என் மலர்
இந்தியா
- உங்கள் பிரேக்குகளை என்னால் சரிசெய்ய முடியாது, அதனால் நான் சத்தமாக அடிக்கும் ஹாரனை தருகிறேன்
- 77 நாடுகளில் ஜிஎஸ்டி உள்ளது, ஆனால் அவை ஒன்று அல்லது இரண்டு வரிகளை மட்டுமே விதிக்கின்றன.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் நேற்றைய கூட்டத்தில் பட்ஜெட் குறித்து திருவானந்தபுர காங்கிரஸ் எம்பி சசி தரூர் விமர்சித்துள்ளார்.
நேற்றைய கூட்டத்தில் அவையில் பேசிய அவர், நிதியமைச்சரின் பட்ஜெட் உரை, 'உங்கள் பிரேக்குகளை என்னால் சரிசெய்ய முடியாது, அதனால் நான் சத்தமாக அடிக்கும் ஹாரனை தருகிறேன் ' என்று கூறும் கேரேஜ் மெக்கானிக்கை நினைவூட்டியது. மேலும், நிதி மசோதா வரி செலுத்துவோரிடம் கூரையை சரிசெய்ய முடியவில்லை, ஆனால் நான் உங்களுக்கு ஒரு குடையை கொண்டு வந்தேன் என்று சொல்வது போல் இருந்தது.
இந்த நிதி மசோதா ஒட்டுவேலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. நாட்டிற்கு தெளிவு, உறுதிப்பாடு மற்றும் தீர்க்கமான தலைமை தேவைப்படும் நேரத்தில், அரசாங்கத்தின் பொருளாதார மேலாண்மை கட்டமைப்பு சவால்களால் பாதிக்கப்பட்டுள்ளது
உலகிலேயே மிகவும் குழப்பமான மற்றும் சிக்கலான ஜிஎஸ்டி கட்டமைப்பை இந்தியா கொண்டுள்ளது என்று தரூர் கூறினார்.
நாம் அனைவரும் கோரி வரும் எளிமையான வரிக்கு பதிலாக, இந்தியாவில் குழப்பமான ஜிஎஸ்டி விகிதங்கள் உள்ளன. இதில் உலகிலேயே மிக உயர்ந்த 28 சதவீத வரி அடங்கும். இருப்பினும், வரி வருவாய் இன்னும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18 சதவீதமே உள்ளது.
77 நாடுகளில் ஜிஎஸ்டி உள்ளது, ஆனால் அவை ஒன்று அல்லது இரண்டு வரிகளை மட்டுமே விதிக்கின்றன. நமது நாட்டில் இந்த பல-விகித அமைப்பு வணிகங்களுக்கான சுமையை மேலும் அதிகரித்துள்ளது என்று கூறினார்.
- பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் துணைத்தலைவர் பேசும் போது இருமொழிக் கொள்கை விவகாரத்தில் உறுதுணையாக இருப்போம் என தெரிவித்துள்ளார்.
- இருமொழி என்பது நமது கொள்கை மட்டும் அல்ல, நமது வழிக்கொள்கையும் விழிக்கொள்கையும் அதுதான்.
சென்னை:
தமிழக சட்டசபையில் மும்மொழிக் கொள்கை திணிப்பை எதிர்க்கும் கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
* எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. யாரை சந்தித்தாலும் இருமொழிக்கொள்கையை வலியுறுத்த வேண்டும்.
* பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் துணைத்தலைவர் பேசும் போது இருமொழிக் கொள்கை விவகாரத்தில் உறுதுணையாக இருப்போம் என தெரிவித்துள்ளார்.
* இருமொழி என்பது நமது கொள்கை மட்டும் அல்ல, நமது வழிக்கொள்கையும் விழிக்கொள்கையும் அதுதான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
- ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஒரு பெண் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
- கட்சி தலைவர் விஜய் செல்வதற்கென தனி வழி அமைக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் பொதுக்குழு கூட்டம் வருகிற 28-ந்தேதி திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்சன் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது.
