்துள்ளது. ஆனால், சிராக் 40 இடங்கள் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் தலைமையைில் இந்தியா கூட்டணி, NDA-வை எதிர்கொள்கிறது.
- தேஜஸ்வி யாதவ் முதலமைச்சர் வேட்பாளராக களம் நிறுத்தப்படலாம் என எதிர்பார்ப்பு.
பீகார் மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. 243 தொகுதிகளை கொண்ட பீகாருக்கு அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் முன்னணி வகிக்கும் மகாகத்பந்தன் (மகா கூட்டணி) களம் இறங்கும். இதனால் பீகாரில் கடும் போட்டி நிலவும் எனத் தெரிகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால், நிதிஷ் குமார்தான் முதல்வர் என்பது ஏற்கனவே உறுதியான விசயம். அதேவேளையில் மாகா கூட்டணியில் (தற்போது இந்தியா கூட்டணி) யார் முதலமைச்சர் வேட்பாளர் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அந்த கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ்தான் முதல்வர் வேட்பாளராக பார்க்கப்படுகிறது. ஆர்.ஜே.டி. தொண்டர்களும் இதைத்தான் விரும்புகிறார்கள்.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் உதித் ராஜியிடம், முதல்வர் வேட்பாளர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு உதித் ராஜ் கூறியதாவது:-
ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு வேண்டுமென்றால் தேஜஸ்வி யாதவ் முதலமைச்சர் முகமாக இருக்கலாம். ஆனால், இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் கூட்டாக முடிவு செய்யப்படும். எந்தவொரு கட்சியின் ஆதரவாளர்களும், அவர்களுடைய கட்சித் தலைவரை முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்ய முடியும். ஆனால், இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் முடிவு செய்யப்படவில்லை. காங்கிரஸ் தலைமையகம் என்ன முடிவு எடுக்கிறது என்பதை பார்ப்போம்" என்றார்.
முதலமைச்சர் வேட்பாளரை முன்நிறுத்தாமல் நாங்கள் போட்டியிடமாட்டோம் என சில வாரங்களுக்கு முன் தேஜஸ்வி யாதவ் தெரிவித்திருந்த நிலையில், உதித் ராஜ் தற்போது இவ்வாறு தெரிவித்துள்ளார். இவரது கருத்துக்கு உடனடியான ராஷ்டிரிய ஜனதா தளம் அல்லது தேஜஸ்வி யாதவ் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
- டெல்லி மற்றும் பஞ்சாபில் செயல்படுத்தப்பட்ட நிர்வாக மாதிரியை பீகாரிலும் பின்பற்ற முடியும்
- நாங்கள் எந்தக் கட்சியுடனும் அல்லது கூட்டணியுடனும் கைகோர்க்க மாட்டோம்
பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
முழுமையான பெரும்பான்மையைப் பெற மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 122 இடங்கள் தேவை. ஐக்கிய ஜனதா தளத்தை உள்ளடக்கிய ஆளும் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்தை உள்ளடக்கிய இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் பீகார் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
டெல்லி மற்றும் பஞ்சாபில் செயல்படுத்தப்பட்ட நிர்வாக மாதிரியை பீகாரிலும் பின்பற்ற முடியும் என்று தான் நம்புவதாக ஆம் ஆத்மி பீகார் மாநில பொறுப்பாளர் அஜேஷ் யாதவ் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
அறிவிப்பின் ஒரு பகுதியாக, அஜேஷ் யாதவ் மற்றும் கட்சியின் மாநிலத் தலைவர் ராகேஷ் யாதவ் ஆகியோர் 11 வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டனர்.
"எங்கள் கூட்டணி மக்களுடன் உள்ளது. நாங்கள் எந்தக் கட்சியுடனும் அல்லது கூட்டணியுடனும் கைகோர்க்க மாட்டோம்" என்று அக்கட்சியின் மாநில இணைப் பொறுப்பாளர் அபினவ் ராய் தெரிவித்தார்.
- 2020-ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது.
- சில கட்சிகள் 2 கட்டங்களாக நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தன.
பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
243 உறுப்பினர்களை கொண்ட அந்த மாநில சட்டசபையின் பதவி காலம் நவம்பர் 22-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அங்கு விரைவில் தேர்தல் நடைபெறுகிறது.
