செய்திகள்
தரையில் அமர்ந்து படித்து தான் அமைச்சர் ஆனோம் - செல்லூர் ராஜூ பேச்சு
தரையில் அமர்ந்து படித்து தான் அமைச்சர் ஆனோம் என்று பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.
மதுரை:
மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-
தரையில் அமர்ந்து படித்து தான் அமைச்சர் ஆனோம். மாணவர்கள் நன்றாக படித்து உயர்பதவிகளுக்கு வரவேண்டும். தற்போது பள்ளிகளில் மேசைகள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தான் படித்த காலத்தில் தரையில் அமர்ந்து படித்து தான் தற்போது அமைச்சராகி உள்ளேன்.
தமிழக பள்ளிக்கல்வி தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை கேரளா தான் கல்வியில் முதலிடம் என்ற நிலையை தமிழக அரசு மாற்றிக் காட்டியுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.