கட்சி தொடங்கி நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் கூட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கட்சி தலைவர் விஜய் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
கூட்டத்துக்கு வரும் அனைவருக்கும் போதிய பாதுகாப்பு வசதி மற்றும் அடிப்படை வசதிகளை சிறப்பாக செய்து கொடுக்க விஜய் உத்தர விட்டுள்ளார். இதைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகளை கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் விஜய் உத்தரவுபடி இரவு பகல் பாராமல் செய்து வருகிறார்.
பொதுக்குழு கூட்டத்தில் சுமார் 2,500 பேர் பங்கேற்க இருக்கின்றனர். மாவட்டத்திற்கு 15 பேர் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது. மாவட்ட செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர், 2 துணைச் செயலாளர்கள் என 5 பேரும் 10 பொதுக்குழு உறுப்பினர்களும் பங்கேற்க இருக்கின்றனர்.
இதுதவிர ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஒரு பெண் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
கூட்டத்தில் பங்கேற்க வரும் அனைவருக்கும் நேற்று கியூ.ஆர். கோர்டுடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டையை அந்தந்த மாவட்ட செயலாளர்களிடம் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வழங்கினார். இதற்கான பணிகள் நேற்று நள்ளிரவு வரை நடந்தது.
கூட்ட அரங்குக்குள் செல்போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. அடையாள அட்டை கொடுக்கப்பட்டவர்கள் அதில் உள்ள கியூ.ஆர். கோர்டை ஸ்கேன் செய்தால் மட்டுமே அரங்கிற்குள் செல்ல முடியும்.
கூட்ட அரங்கம் முற்றிலும் துபாய் பாதுகாப்பு குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கின்றனர்.
பெண்களுக்கு என தனி இடவசதி மற்றும் அடிப்படை வசதி அரங்கத்தில் செய்யப்படுகிறது. கூட்டத்திற்கு வருவதற்கும், செல்வதற்கும் தனித்தனி நுழைவு வாயில்கள் பயன்படுத்தப்பட இருக்கிறது. கட்சி தலைவர் விஜய் செல்வதற்கென தனி வழி அமைக்கப்பட்டு உள்ளது.
கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் தமிழக மக்கள் பிரச்சனை பற்றியும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது.
பொதுக்குழு நடைபெறுவதை தொடர்ந்து கூட்டம் நடைபெறும் திருவான்மியூர் சுற்றுப்புற பகுதிகள் அனைத்தும் இப்போதே களை கட்ட தொடங்கி இருக்கிறது. சுவர் விளம் பரங்கள், பேனர்கள், ராட்சத வரவேற்பு பலூன்கள் என பல்வேறு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் கூட்டத்தில் விஜய்யின் அரசியல் அதிரடி பேச்சு பற்றி மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. கூட்டத்திற்கு இன்னும் 2 தினங்களே இருப்பதால் தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் மிகுந்த உற்சாகம் எழுந்து உள்ளது.
- தமிழும், ஆங்கிலமும் தான் தமிழ்நாட்டினுடைய இரு மொழிக் கொள்கை. அதில் எந்த மாற்றமும் இல்லை.
- இந்தி மொழி திணிப்பு மூலம் ஒரு இனத்தை ஆதிக்கம் செய்ய நினைக்கின்றனர்.
சென்னை:
தமிழக சட்டசபையில் மும்மொழிக் கொள்கை திணிப்பை எதிர்க்கும் கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
* இருமொழிக்கொள்கை விவகாரத்தில் பா.ஜ.க.வை தவிர்த்து அனைத்து கட்சிகளும் தங்களது உணர்வை வெளிப்படுத்தின.
* தமிழும், ஆங்கிலமும் தான் தமிழ்நாட்டினுடைய இரு மொழிக் கொள்கை. அதில் எந்த மாற்றமும் இல்லை.
* தமிழகத்துக்கு உரிய நிதியை தராவிட்டாலும் இனமானத்தை அடகு வைக்கும் கொத்தடிமைகள் நாங்கள் அல்ல.
