தமிழ்நாடு

கடன் தொல்லையால் விபரீத முடிவு- ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

Published On 2024-05-23 09:17 GMT   |   Update On 2024-05-23 09:17 GMT
  • கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த ஆசிரியர் தம்பதியின் குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு விரக்தி மனநிலையில் இருந்து வந்தனர்.
  • திருத்தங்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி:

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த திருத்தங்கல் பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் லிங்கம்(வயது50). இவரது மனைவி பழனியம்மாள்(48).

இதில் லிங்கம் தேவதானம் அரசு பள்ளியிலும், பழனியம்மாள் சுக்கிரவார்பட்டி அரசு பள்ளியிலும் ஆசிரியர்களாக வேலை பார்த்து வந்தனர். இந்த தம்பதிக்கு ஆதித்யா என்ற மகனும், ஆனந்தவல்லி என்ற மகளும் இருந்தனர். ஆனந்தவல்லிக்கு திருமணமாகி சசிகா என்ற 2 வயது குழந்தை இருந்தது.

கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த ஆசிரியர் தம்பதியின் குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு விரக்தி மனநிலையில் இருந்து வந்தனர். இந்த நிலையில் இன்று லிங்கம், தனது மகன் ஆதித்யா, மகள் ஆனந்தவல்லி, அவரது குழந்தை சசிகா ஆகியோருக்கு விஷம் கொடுத்து கொலை செய்தார். பின்னர் லிங்கம், பழனியம்மாள் இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

திருத்தங்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News