தமிழ்நாடு
அதிமுக பொதுக்குழு முடிந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்துடன் அண்ணாமலை சந்திப்பு
- சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓபிஎஸ் உடன் பாஜக நிர்வாகிகள் சந்திப்பு.
- ஜனாதிபதி தேர்தலில் ஆதரவுக் கோரி அண்ணாமலை சந்திப்பு.
அதிமுக பொதுக்குழு, செயற்குழு முடிந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்துடன் பாஜக நிர்வாகிகள் சந்தித்துள்ளனர்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசியுள்ளனர்.
அப்போது, ஜனாதிபதி தேர்தலில் பாஜக தேசியக் கூட்டணி சார்பில் போட்டியிடவுள்ள திரௌபதி முர்முவுக்கு ஆதரவுக் கோரி எடப்பாடி பழனிசாமியை சந்தித்த நிலையில், தற்போது ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து அண்ணாமலை, ஆதரவுக் கோரியுள்ளார்.