என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
Byமாலை மலர்8 Jun 2017 5:24 AM GMT (Updated: 8 Jun 2017 5:24 AM GMT)
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். முருக பெருமான் பிறந்த நாளான வைகாசி விசாக தினத்தன்று அவரை வழிபட்டால், ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 10 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
கோவிலுக்கு புஷ்ப காவடி எடுத்து ஆடிப்பாடி வந்த பக்தர்கள்.
மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி, விழாவின் முக்கிய நிகழ்வான முனிகுமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இரவில் ராக்கால அபிஷேகம் நடந்தது. பின்னர் தங்க சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து மீண்டும் கோவிலுக்கு சென்று சேர்ந்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் முன்பு குவிந்திருந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியினரை படத்தில் காணலாம்.
வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பச்சை மற்றும் காவி நிற உடை அணிந்து பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்தனர். பெரும்பாலான பக்தர்கள் புஷ்ப காவடி, இளநீர் காவடி, பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் கோவில் கிரி பிரகாரத்தில் அங்கபிரதட்சணம் செய்தும், பெண்கள் அடிபிரதட்சணம் செய்தும் வழிபட்டனர்.
விழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகம், மண்டபங்களில் பக்தர்கள் குடும்பத்தினருடன் தங்கியிருந்து முருக பெருமானின் திருப்புகழை பாடியவாறு வழிபட்டனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. ஆங்காங்கே பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், குளிர்பானம், மோர் ஆகியவற்றை தன்னார்வலர்கள் வழங்கினர். பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 10 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
கோவிலுக்கு புஷ்ப காவடி எடுத்து ஆடிப்பாடி வந்த பக்தர்கள்.
மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி, விழாவின் முக்கிய நிகழ்வான முனிகுமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இரவில் ராக்கால அபிஷேகம் நடந்தது. பின்னர் தங்க சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து மீண்டும் கோவிலுக்கு சென்று சேர்ந்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் முன்பு குவிந்திருந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியினரை படத்தில் காணலாம்.
வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பச்சை மற்றும் காவி நிற உடை அணிந்து பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்தனர். பெரும்பாலான பக்தர்கள் புஷ்ப காவடி, இளநீர் காவடி, பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் கோவில் கிரி பிரகாரத்தில் அங்கபிரதட்சணம் செய்தும், பெண்கள் அடிபிரதட்சணம் செய்தும் வழிபட்டனர்.
விழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகம், மண்டபங்களில் பக்தர்கள் குடும்பத்தினருடன் தங்கியிருந்து முருக பெருமானின் திருப்புகழை பாடியவாறு வழிபட்டனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. ஆங்காங்கே பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், குளிர்பானம், மோர் ஆகியவற்றை தன்னார்வலர்கள் வழங்கினர். பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X