திருவண்ணாமலை போலீஸ் நிலையத்தில் எச்.ராஜா மீது தி.மு.க. வக்கீல் புகார்
திருவண்ணாமலை:
புதுக்கோட்டை திருமயத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்ல தடை விதித்த போலீசாரை பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கடுமையாக சாடி பேசியிருந்தார். இதேபோல் திண்டுக்கல் வேடசந்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அறநிலையத்துறையினரை இழிவுப்படுத்தி பேசியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, எச்.ராஜாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்தில் தி.மு.க. வக்கீல் சீனிவாசனும் எச்.ராஜா மீது புதிய புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், நாட்டின் இறையான்மைக்கு எதிராக எச்.ராஜா பேசி வருகிறார்.
மற்ற மதங்களை சார்ந்த மக்களின் மனங்களின் புண் படுத்தும் வகையில் பேசி வரும் எச்.ராஜா, மதக்கலவரங்களை தூண்ட முயற்சிக்கிறார். அவர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். #HRaja #ChennaiHC