search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vaikasi Visakha Festival"

    • 12 மணி அளவில் சுவாமிக்கு பால்குடம் அபிஷேகம், அதை தொடர்ந்து சத்துரு சம்கார மகா ஹோமம், மகா அபிஷேகம், மகா தீபாரா தனை நடைபெற்றது.
    • விழாவையொட்டி லட்சார்ச்சனை, அபிஷேகம், மகாதீப ஆராதனை, தங்க மயில், தங்கரதம் புறப்பாடு, நிகழ்ச்சிகள் நடைபெற்றன

    கோபி, ஜூன். 2-

    கோபிசெட்டிபாளையம் பச்சைமலை சுப்பிரமணிய சாமி கோவில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த 30-ந் தேதி விநாயகர் பூஜையுடன் தொடங்கியது.

    விழாவையொட்டி லட்சார்ச்சனை, அபிஷேகம், மகாதீப ஆராதனை, தங்க மயில், தங்கரதம் புறப்பாடு, நிகழ்ச்சிகள் நடைபெற்றன

    முக்கிய நிகழ்ச்சியான வைகாசி விசாகத் திருவிழா இன்று 2-ந் தேதி நடை பெற்றது. இதையொட்டி சுப்பிரமணியருக்கு காலை 9 மணி முதல் 11 மணி வரை 108 லிட்டர் பால்ஊற்றி தாராபிஷேக நிகழ்ச்சி நடை பெற்றது.

    இதை தொடர்ந்து 12 மணி அளவில் சுவாமிக்கு பால்குடம் அபிஷேகம், அதை தொடர்ந்து சத்துரு சம்கார மகா ஹோமம், மகா அபிஷேகம், மகா தீபாரா தனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்க ப்பட்டது.

    இந்நிகழ்ச்சிகளில் கோபி செட்டிபாளையம், கரட்டூர், நாயக்கன் காடு, நல்ல கவுண்டன் பாளையம், கரட்டடிபா ளையம்,

    குன்ன த்தூர் கெட்டி செவியூர், கொளப்பலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.

    • 16 வகையான அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றது.
    • அனைத்து முருகன் கோவில்களிலும் வைகாசி விசாக திருவிழா இன்று நடைபெற்றது.

    தாராபுரம்:

    தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் வைகாசி விசாக திருவிழா இன்று நடைபெற்றது. தாராபுரத்தில் பழைய காவல் நிலைய வீதியில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் இன்று வைகாசி திருவிழா நடைபெற்றது .

    நிகழ்ச்சிக்கு முன்பாக மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் 500 லிட்டர் பாலினை தாராபுரம் அமராவதி ஆற்றில் இருந்து தலையில் சுமந்து சோலை கடைவீதி, மாரியம்மன் கோவில் வழியாக பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலை வந்தடைந்தனர். பின்னர் பாலாபிஷேகம் உட்பட 16 வகையான அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்று சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    • சென்னிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 12-ந் தேதி நடக்கிறது.
    • ஊஞ்சலூர் அருகே காவிரி ஆற்றில் இருந்து சென்னிமலைக்கு தீர்த்தம் எடுத்து வரப்படுகிறது
    • மாலை சந்தன காப்பு அலங்கா ரத்தில் மகா தீபாராதனை, சுவாமி புறப்பாடு நடக்கிறது.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் முருக பெருமானின் அவதார தினமான வைகாசி விசாகத்தை முன்னிட்டு 66-வது ஆண்டு வைகாசி விசாக பெருவிழா வருகிற 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி வரும் 11-ந் தேதி மாலை ஊஞ்சலூர் அருகே காவிரி ஆற்றில் இருந்து சென்னிமலைக்கு தீர்த்தம் எடுத்து வரப்படு கிறது. தொடர்ந்து 12-ந் தேதி காலை 7.30 மணிக்கு சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க காவிரி திருமஞ்சன தீர்த்தம் ஊர்வலமாக புறப்பட்டு மலை கோவிலை சென்று அடைகிறது.

    இதை தொடர்ந்து முருகன் கோவிலில் அன்று காலை கணபதி ேஹாமத்து டன் தொடங்கி கலசஸ்தா பனம், 108 சங்குஸ்தாபனம், ஜெபம், ஓமம் நடக்கிறது. மதியம் முருகப்பெருமானுக்கு பஞ்சாமிர்தம், தேன், பழங்கள், பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பொரு ட்களால் அபிேஷகம் செய்யப்படுகிறது. மாலை சந்தன காப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடக்கிறது. அதை தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடக்கிறது.

    விழாவை யொட்டி வரும் 12-ந் தேதி காலை முதல் இரவு வரை மலை அடிவாரத்தில் உள்ள அருணகிரிநாதர் மடத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அருள்குமார் தலைமையில் அருணகிரிநாதர் மடம் மற்றும் கிருத்திகை விசாக குழுவினர் செய்து வருகின்றனர்.

    ×