செய்திகள்

கஜா புயலுக்கு 36 பேர் பலியானது உச்சக்கட்ட வேதனை- முக ஸ்டாலின் டுவிட்டரில் பதிவு

Published On 2018-11-17 08:34 GMT   |   Update On 2018-11-17 08:34 GMT
கஜா புயலுக்கு 36 பேர் பலியானது உச்சக்கட்ட வேதனை என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். #GajaCyclone #DMK #MKStalin
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:-

தானே, வர்தா, ஒக்கி வரிசையில் கஜா புயல் பெரும் சேதம் ஏற்படுத்தி இருப்பதை இன்று டெல்டா மாவட்டங்களில் பார்க்கிறேன். அப்பாவி மக்கள் முதல் விவசாயிகள், மீனவர்கள் வரை அனைவரின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 36 பேர் உயிரிழந்திருப்பது உச்சக் கட்ட வேதனை.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். #GajaCyclone #DMK #MKStalin
Tags:    

Similar News