செய்திகள்

நேபாளத்தில் பேருந்து விபத்தில் 7 பேர் பலி

Published On 2018-07-27 13:22 GMT   |   Update On 2018-07-27 13:22 GMT
நேபாள நாட்டில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Nepal #BusAccident
காத்மாண்டு:

நேபாள நாட்டின் சித்வான் மாவட்டத்தில் இன்று மதியம் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்தும், எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை விரைந்து செய்தனர்.

பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களில் 2 பேர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விபத்தில் இந்தியர் உட்பட 17 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Nepal #BusAccident
Tags:    

Similar News