search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைகாசி விசாக திருவிழா"

    • நாளை சிறப்பு பூஜைகள் நடக்கிறது
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    வடவள்ளி,

    கோவையை அடுத்த மருதமலையில் சுப்பிரமணியசு வாமிகோவில் உள்ளது. இந்த கோவிலில் நாளை (ஞாயிற் றுக்கிழமை) வைகாசி விசாக நிகழ்ச்சி கொண்டாடப்படு கிறது. இதையொட்டி காலை 6 மணிக்கு கோ பூஜை நடைபெறுகிறது.

    தொடர்ந்து காலை 6.30 மணிக்கு மூலவருக்கு பன்னீர், ஜவ்வாது, சந்தனம், உட்பட 16 வகையான வாசனை திர வியங்களால் அபிஷேகமும், சிறப்பு அலங்காரம் மற்றும் வைர நகைகள் பொறிக்கப்பட்ட தங்க கவச உடையில் சுவாமி காட்சியளிக்கிறார்.

    பின்னர் பக்தர்கள் பால்குடம், காவடிகளை பாதயாத் திரையாக எடுத்துக்கொண்டு கோவிலுக்கு வரும் நிகழ்ச்சியும், பிற்பகல் 12 மணிக்கு பக்தர்கள் கொண்டு வரும் பால் குடங்கள் மூலம் சுப்பிரமணிய சுவாமிக்கும் வள்ளி தெய்வானைக்கும் மூலவருக்கும் பால் அபிஷேகம் நடைபெறுகிறது.

    மாலை 4 மணிக்கு மீண்டும் மூலவருக்கு அபிஷேகம் தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு தங்க ரதத்தில் சுவாமி வள்ளி தெய்வானையுடன் வீதியுலா வரும் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு ராக்கால அபிஷேகம், மற்றும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

    இதுபோல் மருதமலை அடிவாரத்தில் உள்ள வள்ளியம் மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இதைதொ டர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    அதுபோன்று மலையடிவாரத்தில் வேல்கோட்டம் தியான மண்டபம் உள்ளது. இந்த கோவிலில் வேலே பிர தானமாக வழிபாடு செய்யப்படுகிறது. இங்கும் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெ றுகிறது.

    • பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் வீதி உலா
    • நள்ளிரவு வரை வழிநெடுகிலும் பக்தர்கள் வழிபாடு

    கன்னியாகுமரி :

    உலகப் புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இந்த திருவிழா வருகிற 12-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. 4-ம் திருவிழாவான நேற்று மாலை திருவாவடு துறை ஆதீன மண்டகப்படி நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து சமய உரையும் நடந்தது. பின்னர் பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் அமைப் பின் சார்பில் பக்தி பல்சுவை நிகழ்ச்சி நடந்தது.

    இதில் சிறுவர்-சிறுமிகள் விநாயகர், முருகன், மதுரை மீனாட்சி அம்மன், சரஸ்வதி அம்மன், கன்னி யாகுமரி பகவதி அம்மன், கிருஷ்ணன், ராதை போன்ற தெய்வங்களின் வேட மணிந்த தத்ரூப காட்சி நடந்தது.

    மேலும் நாட்டிய நடன நிகழ்ச்சிகளும் நடந்தது. அதன்பிறகு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி மேள தாளங்கள் முழங்க வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது.

    கோவிலிலிருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி சன்னதி தெரு, தெற்கு ரத வீதி, மேல ரதவீதி, வடக்கு ரதவீதி, நடுத்தெரு, கீழரத வீதி வழியாக கன்னியம்பலம் மண்டபத்தை சென்றடைந்தது.

    அந்த மண்டபத்துக்குள் அம்மன் சிறிது நேரம் இளைப்பாறும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பிறகு அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் அங்கி ருந்து வாகன பவனி புறப்பட்டு சன்னதி தெரு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

    நள்ளிரவு வரை வழிநெடுகிலும் பக்தர்கள் வாக னத்தில் எழுந்தருளி இருந்த அம்மனுக்கு தேங்காய் பழம் படைத்து "திருக்கணம்"சாத்தி வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    5-வது நாளான இன்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு சினிமா பட தயாரிப்பாளர்கள் கே.எஸ். போஸ், விஷ்ணுராம் ஆகியோர் ஏற்பாட்டில் பகவதி அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், இளநீர், பன்னீர், நெய், தேன், மஞ்சள் பொடி, சந்தனம், களபம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்ட னர். முன்னதாக சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. காலை 11 மணிக்கு அம்மனுக்கு தங்கக் கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்த நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து 11-30 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனையும் பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடந்தது. மாலை 6 மணிக்கு சமய உரையும் இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகமும் நடக்கிறது.

