என் மலர்tooltip icon

    இந்தியா

    SIR முறைகேடு: கொடுத்த 89 லட்சம் புகார்களையும் நிராகரித்த தேர்தல் ஆணையம் - காங்கிரஸ் குற்றச்சாட்டு
    X

    SIR முறைகேடு: கொடுத்த 89 லட்சம் புகார்களையும் நிராகரித்த தேர்தல் ஆணையம் - காங்கிரஸ் குற்றச்சாட்டு

    • SIRஇல் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், எனவே அதை மீண்டும் நடத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
    • எங்களிடம் அவர்களின் ரசீதுகளும் உள்ளன. இப்போது இந்த உண்மையை மறுக்க முடியாது.

    பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மூலம் 65 லட்சம் பேரை நீக்கி கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டது தேர்தல் ஆணையம்.

    தேர்தலுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை பாஜகவுக்கு சாதமான தேர்தல் ஆணையத்தின் நகர்வு என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இதுதொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

    இந்நிலையில் SIRஇல் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், எனவே அதை மீண்டும் நடத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா பேசுகையில், "எந்தவொரு அரசியல் கட்சியிடமிருந்தும் எந்தப் புகாரும் வரவில்லை என தேர்தல் ஆணையம் தொடர்ந்து கூறி வருகிறது. உண்மை என்னவென்றால், SIR-ல் முறைகேடுகள் தொடர்பாக காங்கிரஸ் 89 லட்சம் புகார்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது.

    எங்கள் வாக்குச்சாவடி முகவர்கள் புகார் அளிக்கச் சென்றபோது, தேர்தல் ஆணையம் அவர்களின் புகார்களை நிராகரித்தது. அரசியல் கட்சிகளால் அல்ல, தனிநபர்களால் மட்டுமே புகார்களை ஏற்க முடியும் என்று தேர்தல் ஆணையம் எங்கள் வாக்குச்சாவடி முகவர்களிடம் கூறியது.

    பீகாரில் உள்ள 90,540 வாக்குச்சாவடிகளில் இருந்து 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்வு காரணமாக 25 லட்சம் வாக்காளர்களும், உயிருடன் இல்லாததால் 22 லட்சம் பேரின் பெயர்களும் நீக்கப்பட்டன. கொடுக்கப்பட்ட முகவரிகளில் 9,70,000 வாக்காளர்களின் இல்லாததால் போனதால் நீக்கப்பட்டதாக ஆணையம் கூறுகிறது.

    100க்கும் மேற்பட்ட பெயர்கள் நீக்கப்பட்ட மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 20,368 ஆகும். மேலும் 200க்கும் மேற்பட்ட பெயர்கள் நீக்கப்பட்ட வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1,988 ஆகும். 7,613 வாக்குச்சாவடிகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமான பெண்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

    635 வாக்குச்சாவடிகளில் இடம்பெயர்ந்தோர் பிரிவில் நீக்கப்பட்ட பெயர்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் என்று அவர் கூறினார். இந்த புள்ளிவிவரங்களை சரிபார்ப்பது மிகவும் முக்கியம். ஒரே வாக்காளருக்கு இரண்டு EPIC எண்கள் வழங்கப்பட்ட பல வழக்குகள் இருக்கின்றன.

    எங்களிடம் அவர்களின் ரசீதுகளும் உள்ளன. இப்போது இந்த உண்மையை மறுக்க முடியாது. நாங்கள் வழங்கிய தரவுகள் தேர்தல் ஆணையத்தால் உறுதிப்படுத்தப்பட்டு சரிபார்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த தவறுகளை சரிசெய்ய வீடு வீடாகச் சென்று மீண்டும் சரிபார்க்க வேண்டிய அவசியம் உள்ளது" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×