என் மலர்
இந்தியா

வாக்களிக்க வரும் புர்கா அணிந்த பெண்களை சோதனை செய்ய வேண்டும் - தேர்தல் ஆணையத்தை வலியுறுத்திய பீகார் பாஜக
- தேவைப்பட்டால் இதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.
- ஆர்ஜேடி சார்பாக கூட்டத்தில் கலந்து கொண்ட எம்பி அபய் குஷ்வாஹா இந்தக் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலின் ஒரு பகுதியாக, தேர்தல் ஆணையம் பீகாரில் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தியது.
தேர்தல் நடத்துவது தொடர்பாக அந்தந்த கட்சிகளிடமிருந்து ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை அது வரவேற்றது.
கூட்டத்தில் பங்கேற்ற பாஜக பீகார் தலைவர் திலீப் ஜெய்ஸ்வால், "புர்கா அணிந்து வாக்களிக்க வரும் பெண்களின் வாக்காளர் அட்டைகளில் உள்ள புகைப்படத்தை தேர்தல் ஆணையம் பொருத்திப்பார்த்து சோதனையிட வேண்டும்.
மோசடி வாக்குகளைத் தடுக்க இது செய்யப்பட வேண்டும். தேவைப்பட்டால் இதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்" என்று கூறினார்.
ஆர்ஜேடி சார்பாக கூட்டத்தில் கலந்து கொண்ட எம்பி அபய் குஷ்வாஹா இந்தக் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
அவர் பேசியதாவது, "பாஜகவின் கோரிக்கை அர்த்தமற்றது. தேர்தல் ஆணையம் ஏற்கனவே மாநிலத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்டு சமீபத்திய புகைப்படத்துடன் வாக்காளர் அட்டைகள் வழங்கப்பட்டதை அடுத்து, புர்கா அணிந்த பெண்களை அட்டையில் உள்ள புகைப்படத்துடன் ஒப்பிட வேண்டிய அவசியமில்லை" என்று வாதிட்டார்.