* இது பண பிரச்னை அல்ல இன பிரச்னை.
* இந்தியை ஏற்காவிட்டால் பணம் தர மாட்டோம் என்று மிரட்டினாலும். பணமே வேண்டாம் என தாய்மொழியை காப்போம் என உறுதியாக உள்ளோம்.
* இந்தி மொழியால் தான் பணம் வரும் என்று கூறினால் அந்த பணமே வேண்டாம் என தீர்மானிப்போம்.
* திராவிட ஆட்சியில் தமிழ் மொழி காப்பதே இரு கண்கள்.
* யார் எந்த மொழியை கற்கவும் நாம் தடையாக இருந்ததில்லை. எந்த மொழிக்கும் எதிரானவர் அல்ல நாம்.
* இன்னொரு மொழியை திணிக்க அனுமதித்தால், அது நம் மொழியை மென்று தின்றுவிடும் என்பதை நாம் அறிவோம்.
* இந்தி மொழி திணிப்பு மூலம் ஒரு இனத்தை ஆதிக்கம் செய்ய நினைக்கின்றனர்.
* மாநிலங்களை தங்கள் கொத்தடிமைகளாக நினைப்பதாலேயே மொழியை திணிக்கிறது.
* மாநில உரிமையை நிலைநாட்டுவதற்கு தமிழ் மொழி காப்பதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்.
* மாநில சுயாட்சியை உறுதி செய்து மாநில உரிமையை நிலைநாட்டினால் தான் தமிழ் மொழியை காக்க முடியும் என்றார்.
- கர்நாடகம், பீகார், ஒடிசா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து 5-வது மாநிலமாக ஜார்க்கண்ட் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள உள்ளது.
- இந்த விவகாரத்தில் தமிழக அரசு வெற்று நாடகங்களை மட்டுமே நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தெலுங்கானா மாநிலத்தைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்திலும் அடுத்த வாரம் தொடங்கவுள்ள புதிய நிதியாண்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது.
கர்நாடகம், பீகார், ஒடிசா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து ஐந்தாவது மாநிலமாக ஜார்க்கண்ட் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள உள்ளது.
ஆந்திரா உள்ளிட்ட மேலும் சில மாநிலங்களிலும் சாதிவாரி கணக்கெடுப்பு பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசு வெற்று நாடகங்களை மட்டுமே நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது. எனவே, தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- கடந்த 20-ந்தேதி நடந்த விசாரணையின்போது, இந்த வழக்கிற்கு அமலாக்கத்துறை விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.
- டாஸ்மாக் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கைகளையும் அமலாக்கத்துறை எடுக்கக்கூடாது என்று தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தினர்.
சோதனை முடிவில் பார் உரிமம் வழங்கியது, மதுபானங்கள் கொள்முதல் செய்தது உள்ளிட்டவற்றில் 1,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுக்களில், மாநில அரசின் அனுமதி இல்லாமல் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு தடை விதிக்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரிகளையோ அல்லது ஊழியர்களையோ துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். கடந்த 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை மற்றும், அப்போது ஆவணங்களை பறிமுதல் செய்ததையும் சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி எம்.எஸ். ரமேஷ் மற்றும் நீதிபதி என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.
கடந்த 20-ந்தேதி நடந்த விசாரணையின்போது, இந்த வழக்கிற்கு அமலாக்கத்துறை விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.
அதில், என்ன குற்றச்சாட்டு? அதற்கான முகாந்திரம் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற வேண்டும் என்று தெரிவித்து வழக்கை 25-ந்தேதிக்கு (இன்று) தள்ளி வைத்தனர்.
அதுவரை டாஸ்மாக் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கைகளையும் அமலாக்கத்துறை எடுக்கக்கூடாது என்று தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
இந்த நிலையில், அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமார் அமர்வு அறிவித்துள்ளது.
