search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    கனவில் கூட RCB-யை வெச்சு செய்யனும்.. வன்மத்தை கொட்டித்தீர்த்த கவுதம் கம்பீர்
    X

    கனவில் கூட RCB-யை வெச்சு செய்யனும்.. வன்மத்தை கொட்டித்தீர்த்த கவுதம் கம்பீர்

    • இரு அணிகளும் பலமுறை களம் கண்டுள்ளன.
    • கவுதம் கம்பீரின் வீடியோவை பகிர்ந்து இருக்கிறது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐ.பி.எல். தொடரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்த இரு அணிகளும் மோதின. அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன் பிறகு, இரு அணிகளும் பலமுறை களம் கண்டுள்ளன.

    அந்த வகையில், இன்று நடைபெறும் போட்டிக்கு முன்பு ஐ.பி.எல். போட்டிகளை தொலைகாட்சியில் ஒளிபரப்பும் தனியார் சேனல் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் கவுதம் கம்பீரின் வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறது. அந்த வீடியோவில் ஆர்.சி.பி. குறித்து கவுதம் கம்பீர் தெரிவித்த கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.


    "ஒவ்வொரு முறையும் நான் வீழ்த்த விரும்பும் ஒரே அணி, கனவிலும் நான் கட்டாயம் ஜெயிக்க விரும்பும் அணி என்றால் அது ஆர்.சி.பி. தான். அதிகளவு முக்கிய வீரர்கள் அடங்கிய இரண்டாவது அணி, அதிக பகட்டு கொண்ட அணி- க்ரிஸ் கெயில், விராட் கோலி, ஏ.பி. டி வில்லியர்ஸ் போன்ற வீரர்களை கொண்ட அணி."

    "உண்மையில் எதையும் வென்றிடாத அணி, எனினும் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றதாக நினைக்கும் அணி. அத்தகைய மனநிலை. அதை மட்டும்தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கொல்கத்தா அணி இதுவரை பெற்ற மூன்று தரமான வெற்றிகள் அனைத்தும் ஆர்.சி.பி. அணிக்கு எதிராகவே அமைந்துள்ளது. எனது கிரிக்கெட் வாழ்க்கையில் நான் செய்ய விரும்பும் ஒரே விஷயம் களத்திற்கு சென்று ஆர்.சி.பி.யை வீழ்த்த வேண்டும் என்பது மட்டும் தான்," என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×