search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முருகனுக்கு யானை வாகனம்
    X

    முருகனுக்கு யானை வாகனம்

    திருத்தணியில் உள்ள முருகப்பெருமானின் ஆலயத்தில், அவருக்கு மயிலுக்குப் பதிலாக யானையே வாகனமாக இருக்கிறது. இதற்கான காரணத்தை பார்க்கலாம்.
    திருச்செந்தூரில் சூரனை வதம் செய்து, தேவர்களைக் காத்து அருளினார் முருகப்பெருமான். இதற்கு பிரதிபலனாக, இந்திரன் தனது மகளான தெய்வானையை முருகப்பெருமானுக்கு மணம் முடித்து வைத்தான்.

    திருப்பரங்குன்றம் திருத்தலத்தில் திருமணம் முடிந்ததும், தெய்வானையுடன் திருத்தணியில் போய் அமர்ந்தார் முருகப்பெருமான். தெய்வானைக்கு சீதனமாக ஐராவதம் யானை வழங்கப்பட்டதாக புராணம் கூறுகிறது.

    எனவே திருத்தணியில் உள்ள முருகப்பெருமானின் ஆலயத்தில், அவருக்கு மயிலுக்குப் பதிலாக யானையே வாகனமாக இருக்கிறது.
    Next Story
    ×