எனவே இந்த வழக்கு இனி வேறொரு அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த முறை விசாரித்து ஆவணங்களை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்த நிலையில் நீதிபதிகள் விலகல் முடிவை எடுத்துள்ளனர்.
- 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பு செய்வதை தள்ளி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்.
- தமிழ்நாட்டில் இருந்து பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் எம்.பி.க்களை எல்லாம் அழைத்துச் சென்று பிரதமரை சந்திக்க இருக்கிறோம் என்று கூறினார்.
சென்னை:
பாராளுமன்றத் தொகுதிகளை மறுசீரமைக்க 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகள் நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அவ்வாறு தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தமிழ்நாட்டில் எம்.பி.க்களின் பிரதிநிதித்துவம் 39-ல் இருந்து 31-ஆக குறைந்து விடும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிவருகிறார். தென் மாநிலங்களில் இதே போல் ஒவ்வொரு மாநிலத்திலும் எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் அபாயம் உள்ளதாகவும் எனவே, 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பு செய்வதை தள்ளி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்.
கடந்த சனிக்கிழமை (22-ந்தேதி) நடைபெற்ற கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அதுமட்டுமின்றி தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றக் கூட்டத்தொடரில் இதுகுறித்து கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் பிரதமரை சந்தித்து கடிதம் அளித்து முறையிடுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து சட்டசபையில் நேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்பின்போது பாதிக்கப்படும் மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுத்திட நியாயமான தொகுதி மறுசீரமைப்பை பெற்றிட தமிழ்நாட்டில் இருந்து பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் எம்.பி.க்களை எல்லாம் அழைத்துச் சென்று பிரதமரை சந்திக்க இருக்கிறோம் என்று கூறினார். இதைத்தொடர்ந்து பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு தமிழக அரசு சார்பில் இன்று கடிதம் அனுப்பப்படுகிறது.
பிரதமர் மோடி அடுத்த மாதம் (ஏப்ரல்) முதல் வாரம் வெளிநாடு செல்ல இருப்பதால் அதற்கு முன்னதாகவே இவர்களை சந்திப்பதற்கு அனுமதி கொடுப்பார்களா? என்பது குறித்து இன்று அல்லது நாளை தெரிந்து விடும்.
- ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு இருந்தார்.
- சிவசேனா கட்சியினர் மிரட்டல் விடுத்தினர்.
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்யும் வகையில் அவதூறாக பேசிய நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா மன்னிப்பு கேட்க மறுத்த சம்பவம் அம்மாநில அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. முன்னதாக குணால் கம்ரா தனது நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு இருந்தார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட நிலையில், சிவசேனா கட்சியினர் குணால் கம்ரா சர்ச்சை கருத்து கூறிய ஸ்டூடியோவை அடித்து நொறுக்கினர். மேலும், குணால் கம்ரா தான் பேசியதற்கு கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிவசேனா கட்சியினர் மிரட்டல் விடுத்தினர்.
பிறகு, அந்த ஸ்டூடியோ விதிகளை மீறி கட்டப்பட்டு இருப்பதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் அதனை இடித்துத் தள்ளினர். சிவசேனா கட்சியினர் கொதிப்படைந்துள்ள நிலையில், குணால் கம்ரா தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்த நிலையில், மகாராஷ்டிரா அரசு அதிகாரிகள் தொடங்கி மாநில அமைச்சர்கள் வரை குணால் கம்ராவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அம்மாநில உள்துறை அமைச்சர் யோகேஷ் ராம்தாஸ் கதம் இது குறித்து கூறும் போது, "உச்சநீதிமன்றம், இந்திய பிரதமர், இந்து கடவுள்களை அவமதிப்பாய் எனில், நீ தண்டனை அனுபவிக்க வேண்டும். நீ செய்ததை ஏற்றுக் கொள்ளவே முடியாது. மகாராஷ்டிரா அல்லது இந்தியாவில் இதுபோல் நடந்து கொள்ள முடியாது. நாங்கள் நகைச்சுவையை ஏற்றுக் கொள்வோம், ஆனால் இத்தகைய நகைச்சுவை மகாராஷ்டிராவில் ஏற்றுக் கொள்ளப்படாது," என தெரிவித்தார்.