பீகார் தேர்தல் தயார் நிலை குறித்து கடந்த 2 நாட்களாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பாட்னாவில் ஆய்வு மேற்கொண்டார். பீகார் தேர்தலில் 17 புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் பீகார் தேர்தல் தேதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படுகிறது. டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பீகார் சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்கிறார்.
2020-ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடைபெற்றது. நவம்பர் 10-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.
பீகார் சட்டசபை தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையரிடம் பெரும்பாலான அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. அதே போல சில கட்சிகள் 2 கட்டங்களாக நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தன.
இதனால் பீகார் தேர்தல் எத்தனை கட்டங்களாக நடைபெறும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
பீகார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணியை கடந்த ஜூன் மாதம் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. சமீபத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது.
வாக்காளர் பட்டியலில் முன்பு 7.89 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றிருந்த நிலையில் சிறப்பு தீவிர திருத்தத்தில் 47 லட்சம் பேர் நீக்கப்பட்டு தற்போது 7.42 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.
பீகாரில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி கடுமையாக போராடி வருகிறது. லோக் ஜன சக்தி, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா, ராஷ்டிரீய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
எதிர்க்கட்சி கூட்டணியில் ராஷ்டிரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அங்கு கடும் போட்டி நிலவுகிறது.
- மொபைல் போனை வாக்குச் சாவடிக்கு வெளியே வைக்க வசதி செய்யப்படும்.
- ஒரு வாக்குச்சாவடிக்கு 1,200 வாக்காளர்களுக்கு மேல் இருக்க மாட்டார்கள்.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகளை செய்ய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான குழு பீகார் வந்துள்ளது.
நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டு கட்சிகளின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டது.
இந்நிலையில் ஞானேஷ் குமார் இன்று பீகாரின் வைஷாலி நகரில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்த்தினார்.
அதில் பேசிய அவர், பீகாரில் 243 சட்டமன்ற இடங்கள் உள்ளன என்றும் அவர் கூறினார். சட்டமன்றத்தின் பதவிக்காலம் நவம்பர் 22 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னர் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்படும். தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஏற்கனவே அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கூட்டங்களை நடத்தியுள்ளனர்.
மேலும், அனைத்து பொறுப்பு அதிகாரிகளுடனும் ஒரு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஒரே கட்டமாக தேர்தலை நடத்துவது குறித்து, தேர்தல் ஆணையம் விரைவில் ஒரு முடிவை எடுக்கும்.
ஒரு வாக்குச்சாவடிக்கு 1,200 வாக்காளர்களுக்கு மேல் இருக்க மாட்டார்கள். வாக்களிக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
மொபைல் போனை வாக்குச் சாவடிக்கு வெளியே வைக்க வசதி செய்யப்படும். அவற்றை வெளியே வைத்துவிட்டு வந்த பின்பே வாக்களிக்க அனுமதிக்கப்படும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்கள் இருக்கும்.
பீகார் தேர்தலில் 17 புதிய சோதனைகளை பரிசோதிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இது எதிர்காலத்தில் நாடு தழுவிய அளவில் செயல்படுத்தப்படும்.
வாக்காளர் அடையாள அட்டைகளில் வாக்காளர் அடையாள எண்கள் பெரிதாக இருக்கும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணுவதில் பிழை இருந்தால், அனைத்து VVPAT, வாக்குச்சீட்டு வாக்குகளும் எண்ணப்படும்.
ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்பு வாக்காளர் பட்டியல்களைத் திருத்துவது அவசியம், பீகார் சிறப்பு தீவிர திருத்தும் சட்டப்படி நடத்தப்பட்டது. தேர்தலுக்குப் பிறகு அதை மறுபரிசீலனை செய்வது சட்டத்திற்கு முரணானது.
வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதற்கு மாவட்ட தேர்தல் அலுவலர் தான் பொறுப்பு. பீகாரின் 243 மாவட்ட தேர்தல் அலுவலர்கள் வாக்காளர்களை தணிக்க செய்ய ஒன்றிணைந்து பணியாற்றினர்.
