செய்திகள்

திருச்சியில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் தேசிய பாதுகாப்பு மாநாடு- திருமாவளவன் தகவல்

Published On 2018-09-22 12:25 GMT   |   Update On 2018-09-22 12:25 GMT
விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் டிசம்பர் 10-ந் தேதி திருச்சியில் தேசிய பாதுகாப்பு மாநாடு நடத்த உள்ளோம் என்று விழுப்புரத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசினார். #thirumavalavan #vck

விழுப்புரம்:

மத்திய அரசை கண்டித்து விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று மதியம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசியதாவது:-

அகில இந்திய ரீதியில் சனாதன அமைப்பை எதிர்த்து யாரும் குரல் கொடுக்கவில்லை. நான் மட்டும் சமரசம் இல்லாமல் எதிர்க்கிறோம். மாயவதியோ, ராம் விலாஸ் பஸ்வானோ எதிர்க்கவில்லை. விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் டிசம்பர் 10-ந் தேதி திருச்சியில் தேசிய பாதுகாப்பு மாநாடு நடத்த உள்ளோம். இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொள்ள அழைப்பு விடுப்போம். ரவிக்குமாருக்கு பாதுகாப்பு அளித்த புதுவை முதல்- அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார். #thirumavalavan #vck

Tags:    

Similar News