செய்திகள்

20-ம் தேதிக்குள் மீண்டும் ஒருமுறை தாக்குதல் நடத்த இந்தியா திட்டம் - பாகிஸ்தான் மந்திரி அச்சம்

Published On 2019-04-07 09:58 GMT   |   Update On 2019-04-07 09:58 GMT
பாலகோட் பகுதியில் நடத்தியதுபோல் இன்னொரு சாகசத்தை நடத்த முயற்சிக்கும் இந்திய அரசு 20-ம் தேதிக்குள் மீண்டும் ஒருமுறை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் மந்திரி குறிப்பிட்டுள்ளார். #PakistanForeignMinister #ShahMahmoodQureshi #Indiaplanningattack #Balakotattack
இஸ்லாமாபாத்:

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியை கடந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீருக்குட்பட்ட பாலகோட் பகுதிக்குள் கடந்த 26-2-2019 அன்று ஊடுருவிய இந்திய விமானப்படைகள் அதிரடியாக நடத்திய தாக்குதலில் சுமார் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.



இந்நிலையில், இதேபோல் இன்னொரு தாக்குதலை நடத்த இந்தியா திட்டமிட்டு வருவதாகவும், எங்களுக்கு கிடைத்துள்ள உளவுத்தகவல்களின்படி வரும் 16 முதல் 20-ம் தேதிக்குள் இந்த தாக்குதல் நடைபெறலாம் என்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மெஹ்மூத் குரைஷி தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #PakistanForeignMinister #ShahMahmoodQureshi #Indiaplanningattack  #Balakotattack
Tags:    

Similar News