செய்திகள்

சீனாவின் தொழிற்பேட்டை பகுதியில் வெடி விபத்து - 6 பேர் பலி

Published On 2019-03-21 15:47 GMT   |   Update On 2019-03-22 03:57 GMT
சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள பிரபல தொழிற்பேட்டையில் ரசாயன தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். #Chinahemicalplant #chemicalplantblast
பீஜிங்:

கிழக்கு சீனாவில் உள்ள ஜியாங்சு மாகாணத்துக்குட்பட்ட யான்செங் நகரில் மிகப்பெரிய தொழிற்பேட்டை ஒன்று அமைந்துள்ளது. இங்கு பலவிதமான தொழிற்சாலைகள் நூற்றுக்கணக்கில் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், (உள்ளூர் நேரப்படி) இன்று பிற்பகல் சுமார் 3 மணியளவில் இந்த தொழிற்பேட்டையில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தால் அந்த கட்டிடம் பயங்கரமாக தீபிடித்து எரிந்தது.

பயிர்களுக்கான பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் அந்த தொழிற்சாலையில் இருந்து வேகமாக பரவிய தீயால் அருகாமையில் உள்ள தொழிற்சாலைகளும் பலத்த சேதமடைந்தன. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தொழிற்சாலைகளுக்குள் சிக்கித் தவித்த பலரை மீட்டனர்.

இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மிகவும் தீவிரமான தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட சுமார் 30 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். #Chinahemicalplant #chemicalplantblast 
Tags:    

Similar News