செய்திகள்

கோவை அருகே 12 வயது சிறுமி பலாத்காரம் - 11 வாலிபர்கள் கைது

Published On 2018-05-26 09:55 GMT   |   Update On 2018-05-26 09:55 GMT
கோவை ஆனைகட்டி அருகே 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 11 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை:

கோவை ஆனைகட்டி அருகே உள்ள அட்டப்பாடி நரசிமுத்து பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த இந்துஜா கடந்த 19-ந்தேதி ஊதிவழி வனக்கோவில் திருவிழாவுக்கு அவரது பெற்றோருக்கு தெரிவிக்காமல் அழைத்துச்சென்றார்.

வெகுநேரமாகியும் மகளை காணாமல் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தனர். ஆனால் மகளை கண்டு பிடிக்க முடியவில்லை.

இதனையடுத்து பெற்றோர் அகழி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். சிறுமி மாயமானது குறித்து அருகில் உள்ள சோலையூர் போலீசுக்கும் தகவல் தெரிவித்தார்.

நேற்று சோலையூர் போலீசார் ஊதிவழி கோவில் விழாவை கண்காணிக்க சென்றனர். செல்லும் வழியில் ஒரு குடிசையில் இந்துஜாவுடன் சிறுமி இருந்தார். சிறுமியை மீட்ட போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

சிறுமியை இந்துஜா கடத்தி வந்து அங்குள்ள 11 வாலிபர்களுக்கு விருந்தாக்கியுள்ளார். இந்துஜாவை கைது செய்த போலீசார் சிறுமியை மீட்டு அட்டப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சிறுமியை கூட்டாக சேர்ந்து பலர் பாலியல் தொல்லை கொடுத்து பலாத்காரம் செய்திருப்பதாக கூறினர்.

இதனையடுத்து சிறுமியை பலாத்காரம் செய்த வீனஸ்ராஜ் (20), ரதீஷ் (20), சிவக்குமார் (23), ராஜேஸ் (25) குமார் (23) மற்றொரு குமார் (25), சுதீஷ், மணிகண்டன் (20), அரவிந்த் (21), ஈஸ்வரன் (22) ஆகிய 11 பேரையும் சோலையூர் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இளம்பெண் உள்பட 12 பேரையும் போலீசார் மன்னார்காட்டில் உள்ள எஸ்.சி., எஸ்.டி. நீதிமன்றத்திற்கு ஒப்படைக்க சென்றனர். அப்போது போலீசை தள்ளி விட்டு வீனஸ்ராஜ் தப்பி ஓடிவிட்டார். மற்ற 11 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News