நீக்கப்பட்ட பெயர்களின் பட்டியல் அரசியல் கட்சிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. வாக்காளர் பட்டியலில் யாருடைய பெயர் விடுபட்டிருந்தால், அவர்கள் மாவட்ட நீதிபதியிடம் மேல்முறையீடு செய்யலாம்" என்று தெரிவித்தார்.
- தேவைப்பட்டால் இதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.
- ஆர்ஜேடி சார்பாக கூட்டத்தில் கலந்து கொண்ட எம்பி அபய் குஷ்வாஹா இந்தக் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலின் ஒரு பகுதியாக, தேர்தல் ஆணையம் பீகாரில் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தியது.
தேர்தல் நடத்துவது தொடர்பாக அந்தந்த கட்சிகளிடமிருந்து ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை அது வரவேற்றது.
கூட்டத்தில் பங்கேற்ற பாஜக பீகார் தலைவர் திலீப் ஜெய்ஸ்வால், "புர்கா அணிந்து வாக்களிக்க வரும் பெண்களின் வாக்காளர் அட்டைகளில் உள்ள புகைப்படத்தை தேர்தல் ஆணையம் பொருத்திப்பார்த்து சோதனையிட வேண்டும்.
மோசடி வாக்குகளைத் தடுக்க இது செய்யப்பட வேண்டும். தேவைப்பட்டால் இதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்" என்று கூறினார்.
ஆர்ஜேடி சார்பாக கூட்டத்தில் கலந்து கொண்ட எம்பி அபய் குஷ்வாஹா இந்தக் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
அவர் பேசியதாவது, "பாஜகவின் கோரிக்கை அர்த்தமற்றது. தேர்தல் ஆணையம் ஏற்கனவே மாநிலத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்டு சமீபத்திய புகைப்படத்துடன் வாக்காளர் அட்டைகள் வழங்கப்பட்டதை அடுத்து, புர்கா அணிந்த பெண்களை அட்டையில் உள்ள புகைப்படத்துடன் ஒப்பிட வேண்டிய அவசியமில்லை" என்று வாதிட்டார்.
- 1,200 தொழில் திறன் ஆய்வகங்களையும் மோடி திறந்து வைத்தார்.
- புதிதாகப் பணியமர்த்தப்பட்ட 4,000-க்கும் அதிகமானவர்களுக்கு பணி நியமனக் கடிதங்களையும் பிரதமர் வழங்கினார்.
புதுடெல்லி:
பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு இந்த மாதம் அல்லது நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் வருகிற 6 அல்லது 7-ந்தேதி அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தேர்தல் நடைபெற உள்ள பீகார் மாநிலத்துக்கு பிரதமர் மோடி இன்று பல்வேறு திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார்.
டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று காலை நடைபெற்ற விழாவில் அவர் இளைஞர்களை மையமாக கொண்ட ரூ.62 ஆயிரம் கோடி திட்டங்களை தொடங்கி வைத்தார். அகில இந்திய அளவில் ஐ.டி.ஐ.யில் முதல் 46 இடங்களை பிடித்தவர்களை மோடி பாராட்டினார்.
ரூ.60,000 கோடி முதலீட்டில் மத்திய நிதியுதவி பெறும் திட்டமான பி.எம்-சேது (மேம்படுத்தப்பட்ட ஐ.டி.ஐ.கள் மூலம் பிரதமரின் திறன் அளித்தல் மற்றும் வேலைவாய்ப்பில் மாற்றம் செய்தல்) திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் நாடு முழுவதும் உள்ள 1,000 அரசு ஐ.டி.ஐ.களை கொண்டது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முதல் கட்டத்தில் பாட்னா, தர்பங்காவில் உள்ள ஐ.டி.ஐ.களில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
400 நவோதயா வித்யாலயாக்கள் மற்றும் 200 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளில் நிறுவப்பட்டுள்ள 1,200 தொழில் திறன் ஆய்வகங்களையும் மோடி திறந்து வைத்தார். 1,200 தொழில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதும் இந்தத் திட்டத்தில் அடங்கும்.
பீகாரின் புதுப்பிக்கப்பட்ட முதல்-மந்திரியின் சுய உதவித்தொகை உறுதித் திட்டத்தைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.
