search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துப்பாக்கி சூடு"

    • துப்பாக்கி சூட்டில் பலர் குண்டு பாய்ந்து கீழே விழுந்தனர்.
    • துப்பாக்கி சூடு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அமெரிக்காவின் டென்னசி மாகாணம் , மெம்பிஸில் உள்ள ஆரஞ்சு மவுண்ட் பகுதியில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். அப்போது அங்கு திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதனால் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அலறியடித்தப்படி ஓடினார்கள். துப்பாக்கி சூட்டில் பலர் குண்டு பாய்ந்து கீழே விழுந்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் விரைந்து வந்தனர். இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்தது தெரியவந்தது.16 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த துப்பாக்கி சூடு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மகனை சரியாக கவனிக்கவில்லை என்றும் அவர்களது அலட்சியத்தால் ஈதன் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தெரிவித்து வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
    • வீட்டில் பாதுகாப்பற்ற துப்பாக்கி இருந்ததற்கான ஆதாரமும் சமர்ப்பிக்கப்பட்டது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள ஆக்ஸ்போர்டு உயர்நிலைப்பள்ளியில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 30-ந்தேதி ஈதன் கிரம்ப்ளே என்ற 15 வயது மாணவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.

    இந்த வழக்கில் தற்போது 17 வயதாகும் ஈதன் கிரம்ப்ளேவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    இதற்கிடையே ஈதனின் தந்தை ஜேம்ஸ் கிரம்ப்ளே, தாய் ஜெனிபர் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. மகனை சரியாக கவனிக்கவில்லை என்றும் அவர்களது அலட்சியத்தால் ஈதன் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தெரிவித்து வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

    விசாரணையின்போது புதிதாக வாங்கிய துப்பாக்கியை வீட்டில் பத்திரப்படுத்தவில்லை என்றும், தங்கள் மகனின் மனநலம் மோசமடைந்து வருவதற்கான அறிகுறிகளைப் பற்றி அலட்சியமாகச் செயல்பட்டதாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    வீட்டில் பாதுகாப்பற்ற துப்பாக்கி இருந்ததற்கான ஆதாரமும் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் மாணவன் ஈதன் தனது வீட்டு பாடத்தின்போது ஒரு துப்பாக்கி, ஒரு தோட்டா, காயமடைந்த நபரின் படங்களை வரைந்துள்ளார்.

    இதையும் பெற்றோர் கவனிக்க தவறிவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இவ்வழக்கில் ஜேம்ஸ் கிரம்ப்ளே, ஜெனிபருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். துப்பாக்கி சூடு சம்பவத்தை தடுக்கக்கூடிய வாய்ப்புகளைத் தவறவிட்டதாக நீதிபதி தெரிவித்தார். அமெரிக்காவில் முதல் முறையாக துப்பாக்கி சூடு சம்பவத்தில் மாணவனின் பெற்றோருக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • உயிர்களை காப்பாற்ற அயராது உழைத்த ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு தீயணைப்பு வீரர்களுக்கு மீட்பு பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
    • மார்ச் 24-ந் தேதியை (இன்று) தேசிய துக்க நாளாக அறிவிக்கிறேன்.

    மாஸ்கோ:

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கி சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதலில் 143 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இந்த தாக்குதல் ரஷியாவை உலுக்கியுள்ளது. துப்பாக்கி சூடு நடத்திய 4 பேர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாஸ்கோ இசை நிகழ்ச்சியில் நடந்த தாக்குதல், ரத்தம் தோய்ந்த மற்றும் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத செயல். இதில் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களை சுட்டுக் கொன்று பயங்கரவாத செயலில் ஈடுபட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உக்ரைனுக்கு தப்ப முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனர்.

    எல்லையை கடக்க முயன்ற அவர் களை ரஷிய அதிகாரிகள் பிடித்தனர். பயங்கரவாதியாக இருப்பவர்கள், தாக்குதலுக்கு திட்டமிட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும். பயங்கரவாதிகள் கொலைகாரர்கள், தவிர்க்க முடியாத விதியை எதிர்கொள்வார்கள்.

    உயிர்களை காப்பாற்ற அயராது உழைத்த ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு தீயணைப்பு வீரர்களுக்கு மீட்பு பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மார்ச் 24-ந் தேதியை (இன்று) தேசிய துக்க நாளாக அறிவிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.

    • இஸ்ரேலியர்கள் மீது மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
    • துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த 5 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ஜெருசலேம்:

    இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது. காசா உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக இஸ்ரேல் படை குண்டுகளை வீசி வருவதால் இறந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்தை தாண்டி விட்டது

    இந்த சூழ்நிலையில் இஸ்ரேலியர்கள் மீது மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளனர். இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்கு கரை பகுதியில் கிழக்கு ஜெருசலேம் பிரதான நெடுஞ்சாலையில் உள்ள சோதனை சாவடி அருகே மர்ம நபர்கள் 3 பேர் காரில் சென்றவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து இறந்தனர். ஒரு பெண் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வீரர்கள் மர்ம நபர்கள் 2 பேரை பதிலடி தாக்குதல் நடத்தி சுட்டுக்கொன்றனர். மற்றொருவரை மடக்கி பிடித்தனர்.

    தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரும் இஸ்ரேல் மேற்கு கரையையொட்டியுள்ள பாலஸ்தீன நகரமான பெத்லகேம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த 5 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காசாவில் சண்டை நடந்து வரும் நிலையில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது மேலும் பதற்றத்தை அதிகரித்து உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரெயில் நிலையத்துக்குள் ரெயில் வந்தபோது ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார்.
    • அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிராங்க்ஸ் சுரங்கப்பாதை ரெயில் நிலையத்தில் ஏராளமான பயணிகள் ரெயிலுக்காக காத்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு துப்பாக்கி சூடு நடந்தது. இளைஞர்களை கொண்ட இரு குழுக்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு மோதல் வெடித்தது. இதில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறியடித்து கொண்டு சிதறி ஓடினர்.

    துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    துப்பாக்கி சூடு நடத்தியது யார்? எதற்காக தாக்குதல் நடத்தப்பட்டது உள்ளிட்ட தகவல்கள் உடனடியாக தெரியவில்லை.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, ரெயில் நிலையத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 34 வயதுடைய ஒருவர் பலியானார். ஒரு சிறுமி, ஒரு சிறுவன் உள்பட 5 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    இது ஒரு தற்செயலான துப்பாக்கிச் சூடு என்று நாங்கள் நம்பவில்லை. தனி நபர் கண்மூடித்தனமாக ரெயில் அல்லது ரெயில் நிலையத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நம்பவில்லை.

    இந்த சம்பவம் ரெயிலில் செல்லும் போது சண்டையிட்ட இரண்டு குழுக்களுக்கு இடையே நடந்துள்ளது. அந்த ரெயில் நிலையத்துக்குள் ரெயில் வந்தபோது ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார்.

    மக்கள் ரெயிலில் இருந்து இறங்கி பிளாட்பாரத்தில் ஓடத் தொடங்கினர். மேலும் பிளாட்பாரத்திலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சம்பவம் நடந்தபோது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
    • சம்பவத்தின் நினைவாக நினைவிடம் அமைக்க 20 லட்சம் ரூபாயை விடுவிக்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

    சென்னை:

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகளுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யக் கோரியும், பலியானோர் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரியும், துப்பாக்கிச் சூட்டில் பலியான இளம்பெண்ணின் தாய் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ந்தேதி நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், கடந்த 2022ம் ஆண்டு மே 18-ந்தேதி தனது அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது.

    அதில், இந்த சம்பவத்துக்கு காரணமான 17 காவல் துறையினர், மாவட்ட கலெக்டர் உள்பட வருவாய் துறையினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், இழப்பீட்டை அதிகரித்து வழங்கவும் பரிந்துரைத்திருந்தது.

    ஆணையத்தின் அறிக்கையை ஏற்றுக்கொண்ட அரசு, அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மட்டும் எடுப்பது எனவும், ஏற்கனவே வழங்கப்பட்ட தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடே போதுமானது எனவும் கூறி, கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி அரசாணை பிறப்பித்தது.

    இந்த அரசாணையை எதிர்த்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 17 வயது இளம்பெண் ஸ்னோலின் என்பவரின் தாய் வனிதா சென்னை ஐகோர்ட்டில், பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைத்தும், அமைதியான முறையில் போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மீது கொலை குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

    ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் நடவடிக்கை எடுத்து சட்டமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று 5 ஆண்டுகளாக காத்திருந்தேன்.

    இந்த நிலையில், சட்ட விதிகளுக்கு முரணாக அரசு, எந்திரத்தனமாக செயல்பட்டுள்ளது.

    துப்பாக்கிச் சூட்டில் சம்பந்தப்பட்டதாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரைப்படி காவல் துறையினர், வருவாய் துறையினர் மீது கொலை வழக்கு பதியவும், பலியானோர் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

    சம்பவம் நடந்தபோது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

    அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை மட்டும் எடுக்கும் வகையில் தமிழக அரசு 2022 அக்டோபர் மாதம் பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்; அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

    சம்பவத்தின் நினைவாக நினைவிடம் அமைக்க 20 லட்சம் ரூபாயை விடுவிக்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கங்காபுர் வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, விசாரணையை பிப்ரவரி 21-ந் தேதிக்கு தள்ளி வைத்தது.

