செய்திகள்
பாகிஸ்தானில் ஹக்கானி தீவிரவாதிகள் ரகசிய கூட்டத்தின்மீது ஆளில்லா விமான தாக்குதல் - 26 பேர் பலி
ஆப்கானிஸ்தான் எல்லையொட்டியுள்ள பாகிஸ்தானின் குர்ரம் மாவட்டத்தில் ஹக்கானி தீவிரவாதிகள் நடத்திய ரகசிய கூட்டத்தின்மீது அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தான் எல்லையொட்டியுள்ள வடமேற்கு பாகிஸ்தானின் பெஷாவர் உள்ளிட்ட பகுதிகளில் தலிபான்களுடன் தொடர்புடைய ஹக்கானி தீவிரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. சர்வதேச ராணுவமான நேட்டோ படைகள் மீது அவ்வப்போது அதிரடி தாக்குதல் நடத்தியவாறு பாகிஸ்தான் ராணுவத்தில் உள்ள சில உயரதிகாரிகளின் ஆதரவுடன் இயங்கிவரும் ஹக்கானி தீவிரவாதிகளை அதிபயங்கர தீவிரவாத குழுவாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்நிலையில், வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள குர்ரம் மாவட்டத்தில் உள்ள ரகசிய இடத்தில் ஹக்கானி தீவிரவாதிகளின் ஆலோசனை நடைபெற்ற ஒரு வீட்டின்மீது அமெரிக்க ஆளில்லா விமானங்கல் அடுத்தடுத்து நடத்திய இரு ஏவுகணை தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் எல்லையொட்டியுள்ள வடமேற்கு பாகிஸ்தானின் பெஷாவர் உள்ளிட்ட பகுதிகளில் தலிபான்களுடன் தொடர்புடைய ஹக்கானி தீவிரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. சர்வதேச ராணுவமான நேட்டோ படைகள் மீது அவ்வப்போது அதிரடி தாக்குதல் நடத்தியவாறு பாகிஸ்தான் ராணுவத்தில் உள்ள சில உயரதிகாரிகளின் ஆதரவுடன் இயங்கிவரும் ஹக்கானி தீவிரவாதிகளை அதிபயங்கர தீவிரவாத குழுவாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்நிலையில், வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள குர்ரம் மாவட்டத்தில் உள்ள ரகசிய இடத்தில் ஹக்கானி தீவிரவாதிகளின் ஆலோசனை நடைபெற்ற ஒரு வீட்டின்மீது அமெரிக்க ஆளில்லா விமானங்கல் அடுத்தடுத்து நடத்திய இரு ஏவுகணை தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.