இதன்படி ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 லட்சம் பட்டதாரி இளைஞர்கள் 2 ஆண்டுகளுக்கு தலா ரூ.1,000 மாதாந்திர உதவித்தொகை பெறுவார்கள். மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பீகார் மாணவர் கடன் அட்டைத் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
தொழில் சார்ந்த படிப்புகள் மற்றும் தொழிற்கல்வியை வழங்க பீகாரில் உள்ள ஜன் நாயக் கற்பூரி தாக்கூர் திறன் பல்கலைக்கழகத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். பீகாரின் 4 பல்கலைக் கழகங்களில் புதிய கல்வி மற்றும் ஆராய்ச்சி வசதிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மொத்தம் ரூ.160 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 27,000-க்கும் அதிகமான மாணவர்களுக்கு இதில் பயன் கிடைக்கும்.
பீகாரில் புதிதாகப் பணியமர்த்தப்பட்ட 4,000-க்கும் அதிகமானவர்களுக்கு பணி நியமனக் கடிதங்களையும் பிரதமர் வழங்கினார். மேலும் முதலமைச்சரின் சிறார் உதவித்தொகை திட்டத்தின் கீழ் 9 மற்றும் 10-ம் வகுப்பு பயிலும் 25 லட்சம் மாணவர்களுக்கு நேரடிப் பயன் பரிமாற்றத்தின் மூலம் ரூ.450 கோடி உதவித்தொகையை பிரதமர் மோடி வழங்கினார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் அரசு ஐ.டி.ஐ மாணவர்களுக்கு பெரிய அளவில் பட்டமளிப்பு விழா என்ற புதிய பாரம்பரியத்தை தொடங்கியது. இந்த பாரம்பரியத்தில் மற்றொரு மைல் கல்லை நாம் அனைவரும் காண்கிறோம்.
இன்றைய விழா திறன்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை குறிக்கிறது. நாடு முழுவதும் இளைஞர்களுக்காக கல்வி மற்றும் திறன்மேம்பாட்டு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் 1,000 ஐ.டி.ஐ.களை மேம்படுத்துவதே எங்கள் இலக்காகும். பட்டதாரிகளுக்கு மாத உதவி தொகை ரூ.1000 வழங்கப்படுகிறது. இந்த திட்டங்கள் மாணவர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கான உத்தரவாதமாகும்.
பீகார் அதிக இளைஞர் மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் ஒன்றாகும். எனவே, பீகாரின் இளைஞர்களின் ஆற்றல் அதிகரிக்கும் போது, நாட்டின் பலமும் இயல்பாகவே அதிகரிக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும், பீகார் இளைஞர்களுக்கு சுமார் 10 லட்சம் நிரந்தர அரசு வேலைகள் வழங்கப்பட்டு உள்ளன. பீகார் இளைஞர்களின் திறனை மேலும் மேம்படுத்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. ஆர்.ஜே.டி-காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிடும்போது பீகாரின் கல்வி பட்ஜெட் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது
பீகாரில் விளையாட்டு தொடர்பான சர்வதேச அளவிலான உள்கட்டமைப்பு கூட இல்லாத ஒரு காலம் இருந்தது. இன்று, பீகாரில் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
- ரெயில், அதிகாலை 5 மணியளவில் பூர்னியா நகரத்தின் அருகே சென்று கொண்டு இருந்தபோது விபத்து.
- இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பீகார் மாநிலம் பூர்ணியாவில் தண்டவாளத்தை கடக்கும்போது வந்தே பாரத் ரெயில் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும், இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகாலையில் இருட்டாகவும், பனிமூட்டமாகவும் இருந்ததால் ரெயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடந்துள்ளது முதற்கு கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஜோக்பானியிலிருந்து பாடலிபுத்ராவுக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில், அதிகாலை 5 மணியளவில் பூர்னியா நகரத்தின் அருகே சென்று கொண்டு இருந்தபோது விபத்து நடந்துள்ளது.
மேலும், பொது மக்கள் குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில், நியமிக்கப்பட்ட கிராஸிங்கை பயன்படுத்தவும், தண்டவாளங்களில் நடப்பதைத் தவிர்க்கவும் என்ஆர்எப் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.






