செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மஞ்சளாறு அணை நாளை திறப்பு- முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

Published On 2019-11-01 06:04 GMT   |   Update On 2019-11-01 06:04 GMT
மஞ்சளாறு அணையில் இருந்து 2.11.2019 முதல் 135 நாட்களுக்கு பழைய ஆயக்கட்டுகளுக்கு முதல் போக சாகுபடிக்கு தண்ணீரை திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேனி மாவட்டம் பெரிய குளம் வட்டம், தேவதானப்பட்டி கிராமத்தில் உள்ள மஞ்சளாறு அணையில் இருந்து 2.11.2019 முதல் 135 நாட்களுக்கு பழைய ஆயக்கட்டுகளுக்கு முதல் போக சாகுபடிக்கு தண்ணீரை திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பழைய ஆயக்கட்டு 3386 ஏக்கர் மற்றும் புதிய ஆயக்கட்டு 1873 ஏக்கர் ஆக மொத்தம் 5259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News