search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டி20 உலகக்கோப்பை 2024: ஹசரங்கா தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு
    X

    டி20 உலகக்கோப்பை 2024: ஹசரங்கா தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு

    • அனுபவ வீரரான ஏஞ்சலோ மேத்யூஸிற்கும் இலங்கை அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • ரிஸர்வ் வீரர்கள் பட்டியலில் விஜயகாந்த் வியாஸ்காந்த் இடம் பெற்றுள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ந் தேதி தொடங்குகிறது. இத்தொடருக்கு தயாராகும் வகையில் 20 அணிகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன.

    இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்ததந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இலங்கை அணியை இன்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது,

    அதன்படி 15 பேர் அடங்கிய இந்த அணியின் கேப்டனாக ஹசரங்கா நியமிக்கப்பட்டுள்ளார். சரித் அசலங்கா துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளர். மேலும் அனுபவ வீரரான ஏஞ்சலோ மேத்யூஸிற்கும் இலங்கை அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இலங்கை அணிக்காக 6-வது முறையாக டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடவுள்ளார்.

    டி20 உலகக்கோப்பை தொடருக்கான இலங்கை அணி:

    வனிந்து ஹசரங்க (கேப்டன்), சரித் அசலங்கா, குசல் மெண்டிஸ், பதும் நிஷங்கா, கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரமா, ஏஞ்சலோ மேத்யூஸ், தசுன் ஷனகா, தனஞ்செயா டி சில்வா, மஹீஸ் தீக்ஷன, துனித் வெல்லலாகே, துஷ்மந்த சமீர, நுவன் துஷார, மதீஷா பதிரானா, மற்றும் தில்ஷன் மதுஷங்க.

    ரிஸர்வ் வீரர்கள்: அஷித ஃபெர்னாண்டோ, விஜயகாந்த் வியாஸ்காந்த், பானுக ராஜபக்ஷ, ஜனித் லியானகே.

    Next Story
    ×