செய்திகள்

அணுஆயுத சோதனைகளை நிறுத்தாவிட்டால் வடகொரியாவை முழுமையாக அழிக்க நேரிடும் - டிரம்ப் எச்சரிக்கை

Published On 2017-09-19 15:33 GMT   |   Update On 2017-09-19 16:25 GMT
ஐ.நா. பொதுசபையில் பேசிய டிரம்ப், வடகொரியா அணுஆயுத சோதனைகளை நிறுத்தாவிட்டால் அந்நாட்டை முழுமையாக அழிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.
நியூயார்க்:

வடகொரியா ஐ.நா. சபையின் கடினமான பொருளாதார தடைகள் மற்றும் உலக நாடுகளின் கண்டனங்களை மீறி தொடர்ந்து அணுஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இது அமெரிக்காவிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்திள்ளது.

அமெரிக்காவின் அதிபராக தேர்வு செய்யப்பட்ட டொனால்டு டிரம்ப் முதல் முறையாக இன்று ஐ.நா. சபையில் உரையாற்றினார். முதல் உரையிலேலே எப்போதும்போல அவருடைய அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது வடகொரியாவிற்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

வடகொரியா குறித்து பேசிய டொனால்டு டிரம்ப், “வடகொரியாவின் பொறுப்பற்ற அணு ஆயுதங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் ஒட்டுமொத்த உலகத்திற்கே அச்சுறுத்தலாக உள்ளது. வடகொரியாவின் இந்த செயல்கள் தன்னையும் மற்றும் தன்னுடைய பிராந்தியத்தையும் அழித்துக்கொள்வதற்கு வழிவகுக்கும். அமெரிக்காவை மிரட்டினால், வடகொரியாவை முற்றிலும் அழிப்பதை தவிர்த்து எங்களுக்கு வேறு வழி இல்லை,” என்றார். 

‘வடகொரியாவை முற்றிலும் அழிக்கவும் முடியும், அதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது. ஆனால் அது தேவையாக இருக்காது என நம்புகிறோம். அணு ஆயுத திட்டங்களை கைவிடுவது மட்டும்தான் வருங்காலங்களில் ஏற்றுக்கொள்ளக்கூடியது, இது வடகொரியா நல்ல முடிவெடுப்பதற்கான நேரமாகும்‘ என அவர் மேலும் கூறியுள்ளார்.

அவரது உரை குறித்து வடகொரியா எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.

தொடர்ந்து பேசிய அவர், ஈரான், வெணிசுலா மற்றும் கியூபா அரசுகளையும், இஸ்லாமிய தீவிரவாதத்தையும் தாக்கி உரையாற்றினார். 
Tags:    

Similar News