    • சுப்பிரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த குள்ளம்பாளையத்தில் தங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • குடியிருப்பு பகுதிகள் நிறைந்த இடத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சமீப காலமாக ரவுடிகளின் தொல்லை அதிகரித்துள்ளதால் அவர்களை பிடிக்க போலீசார் முயற்சி செய்து வருகின்றனர். பதுங்கி இருக்கும் ரவுடிகளை தனிப்படை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

    சமீபத்தில் ரவுடிகளை பிடிக்க முயன்ற போது அவர்கள் போலீசாரை தாக்க முயன்ற போது தற்பாதுகாப்புக்காக துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளனர். சமீபத்தில் கூட காஞ்சிபுரத்தில் 2 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    இதேபோல் துப்பாக்கி சூடு சம்பவம் மீண்டும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள குள்ளம்பாளையம் பகுதியில் நடைபெற்று உள்ளது.

    இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

    திருநெல்வேலி மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்பட பல்வேறு குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த சிவசுப்பு என்கிற சுப்பிரமணி (26) என்பவரை பிடிக்க திருநெல்வேலி போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர். ஆனால் சுப்பிரமணி போலீசார் கண்ணில் தென்படாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். திருநெல்வேலியில் சுப்பிரமணி மீது கொலை, கொள்ளை, ரேஷன் அரிசி கடத்தல், கஞ்சா உள்பட மீது 18 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    சுப்பிரமணி தனது கூட்டாளிகள் முத்து மணிகண்டன், இசக்கி, வசந்தகுமார், சத்யா 4 பேருடன் ஒவ்வொரு ஊராக தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார். சுப்பிரமணி மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க திருநெல்வேலி சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் சுப்பிரமணி குறித்த தகவல்களை ரகசியமாக சேகரித்து வந்தனர்.


    அதன்படி தனிப்படை போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதில் சுப்பிரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த குள்ளம்பாளையத்தில் தங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோ தலைமையில் மற்றொரு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் குள்ளம்பாளையத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் மறைந்திருந்து சுப்பிரமணி தங்கி இருந்த வீட்டை ரகசியமாக கண்காணித்தனர்.

    அப்போது அந்த வீட்டில் சுப்பிரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். இதனையடுத்து தனிப்படை போலீசார் திடீரென சுப்பிரமணி தங்கி இருந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர். இதை சற்றும் எதிர்பாராத சுப்பிரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து சுப்பிரமணி வீட்டில் இருந்து அரிவாளை எடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோ மீது வீசி உள்ளார். அப்போது சுதாரித்து கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோ தற்காப்புக்காக ஒரு ரவுண்டு துப்பாக்கியால் சுட்டுள்ளார். ஆனால் அந்த குண்டு சுப்பிரமணி மீது படாமல் வீட்டின் ஓரத்தில் பாய்ந்தது. இதனையடுத்து சுப்பிரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரும் வீட்டின் பின்பக்க கதவை திறந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடினர். போலீசாரும் அவர்களை பிடிக்க விரட்டி உள்ளனர். ஆனால் அதற்குள் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

    குடியிருப்பு பகுதிகள் நிறைந்த இடத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து தனிப்படை போலீசார் பெருந்துறை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதனை அடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தேசிய நெடுஞ்சாலை மற்றும் சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அசாம் ரைஃபில் கேம்ப்-இல் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்.
    • நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் பணிகளில் காவல் துறை.

    மணிப்பூர் மாநிலத்தில் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் மீண்டும் பதற்ற நிலை உருவாகி இருக்கிறது. காவல் துறையினரின் ரோந்து வாகனங்கள் மீது கிளர்ச்சியாளர்கள் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில் கமாண்டோ படை வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் அசாம் ரைஃபில் கேம்ப்-இல் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து மொரெ நகரில் இரு வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. துப்பாக்கி சூடு மற்றும் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவங்களை தொடர்ந்து மணிப்பூரில் கூடுதலாக பாதுகாப்பு படையினர் விரைந்தனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் பணிகளில் காவல் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன் காரணமாக இன்று பிற்பகல் 3.30 மணி முதலே கடுமையான துப்பாக்கி சூடு நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மொரே பகுதியில் புதிய நுழைவு வாயில் மற்றும் சானோவ் கிராமத்தில் துப்பாக்கி சூடு தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

    • துப்பாக்கி சூடு நடத்திய நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • போதைப் பொருள் கும்பல்களுக்கு இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    மெக்சிகோசிட்டி:

    வடக்கு மெக்சிகோவில் உள்ள சோனோரா மாகாணம் சியுடாட் ஒப்ரெகன் நகரில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆட்டம்-பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது மூன்று பேர் துப்பாக்கிகளுடன் விருந்து நிகழ்ச்சிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். அவர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். மேலும் விருந்து நிகழ்ச்சியில் ஏற்கனவே பங்கேற்றிருந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.

