செய்திகள்
மலை பகுதியில் மழை - களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்ததால் தலையணையில் தண்ணீர் குறைய தொடங்கியது. நீர்வரத்து இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
களக்காடு:
கடந்த 2 நாட்களாக களக்காடு பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் தலையணையில் தண்ணீர் அதிகரித்துள்ளது. இது சுற்றுலா பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
களக்காடு புலிகள் காப்பக மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை அமைந்துள்ளது. இங்கு ஓடும் பச்சையாற்றில் குளுமை அதிகம் என்பதால் அதில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகளவில் குவிந்து வருகின்றனர். தடுப்பணையை தாண்டி அருவி போல தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். #tamilnews
கடந்த 2 நாட்களாக களக்காடு பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் தலையணையில் தண்ணீர் அதிகரித்துள்ளது. இது சுற்றுலா பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
களக்காடு புலிகள் காப்பக மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை அமைந்துள்ளது. இங்கு ஓடும் பச்சையாற்றில் குளுமை அதிகம் என்பதால் அதில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகளவில் குவிந்து வருகின்றனர். தடுப்பணையை தாண்டி அருவி போல தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். #tamilnews