என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
‘2.0’வில் நடிக்க ரஜினி என்னை வற்புறுத்தினார்: அமீர்கான்
Byமாலை மலர்21 Oct 2017 8:05 AM GMT (Updated: 21 Oct 2017 8:05 AM GMT)
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘2.0’ படத்தில் நடிக்க ரஜினிகாந்த் தன்னை வற்புறுத்தியதாக பாலிவுட் நடிகர் அமீர்கான் தெரிவித்திருக்கிறார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, எமிஜாக்சன், அக்ஷய்குமார் நடித்துள்ள படம்‘2.0’. லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து இருக்கும் இந்த படம் ஜனவரி மாதம் ரிலீஸ் ஆகிறது.
இந்த படத்தில் முதலில் தன்னைத்தான் ரஜினிக்கு பதில் ஹீரோவாக நடிக்கச் சொன்னதாக இந்தி நடிகர் அமீர்கான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டி....
“நான் ஷங்கர் சார், ரஜினி சாரின் மிகப்பெரிய ரசிகன். ‘2.0’ படம் எடுக்க முடிவு செய்ததும் என்னை இந்த படத்தில் ஹீரோ பாத்திரத்தில் நடிக்கும் படி ஷங்கர் அழைத்தார். தனது உடல்நிலை சரியில்லாததால் ‘2.0’ படத்தில் என்னை நடிக்கச் சொல்லும் படி அவரிடம் ரஜினி தெரிவித்து இருக்கிறார். அது மட்டுமல்ல ரஜினிசாரும் எனக்கு போன் செய்து ‘2.0’ படத்தில் நடிக்கும் படி கேட்டுக் கொண்டார்.
‘2.0’ கதை சூப்பர். என்றாலும், அந்த படத்தை பற்றி நினைத்தாலே ரஜினி சார் தான் என் நினைவுக்கு வந்தார். என்னை அவருக்கு பதிலாக அந்த பாத்திரத்தில் வைத்து பார்க்க முடியவில்லை. எனவே, இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டேன். ரஜினி சாரால் மட்டுமே இதில் நடிக்க முடியும் என்று ஷங்கரிடம் தெரிவித்து விட்டேன்.
‘எந்திரன்’ படத்தை நான் பார்த்து இருக்கிறேன். அது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. ‘2.0’ படத்தில் நான் நடிக்க மறுத்தது கடினமான முடிவு. இப்போது ரஜினி நடித்துள்ள இந்த படம் அனைத்து மொழிகளிலும் நிச்சயம் சூப்பர்ஹிட் ஆகும்”.
இந்த படத்தில் முதலில் தன்னைத்தான் ரஜினிக்கு பதில் ஹீரோவாக நடிக்கச் சொன்னதாக இந்தி நடிகர் அமீர்கான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டி....
“நான் ஷங்கர் சார், ரஜினி சாரின் மிகப்பெரிய ரசிகன். ‘2.0’ படம் எடுக்க முடிவு செய்ததும் என்னை இந்த படத்தில் ஹீரோ பாத்திரத்தில் நடிக்கும் படி ஷங்கர் அழைத்தார். தனது உடல்நிலை சரியில்லாததால் ‘2.0’ படத்தில் என்னை நடிக்கச் சொல்லும் படி அவரிடம் ரஜினி தெரிவித்து இருக்கிறார். அது மட்டுமல்ல ரஜினிசாரும் எனக்கு போன் செய்து ‘2.0’ படத்தில் நடிக்கும் படி கேட்டுக் கொண்டார்.
‘2.0’ கதை சூப்பர். என்றாலும், அந்த படத்தை பற்றி நினைத்தாலே ரஜினி சார் தான் என் நினைவுக்கு வந்தார். என்னை அவருக்கு பதிலாக அந்த பாத்திரத்தில் வைத்து பார்க்க முடியவில்லை. எனவே, இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டேன். ரஜினி சாரால் மட்டுமே இதில் நடிக்க முடியும் என்று ஷங்கரிடம் தெரிவித்து விட்டேன்.
‘எந்திரன்’ படத்தை நான் பார்த்து இருக்கிறேன். அது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. ‘2.0’ படத்தில் நான் நடிக்க மறுத்தது கடினமான முடிவு. இப்போது ரஜினி நடித்துள்ள இந்த படம் அனைத்து மொழிகளிலும் நிச்சயம் சூப்பர்ஹிட் ஆகும்”.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X