    அதனைத் தொடர்ந்து 8 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் 9 மணிக்குசிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 12-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    • திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 3-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி வருகிற 12-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    3-ம் திருவிழா நாளான நேற்று மாலை சமய உரையும் அதைத் தொடர்ந்து பக்தி பஜனையும் நடந்தது. அதன் பிறகு பல வண்ண மலர்களால் அலங்கரிக்க ப்பட்ட அன்ன வாகனத்தில் அம்மன் எழுந்தருளி மேள தாளங்கள் முழங்க வீதி உலா சென்றார்.

    வழிநெடுகிலும் பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய் பழம் படைத்து "திருக்கணம்" சாத்தி வழி பட்டனர். விழாவின் 4-வது நாளான இன்று (திங்கட்கி ழைமை) அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு தேவி குமரி வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் பகவதி அம்மனுக்கு பால், தயிர், எண்ணெய், இளநீர், பன்னீர், நெய், தேன், மஞ்சள்பொடி, சந்தனம், களபம், குங்குமம், பஞ்சா மிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக வெள்ளி காம தேனு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. காலை 11 மணிக்கு அம்மனுக்கு தங்கக் கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்த நிகழ்ச்சி நடந்தது.

    அதைத் தொடர்ந்து 11-30 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனையும் பகல் 12 மணிக்கு அன்ன தானமும் நடந்தது. மாலை 6 மணிக்கு சமய உரையும் இரவு 7 மணிக்கு கன்னியா குமரி பிரம்ம குமாரிகள் பிரஜாபிதா ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பி ல் பக்தி பல்சுவை நிகழ்ச்சி யும் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.


    கோவில் திருவிழா காலங்களில் 10 நாட்களும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு நடைபெறும் அபிஷேகத்துக்குரிய புனித நீர், கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள சக்ர தீர்த்த காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள கிணற்றில் இருந்து வெள்ளிக் குடத்தில் எடுக்கப்பட்டு நெற்றிப் பட்டம் அணிவித்து அலங்க ரிக்கப்பட்ட யானை மீது வைத்து கொண்டு வரப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டு வைகாசி விசாக 4-ம்திருவிழாவான இன்று வரை புனித நீரை யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரவில்லை. அதற்கு பதிலாக கோவில் அர்ச்சகர் 3 கிலோமீட்டர் தூரம் நடந்தே பகவதி அம்மன் கோவிலுக்கு புனித நீரை கொண்டு வருகிறார். இந்த நிகழ்ச்சி பக்தர்களின் மனதை வேதனை அடைய செய்துஉள்ளது.

    இதுபற்றி கோவில் நிர்வாகத்திடம் கேட்ட போது விழாவுக்கு யானை பயன்படுத்துவதற்கு வனத்துறை அனுமதி பெற வேண்டும் என்றும் அதில் சில கட்டுப்பாடுகள் இருப்ப தாகவும் தெரிவித்தனர்.

    • கன்னியாகுமரி கோவிலில் வைகாசி விசாக 2-ம் திருவிழாவையொட்டி கிளி வாகனத்தில் பகவதி அம்மன் வீதி உலா.
    • வழி நெடுகிலும் பக்தர்கள் திரண்டு வழிபாடு

    கன்னியாகுமரி:


    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா 12-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

    2-ம் திருவிழாவான நேற்று மாலை சமய உரையும் அதைத் தொடர்ந்து வயலின் இன்னிசை கச்சேரியும் நடந்தது. அதன்பிறகு அம்மன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கிளி வாகனத்தில் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது.

    கோவிலிலிருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி சன்னதி தெரு, தெற்கு ரத வீதி, மேல ரதவீதி, வடக்கு ரதவீதி, நடுத்தெரு, கீழரத வீதி வழியாக கன்னியம்பலம் மண்டபத்தை சென்றடைந்தது. அந்த மண்டபத்துக்குள் அம்மன்சிறிதுநேரம் இளைப்பாறும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பிறகு அம்மனுக்கு தீபாராதனை நடந்தது.

    பின்னர் அங்கிருந்து வாகன பவனி புற ப்பட்டு சன்னதி தெரு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. வழிநெடு கிலும் பக்தர்கள் வாகன த்தில் எழுந்தருளி இருந்த அம்மனுக்கு தேங்காய் பழம் படைத்து "திருக்க ணம்"சாத்தி வழிபட்டனர்.

    நிகழ்ச்சியில் திர ளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.3-வது நாளான இன்று அதி காலை 5மணி மற்றும் காலை 10 மணிக்கு தமிழக சட்டமன்ற பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் பகவதி அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், இளநீர், பன்னீர், நெய், தேன், மஞ்சள் பொடி, சந்தனம், களபம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


    முன்னதாக அன்ன வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. காலை 11 மணிக்கு அம்மனுக்கு தங்கக் கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்த நிகழ்ச்சி நடந்தது.