இதேபோல் அமைச்சர் குலாப் ரகுநாத் பாட்டீல் இதுகுறித்து கூறும்போது, "அவர் மன்னிப்பு கேட்காவிட்டால், நாங்கள் அவரிடம் எங்கள் மொழியில் பேசுவோம். சிவசேனா அவரை விட்டுவிடாது.. இந்த அவமானத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம், மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அவர் வெளியில் வந்து எங்கு மறைந்து கொள்ள முடியும்? சிவசேனா அதன் உண்மை முகத்தை காண்பிக்கும்," என்று எச்சரிக்கை விடுத்தார்.
முன்னதாக மகாராஷ்டிரா மாநிலத்தின் கார் காவல் துறை சார்பில் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா விசாரணை அதிகாரியிடம் இன்று ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக குணால் கம்ரா மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
- காலை 6 மணி முதல் 7 மணி வரை நகை பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது.
- நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக அனைத்து காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் 8-க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது.
திருவான்மியூர், பெசன்ட் நகர், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் நகை பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. காலை 6 மணி முதல் 7 மணி வரை இந்த நகை பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது.
இந்த சம்பவம் 1 மணி நேரத்தில் நடந்துள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இந்த கும்பல் பள்ளிக்கரணையில் இருந்து கிளம்பி அடையாறு, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 1 மணிநேரத்தில் கைவரிசை காட்டிவிட்டு தலைமறைவாகி உள்ளது போலீசாரின் சிசிடிவி காட்சிகள் ஆய்வில் தெரிய வந்தது.
நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக அனைத்து காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சென்னையில் ஒரே நாளில் நடந்த தொடர் நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விமான நிலையத்தில் போர்டிங் முடிந்து விமானத்தில் ஏறுவதற்கு தயாரானபோது அவர்கள் 2 பேரையும் சுற்று வளைத்த போலீசார் கைது செய்தனர்.
கொள்ளையர்கள் ஐதராபாத்திற்கு தப்பி செல்ல முயன்றதும், அவர்கள் உ.பி.யை சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- சோலார் பேனல் குறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கருப்பண்ணன் பேசினார்.
- சாரி... சாரி.. பழக்க தோஷத்தில் பேசிட்டேன்" என்று கருப்பண்ணன் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டசபையில் இன்று வினாக்கள், விடைகள் நேரம் நடைபெற்று வருகிறது. உறுப்பினர்கள் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
அப்போது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கருப்பண்ணன் "தனியார் நிறுவனங்களில் சோலார் பேனல் நிறைய அமைத்து வருகிறார்கள். அதில் EB கொள்திறன் 100 கிலோவால்ட் தான் அனுமதி வழங்குகிறார்கள். வெயில் காலங்களில் 100 கிலோவால்ட் போதுமானதாக இல்லை ஆகவே 120 கிலோவால்ட் அனுமதி கொடுத்தால் நன்றாக இருக்கும். இது மாப்பிள்ளைக்கு (செந்தில் பாலாஜி) தெரியும்" என்று பேசவே அவையில் சிரிப்பலை எழுந்தது.
இதனையடுத்து, சாரி... சாரி.. பழக்க தோஷத்தில் பேசிட்டேன்" என்று கருப்பண்ணன் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "இது தொடர்பாக துறை அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணப்படும்" என்று தெரிவித்தார்.
- எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முடியாது.
- ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது.
இஸ்லாமாபாத்:
காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் அடிக்கடி ஐ.நா. சபையில் எழுப்பி வருகிறது. இதற்கு இந்தியா தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.
