search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "களக்காடு தலையணை"

    • மாஞ்சோலை வனப்பகுதியில் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது.
    • அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை சற்று தணிந்தததால் நீர் திறப்பு குறைந்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் அணை பகுதிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் நெல்லை மாவட்டத்தில் களக்காடு தலையணை, மணிமுத்தாறு அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுவருவதால் அங்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டிருந்தது.

    ஆனால் இரவில் மழை குறைந்ததால், இன்று தலையணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    மாஞ்சோலை வனப்பகுதியில் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. நேற்று பகலில் கனமழை நீடித்த நிலையில், இரவில் மழை சற்று தணிந்தது. இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக நாலுமுக்கு எஸ்டேட்டில் 39 மில்லி மீட்டரும், ஊத்து பகுதியில் 35 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 30 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 19 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    சில நாட்களாக பாபநாசம் உள்ளிட்ட அணை பகுதிகளில் பெய்த மழையால் தாமிரபரணி ஆற்றில் உபரியாக திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்தது. நேற்று சுமார் 7 ஆயிரம் கனஅடி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் 2 கரைகளையும் தொட்டபடி தண்ணீர் சென்றது.

    இந்நிலையில் நேற்று மலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை சற்று தணிந்தததால் நீர் திறப்பு குறைந்தது. இன்று காலை நிலவரப்படி பிரதான அணையான பாபநாசம் அணைக்கு 2,171 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அந்த அணையில் இருந்து வினாடிக்கு 3,624 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    118 அடி கொண்ட மணிமுத்தாறு அணைக்கு 1,592 கனஅடி வந்து கொண்டிருந்த நிலையில், அணையில் இருந்து 1,028 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் நீரின் அளவு குறைந்தது. மாவட்டத்தில் சேரன்மகா தேவி, கன்னடியன் கால்வாய் பகுதி, அம்பை ஆகிய பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை கடனா நதி அணைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 27 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. ஆய்க்குடி, தென்காசி, செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலையில் தொடங்கி இரவு வரையில் தொடர்ந்து சாரல்மழை பெய்த வண்ணம் உள்ளது.

    சிவகிரியில் லேசான சாரல் மழை பெய்தது. ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அங்குள்ள மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவியில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

    • காட்டாற்று வெள்ளம் கரை புரண்டதால் கடந்த 17-ந் தேதி முதல் தலையணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
    • இன்று காலை நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    களக்காடு:

    களக்காடு பகுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    அதுபோல களக்காடு தலையணையிலும் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டதால் கடந்த 17-ந் தேதி முதல் தலையணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

    தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் தடை நீடிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே நீர்வரத்து குறைந்ததால் 8 நாட்களுக்கு பின் கடந்த 25-ந் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையினால் தலையணையில் நேற்று காலை மீண்டும் நீர்வரத்து அதிகரித்தது.

    இதையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்தனர்.

    அதே நேரத்தில் தலையணையை சுற்றிப்பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இன்று காலை நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    • தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
    • களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின் பேரில் தலையணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று முதல் வனத்துறையினர் தடை விதித்தனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டத்தில் அம்பை, சேரன்மகாதேவி, கன்னடியான் பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை பகுதியில் 26 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 6 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. இந்த அணைகளுக்கு வினாடிக்கு 739 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    அந்த அணைகளில் இருந்து பாசனத்திற்காக 1,204 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணைக்கு 204 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. அந்த அணையின் நீர்மட்டம் 79.90 அடியாக உள்ளது.

    களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று இரவில் மிதமான மழை கொட்டியது. இதனால் தலையணையில் இன்று காலை முதல் தண்ணீர் வரத்து அதிகரித்தது. தடுப்பணையை மூழ்கடித்தபடி தண்ணீர் பாய்ந்தோடுகிறது.

    இதையடுத்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின் பேரில் தலையணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று முதல் வனத்துறையினர் தடை விதித்தனர். இந்த தகவலை வனசரகர் பிரபாகரன் அறிவித்துள்ளார்.

    அதே நேரத்தில் வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு அணைகளுக்கு நீர்வரத்து இல்லாததால் அவற்றில் குறைந்த அளவே தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் அந்த அணையை நம்பி உள்ள விவசாயிகள் வருத்தம் அடைந்துள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்றும் அதிகாலை முதலே மழை பெய்தது. இதனால் மாநகர பகுதியில் தாழ்வான இடங்களிலும், சாலைகளிலும் தண்ணீர் தேங்கியது. இதைத்தொடர்ந்து மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக கடம்பூரில் 33 மில்லிமீட்டரும், கயத்தாறு 26 மில்லிமீட்டரும், குலசேகரன்பட்டினத்தில் 25 மில்லிமீட்டரும், காயல்பட்டினத்தில் 24 மில்லிமீட்டரும் மழை பதிவானது.

    இதேபோல் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம், கோவில்பட்டி, கழுகுமலை, எட்டயபுரம், வேடநத்தம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலும் பரவலாக மழை பெய்தது. இன்றும் மாவட்டத்தின் சில இடங்களில் மழை பெய்தது.

    ×