செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 23 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

Published On 2018-09-26 05:45 GMT   |   Update On 2018-09-26 05:45 GMT
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. #MetturDam
மேட்டூர்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று 5 ஆயிரத்து 23 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று பல மடங்கு அதிகரித்து 23 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து பாசனத்திற்காக 22 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நீர்வரத்து குறைவாக இருந்ததால் அணையின் நீர்மட்டம் சரிந்து வந்தது.

தற்போது அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை விட அணைக்கு வரும் தண்ணீர் அதிகமாக உள்ளதால் அணை நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கி உள்ளது.

நேற்று 104.47 கன அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 104.59 அடியாக உயர்ந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.

ஒகேனக்கலில் நேற்று 30 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 20 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது. சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து வருகிறார்கள். #MetturDam
Tags:    

Similar News