செய்திகள்
ஆப்கானிஸ்தானில் சோதனைச்சாவடிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 10 பேர் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டில் இரு சோதனைச்சாவடிகள் மீது தலிபான் பயங்கரவாதிகள் இன்று நடத்திய தாக்குதல்களில் 10 பேர் உயிரிழந்தனர். #Afghanistanattack #checkpoint
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டின் தென்கிழக்கில் உள்ள கன்ஸி மாகாணத்துக்குட்பட்ட ஜக்ஹாட்டு மாவட்டத்தில் உள்ள இரு சோதனைச்சாவடிகள் மீது தலிபான் பயங்கரவாதிகள் இன்று அதிகாலை நடத்திய தாக்குதல்களில் 8 பேர் உயிரிழந்தனர்.
அடுத்ததாக, ஜலாலாபாத் என்ற பகுதியில் உள்ள நன்கர்ஹார் பல்கலைக்கழகத்தின் அருகே காவல் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் இன்று பிற்பகல் பணிக்கு இடையே தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பயங்கரவாதிகள் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில் இருவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தனர். #tamilnews #Afghanistanattack #checkpoint