செய்திகள்

அம்பேத்கர் சிலைக்கு 14-ந்தேதி எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். மாலை அணிவிக்கிறார்கள்

Published On 2018-04-10 07:30 GMT   |   Update On 2018-04-10 07:30 GMT
டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 128-வது பிறந்தநாள் அன்று அவரது சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவிக்கிறார்கள்.
சென்னை:

அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

டாக்டர் அம்பேத்கரின் 128-வது பிறந்த நாளான வருகிற 14-ந்தேதி (சனிக் கிழமை) காலை 10.30 மணியளவில் சென்னை, ஆற்காடு சாலையில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கருடைய சிலைக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், தலைமைக்கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்கள்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்டக் கழகச் செயலாளர்களும், கழக நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்களும், கழகத்தின் அனைத்து நிலைகளில் செயல்பட்டு வரும் நிர்வாகிகளும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித்தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழிநுட்பப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
Tags:    

Similar News