செய்திகள்
அமெரிக்காவில் ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்தலில் இருந்து பெர்னி சாண்டர்ஸ் விலகல்
தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் இருந்து பெர்னி சாண்டர்ஸ் விலகியுள்ளார்.
அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் 3-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கிறது. குடியரசு கட்சி சார்பில் தற்போது அதிபராக இருக்கும் டொனால்டு டிரம்ப் அந்தக்கட்சி் சார்பில் மீண்டும் போட்டியிட இருக்கிறார்.
இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், அமெரிக்க மாகாணங்களில் நடந்து வருகிறது. இந்த தேர்தலில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடனுக்கும், செனட் சபை எம்.பி. பெர்னி சாண்டர்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது.
இதுவரை நடைபெற்ற தேர்தல்கள் முடிவில் பெர்னி சாண்டர்ஸ் ஏழு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றார். ஆனால் பிடன் 19 இடங்களில் வெற்றி பெற்றார். இதனால் ஏறக்குறைய ஜோ பிடனின் வெற்றி உறுதியாகிவிட்டது.
இதனால் 2020 ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தை ரத்து செய்த பெர்னி சாண்டர்ஸ் ஜனநாயக கட்சிக்கான ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் ஜோ பிடன் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.
தற்போது ஜனாதிபதியாக உள்ள டொனால்டு டிரம்ப்-ஐ எதிர்த்து ஜோ பிடன் அமெரிக்க தேர்தலில் போட்டியிட இருக்கிறார்.