செய்திகள்
கோப்புப்படம்

இந்திய பயணிகளுக்கான தடையை ஜூன் 30 வரை நீட்டித்தது பிலிப்பைன்ஸ்

Published On 2021-06-15 15:27 GMT   |   Update On 2021-06-15 15:27 GMT
கொரோனா பரவல் காரணமாக இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளின் பயணிகளுக்கு ஜூன் 30 வரை தடை விதிக்கப்படுவதாக பிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்திய விமானங்களுக்கு பல்வேறு நாடுகள் தற்காலிகத் தடைவிதித்தன. தொற்று பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியப் பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாட்டில் நிலவி வரும் கொரோனா தொற்று சூழல் காரணமாக இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நாடுகளுக்கு கடந்த 14 நாள்களுக்குள்ளாக பயணம் மேற்கொண்ட இதர நாட்டு பயணிகளும் பிலிப்பைன்ஸ் நாட்டிற்குள் நுழைய தடை தொடரும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News