    இதனால் விருந்தில் பங்கேற்றவர்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். இந்த தாக்குதலில் பலர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். உடனே தாக்குதல் நடத்திய நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலியானார்கள். 26 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பலியானவர்களில் இரண்டு பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள். காயம் அடைந்தவர்களில் 5 பேர் குழந்தைகள் ஆவார்கள். சிகிச்சை பெறுபவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. துப்பாக்கி சூடு நடத்திய நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சோனோரா மாகாணத்தில் போதைப் பொருள் கும்பல்களுக்கு இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிறந்த மாணவராகவும் திகழ்ந்து வந்தார்.
    • டேவிட் கோசாக் ஏன் இந்த கொடூர செயலில் ஈடுபட்டார் என தெரியவில்லை.

    ஐரோப்பிய நாடான செக்குடியரசு நாட்டின் தலைநகரான பராக்கில் சார்லஸ் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.நேற்று இந்த பல்கலைக்கழகத்தில் புகுந்த மர்ம நபர் தான் கையில் வைத்திருந்த நவீனரக துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். கண்ணில் பட்டவர்களை எல்லாம் குருவியை சுடுவது போல சுட்டார்.

    இதனால் உயிருக்கு பயந்த மாணவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். சிலர் வகுப்பறை கதவுகளை மூடிக்கொண்டனர். பலர் குண்டுபாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் 15 பேர் இறந்தனர். 30-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் அந்த பல்கலைக்கழகத்தை சுற்றி வளைத்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

    இந்தநிலையில் துப்பாக்கி சூடு நடத்திய வாலிபரும் இந்த சம்பவத்தில் உயிர் இழந்தார். அவர் தனக்குதானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது போலீசார் சுட்டுக்கொன்றனரா? என்பது தெரியவில்லை.

    போலீசார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் டேவிட் கோசாக் (வயது 24) என்பதும், அந்த பல்கலைக்கழக மாணவர் என்பதும் தெரியவந்தது. இவர் மீது போலீசில் எந்த குற்ற வழக்குகளும் இல்லை. சிறந்த மாணவராகவும் திகழ்ந்து வந்தார். அவர் சட்டப்பூர்வமாக பல துப்பாக்கிகள் வைத்து இருந்தார். மேலும் நிறைய வெடிமருந்துகளும் வைத்து இருந்தார்.

    துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன்பு பராக் நகருக்கு மேற்கே சொந்த ஊரான ஹோக் டவுனில் தனது தந்தையை கொன்ற திடுக்கிடும் தகவலும் வெளியாகி இருக்கிறது.

    டேவிட் கோசாக் ஏன் இந்த கொடூர செயலில் ஈடுபட்டார் என தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த தாக்குதலின் பின்னணியில் பயங்கரவாத இயக்கங்கள் தொடர்பு எதுவும் இல்லை என அந்நாட்டு மந்திரி விடராகுசன் தெரிவித்துள்ளார். செக் குடியரசு நாட்டை பொறுத்தவரை இது போன்ற துப்பாக்கி கலாச்சாரம் தலை தூக்கியது கிடையாது. முதன் முறையாக இந்த பெரிய அளவிலான தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.
    • துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்.

    செக் குடியரசு தலைநகரான பராகுவேவில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    துப்பாக்கி சூடு நடைபெற்றதை அடுத்து, பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். திடீர் துப்பாக்கி சூட்டில் சிக்கி பலர் உயிரிழந்தனர். மேலும் பலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.

     


    பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நடைபெற்ற பகுதியில் வேறு யாரும் துப்பாக்கியுடன் இல்லை என்பதை உள்துறை மந்திரி உறுதுப்படுத்தி இருக்கிறார். 

    • ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடன்காரராக மாறிய விரக்தியில் தற்கொலை.
    • வட்டிக்கு பணம் வாங்கியும் நரேஷ் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதை மனைவி சைதன்யா கண்டித்துள்ளார்.

    தெலுங்கானா மாநிலத்தில் மனைவி, மகன், மகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடன்காரராக மாறிய விரக்தியில் தற்கொலை எண்ணத்திற்கு தள்ளப்பட்ட ஆயுதப்படை காவலர்.

    தற்கொலை செய்து கொண்ட ஆயுதப்படை காவலர் நரேஷ், சித்தபேட்டை ஆட்சியரின் மெய்க்காவலராக பணியாற்றி வந்தவர்.

    ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான நரேஷ் தனது மொத்த சம்பளத்தையும் பல மாதங்களாக சூதாட்டத்தில் இழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

    இழந்த பணத்தை பிடிக்கலாம் என்ற ஆர்வத்தில் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்களிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கி நரேஷ் சூதாடியுள்ளார்

    வட்டிக்கு பணம் வாங்கியும் நரேஷ் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதை மனைவி சைதன்யா கண்டித்துள்ளார்.

    இந்நிலையில், மன விரக்தியில் இருந்து வந்த நரேஷ் மனைவி குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×