search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிருங்கேரியின் பஞ்ச மகா கணபதிகள்
    X

    சிருங்கேரியின் பஞ்ச மகா கணபதிகள்

    கணபதியை ஆராதனை தெய்வமாகக் கொண்டுள்ள பக்தர்களுக்கு சிருங்கேரியில் அருட்பரவசம் நிறைந்த விருந்தே காத்திருக்கிறது. சிருங்கேரியின் பஞ்சமகாகணபதிகள் (5 கணபதிகள்) மிகப்பிரசித்தி பெற்றவர்கள்.
    கணபதியை ஆராதனை தெய்வமாகக் கொண்டுள்ள பக்தர்களுக்கு சிருங்கேரியில் அருட்பரவசம் நிறைந்த விருந்தே காத்திருக்கிறது என்று கூறினும் அது மிகையாகாது. சிருங்கேரியின் பஞ்சமகாகணபதிகள் (5 கணபதிகள்) மிகப்பிரசித்தி பெற்றவர்கள்.

    1200 வருடங்களுக்கும் மேலாக ஜகத்குருக்களின் பூஜையில் இருந்து வரும் ஸ்படிகத்திலான ஸ்ரீ ரத்னகர்ப கணபதி, ஸ்ரீ சாரதாம்பாள் ஆலயத்தினுள் வீற்றிருக்கும் ஸ்ரீ சக்தி கணபதி, ஸ்ரீ வித்யாசங்கரர் ஆலயத்தினுள் வீற்றிருக்கும் ஸ்ரீ வித்யா கணபதி, மடத்துள் நுழைந்தவுடன் முதலாவதாக, ஒருநிலைப்படியில் இருந்து அருள் பொழியும் ஸ்ரீ தோரண கணபதி மற்றும் ஸ்ரீ மலகானிகரேசுவரர் ஆலயத்தினுள் ஒரு தூணில் 400 வருடங்களுக்கு முன் 24-ம் ஜகத்குருவால் மஞ்சள் கிழங்கினைக் கொண்டு வரையப்பட்டு நாளடைவில் ஒரு முழு சிற்பமாகவே புடைத்தெழுந்த ஸ்ரீ ஸ்தம்ப கணபதி ஆகிய ஐந்து கணபதிகளும் பக்தர்களால் தினமும் வழிபடப்படும் கடவுளர்களாக விளங்கி வருகின்றனர்.

    ஸ்ரீ சக்தி கணபதிக்கு செய்யப்படும் பிரதோஷ பூஜை பக்தர்களை மெய்மறக்கச் செய்யும் ஒன்றாகும்.
    Next Story
    ×