தமிழ்நாடு
குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு- சுற்றுலா பயணிகள் படையெடுப்பு
தென்காசி சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பொதுமக்களும் குற்றால அருவிக்கு சென்று குளித்து மகிழ்கின்றனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. குற்றாலம் மலைப் பகுதிகளிலும் கன மழை பெய்தது.
இதன் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழையகுற்றால அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து ஏற்பட்டது. மழை மேலும் தொடர்ந்து பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கோடை காலத்தில் அருவிகளில் தண்ணீர் அதிகரித்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் குற்றாலம் பகுதி கடை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. குற்றாலம் மலைப் பகுதிகளிலும் கன மழை பெய்தது.
இதன் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழையகுற்றால அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து ஏற்பட்டது. மழை மேலும் தொடர்ந்து பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மேலும் தென்காசி சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பொதுமக்களும் குற்றால அருவிகளுக்குச் சென்று குளித்து மகிழ்கின்றனர்.