    அதைத் தொடர்ந்து 11-30 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனையும் பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடந்தது. மாலை 6 மணிக்கு சமய உரையும் இரவு 7 மணிக்கு பக்தி பஜனையும்9மணிக்கு அம்மன் அன்ன வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம்10 நாட்கள் விசாக திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆண்டுக்கான வைகாசி விசாக பெருந்திருவிழா வருகிற 3-ந்தேதி கொடியேற்றத் துடன் தொடங்குகிறது.

    இந்த திருவிழா 12-ந் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் 11-30 மணிக்கு அலங்கார தீபாராதனையும் பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானமும் மாலை 6 மணிக்கு சமய உரையும் இரவு 9 மணிக்கு அம்மன் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    வைகாசி விசாக திருவிழாவையொட்டி வருகிற 2-ந்தேதி மாலை 5 மணிக்கு கோட்டார் இளங்கடை பட்டாரியர் சமுதாய ருத்ரபதி விநாயகர் செவ்விட்ட சாஸ்தா டிரஸ்ட் சார்பில் கொடிப்பட்டம் மரபுபடி விவேகானந்தபுரம் சந்திப்பில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 

    இரவு 7 மணிக்கு மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான நிகழ்ச்சி யாக கன்னியாகுமரியைச் சேர்ந்த கிறிஸ்தவ மீனவர்கள் கொடிமர கயிறை மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் ஒப்படைக்கிறார்கள்.

    அதைத் தொடர்ந்து 1-ம்திரு விழாவான 3-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் திருக்கொடியேற்றம் நடக்கி றது. இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் 9 மணிக்கு அம்மன் பூப்பந் தல் வாகனத்தில் எழுந்த ருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 

    2-ம் திருவிழாவான 4-ந்தேதி காலை 7 மணிக்கு பல்லக்கில் அம்மன் வீதி உலா வருதலும் இரவு 7 மணிக்கு வயலின் இன்னிசையும் 9 மணிக்கு கிளி வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் நடக்கிறது.

    3-ம் திருவிழாவான 5-ந்தேதி காலை 7 மணிக்கு அன்ன வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் இரவு 7 மணிக்கு பக்தி பஜனையும் 9மணிக்கு அன்ன வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் நடக்கிறது.

    4-ம்திருவிழாவான 6-ந் தேதி காலை 6 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் மாலை 5 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 7 மணிக்கு பக்தி பல்சுவை நிகழ்ச்சியும் 9 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் நடக்கிறது.

    5-ம் திருவிழாவான7-ந்தேதி காலை 6 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகமும் 8 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் நடக்கிறது.

    6-ம் திருவிழாவான8-ந்தேதி காலை 7 மணிக்கு யானை வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் 9 மணிக்கு இந்திர வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் நடக்கிறது.

    7-ம் திருவிழாவான 9-ந்தேதி அதிகாலை5-30 மணிக்கு பல்லக்கில் அம்மன் வீதி உலா வருதலும் பிற்பகல்3-30 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 7 மணிக்கு பரதநாட்டியமும் இரவு 9 மணிக்கு வெள்ளி இமயகிரி வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் நடக்கிறது.

    8ம் திருவிழாவான 10-ந்தேதி மாலை 5 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 7 மணிக்கு தேவார இன்னிசையும் 8-30மணிக்கு அம்மன் கொலுசு தேடும் நிகழ்ச்சியும் 9 மணிக்கு பூப்பந்தல் வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் நடக்கிறது. 

    9-ம் திருவிழாவான 11-ந்தேதி காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் திருத்தேர் வடம் தொட்டு இழுத்துதேரோட்டம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
    இதில் தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோதங்கராஜ் தேர் வடம் தொட்டு இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    இதில் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், எம்.பி.க்கள் விஜய்வசந்த், விஜயகுமார், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கன்னியா குமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், துணைத்தலைவர் ஜெனஸ்மைக்கேல் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் ஆனிரோஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள். தேர் நிலைக்கு நின்றதும் பகல் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.

    மாலை 6.30 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 7.30 மணிக்கு தேவார இன்னிசையும் 8.45 மணிக்கு பக்தி பஜனையும் 9 மணிக்கு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் நடக்கிறது.

    10-ம் திருவிழாவான 12-ந்தேதி  காலை 9 மணிக்கு  மேல் 10 மணிக்குள் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டுநிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 8 மணிக்கு நர்த்தனபஜனையும் நடக்கிறது. 

    9- மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது. நள்ளிரவு 11 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்ம னுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.
    ×