செய்திகள்

வாக்கு எந்திரத்தை பா.ஜ.க. தவறாக பயன்படுத்தி வெற்றி பெற முயற்சி- நாராயணசாமி குற்றச்சாட்டு

Published On 2019-01-25 15:14 GMT   |   Update On 2019-01-25 15:14 GMT
பா.ஜனதா கட்சி வாக்குப்பதிவு எந்திரத்தை முறைகேடாக பயன்படுத்தி குறுக்கு வழியில் தேர்தலில் வெற்றி பெற முயற்சி செய்ய பார்க்கிறது என்று நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். #narayanasamy #bjp

புதுச்சேரி:

புதுவை அரசு செவிலியர் கல்லூரி மாணவர்களின் டெங்கு விழிப்புணர்வு பேரணி நெல்லித்தோப்பு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் இருந்து தொடங்கியது. இப்பேரணியை முதல்- அமைச்சர் நாராயணசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலில் வாக்குபதிவு எந்திரத்தை பயன்படுத்த கூடாது என்பது அனைத்து கட்சிகளின் கருத்தாக உள்ளது. தொழில்நுட்பத்தில் வளர்ந்த நாடுகளில் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை பின்பற்றி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சி பல்வேறு மாநில தேர்தலில் வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும் வாக்குசீட்டு முறையையே பயன்படுத்த வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம்.

மக்களின் வாக்குரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும். ஆனால், பா.ஜனதா கட்சி வாக்குப்பதிவு எந்திரத்தை முறைகேடாக பயன்படுத்தி குறுக்கு வழியில் தேர்தலில் வெற்றி பெற முயற்சி செய்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். #narayanasamy #bjp

Tags:    

Similar News