செய்திகள்
பழனி மலைக்கோவிலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.

பழனி கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்

Published On 2019-10-30 05:45 GMT   |   Update On 2019-10-30 05:45 GMT
பழனி முருகன் கோவிலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா சாமி தரிசனம் செய்தார்.
பழனி:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கோவையில் இருந்து கார் மூலம் பழனிக்கு வந்தார். பழனி எம்.எல்.ஏ. செந்தில்குமார், அவரது மனைவி அருள் மெர்சி ஆகியோருடன் மலைக்கோவிலுக்கு வின்ச் மூலம் சென்றார்.

அவர்களை கோவில் துணை ஆணையர் செந்தில்குமார் வரவேற்றார். சாயரட்சை பூஜையில் மூலரை தரிசனம் செய்து, குடும்பத்தினரின் பெயரில் அர்ச்சனை செய்தார். பின்னர் போகர் சன்னதியில் பயபக்தியுடன் தியானம் செய்தார். அப்போது தி.முக. நிர்வாகிகள் உடன் இருந்தனர். நேற்று இரவு பழனியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்த துர்கா ஸ்டாலின் இன்று காலை கார் மூலம் கோவை புறப்பட்டு சென்றார்.
Tags:    

Similar News