இதற்கிடையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஐ.நா. அமைதிகாக்கும் படையின் எதிர்காலம் குறித்த விவாதத்தின் போது பாகிஸ்தான் பிரதமரின் சிறப்பு உதவியாளர் சையத் தாரிக் பாத்தேமி, ஜம்மு-காஷ்மீர் குறித்து பேசி இருந்தார். இதற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
இதுதொடர்பாக ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி தூதர் பர்வ தனேனி ஹரிஷ், பாதுகாப்பு கவுன்சிலில் பேசியதாவது:-
ஜம்மு-காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் குறிப்பிடுவதற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறோம். பாகிஸ்தானின் பிரதிநிதி ஜம்மு-காஷ்மீர் என்ற இந்திய யூனியன் பிரதேசம் குறித்து மீண்டும் தேவையற்ற கருத்துக்களை தெரிவித்து உள்ளார். இது ஆதாரமற்றது.
இதுபோன்ற தொடர்ச்சியான கருத்துக்களால் அவர்களின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முடியாது. ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது. தற்போதும் உள்ளது. எப்போதும் இருக்கும்.
ஜம்மு-காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் தொடர்ந்து சட்டவிரோத மாக ஆக்கிரமித்து உள்ளது. அங்கிருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும். இந்த மன்றத்தின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்க வேண்டாம் என்று பாகிஸ்தானுக்கு நாங்கள் அறிவுறுத்துகி றோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- டிரோன்கள், காமிராக்கள் உள்ளிட்டவைகளை எடுத்துச் சென்று படப்பிடிப்பு.
- அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு வனப்பகுதியில் தடை செய்யப்பட்ட இடத்திற்குள் துப்பாக்கிகள், டிரோன்கள், காமிராக்கள் உள்ளிட்டவைகளை எடுத்துச் சென்று படப்பிடிப்பு நடத்திய ஆவண படக்குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுபற்றிய விவரம் வரு மாறு:-
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் அரணாமலை அருகே உள்ள மாப்பிளா தாளமுடி வன மண்ட லத்துக்கு உட்பட்ட பகுதியில் சிலர் உரிய அனுமதி பெறாமல் அத்துமீறி சென்று படப்பிடிப்பு நடத்துவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.
அதன்பேரில் அதிகாரிகள் வினோத், ரிஜேஷ் ஆகியோர் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
அப்போது தடை செய்யப பட்ட வனப்பகுதிக்குள் ஆவணப்பட குழுவினர் போலி துப்பாக்கிகள், புகை துப்பாக்கிகள், டிரோன்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி படப்பிடிப்பு நடத்தினர். இதையடுத்து படப்படிடிப்பு நடத்தியவர்களை வனத்துறையினர் சுற்றிவளைத்து பிடித்தனர்.
அவர்களிடமிருந்து படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட காமிராக்கள், டிரோன்கள், துப்பாக்கிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், ஆவணப் படங்கள் எடுக்கும் குழுவினர் என்றும், ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
ஆவணப்படம் எடுப்பதற்காக கேரளா வந்த அவர்கள், இங்குள்ளவர்கள் சிலரின் உதவியுடன் வனப்பகுதிக்குள் சென்று படப்பிடிப்பு நடத்தி இருக்கின்றனர். அவர்கள் சென்ற பகுதி தடை செய்யப்பட்ட பகுதி என்பதால் படப்பிடிப்பை நிறுத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிந்து ஆவண பட குழுவினரான ஐதராபாத்தை சேர்ந்த ஹரிநாத், சைதன்ய சாய், ரமேஷ்பாபு, ரேவந்த் குமார், கேரள மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீஹரி, அபிராஜ், பவன் பி. நாயர், பிரவீன் ராய், மற்றொரு ஸ்ரீஹரி, சருண் கிருஷ்ணா, அதுல், முகமது அப்துல் மஜீத், சஞ்சல் பிரசாத் உள்ளிட்ட 15 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஹரிநாத் என்பவர் தான் ஆவண படத்தின் இயக்குனராக செயல்பட்டுள்ளார். கைதானவர்களின் மீது தடை செய்யப்பட்ட வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து படப்பிடிப்பு நடத்தியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது.






